widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Saturday, June 30, 2012


பெயர்தாங்கி முஸ்லிம்களே! திருந்துங்கள் திருத்துங்கள்?

அன்றாட வாழ்கையில் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் இஸ்லாம் நமக்கு சொல்லித்தந்திருக்கிறது. அது தூங்கி எழுந்ததிலிருந்து இரவு தாங்க போகும் வரை மட்டுமல்ல இடையில் தீய கனவுகள் போன்றவற்றால் எழுந்திருக்க நேரிட்டால் அப்போதும் கூட நாம் என்ன செய்ய வேண்டும் என தூய இஸ்லாம் வரையறுத்திருக்கிறது.


அப்படிப்பட்ட இணையற்ற இறைவனால் அருளப்பட்ட இந்த மார்க்கத்தில் நம்முடைய நடைமுறை வாழ்க்கைக்கு என சொல்லப்படாத எந்த ஒரு அம்சமும் இல்லை. ஆனால் முஸ்லிம்களாகிய நாம் இன்று எத்தனை பேர் இந்த அற்புதமான வாழ்க்கை நெறிமுறையை விளங்கி வைத்திருக்கிறோம். மிக மிக குறைவு. நாம் அனைவரும் நம்மை அறிவு ஜீவிகளாக தன்னுடைய கருத்தை நிலைநாட்டுவதில் காட்டும் முனைப்பு மார்க்கத்தை அறிவதில் காட்டுவதில்லை.

இன்று முஸ்லிம்களில் பலர் இஸ்லாத்தை பற்றி எதுவும் தெரியாமல் குறைந்த பட்சம் அதன் அடிப்படைக்கூட தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள் என்பது வேதனைப்படக் கூடிய விஷயம். இவர்களிடம் போய் மறுமையை பற்றி பேசினால் இவர்கள் சாதரணமாக சொல்கிறார்கள். இந்த உலகத்திலேயே பல பிரச்சனைகள் இதில் மறுமையை பற்றி பேச வந்துவிட்டார்கள் என்று. நிறைய முஸ்லிம்கள் மற்ற மதத்தை போலவே இஸ்லாத்தையும் தவறாக விளங்கி வைத்திருக்கிறார்கள். இதனை பல முஸ்லிம்கள் நமக்கேன் வம்பு என்று கண்டும் காணாமல் இருந்து விடுவதையும் பார்க்கிறோம். 

எனக்கு தெரிந்த முஸ்லிம் ஒருவர் சொல்கிறார் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய கருத்தைதானே சொல்கிறார். அதனை பின்பற்றித்தான் ஆகவேண்டும் என்ற அவசியமில்லை என்று. ஒரு முஸ்லிம் எப்படி இவ்வாறு இருக்க முடியும். இதுபோல எத்தனை முஸ்லிம்கள் இருக்கிறார்களோ தெரியவில்லை.  

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் நாம் அல்குர்ஆனை ஓதுவதில்லை என்பது மட்டுமல்ல அதனை தொடுவதே இல்லை என்பதே. அப்படியே ஓதினாலும் அரபியில் மட்டும் ஓதிவிட்டு அல்குர்ஆனின் இந்த வசனத்தின் அர்த்தம் என்ன என்று பல பேர் பார்ப்பதில்லை. பல போலி மார்க்க அறிஞர்கள்??? இறந்தவர் வீட்டில் ஓதுவதற்காகவும் தங்கள் வயிற்று பிழைப்பிற்காகவும் இந்த குர்ஆனை வைத்திருக் கின்றனர். இவர்களுடைய பயான்களையெல்லாம் கேட்டால் முழுக்க முழுக்க தங்கள் தொழிலுக்கு ஆதரவாகவே இருப்பதை காணலாம். இவர்களுடைய இந்த பயானால் முஸ்லிம்களுக்கு இறையச்சமோ மறுமைப் பற்றிய பயமோ வேறெந்த நன்மையுமோ இல்லை. வெள்ளிக்கிழமை ஜும்மாவிற்கு மட்டுமே தொழக் கூடியவர்கள் என்று சில பேர் இல்லை பல பேர் உள்ளார்கள். அதுவும் இவர்கள் தொழ ஆரம்பிப்பதற்கு  ஒரு சில நிமிடங்கள் முன்னதாகத்தான் வருவார்கள். இவர்கள் இவ்வாறு வருவதற்கு காரணம் இதுதான் போல. அல்லாஹ் தான் அறிவான்.

இன்றைய காலத்தில் மட்டுமல்ல பல நூறு வருடங்கள் பின்னால் சென்றால் கூட இஸ்லாத்திற்கு எதிரான இணைவைப்பு மற்றும் பித்அத்தான காரியங்களை பெரும்பாலான முஸ்லிம்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதைக் காணலாம். இதனை கண்டிக்க வேண்டிய ஆலிம்கள்? சொற்ப வருமானத்திற்காக சர்வ சாதரணமாக கண்டும் காணாமலும் அதனை ஊக்குவிப்பதையும் காணலாம். எத்தனையோ தலைமுறைகள் வாழ்ந்தார்கள். அவர்களின் நிலை என்ன இப்போது. அல்லாஹ்தான் அறிவான். அதுபோல தான் நம்முடைய தலைமுறையும் செல்லப் போகிறது முடிவில்லாத ஒரு நீண்ட பயணத்தை நோக்கி. அந்த பயணம் வெற்றி அடைய நாம் சேர்த்து வைத்து பின்பு இந்த உலகத்திலேயே விட்டுச் செல்கின்ற செல்வம் எந்த விதத்திலும் உதவாது. ஆனால் நம்மோடு ஒன்று மட்டும் தொடர்ந்து வரும். நம்முடைய எஞ்சியிருக்கின்ற அமல்கள். 

இந்த அமல்களும் நமக்கு பயன்பட வேண்டுமானால் நாம் மார்க்கத்தை சரியாக விளங்கி வைத்திருந்தால்தான் முடியும். சில முஸ்லிம்கள் சரியாக தொழுவார்கள் நோன்பு நோற்பார்கள், ஆனால்! ஹராமான தொழிலை செய்கிறார்கள் அதில் கிடைக்கும் இலாபம் அவரின் கண்ணை மறைக்கிறது. 

அதுபோல மேலும் பல முஸ்லிம்கள் வட்டித் தொழில் செய்கிறார்கள், வாங்கிய கடனை கொடுக்காமல் மோசடி செய்கிறார்கள், புறம் பேசுகிறார்கள், சொத்தை பிரித்துக் கொடுப்பதில் மோசடி செய்கிறார்கள், மற்றவர்களின் சொத்தை சாதரணமாக அபகரிக்கிறார்கள், திருமணம் என்ற பெயரில் வரதட்சணை வாங்குகிறார்கள், சடங்கு சம்பிரதாயங்கள் என்ற பெயரில் பொருளாதாரத்தை வீணடிக்கிறார்கள், இறந்தவர்களை வைத்து பாத்திஹா ஓதுகிறார்கள், செய்வினை சூனியம் என்ற பெயரில் மக்களை மூடனாக்கி அவர்களின் சொத்தை சுரண்டுகிறார்கள், இறைவனுக்கு இணைவைக்கிறார்கள், பித்அத்தான காரியங்களை செய்கிறார்கள், சினிமா சீரியல்களில் சிக்கி சீரழிகிறார்கள், தற்கொலை செய்து கொள்கிறார்கள், மார்க்கத்தைப் பயன்படுத்தி யார் ஒரு அமைப்பை தோற்றுவித்தாலும் அதன் பின்னால் கண்ணை மூடிக் கொண்டு செல்கிறார்கள், நன்மையை ஏவி தீமையை தடுக்க மறுக்கிறார்கள், உறவினர்கள் ஒருவருக்கொருவர் உதவ மறுக்கிறார்கள், பெற்றோர்களை முறையாக கவனிப்பதில்லை, கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள் இதுபோல அடுக்கிக் கொண்டே போகலாம். சுருக்கமாக சொல்லப் போனால் பெயர் தாங்கி முஸ்லிம்களாகவே வாழ்கின்றனர். நீதி நேர்மை நாணயம் என்பதெல்லாம் பழங்கால நாணயத்தைபோல் மதிப்பில்லாமல் ஆகிவிட்டது.

நம் இறைவனின் பிடி மிகக் கடுமையானது. பாத்திஹா மௌலிது இவைகளை வருடத்திற்கு ஒருமுறை ஓதினால் போதும் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமுதாயமே உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்து திருந்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்களுக்கு கேடுதான். 

ஆலிம்களை நம்பி மோசம் போகாதீர்கள். இந்த ஆலிம்கள் (தவ்ஹீத் ஆலிம்களை தவிர! அல்லாஹ் அறிந்தவன்) தாங்களும் திருந்த மாட்டார்கள். நம்மையும் திருத்த மாட்டார்கள். இவர்கள் பிழைப்புக்காகவும் பெருமைக்காகவும் தான் ஓதுகிறார்கள். நாம் தான் நம்மை திருத்திக் கொள்ள வேண்டும். எனவே அல்குர்ஆனையும் ஹதீஸ்களையும் புரட்டுங்கள். மார்க்கத்தை சுலபமாக அறிந்து கொள்ளுங்கள். இன்று எவ்வளோ தவ்ஹீத் ஆலிம்களின் நூல்களும் வந்துவிட்டன. அவற்றை படியுங்கள். இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கையான  தவ்ஹீதின் பக்கம் வாருங்கள்.

மனிதர்களில் முஸ்லிம்களாக பிறந்தது அல்லாஹ்வின் உதவியால் மட்டுமே நமக்கு இதில் எந்த பங்கும் இல்லை. நம்முடைய பங்கு நாம் தூய இஸ்லாத்தை கடைப்பிடித்து உண்மை முஸ்லிம்களாக வாழ்வது மட்டுமே. இப்போது இருப்பதுபோலவே இனியும் உங்கள் நிலை தொடருமானால் பிறப்பால் மட்டுமே உங்களை நீங்கள் முஸ்லிம்கள் என்று கூறிக் கொள்ள முடியும். ஒவ்வொரு முஸ்லிம் களுக்கும் கடமைகள் உள்ளன. கட்டுப்பாடுகள் உள்ளன. பேணிக் கொள்வோம். வெற்றி பெறுவோம். இம்மையிலும் மறுமையிலும்.

இந்த கட்டுரையை படித்து விட்டு செல்லும் சகோதரர்களே இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்தவர்கள் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரிடமும் கொண்டு செல்லுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக!

Source: http://mpmpages.blogspot.com

uesday, June 19, 2012

முந்தைய நபிமார்கள் வாழ்ந்த இடம் வீடியோ!

குரானில் சொல்லப்பட்ட முந்தைய நபிமார்கள் வாழ்ந்த இடம் வீடியோ , பழைய அத்தாட்சிகள் இன்றும் உள்ளது. தமிழ் விளக்கத்துடன் உள்ள வீடியோ .இது நமக்கு ஒரு படிப்பினை. நாம் சென்று பார்க்க முடியாத இடங்கள். 1.http://tharjuma.wordpress.com/video-in-tamil/ 2.http://tharjuma.wordpress.com/videos-in-tamil-part-ii/#comment-1315. Received by Mail.

பெயரளவில் வாழும் பெரும்பான்மையான முஸ்லிம்கள்!

தலைப்பை பார்த்தவுடன் அதிர்ந்து விடாதீர்கள். இஸ்லாம் எந்தளவுக்கு இன்றைய முஸ்லிம்களின் வாழ்கையில் பிரதிபலிக்கிறது என்பதை ஒவ்வொருவரும் தங்களை தாங்களே எடை போட்டு பார்த்தால் தெரியும். 

இஸ்லாத்தின் பெயரால் நாம் செய்யக் கூடிய வணக்க வழிபாடுகளாகட்டும் நடைமுறை வாழ்க்கை தொடர்புடையவைகளாகட்டும் நாம் எந்தளவுக்கு தூய இஸ்லாமிய மார்க்கத்தினை பின்பற்றுகிறோம், மார்க்க வரம்புக்குற்பட்டு நடக்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம். 

திருக்குர்ஆனை பெரும்பாலான முஸ்லிம்கள் அரபியில் ஓதுவதோடு சரி. அதன் அர்த்தம் என்ன அந்த வசனம் என்ன சொல்கிறது என்பதை பார்க்க மாட்டார்கள். இவர்கள் வெறும் மறுமை நன்மைக்காக மட்டுமே ஓதுகிறார்கள். அதனால் இம்மையில் கிடைக்கும் மற்றொரு நன்மையை இழந்து விடுகிறார்கள். அது தான் நேர்வழி. சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறியக் கூடிய வழி. இந்த திருக்குர்ஆனை பொருளறிந்து ஓதுவதால் நமக்கு இருக்கும் பல்வேறு சந்தேகங்கள் குழப்பங்கள் நீங்கி நாம் என்றென்றும் நேர்வழியில் இருக்க முடியும்.

மேலும் திருக்குர்ஆனை ஓதுவதற்கு முன்னும் பின்னும் அதை முத்தம் இடுவதும் கண்களில் ஒத்திக் கொள்வதும் ஏன் என்று தெரியவில்லை. இது போன்று நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் நம்மை நாளடைவில் பித்அத்தான காரியங்களிலும் இனைவைப்பான காரியங்களிலும் கொண்டு சென்று விடும். இதுபோன்று புதிது புதிதான காரியங்களை செய்வதிலிருந்து விலகிக் கொள்வோம்.

தொழுகையிலும் பெரும்பாலான முஸ்லிம்கள் பாராமுகமாக இருக்கிறார்கள். நிதானம் இல்லாமல் வேகமாக தொழுவதும், இமாமை முந்துவதும், பர்லான தொழுகை நடக்கும்போது அதில் சேராமல் சுன்னத்தான தொழுகைகளை தொழுவதும், வரிசைகளை பேணாமல் இருப்பதும் மேலும் இது போன்ற பல தவறுகளையும் சாதராணமாக பள்ளிவாசல்களில் காணலாம். தொழுகையில் ஓதக் கூடிய சூராக்கள் மற்றும் துஆக்கள் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு தெரிவதில்லை. அதை மனப்பாடம் செய்வது ஒன்றும் கடினமில்லை. சிறு வயதில் ஓதவில்லை படிக்கவில்லை என்று பலர் காரணம் கூறிக் கொள்கிறார்கள். இதன் மூலம் பல நல்ல பாக்கியங்களை இழக்கிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தொழுகை நோன்பு போன்றவற்றை முறையாக கடைபிடிக்கும் பல முஸ்லிம்கள் இணைவைப்பை நோக்கி சர்வ சாதரணமாக செல்வதையும் காணலாம். படைத்த அல்லாஹ்விடம் மட்டுமே எந்த ஒன்றையும் (வணக்கம், துவா மற்றும் நேர்ச்சை போன்றவைகள்) கேட்க வேண்டும் என்கிறது இஸ்லாம். ஆனால் இன்றைய நிலைமை அவுலியாக்களிடம் சென்று அவர்களிடம் கோரிக்கை வைப்பதும் நேர்ச்சை செய்வதும் சமாதிகளை வணங்குவதும் ஏராளம் ஏராளம். இதற்கு வருமானத்திற்க்காக மார்க்கத்தை விற்கும் தலைப்பாகை சகிதம் உலாவரும் போலி உலமாக்களும் விதிவிலக்கல்ல! இதற்கும் சிலை வணக்கத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. முகையத்தின் ஆண்டவரிடம்?? கேற்பதும் ஒன்றுதான் முருகனிடம்?? கேற்பதும் ஒன்றுதான். இதிலே சமாதி வழிபாடு சந்தனகூடு வழிபாடு கொடி வழிபாடு பாத்திஹா மௌலூது ராத்திபு பஞ்சா தீமிதி தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளுதல் செய்வினை சூனியம் இது போன்ற கருமாந்திரங்கள் எல்லாம் அடங்கும். இவற்றை எல்லாம் சர்வ சாதரணமாக செய்யும் பெயரளவில் வாழும் முஸ்லிம்களே நாளை மறுமையில் இறைவனை சந்திக்க இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கஷ்டப்பட்டு செய்த அமல்களை வீணாக்கி விடாதீர்கள்.

ஹஜ்ஜுக்கு செல்லும் பொது இவர்கள் செய்யும் அலப்பறை இருக்கிறதே. இவர்கள் செய்யும் வீண் செலவுகளும் ஆடம்பரமும் பந்தாவும் இவர்கள் ஹஜ்ஜுக்கு செல்வத்தின் உண்மை நோக்கம் என்ன என்ற சந்தேகத்தை உருவாக்கி விடும். இதையெல்லாம் தவிருங்கள்.

திருமணம் செய்யும் போது வரதட்சணை வாங்குவது தற்போது குறைந்திருந்தாலும் முழுமையாக நம் சமுதாயம் அதை விட்டு நீங்கவில்லை. ஒரு பெண் வயதிற்கு வந்தால் அதற்கும் சாப்பாடு போட்டு கொண்டாடுகிறார்கள். சிறுவர்களுக்கு விருத்த சேதனம் செய்யும் போதும் அதற்கும் விருந்து. அதற்கும் ஒரு ஆலிம் வருவார். அவர் வந்து அல் பாத்திஹா சொன்னால் தான் கத்தி வெட்டும் இல்லையென்றால் வெட்டாது போல. இதெல்லாம் பரவாயில்லை இறந்தவர் வீட்டில் இவர்கள் செய்யும் அநியாயம் இருக்கிறதே ஏதோ கல்யாண வேட்டைப் போல விருந்தும் சாப்பாடும். இப்படி எல்லாம் செய்யும் நீங்கள் முஸ்லிம்களா? இல்லை பெயரளவில் மட்டுமே நீங்கள் முஸ்லிம்கள். 

ஒரு முஸ்லிம் சிறந்த கல்வியாளனாக சுய சிந்தனை உடையவனாக மார்க்க வரம்புக்குற்பட்டவனாக குர்ஆனையும் ஹதீசையும் பின்பற்றி வாழக் கூடியவனாக இஸ்லாம் தடுத்திருக்கும் சமூகக் கொடுமைகளை விட்டும் நீங்கியவனாக தொழுகை நோன்பு மற்றும் நபி (ஸல்) அவர்களின் சுன்னத்துகளை பேணி நடப்பவனாக ஒரு சிறந்த ஏகத்துவவாதியாக இருக்க வேண்டும். பொறாமைக் கொள்வதையும் அவதூறு சொல்வதையும் நிறுத்த வேண்டும்.

சொத்துக்களை முறையாக பங்கிடுவது என்பது இன்றைய முஸ்லிம்களிடம் ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது. சொத்துக்களை பிரிக்கும் போது பெண்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்படுகிறார்கள். இவர்கள் மறுமையில் அல்லாஹ்விடம் என்ன பதில் சொல்லப் போகிறார்கள். இது போன்ற காரனங்களால் இன்று பெரும்பாலான முஸ்லிம் குடும்பங்களில் சகோதர சகோதரிகளுக்கிடையில் பிரச்சனை. ஆண்களே உங்களுக்கு எப்படி உங்கள் தந்தையின் சொத்தில் உரிமை இருக்கிறதோ அதுபோல அவர்களுக்கு பிறந்த பெண்களுக்கும் மார்க்க சட்டப்படி அவர்களுக்குரிய பங்கு உண்டு. அல்லாஹ் விதித்ததில் விளையாடும் முஸ்லிம்களே நீங்கள் உண்மையான முஸ்லிம்களா?பி.ஜைனுலாபிதீன் அவர்களின் இஸ்லாம் கூறும் குடும்பவியல் தொடர் இஸ்லாத்தின் குடும்ப அமைப்பை முழுமையாக விளக்குகிறது. மேலும் அறிய இங்கு கிளிக் செய்யவும். முஸ்லிம்கள் அனைவரும் கேட்க வேண்டிய உரை.

இன்று வியாபாரத்தில் முஸ்லிம்களும் சர்வ சாதாரணமாக பொய் சொல்லுகிறார்கள். வட்டி வாங்குகிறார்கள். இறையச்சம் இல்லாததே இதற்கு காரணம். பொருளாதாரத்தின் மீது இவர்களுக்குள்ள வெறி இவர்களின் கண்ணை மறைத்து விடுகிறது. பி.ஜைனுலாபிதீன் அவர்களின் இஸ்லாம் கூறும் பொருளியல் தொடர் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விசயங்களை முழுமையாக அலசுகிறது. மேலும் அறிய இங்கு கிளிக் செய்யவும்.

இன்று முஸ்லிம்கள் பல தரப்பட்ட சமுதாய இயக்கங்களாலும் அரசியல் கட்சிகளிடம் ஒரு சீட்டுக்காக காலமெல்லாம் கா கா என்று காக்காப் பிடிக்கும் கூட்டங்களாலும் சிதறுண்டு கிடக்கிறது. இதில் பெரும்பாலான அமைப்புகள் பணம் சம்பாதிக்கவும் தனது அரசியல் செல்வாக்கை அதிகரித்து எம்பி எம்எல்ஏக்கள் ஆகும் கனவுகளோடும் முஸ்லிம் சமுதாயத்தை கூறு போடுகின்றன. இத்தகைய இயக்கங்கள் பின்னால் செல்லும் முஸ்லிம் சமுதாயமே சரியான இயக்கத்தை தேர்வு செய்வதில் உங்களுக்கு கடமை இருக்கிறது. உங்களுக்கென்று சுயமான அறிவும் இருக்கிறது. 

தமிழகத்திலே இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கையான தவ்ஹீத்தின் அவசியத்தை மக்களிடம் உணர்த்தி பெரும்பாலான மக்களை இணைவைத்தல் எனும் கொடுமையில் இருந்து மீட்டெடுத்து தூய்மையான இஸ்லாத்தை அறியச் செய்து மேலும் அவர்களை கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேற்ற வேண்டும் என்பதற்காக பல பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் எந்த ஒரு சுய ஆதாயத்திற்க்காகவும் இல்லாமல் அல்லாஹ்வுக்காக (அல்லாஹ்வே அறிந்தவன்) செய்து வருகிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற பேரியக்கம். இந்த இயக்கத்தை நாம் முழுமையாக அறிந்து அதன் நடவடிக்கைகளில் நம்மை ஈடுபடுத்துவோம். இந்த இயக்கத்தின் சார்பாக அன்பான அழைப்பு விடப்படுகிறது. மேலும் அறிய இங்கு கிளிக் செய்யவும். கொள்கை ரீதியாக பிரிந்து கிடக்கும் லட்டர் பேடு இயக்கங்கள் சில காலங்களாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற இந்த இயக்கத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக ஒன்று சேர்ந்து போஸ்டர் அடித்து ஓட்டியதும் அதன் மீது அவதூறு செருகலை வீசுவதும் மகா கேவலம்.

இஸ்லாத்தின் அடிப்படையான தவ்ஹீதின் அவசியத்தை நாம் அனைவரும் உணர வேண்டும். லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற கலிமாவை நன்கு விளங்கி அதன் உண்மையான அர்த்தத்தின்படி நாம் வாழ வேண்டும். நாம் பெயரளவில் மட்டுமல்லாது உண்மையிலேயே அல்லாஹ்வையும் அவனது தூதர் ஸல் அவர்களையும் முற்றிலும் பின்பற்றி வாழக் கூடியவர்களாக மாற வேண்டும். அதுதான் இந்த உலகத்திலும் வெற்றி மறு உலகத்திற்கும் வெற்றி.

Source: http://mpmpages.blogspot.com

Friday, June 29, 2012


ஒரே இறைவன் ஒரே தூதர் ஒரே வேதம் முஸ்லிம்களிடம் ஏன் முரண்பாடு?

இந்த தலைப்பு இன்றைய முஸ்லிம்களின் வாழ்கையை பிரதிபலிப்பதாக உள்ளது. இதற்கு காரணம் என்ன?

அல்லாஹ் தன் இறைச் செய்தியில் குறை வைத்து விட்டானா அல்லது நபி (ஸல்) அவர்கள் இறைவனுடைய செய்தியை அறிவிப்பதில் குறை வைத்து விட்டார்களா? நவூது பில்லாஹ் இதை நாம் முடிவு செய்ய வேண்டிய எந்த அவசியமும் உரிமையும் நமக்கில்லை. ஏனென்றால் இறைவனும் அவனது தூதர் நபி (ஸல்) அவர்களும் தங்கள் கடமையை சரியாக செய்து விட்டனர். நாம் தான் நமது கடமையை சரியாகச் செய்யாமலும் மார்க்கத்தை சரியாக விளங்காமலும் ஒரு இயக்கம் பிற இயக்கத்தை குறை கூறியும் காலத்தையும் நேரத்தையும் வீணடித்து இறைவனுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்து வருகிறோம்.

நிறைய முஸ்லிம்கள் மார்க்கத்தை அறிவதில் போதிய அக்கறை செலுத்துவதில்லை. பொருளாதாரத்தை பெருக்குவதில் தான் குறியாக உள்ளனர். மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும் போது நிம்மதியும் சந்தோசமும் திருப்தியும் அதிகமாகிறது. பொருளாதாரம் அதிகரிக்கும் போது நிம்மதியின்மையும், தூக்கமின்மையும், பாவச் சுமையும், பொய்யும், புரட்டும், இன்னும் தவறான சிந்தனைகளும் அதிகமாகிறது.

முரண்பாடு சிறிதும் இல்லாத இஸ்லாமிய மார்க்கத்தில் இன்றைய முஸ்லிம்களின் நிலை கீழ்க்கண்டவற்றில் எவ்வாறு உள்ளது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.


இறைநேசர்கள் பரிந்துரை செய்வார்களா?

இறைநேசர்கள் உயிரோடிருக்கிறார்களா?
கூட்டுத் துவா கூட்டுத் திக்ர் உண்டா?
பாத்திஹா மௌலிது ஓதுவது கூடுமா?
மத்ஹபை பின்பற்றலாமா?
நபித்தோழர்களையும் பின்பற்றலாமா?
நான்கு இமாம்களை பின்பற்றலாமா?
இறைநேசர்களை பின்பற்றலாமா?
முன்னோர்களை பின்பற்றலாமா?
நபி (ஸல்) அவர்களை கனவிலும் நினைவிலும் காண முடியுமா?
ஆடம்பர ஹஜ்?
பாங்குக்கு முன் சலவாத் உண்டா?
சூனியம் ஜோதிடம் குறிபார்த்தல் கூடுமா?
மீலாது விழா கொண்டாடலாமா?
அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா?
தாயத்து தகடு கயிறு கட்டலாமா
சகுனம் பார்க்கலாமா?
இஸ்லாத்தில் கற்பனை கதைகள் கூடுமா?
ஸலவாத்துன்நாரியா ஓதலாமா?
மஞ்சள் நீராட்டு விழா செய்யலாமா?
சுன்னத் கத்னா திருவிழா கொண்டாடலாமா?
கருமணி தாலி கட்டலாமா?
தஸ்பீஹ் மணி உருட்டுதல் கூடுமா?
தர்காவுக்கு போகலாமா?
கந்தூரி விழாக்கள் கொண்டாடலாமா?
சந்தணக் கூடு இழுக்கலாமா?
யானை ஊர்வலம் அலங்காரம் கூடுமா?
வலிமார்களிடம் உதவி தேடுதலாமா?
உருஸ், படையல் கூடுமா?
யானை குதிரை ஊர்வலங்கள் உண்டா?
விபுதிக்கு பதிலாக தர்காஹ் சந்தனம் பூசலாமா?
கவ்வாலி இசைக்கச்சேரிகள் கூடுமா?
நாகூர் மொட்டை அனுமதிக்கப்பட்டதா?
தப்ருக் தட்டுக்கள் கூடுமா?
கொடிமரம் உண்டா?
கப்ருகளை கட்டுதல் கூடுமா?
அல்லா அல்லாதவருக்கு அறுத்து பலியிடுதலாமா?
சமாதி வழிபாடு செய்யலாமா?
ஷைகுமார்களின் கால்களில் விழுவது கூடுமா?
மரணித்தால் ஜியாரத் பொறி வழங்கலாமா?
சமாதியை கழுவி அழுக்கு நீரை குடிக்கலாமா?
முரீது உண்டா?
1000 முறை கத்தினால் கவுஸ் வருவாரா?
ஸபர், முஹர்ரம் மாதம் பீடை மாதமா?
வளர்பிறை, தேய்பிறை சகுணம் பார்க்கலாமா?
7-ம் 10-ம் பஞ்சா பக்கீர்கள் கொண்டாடலாமா?
ஆடம்பர திருமணம் அவசியமா?
பெரும்பாவங்கள் தீமைகள் குறித்த எச்சரிக்கை இருக்கிறதா?
ஆடம்பரம் குறித்த எச்சரிக்கை இருக்கிறதா?
இணைவைத்தல் குறித்த எச்சரிக்கை இருக்கிறதா?
பாகப்பிரிவினை சொத்துரிமை குறித்த எச்சரிக்கை இருக்கிறதா?
ஹலால் ஹராம் குறித்த எச்சரிக்கை இருக்கிறதா?
பித்அத் குறித்த எச்சரிக்கை இருக்கிறதா? 
கல்வி விழிப்புணர்வு
மார்க்க விழிப்புணர்வு
கொள்கை விழிப்புணர்வு
சமுதாய முன்னேற்றம்
இஸ்லாமியர்களின் உரிமைக்காக பாடுபடுதல்
அழைப்புப் பணி செய்தல்
வரதட்சனை ஒழிப்பு நடவடிக்கை?
அழுத்தம் வலிமை இல்லாத ஜூம்மா பிரசங்கம்
தராவீஹ் தொழுகை எத்தனை ரக்அத்துக்கள்?
தஸ்பீஹ் தொழுகை உண்டா?
பஜ்ர் தொழுகையில் குனூத் ஓதலாமா?


மேற்கண்ட விசயங்களில் நாம் கருத்து வேறுபாடுகள் கொண்டிருக்கின்றோம். அல்-குர்ஆன் மற்றும் ஹதீஸ் நூல்களை கையில் எடுங்கள். தமிழ் மொழிபெயர்ப்பு வந்து விட்டது. இனி முடிவு செய்ய வேண்டியது நாம் தான்.

உண்மையை அறிய முயற்சிக்கும் போது எந்த ஜமாத்தையும் சாராதீர்கள். உங்களுக்கென சுய அறிவும் மனசாட்சியும் இருக்கிறது. முடிவு எடுப்பதற்கு முன் இறைவனுடைய திருப்தியையும் இறைத் தூதருடைய திருப்தியையும் மட்டுமே முக்கிய நோக்கமாக கருதுங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர் வழி காட்டுவானாக. ஆமீன்.

Source: http://mpmpages.blogspot.com

Thursday, June 28, 2012

'பராஅத்''தும் மத்ஹப் நூல்களிலேயே தடுக்கப்பட்டுள்ள ''பித்அத்''துகளும்

'பராஅத்''தும் மத்ஹப் நூல்களிலேயே தடுக்கப்பட்டுள்ள ''பித்அத்''துகளும்
நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தவர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் காட்டித்தரப்படாத ஏதாவது ஒரு புதுப் புது காரியங்கள், வழிபாடுகள் நிறைந்து காணப்படுகிறது.
அப்படிப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால்காட்டித்தரப்படாத காரியங்களில் உள்ளதுதான் ஷஅபான் மாதம் 15 ஆம் பிறை இரவில் மூன்று யாசீன்கள் ஓதுவதும், அன்று இரவில் நின்று வணங்குவதும்,அன்றைய பகற்பொழுதில் நோன்பு வைப்பதும் ஆகும்.
இப்படிப்பட்ட காரியங்களை செய்யக்கூடிய இவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு வழிகாட்டியிருக்கிறார்களா? அல்லது இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருக்கிறார்களா? என்று சிந்தித்துப் பார்ப்பது கிடையாது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "நம்முடைய மார்க்கத்தில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 2697)
மற்றொரு ஹதீஸில் வருகிறது
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: "என் சமுதயாத்தில் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஏற்க மறுத்தவரைத் தவிர." என்று கூறினார்கள். மக்கள் " அல்லாஹ்வின் தூதரே ஏற்க மறுத்தவன் யார்? என்று கேட்டனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் " எனக்கு கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார். எனக்கு மாறு செய்தவர் (சத்தயத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்." என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 7280)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களை நன்மை என்று எண்ணி நாம் செய்தாலும் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதையும், அவ்வாறு செய்பவர்கள் நபியவர்களுக்கு மாறுசெய்தவர்கள், நரகவாசிகள் என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.
அன்பிற்குரிய பெரியோர்களே தாய்மார்களே சற்று சிந்தித்துப் பாருங்கள்!
"பராஅத் இரவு" என்ற பெயரில் மூன்று யாசீன்கள் ஓதுகிறீர்களே இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்தார்கள் என்பதற்கு ஒரே ஒரு ஆதாரப் பூர்வமான ஹதீஸாவது இருக்கின்றதா? அல்லது ஸஹாபாக்கள் இவ்வாறு செய்திருக்கிறார்களா? அல்லது மத்ஹபு இமாம்கள் என்று கூறுகின்றீர்களே அந்த நான்கு இமாம்களாவது இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று உங்களால் கூறமுடியுமா? நிச்சயமாக ஒருபோதும் அவ்வாறு உங்களால் கூறமுடியாது. வேறு எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இவ்வாறு செய்கிறீர்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள்,
மேலும் "பராஅத் இரவு" என்பதற்கு அரபியில் "லைலத்துல் பராஅத்" என்று கூறப்படும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்முடைய வாழ்நாளில் இப்படி வார்த்தையைக் கூட கூறியது கிடையாது. இவையெல்லாம் நபியவர்களுக்குப் பின் உருவாக்கப்பட்ட வழிகேடுகளாகும்.
மேலும் பிறை பதினைந்தாம் நாள் அன்று மட்டும் சிறப்பாக நீங்கள் "பராஅத் நோன்பு" என்று வைக்கிறீர்களே இதையாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்துள்ளார்கள் என்று உங்களால், காட்ட முடியுமா? நிச்சயமாக முடியாது . மாறாக இதற்கு மாற்றமாக ஒவ்வொரு மாதமும் வழமையாக நோன்பு வைப்பவர்களைத் தவிர வேறு யாரும் அன்றைய தினத்திலிருந்து நோன்பு நோற்கக் கூடாது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
இவ்வாறு மத்ஹப நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது.
ஷாஃபி மத்ஹப் நூலான இஆனதுத் தாலிபீன் என்ற நூலில் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள்:
وكذلك يحرم الصوم بعد نصف شعبان لما صح من قوله صلى الله عليه وسلم إذا انتصف شعبان فلا تصوموا ( إعانة الطالبين ج: 2 ص: 273 )
ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராம் ஆகும். ஏனென்றால் " ஷஅபான் பாதியயை அடைந்து விட்டால் நோன்பு நோற்காதீர்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. (நூல் : இஆனா பாகம் : 2 பக்கம் : 273)
மத்ஹபிலேயே ஹராம் எனக் கூறப்பட்ட ஒரு காரியத்தை எப்படிச் செய்கிறீர்கள். இவ்வாறு மத்ஹப் நூற்களில் உள்ளது உண்மைதானா? என்று உங்களுடைய ஆலிம் பெருமக்களிடம் கேட்டுப்பாருங்கள். உண்மையை நிலையை உணர்வீர்கள்.
ومن البدع المذمومة التي يأثم فاعلها ويجب على ولاة الأمر منع فاعلها صلاة الرغائب اثنتا عشرة ركعة بين العشاءين ليلة أول جمعة من رجب وصلاة ليلة نصف شعبان مائة ركعة (إعانة الطالبين ج: 1 ص: 270 )
ரஜப் மாத்தின் முதல் வெள்ளிக் கிழமை இரவில் மஃரிப் , இஷாவிற்கு மத்தியில் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுவதும். ஷஅபான் பதினைந்தாம் இரவில் நூறு இரக்அத்துகள் சிறப்பாக தொழுவதும் பழிக்கப்படவேண்டிய பித்அத்துகளாகும். அவ்வாறு தொழுபவன் பாவியாவான். இதை செய்பவனை தடுப்பது ஆட்சியாளர்கள் மீது கடமையாகும். (ஷாஃபி மத்ஹப் நூல் : இஆனா பாகம் : 1 பக்கம் : 270 )
فائدة أما الصلاة المعروفة ليلة الرغائب ونصف شعبان ويوم عاشوراء فبدعة قبيحة وأحاديثها موضوعة (فتح المعين ج: 1 ص: 270 )
(ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒரு இரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும், ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாகும் (ஷாஃபி மத்ஹப் நூல் : ஃபத் ஹுல் முயீன் பாகம் : 1 பக்கம் : 270 )
وإسراج السرج الكثيرة في السكك والأسواق ليلة البراءة بدعة وكذا في المساجد (البحر الرائق ج: 5 ص: 232 )
பராஅத் இரவில் தெருக்களிலும், கடைவீதிகளிலும், அவ்வாறே பள்ளிவாசல்களிலும் அதிகமான விளக்குகளை எரிய வைப்பது பித்அத்தான காரியமாகும். (ஹனஃபி மத்ஹப் நூல் அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 5 பக்கம் : 232)
அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்களே உங்களுடைய ஆலிம்கள் எந்த மத்ஹபை பின்பற்ற வேண்டும் என் உங்களுக்குப் போதிக்கிறார்களோடு அந்த மத்ஹப் கிரந்தங்களில்தான் நாங்கள் எடுத்துக்காட்டிய மேற்கண்ட கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது. இதனை என்றைக்காவது உங்களுடைய ஆலிம் பெருமக்கள் உங்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
உங்கள் மத்ஹப் நூற்களிலேயே செய்யக் கூடாது. பித்அத், தடுக்கப்படவேண்டிய மோசமான காரியம் என்று கூறப்பட்ட விஷயங்களைத்தான் உங்களோடு சேரந்து உங்களுடைய ஆலிம் பெருமக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே இவர்கள் மார்க்கத்தை மட்டுமல்ல மத்ஹபையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Wednesday, June 27, 2012

இக்வானும் எகிப்தும்!

இக்வானும் எகிப்தும்!             
தந்தையின் ஷஹீதாக்கப்பட்ட (உயிர் தியாகம்) அந்த உடலை சுமந்து செல்லும்போது வீர மகள் கூறிய வார்த்தைகள்;
"என்னருமை தந்தையே! உங்களின் இந்த இறுதி ஊர்வலத்தில் பூமியில் வசிக்கும் யாருமே இல்லை. அவர்கள் அனைவரும் தடுத்து வைக்கபட்டுள்ளார்கள் ஆனால் வானிலுள்ளோரை (வானவர்களை) யாரால் தடுத்து நிறுத்த முடியும்?"
1945 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி
எகிப்து மன்னன் ஃபாரூஃக் பாஷா வின் கட்டளைப்படி "இஃக்வானுல் முஸ்லிமீன்" (Muslim Brotherhood) நிறுவனர், தலைவர் (முர்ஷித் ஏ ஆம்) இமாம் ஹசனுல் பன்னாவை கலந்துரையாடல் என்ற சாக்கில் தன்னந்தனியாக ஓரிடத்திற்கு அழைக்கப்பட்டு கடுமையான இருள் சூழ்ந்த இரவில் காவல்துறையினரால் துப்பாக்கி குண்டுகளால் சல்லடையாக துளைக்கப்பட்ட இரவு. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ஊரடங்கு உத்தரவு அமுலில், பத்திரிகை, செய்தி நிறுவனங்கள் மீது தடையுத்தரவு, இயக்க உறுப்பினர்கள், அனுதாபி, ஆதரவாளர்கள் அனைவரும் சிறைக்கொட்டடிகளில், பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்ற தடை, எவரும் ஷஹீதின் நல்லடக்க இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்ற உத்தரவு.
இந்த நிலையில் ஷஹீதின் வயோதிக தந்தையார், "வீட்டில் ஆண்கள் எவரும் இல்லை. சடலத்தை வண்டிவரை கொண்டு செல்லவாவது யாரையேனும் அனுமதியுங்கள்" என கோரிக்கை விடுக்கின்றார்.

"ஆண்கள் இல்லையெனில் பெண்கள் "ஜனாஸாவை" தூக்கிச்செல்லட்டும்" அரசு பயங்கரவாதத்தின் பதில் உடனே வந்தது.
ஆதலால் குடும்ப பெண்மணிகளே ஜணாஸாவை சுமந்து சென்று "மஸ்ஜித் ஃகைஸூம்" இல் இறுதி தொழுகை நடத்தப்படுகிறது பின்னர் "இமாம் ஷாஃபி ஃகப்ருஸ்தானில் " (இடுகாட்டில்) துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரின் கடும் பாதுகாப்பில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இந்த குழுவின் பயணம் தொடர்கிறது.
பின்னர்.........
2012 ஜூன் 24 ஆம் தேதி...
எங்கும் ஒளி வெள்ளம் சூழ
இமாம் ஹஸனுல் பன்னா ஷஹீதின் "இஃக்வானுல் முஸ்லிமீன்" இன்று எகிப்தின் ஆட்சியாளர்கள்.!!
நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வாக்கை நிறைவேற்றியே உள்ளான்.
எகிப்திய மக்கள் "இஃக்வானுல் முஸ்லிமீன்" இயக்க வெற்றியின் அறிவிப்பினை தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் வண்ணம் கெய்ரோ நகரின் தஹ்ரீர் சதுக்கத்தில் "சஜ்தா" செய்கிறார்கள்.
Source : www.nidur.info

Monday, June 25, 2012

நபி மருத்துவம் - திராட்சை

திருக்குர் ஆனில் திராட்சையைப்பற்றி பதினோரு இடங்களில்குறிப்பிடப்பட்டுள்ளது.

 9 உலர்ந்த திராட்சைப் பழத்தையும், ஆகாஷ வல்லி 6 கிராமும் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து அதை மதுவைக் குடிக்க ஆர்வம் ஏற்படும் போது கொடுத்தால் மதுவின் மீதுள்ள தாகம் வெறுப்பாகும். இதையே தினசரி இரண்டு வேளை குடித்து வந்தால் இரத் தத்தில் உள்ள சாராயச்சத்து வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.
நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திராட்சையை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் என்று முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக அபூநயீம் தமது நூலில் எழுதியுள்ளார்கள்.
உலர்ந்த திராட்சையை சாப்பிடுங்கள். இது மிகச் சிறந்த உணவாகும். அசதியைப் போக்கும். கோபத்தைத் தணிக்கும். நரம்புகளுக்கு வலுவூட்டும். இதை சமையலில் சேர்த்தால் நல்ல மணம் தரும். இது சளியை வெளியேற்றும். முகத்தை கவர்ச்சிகர மாக்கும்.
''சிவப்பு நிற உலர்ந்த திராட்சையின் 21 விதைகளை தினசரி சாப்பிடுபவர்களுக்கு கொடிய வியாதிகள் வராது.'' (நூல்: அபூநயீம்)
உங்கள் நலனுக்காக உலர்ந்த திராட்சைப் பழங்கள் உள்ளன. இது உடலை கவர்ச்சிகரமாக்கும். சளியை வெளியேற்றும். நரம்புகளுக்கு சக்தி தரும். பலவீனத்தைப் போக்கும். கவலையை மறக்கச் செய்து மனதில் சந்தோஷத்தை உண்டாக்கும். சுவாசத்தில் நல்ல வாசனையை உண்டாக்கும்.
எங்கள் நாட்டில் திராட்சை இருக்கின்றது. அதன் சாற்றை பிழிந்து நாம் குடிக்கலாமா? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஹஷ்ரத் தாரிக்பின் சுவேத் ஹஜிரி ரளியல்லாஹு அன்ஹு என்பவர் கேட்டார். ''குடிக்க வேண்டாம்'' என்று அதற்கு பதில் கிடைத்தது.
திராட்சை சாற்றை நாம் நோயாளிகளுக்கு சிகிச்சைக்காகத் தருகிறோம் என்று அவர் மீண்டும் கூறியதற்கு, பதில் அளிக்கையில், இதில் வியாதியை குணமாக்கும் மருத்துவத்தன்மை ஏதுமில்லை. இது ஒரு வியாதியே ஆகும் என்று நபி பெருமானார் கூறினார். (முஸ்லிம்-அபூதாவத், திர்மிதீ)
''சாராயத்தை மருந்தாகப் பயன்படுத்துபவர்களுக்கு இறைவன் சுகம் அளிப்பதில்லை.'' (அபூநவீம் பதஹுல் கபீர்)
திராட்சைப் பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள். அதைப் பின்பற்றினால் திராட்சையால் பல நன்மைகளைப் பெறலாம்.
100 கிராம் திராட்சைப் பழங்களில் 1.9 கிராம் புரோட்டீன், 1.05 கிராம் கொழுப்புச் சத்து, 83 மில்லி கிராம் கார்போ ஹைட்ரேட். 84 மில்லி கராம் கால்ஷியம், 18 மில்லி கிராம் பாஸ்பரஸ், 5 மில்லி கிராம் வைட்டமின் சி, 150 யூனிட் வைட்டமின் ஏ, அதன் அளவில் வைட்டமின் பி2, பி1 ஆகியவை கிடைப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தினசரி ஒருவர் 125 கிராம் முதல் 250 கிராம் வரை கிஷ்மிஷ் பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு வலிமை கிடைக்கும்.
இந்திய அரசின் அக்ரிகல்ச்சுரல் கெமிஸ்ட் நிறுவனம் உலர்ந்த திராட்சையை ஆய்வு செய்தது. இதில் மனிதனுக்கு தேவைப்படும் 90 சதவீதம் ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. உடலுக்குத் தேவையான தாது உப்புக்களைத் தவிர, அனைத்து வைட்டமின், குளுக்கோஸ், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்ஷியம், அக்சாலிக் மற்றும் டார்டாரிக் ஆசிட் இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. இதன் இலைகளிலும், தோலிலும் ஒருவிதமான எண்ணெய் கொழுப்புச்சத்தும், 18% டேனிக் ஆசிட்டும் இருக்கின்றது. இது உடலுக்குத் தீங்கு விளை விப்பதில்லை. இதை சர்க்கரை வியாதியினரும் பயன்படுத்தினாலும், இரத்தத்தில் சர்க்கரை சத்து அதிகரிக்காது என்று கூறுகிறார்கள்.
திராட்சையைப் பதமாக உலர வைத்து விற்பனை செய்யப்படும் பெரிய திராட்சைக்கு மவீஜி முனேகா என்றும், சிறிய பழத்தை கிஷ்மிஷ் பழம் என்றும் அழைப்பார்கள். இது ஒரு நல்ல இரத்தச் சுத்தி மருந்தாகும். யுனானி மருத்துவக் களஞ்சியத்தில் உலர்ந்த திராட்சை, ஆகாஷவல்லி இரண்டை யும் சமஅளவில் கொதிக்க வைத்து குடித்தால் குடிப் பழக்கம் நீங்கும், அசுத்தமான இரத்தமும் சுத்தமாகும். குடியால் ஏற்பட்ட சகல பிரச்சினைகளும் குணமாகும் என்று கூறப்பட்டுள்ளது.
9 உலர்ந்த திராட்சைப் பழத்தையும், ஆகாஷ வல்லி 6 கிராமும் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து அதை மதுவைக் குடிக்க ஆர்வம் ஏற்படும் போது கொடுத்தால் மதுவின் மீதுள்ள தாகம் வெறுப்பாகும். இதையே தினசரி இரண்டு வேளை குடித்து வந்தால் இரத் தத்தில் உள்ள சாராயச்சத்து வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.


9 உலர்ந்த திராட்சைப் பழத்தையும், ஆகாஷ வல்லி 6 கிராமும் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து அதை மதுவைக் குடிக்க ஆர்வம் ஏற்படும் போது கொடுத்தால் மதுவின் மீதுள்ள தாகம் வெறுப்பாகும். இதையே தினசரி இரண்டு வேளை குடித்து வந்தால் இரத் தத்தில் உள்ள சாராயச்சத்து வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.


நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திராட்சையை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் என்று முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக அபூநயீம் தமது நூலில் எழுதியுள்ளார்கள்.
உலர்ந்த திராட்சையை சாப்பிடுங்கள். இது மிகச் சிறந்த உணவாகும். அசதியைப் போக்கும். கோபத்தைத் தணிக்கும். நரம்புகளுக்கு வலுவூட்டும். இதை சமையலில் சேர்த்தால் நல்ல மணம் தரும். இது சளியை வெளியேற்றும். முகத்தை கவர்ச்சிகர மாக்கும்.
''சிவப்பு நிற உலர்ந்த திராட்சையின் 21 விதைகளை தினசரி சாப்பிடுபவர்களுக்கு கொடிய வியாதிகள் வராது.'' (நூல்: அபூநயீம்)
உங்கள் நலனுக்காக உலர்ந்த திராட்சைப் பழங்கள் உள்ளன. இது உடலை கவர்ச்சிகரமாக்கும். சளியை வெளியேற்றும். நரம்புகளுக்கு சக்தி தரும். பலவீனத்தைப் போக்கும். கவலையை மறக்கச் செய்து மனதில் சந்தோஷத்தை உண்டாக்கும். சுவாசத்தில் நல்ல வாசனையை உண்டாக்கும்.
எங்கள் நாட்டில் திராட்சை இருக்கின்றது. அதன் சாற்றை பிழிந்து நாம் குடிக்கலாமா? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஹஷ்ரத் தாரிக்பின் சுவேத் ஹஜிரி ரளியல்லாஹு அன்ஹு என்பவர் கேட்டார். ''குடிக்க வேண்டாம்'' என்று அதற்கு பதில் கிடைத்தது.
திராட்சை சாற்றை நாம் நோயாளிகளுக்கு சிகிச்சைக்காகத் தருகிறோம் என்று அவர் மீண்டும் கூறியதற்கு, பதில் அளிக்கையில், இதில் வியாதியை குணமாக்கும் மருத்துவத்தன்மை ஏதுமில்லை. இது ஒரு வியாதியே ஆகும் என்று நபி பெருமானார் கூறினார். (முஸ்லிம்-அபூதாவத், திர்மிதீ)
''சாராயத்தை மருந்தாகப் பயன்படுத்துபவர்களுக்கு இறைவன் சுகம் அளிப்பதில்லை.'' (அபூநவீம் பதஹுல் கபீர்)
திராட்சைப் பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள். அதைப் பின்பற்றினால் திராட்சையால் பல நன்மைகளைப் பெறலாம்.
100 கிராம் திராட்சைப் பழங்களில் 1.9 கிராம் புரோட்டீன், 1.05 கிராம் கொழுப்புச் சத்து, 83 மில்லி கிராம் கார்போ ஹைட்ரேட். 84 மில்லி கராம் கால்ஷியம், 18 மில்லி கிராம் பாஸ்பரஸ், 5 மில்லி கிராம் வைட்டமின் சி, 150 யூனிட் வைட்டமின் ஏ, அதன் அளவில் வைட்டமின் பி2, பி1 ஆகியவை கிடைப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தினசரி ஒருவர் 125 கிராம் முதல் 250 கிராம் வரை கிஷ்மிஷ் பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு வலிமை கிடைக்கும்.
இந்திய அரசின் அக்ரிகல்ச்சுரல் கெமிஸ்ட் நிறுவனம் உலர்ந்த திராட்சையை ஆய்வு செய்தது. இதில் மனிதனுக்கு தேவைப்படும் 90 சதவீதம் ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. உடலுக்குத் தேவையான தாது உப்புக்களைத் தவிர, அனைத்து வைட்டமின், குளுக்கோஸ், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்ஷியம், அக்சாலிக் மற்றும் டார்டாரிக் ஆசிட் இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. இதன் இலைகளிலும், தோலிலும் ஒருவிதமான எண்ணெய் கொழுப்புச்சத்தும், 18% டேனிக் ஆசிட்டும் இருக்கின்றது. இது உடலுக்குத் தீங்கு விளை விப்பதில்லை. இதை சர்க்கரை வியாதியினரும் பயன்படுத்தினாலும், இரத்தத்தில் சர்க்கரை சத்து அதிகரிக்காது என்று கூறுகிறார்கள்.
திராட்சையைப் பதமாக உலர வைத்து விற்பனை செய்யப்படும் பெரிய திராட்சைக்கு மவீஜி முனேகா என்றும், சிறிய பழத்தை கிஷ்மிஷ் பழம் என்றும் அழைப்பார்கள். இது ஒரு நல்ல இரத்தச் சுத்தி மருந்தாகும். யுனானி மருத்துவக் களஞ்சியத்தில் உலர்ந்த திராட்சை, ஆகாஷவல்லி இரண்டை யும் சமஅளவில் கொதிக்க வைத்து குடித்தால் குடிப் பழக்கம் நீங்கும், அசுத்தமான இரத்தமும் சுத்தமாகும். குடியால் ஏற்பட்ட சகல பிரச்சினைகளும் குணமாகும் என்று கூறப்பட்டுள்ளது.
9 உலர்ந்த திராட்சைப் பழத்தையும், ஆகாஷ வல்லி 6 கிராமும் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து அதை மதுவைக் குடிக்க ஆர்வம் ஏற்படும் போது கொடுத்தால் மதுவின் மீதுள்ள தாகம் வெறுப்பாகும். இதையே தினசரி இரண்டு வேளை குடித்து வந்தால் இரத் தத்தில் உள்ள சாராயச்சத்து வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.
9 உலர்ந்த திராட்சைப் பழத்தையும், ஆகாஷ வல்லி 6 கிராமும் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து அதை மதுவைக் குடிக்க ஆர்வம் ஏற்படும் போது கொடுத்தால் மதுவின் மீதுள்ள தாகம் வெறுப்பாகும். இதையே தினசரி இரண்டு வேளை குடித்து வந்தால் இரத் தத்தில் உள்ள சாராயச்சத்து வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.
நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திராட்சையை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் என்று முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக அபூநயீம் தமது நூலில் எழுதியுள்ளார்கள்.
உலர்ந்த திராட்சையை சாப்பிடுங்கள். இது மிகச் சிறந்த உணவாகும். அசதியைப் போக்கும். கோபத்தைத் தணிக்கும். நரம்புகளுக்கு வலுவூட்டும். இதை சமையலில் சேர்த்தால் நல்ல மணம் தரும். இது சளியை வெளியேற்றும். முகத்தை கவர்ச்சிகர மாக்கும்.
''சிவப்பு நிற உலர்ந்த திராட்சையின் 21 விதைகளை தினசரி சாப்பிடுபவர்களுக்கு கொடிய வியாதிகள் வராது.'' (நூல்: அபூநயீம்)
உங்கள் நலனுக்காக உலர்ந்த திராட்சைப் பழங்கள் உள்ளன. இது உடலை கவர்ச்சிகரமாக்கும். சளியை வெளியேற்றும். நரம்புகளுக்கு சக்தி தரும். பலவீனத்தைப் போக்கும். கவலையை மறக்கச் செய்து மனதில் சந்தோஷத்தை உண்டாக்கும். சுவாசத்தில் நல்ல வாசனையை உண்டாக்கும்.
எங்கள் நாட்டில் திராட்சை இருக்கின்றது. அதன் சாற்றை பிழிந்து நாம் குடிக்கலாமா? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஹஷ்ரத் தாரிக்பின் சுவேத் ஹஜிரி ரளியல்லாஹு அன்ஹு என்பவர் கேட்டார். ''குடிக்க வேண்டாம்'' என்று அதற்கு பதில் கிடைத்தது.
திராட்சை சாற்றை நாம் நோயாளிகளுக்கு சிகிச்சைக்காகத் தருகிறோம் என்று அவர் மீண்டும் கூறியதற்கு, பதில் அளிக்கையில், இதில் வியாதியை குணமாக்கும் மருத்துவத்தன்மை ஏதுமில்லை. இது ஒரு வியாதியே ஆகும் என்று நபி பெருமானார் கூறினார். (முஸ்லிம்-அபூதாவத், திர்மிதீ)
''சாராயத்தை மருந்தாகப் பயன்படுத்துபவர்களுக்கு இறைவன் சுகம் அளிப்பதில்லை.'' (அபூநவீம் பதஹுல் கபீர்)
திராட்சைப் பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள். அதைப் பின்பற்றினால் திராட்சையால் பல நன்மைகளைப் பெறலாம்.
100 கிராம் திராட்சைப் பழங்களில் 1.9 கிராம் புரோட்டீன், 1.05 கிராம் கொழுப்புச் சத்து, 83 மில்லி கிராம் கார்போ ஹைட்ரேட். 84 மில்லி கராம் கால்ஷியம், 18 மில்லி கிராம் பாஸ்பரஸ், 5 மில்லி கிராம் வைட்டமின் சி, 150 யூனிட் வைட்டமின் ஏ, அதன் அளவில் வைட்டமின் பி2, பி1 ஆகியவை கிடைப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தினசரி ஒருவர் 125 கிராம் முதல் 250 கிராம் வரை கிஷ்மிஷ் பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு வலிமை கிடைக்கும்.
இந்திய அரசின் அக்ரிகல்ச்சுரல் கெமிஸ்ட் நிறுவனம் உலர்ந்த திராட்சையை ஆய்வு செய்தது. இதில் மனிதனுக்கு தேவைப்படும் 90 சதவீதம் ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. உடலுக்குத் தேவையான தாது உப்புக்களைத் தவிர, அனைத்து வைட்டமின், குளுக்கோஸ், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்ஷியம், அக்சாலிக் மற்றும் டார்டாரிக் ஆசிட் இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. இதன் இலைகளிலும், தோலிலும் ஒருவிதமான எண்ணெய் கொழுப்புச்சத்தும், 18% டேனிக் ஆசிட்டும் இருக்கின்றது. இது உடலுக்குத் தீங்கு விளை விப்பதில்லை. இதை சர்க்கரை வியாதியினரும் பயன்படுத்தினாலும், இரத்தத்தில் சர்க்கரை சத்து அதிகரிக்காது என்று கூறுகிறார்கள்.
திராட்சையைப் பதமாக உலர வைத்து விற்பனை செய்யப்படும் பெரிய திராட்சைக்கு மவீஜி முனேகா என்றும், சிறிய பழத்தை கிஷ்மிஷ் பழம் என்றும் அழைப்பார்கள். இது ஒரு நல்ல இரத்தச் சுத்தி மருந்தாகும். யுனானி மருத்துவக் களஞ்சியத்தில் உலர்ந்த திராட்சை, ஆகாஷவல்லி இரண்டை யும் சமஅளவில் கொதிக்க வைத்து குடித்தால் குடிப் பழக்கம் நீங்கும், அசுத்தமான இரத்தமும் சுத்தமாகும். குடியால் ஏற்பட்ட சகல பிரச்சினைகளும் குணமாகும் என்று கூறப்பட்டுள்ளது.
9 உலர்ந்த திராட்சைப் பழத்தையும், ஆகாஷ வல்லி 6 கிராமும் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து அதை மதுவைக் குடிக்க ஆர்வம் ஏற்படும் போது கொடுத்தால் மதுவின் மீதுள்ள தாகம் வெறுப்பாகும். இதையே தினசரி இரண்டு வேளை குடித்து வந்தால் இரத் தத்தில் உள்ள சாராயச்சத்து வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.

Sunday, June 24, 2012


நாமும் நமது மரணமும்

நாமும் நமது மரணமும் 

மகத்தான ஆற்றல்கள் நிறைந்த அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: 'நீங்கள் எங்கிருந்த போதும் உங்களை மரணம் அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே! (அல்குர்ஆன் 4: 78)

அல்லாஹ்வின் விருப்பமின்றி எவரும் மரணிக்க முடியாது. இது நேரம் குறிக்கப்பட்ட விதி (அல் குர்ஆன் : 3:145)

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் மரணம் நெருங்கி விட்டவருக்கு 'லா இலாஹ இல்லல்லாஹூ'என்ற திருக்கலிமாவைச் சொல்லிக் கொடுங்கள்.(அறிவிப்பவர்:அபூஸயீத் அல் குத்ரி (ரலி) முஸ்லீம் 1672)

மரணம்! நமது பிறப்போடு சேர்த்து அனுபப்பட்ட ஒரு வாழ்க்கைத் திட்டம். படைக்கப்பட்ட ஒவ்வொரு ஆத்மாவும் சுவைத்தே தீர வேண்டிய கட்டாய வாழ்க்கைச் சுவை! இவ்வுலகத்திலிருந்து வேறு உலகத்திற்கு ஒவ்வொரு ஆன்மாவையும் பிரவேசிக்கச் செய்யும் ஒருவழிப்பாதை. தெய்வீக விசுவாசங்கள் திண்ணமாக உண்மையாகும் திடமான சம்பவமே மரணம்.

நிர்ணயிக்கப்பட்ட விதியாக இருக்கும் இம்மரணம் ஒவ்வொருவருக்கும் எங்கே வரும்? எப்போது நேரும்? எந்த ரூபத்தில் நிகழும்; என்பதை எவராலும் அறிய முடியாத விஷயமாக வல்ல இறைவன் ஆக்கி வைத்துள்ளான்.


மனிதர்களிடம் நிகழ்ந்தே தீரக்கூடிய சில விஷயங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாததாக அவர்களின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்டவையாக உள்ளன. உதாரணமாக பிறப்பும் இறப்பும்! ஏந்த மனிதனும் தான் விரும்பிய மாதிரி பிறக்கவோ, தான் விரும்பியபோது மரணிக்கவோ முடிவதில்லை. மாறாக, அவைகளெல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் ஒருவனின் கட்டுப்பாட்டில் மட்டுமே நடப்பவையாக உள்ளன. வேறெவராலும் இவற்றை நிகழ்த்த முடிவதில்லை. காரணம், இவைகளெல்லாம் மகத்துவமிக்க அல்லாஹ் மட்டுமே அறியக்கூடிய, நிகழ்த்தக்கூடிய மறைவான ஞானங்களாகும் என்று அல்லாஹ் கூறுகிறான். 

ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார். கண்ணியமிக்க இரட்சகன் தனது திருமறையில் கூறும்போது, அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான் நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம் எங்கே? மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன் ( அல்குர்ஆன்: 31 : 34)

அல்லாஹ் மட்டுமே அறியக்கூடிய இந்த விஷயங்கள், அல்லாஹ் ஒருவனால் மட்டுமே நிகழ்த்த முடிந்ததாகவும் உள்ளது. இவைகள் மனித இனத்தின் மீது விதிக்கப்பட்ட அடிப்படைகளாகவும் உள்ளன. பிறப்பு, இறப்பு, மழை, சம்பாத்தியம், மறுமை இவற்றை வேண்டாம் எனக்கூறி மனிதரில் எவரும் ஒதுக்கித் தள்ளவோ தப்பிக்கவோ முடியாது. ஒவ்வொருவரும் மேற்கூறிய விஷயத்தில் ஏக இறைவனின் உதவியையும், நாட்டத்தையும் பெற்றே தீர வேண்டிய கட்டாய நிலையிலுள்ளனர்.மனிதர்களில் பெரும்பாலோர் தங்களின் மரணத்தைப் பற்றி சிந்தனையில்லாமல் மனம் போன போக்கில் உலா வருகின்றனர். நொடிப்பொழுதில் மறைந்து விடும் உலகின் மீது மோகங்கொண்டு நிலையான மறுமையையும் மரணத்தையும் வெறுக்கின்றனர். யார் வெறுத்த போதும், விரும்பிய போதும் அல்லாஹ் வகுத்து வைத்திருக்கும் காலக்கெடு வந்துவிடுமாயின் அது தனி மனிதனாயினும் சமுதாயமானாலும் ஒரு வினாடி நேரம் கூட முந்தாமலும், பிந்தாமலும் மரணத்தை சந்திப்பார்கள். 

வல்ல நாயன் அல்லாஹ் கூறுகின்றான்,  ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள்,  பிந்தவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்: 10:49)

மேலும், உயிரைக் கைப்பற்றும் விஷயத்தில் மக்களிடையே பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. உலகம் முழுமைக்கும் ஒரே ஒரு மலக்கைக் கொண்டு தான் உயிர் கைப்பற்றப்படுகிறது. அவர் பெயர் இஸ்ராயில். அவரைத்தான் அல்லாஹ் நியமித்திருக்கிறான். அவர் தான் உயிரைக் கைப்பற்றும் வானவர் என்று பரவலாக நம்பப்படுகிறது. இதற்கு ஆதாரமாக ஆதி மனிதரைப் படைப்பதற்காக அல்லாஹ் பூமியிலிருந்து மண்ணெடுத்து வரச் சொல்லி ஒவ்வொரு மலக்கையும் அனுப்புகிறான். அவர்களுக்கு பூமி மண் தர மறுத்தது. அல்லாஹ் 'இஸ்ராயிலை அனுப்பியபோது பூமி மறுத்தபோதும் மண் எடுத்துச் சென்றதாகவும் அதனால் மனிதர்களின் உயிரைக் கைப்பற்ற அவரையே அல்லாஹ் நியமித்து விட்டதாகவும் ஒரு கதை இஸ்லாமிய மக்களிடத்திலே நிலவுகிறது.

உண்மையில் 'இஸ்ராயில்' என்ற பெயரில் ஒரு மலக்கு இருப்பதாக திருக்குர்ஆனிலோ அல்லது ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ எந்தக் குறிப்பையும் சான்றையும் காண முடியவில்லை. உண்மையில் ஒரே ஒரு மலக்கு தான் உலகம் முழுவதும் உள்ள அனைவரின் உயிரையும் கைப்பற்றுகிறார் என்று கூறுவதற்கும் மார்க்கத்தில் எந்த ஆதாரப்பூர்வமான சான்றையும் காண முடியவில்லை. மலக்குல் மவ்த் ஒருவர் தான் என்பதையும் அவர் பெயர் இஸ்ராயில் ' என்பதையும் இஸ்லாம் மறுக்கிறது. மறைவான ஞானங்களின் நுண்ணறிவாளனாகிய அல்லாஹ் கூறுகின்றான்:

உங்களுக்கென நியமிக்கப்;பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக்கொண்டு வரப்படுகிறீர்கள். (அல் குர்; ஆன் 32:11)

ஒவ்வொரு மனிதருக்கும் அவரது உயிரைக் கைப்பற்றுவதற்காக ஒரு வானவரை அல்லாஹ் நியமித்திருக்கிறான். எப்போது கைப்பற்ற வேண்டும் என்று உத்தரவு வருகிறதோ, அந்த உத்தரவுக்காக ஒவ்வொரு வினாடி நேரமும் அவர் காத்துக் கொண்டிருக்கிறார் என்று திருமறைக்குர்ஆனும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் சான்று கூறுகின்றன.

இந்த நம்பிக்கையைத் தகர்க்கும் விதமான எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும் இஸ்லாமிய சமுதாயம் இடந்தரக் கூடாது.

உயிர்பிரிந்தவுடன் இறந்தவரின் கண்களை மூடிவிடுவதும்

உம்முஸலமா(ரலி) அவர்கள் கூறியதாவது: (என் முதல் கணவர்) அபூஸலமாவின் (இறுதி நாளில்) அவரது பார்வை நிலைகுத்தி நின்றபோது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் வந்து அவருடைய கண்களை மூடி விட்டார்கள். பிறகு உயிர் கைப்பற்றப்படும் போது பார்வை அதைப்பின் தொடர்கிறது. என்று கூறினார்கள். (ஆகவே மரணமடைந்து விட்டவரின் கண்களை மூடி விடுங்கள். அப்போது அபூஸலமாவின் குடும்பத்தார் சப்தமிட்டு (புலம்பி) அழுதனர்.அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் உங்களுக்காக நீங்கள் நல்லதைத் தவிர வேறெதையும் வேண்டாதீர்கள். ஏனெனில் நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் 'ஆமின்' என்று கூறுகின்றனர் (மேலும் அபூஸலமா(ரலி) அவர்களுக்காக பிரார்த்தித்தார்கள்) (முஸ்லீம் 1678)

நல்லோர்களின் உயிர்களை கைப்பற்றுதல்

எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ்வை அஞ்சி நன்மைகள் செய்து மறுமை வாழ்வே சிறந்தது என்று கூறி நல்லோராக வாழும் நிலையில் அவர்களின் உயிர் கண்ணியப்படுத்தப்படும். மகத்தான இரட்சகன் அல்லாஹ் கூறுகிறான்.

நல்லோராக இருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றி, 'உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! நீங்கள் செய்தவற்றின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள்! என்று கூறுவார்கள் (அல்குர்ஆன்: 16:32)

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைச் சந்திக்க யார் விரும்புகிறாரோ அவரை அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வின் சந்திப்பை வெறுக்கிறாரோ அவரது சந்திப்பை அல்லாஹ்வும் வெறுக்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அனைவரும் மரணத்தை வெறுக்கத்தானே செய்கிறோம் என்று கேட்டேன் அதற்கவர்கள் அவ்வாறு அல்ல. ஒரு மூஃமினுக்கு இறைவனின் அருள் அவனது சுவர்க்கம் அவனது திருப்தி பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அல்லாஹ்வின் சந்திப்பை விரும்புகிறான். அல்லாஹ்வும் அவனைச் சந்திக்க விரும்புகிறான். ஒரு காஃபிர் அல்லாஹ்வின் வேதனை, அவனது கோபம் பற்றி எச்சரிக்கப்பட்டால் அவன் அல்லாஹ்வின் சந்திப்பை வெறுக்கிறான். அல்லாஹ்வும் அவனது சந்திப்பை வெறுக்கிறான் என்று விளக்கமளித்தார்கள். (ஆயிஷா(ரலி) திர்மிதி 987)

மறுப்போரின் உயிர்கள்

படைத்த இரட்சகனாகிய அல்லாஹ்வின் அருட்கொடைகளை சுகித்துக் கொண்டு அவனை மதிக்காமல், பணியாமல் அல்லாஹ்வை மறுக்கும் தீயோர்களின் உயிர் கைப்பற்றப்படும்போது கடுமையான வேதனை செய்யப்பட்டு அவர்களின் உயிர் கைப்பற்றப்படும். அல்லாஹ்வை மறந்து உலகை அதிகம் நேசித்து எல்லா வகையான வாழ்வியல் அருட்கொடைகளை அல்லாஹ்விடமிருந்துப் பெற்றுக் கொண்டு நன்றிகெட்ட முறையில் அல்லாஹ்வை வெறுக்கின்றனர்;. அதுமட்டுமன்றி எந்த வேத ஆதாரமும் இல்லாமல் சான்றுகளும் இல்லாமல் அல்லாஹ்வைப் போன்று வேறு தெய்வமும் உள்ளது என கூறும் கொடுமையான இணைவைப்பைச் செய்த மறுப்போரின் உயிர்களை வானவர்கள் கடினமான வேதனைச் செய்து கைப்பற்றுவார்கள். 

திருமறையில் வல்ல அல்லாஹ், 
(ஏக இறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும் போது,  சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்;! என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே! நீங்கள் செய்த வினையை இதற்குக் காரணம், அல்லாஹ் அடியார்களுக்கு அநீதி இழைப்பவன் அல்லன் (அல் குர்ஆன்: 8: 50,51)

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் இறந்து விட்டால் (அவர் மறுமையில் செல்ல வேண்டிய) இடம் அவருக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது.அவர் சுவர்க்கவாசியாக இருந்தால் சுவர்க்கவாசியாகக் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகவாசியாகக் காட்டப்படும். கியாமத் நாளில் அல்லாஹ் எழுப்பும் வரை இதுவே உனது தங்குமிடமாகும் என்று அவருக்குக் கூறப்படும். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) திர்மிதி 992)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் (ஜனாஸா) கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் (இவா) ஓய்வு பெற்றவராவார். அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார் என்று சொன்னார்கள். மக்கள் அல்லாஹ்வின் தூதரே! ஒய்வு பெற்றவர் அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இறைநம்பிக்கைக் கொண்ட அடியார் (இறக்கும்போது) இவ்வுலகத்தின் துன்பங்களிலிருந்து ஓய்வு பெறுகிறார். பாவியான அடியான் (இறக்கும் போது) அவனின்; எல்லாவிதமான தொல்லையிலிருந்தும் மற்ற அடியார்கள் (நாடு) நகரங்கள். மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு(பெற்ற நிம்மதி) பெறுகின்றன. (அபூகதாதா ஹாபினுஸ் ரிப்யி (ரலி) முஸ்லிம் 1932)

கண்ணியமிக்க எல்லாம் வல்ல அல்லாஹூத்தஆலா தன் திருமறையில்:
தமக்குத் தாமே தீங்கு இழைத்தோரை வானவர்கள் கைப்பற்றும் போது, நாங்கள் எந்தக் கேடும் செய்யவில்லை என்று அவர்கள் சமாதானம் பேசுவார்கள். அவ்வாறில்லை! நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அல்லாஹ் அறிந்தவன். நரகத்தின் வாசல்கள் வழியாக நுழையுங்கள்! அதில் நிரந்தரமாக தங்குவிர்;கள்.பெருமையடித்தோரின் தங்குமிடம் மிகவும் கெட்டது. (அல் குர்ஆன்: 16:28,29)

நாங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடி அல்லாஹ்வின் பாதையில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் நாடு துறந்துச் சென்றோம்.எங்களுக்காகப் பிரதிபலனை அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகி விட்டது. எங்களில் சிலர் தமக்குரிய பிரதிபலனில் எதையும் (இவ்வுலகில்) அனுபவிக்காமலேயே (உலகைப் பிரிந்து) சென்று விட்டனர். அவர்களில் முஸ்அப் பின் உமைர்(ரலி) அவர்களும் ஒருவர். அவர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டார்கள். அவருக்கு கஃபன் அணிவிக்க   துணி ஒன்று மட்டும் (அவருடைய உடமைகளில்) கிடைத்தது. அதைக் கொண்டு அவரது தலைப்பகுதியை மறைத்தால் கால்கள் வெளியே தெரிந்தன. கால்களை மறைத்தால் தலை வெளியில் தெரிந்தது. ஆகவே அவரது தலைப்பகுதியை அந்தத் துணியால் மறைத்து விட்டு, அவருடைய கால்கள் மீது இத்கீர் எனும் ஒருவகை வாசனைப் புல்லை இட்டு மறைக்குமாறு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கட்டளையிட்டடார்கள். (அறிவிப்பவர்: கப்பாப் பின் அல் அரத்(ரலி) முஸ்லீம் 1715)

ஆகவே மரணத்தை பயந்து அல்லாஹ்வை அஞ்சி நடக்க நாம் முயற்சிக்க வேண்டும்.

Source: www.aleemislam.blogspot