widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Saturday, June 18, 2011

கருணா மீது யுத்த குற்ற விசாரணை - அல்ஜசீரா


இலங்கையில் 600 பொலிசாரை கொலை செய்த குற்றச்சாட்டில் பாரிய அழுத்ததை எதிர் நோக்கி வரும் கருணா மீது புலிகளுக்காக சிறுவர்களை கட்டாய ஆட்சேர்ப்பு மேற்கொண்டமைக்காக விசாரணை செய்ய வேண்டும் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. 

தற்போது, கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆளும் அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவியில் உள்ளார் எனவும் அது தெரிவித்துள்ளது

புலிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்ய வேண்டும் என தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அல்ஜசீரா மேலும் தெரிவிக்கின்றது.

புலிகள் இயக்கத்தின் எஞ்சிய முக்கிய பிரமுகர்கள் இன்று ஆளும் மஹிந்த அரசாங்கத்தில் அமைச்சராகவும் முதலமைச்சராகவும் மற்றும் முக்கியஸ்தர்களாகவும் உள்ளனர் எனச் சுட்டிக் காட்டியுள்ளது.

0 comments:

Post a Comment