widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Thursday, June 23, 2011

ஆப்கானிஸ்தானிலிருந்து 33000 அமெரிக்கத் துருப்பினர் வாபஸ் பெற்றுக்கொள்ளப்படுவர் – ஒபாமா :


ஆப்கானிஸ்தானிலிருந்து 33000 அமெரிக்க துருப்பினரை வாபஸ் பெற்றுக்கொள்ள உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
 
இந்த ஆண்டின் இறுதிக்குள் 10000 துருப்பினரும், அடுத்த வருடம் செப்டம்பர் மாதத்திற்குள் மேலும் 23000 துருப்பினரும் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தை முடிவுறுத்தும் முயற்சிகளின் ஆரம்பமாக இந்த நடவடிக்கை கருதப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
 
உயர் இராணுவ அதிகாரிகள் வழங்கிய ஆலோசனைகளுக்கு அதிகமான எண்ணிக்கையிலான துருப்பினரை ஒபாமா வாபஸ் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளார்.
 
2013ம் ஆண்டு வரையில் துருப்பினரின் எண்ணிக்கையை அதிகளவில் குறைக்க வேண்டாம் என உயர் இராணுவ அதிகாரிகள் வலியுறுத்தியிருந்தனர்.
 
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் துருப்பினரை நிலைநிறுத்தியுள்ளதனால் வாராந்தம் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. மோதல்களில் இதுவரையில் 1200 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 12000 பேர் காயமடைந்துள்ளனர்.
 
அமெரிக்க துருப்பினரை வாபஸ் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட போதிலும் 68000 துருப்பினர் தொடர்ந்தும் நிலைகொண்டிருப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment