widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Tuesday, June 28, 2011

ரிஸானா நபீக்குக்கு தண்டனை என்ற செய்தியில் உண்மையில்லை- சவூதி அரசாங்கம்

[ செவ்வாய்க்கிழமை, 28 யூன் 2011, 06:46.35 AM GMT ]

சவூதியில் பணியாற்றிய மூதூரை சேர்ந்த பணிப்பெண்ணான ரிஸானா நபீக்குக்கு தண்டனை வழங்கப்படவுள்ளதாக வெளியான செய்தியை சவூதி அரசாங்கத் தரப்பு மறுத்துள்ளது. இதனை இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

2005 ம் ஆண்டில் குழந்தை ஒன்றுக்கு உணவு வழங்கிய வேளையில் அந்த குழந்தை இறந்து விட்டது. இதனையடுத்து ரிஸானா நபீக் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டது.

இந்தநிலையில் அவரை மன்னித்து விடுதலை செய்யுமாறு பல்வேறு தரப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

குறித்த சம்பவம் இடம்பெற்ற வேளையில் ரிஸானா நபீக்குக்கு 17 வயதாக இருந்தமையால் அவரை தண்டிக்கக்கூடாது என்றும் சவூதி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில நேற்று சில இணையத்தளங்கள் ரிசானா நபீக்,சிரத்சேதம் செய்யப்படும் ஆபத்து உள்ளதாக தகவலை வெளியிட்டிருந்தன.

எனினும் இந்த செய்தியை சவூதி அரசாங்கத் தரப்பு மறுத்துள்ளது.


SL denies Public execution reports


The Foreign Employment Bureau (FEB) while dismissing media speculation of the public execution of Rizana Nafeek in Saudi Arabia said they are working hard together with Saudi authorities for her release.

FEB Chairman Kingsley Ranawaka speaking to Daily Mirror Online today said that the speculation of her execution is most probably triggered by the recent execution of an Indonesian maid who was beheaded for murdering her employer who had repeatedly abused her. “We are working hard to get Rizana released and we are expecting a positive outcome to our efforts,” he added. 


0 comments:

Post a Comment