widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, December 20, 2013

மறுமை நாள். சொர்க்கம் நரகம்

1773. மறுமை நாளில் உடல் பருத்த கொழுத்த மனிதன் ஒருவன் வருவான். அல்லாஹ்விடம் கொசுவின் இறக்கையளவு எடை கூட அவன் (மதிப்பு) பெறமாட்டான். ‘மறுமை நாளில் அவர்களுக்கு எத்தகைய மதிப்பையும் அளிக்கமாட்டோம்” எனும் (திருக்குர்ஆன் 18:105 வது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 4729 அபூஹுரைரா (ரலி).
1774. யூத அறிஞர்களில் ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘முஹம்மதே! அல்லாஹ், வானங்களை ஒரு விரல் மீதும், பூமிகளை ஒரு விரல் மீதும், இதரப் படைப்பினங்களை ஒரு விரல் மீதும் வைத்துக் கொண்டு,‘நானே (ஏகாதிபத்தியம் உள்ள) அரசன்” என்று சொல்வான் என நாங்கள் (எங்களின் வேத நூலான தவ்ராத்தில்) கண்டோம்” என்று கூறினார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அந்த அறிஞரின் கருத்தை உண்மையென ஆமோதிக்கும் விதத்தில், தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகு, ‘அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு மதிக்கவில்லை. மறுமை நாளில் பூமி முழுவதும் அவன் கைப் பிடியில் இருக்கும். வானங்கள் அவனுடைய வலக்கரத்தில் சுருட்டப்பட்டிருக்கும். அவர்கள் இணைவைப்பவற்றிலிருந்து அவன் தூயவன்; உயர்ந்தவன்; எனும் (திருக்குர்ஆன் 39:67 வது) வசனத்தை ஓதினார்கள்.
புஹாரி 4811 இப்னு மஸ்ஊத் (ரலி).
1775. அல்லாஹ் (மறுமை நாளில்) பூமியைத் தன்னுடைய கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான்; வானத்தைத் தன்னுடைய வலக் கரத்தில் சுருட்டிக் கொள்வான்; பிறகு ‘நானே அரசன்; பூமியின் அரசர்கள் எங்கே?’ என்று கேட்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 6519 அபூஹுரைரா (ரலி).
1776. அல்லாஹ் மறுமைநாளில் பூமியைத் தன்னுடைய கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான். வானங்கள் அவனுடைய வலக்கரத்தில் இருக்கும். பிறகு ‘நானே அரசன்!” என்று சொல்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இறைமறையின் பார்வையில் இவ்வுல வாழ்க்கை



இவ்விடத்தில் சற்று நேரம் நாம் தாமதிப்போம். இவ்வுலக வாழ்க்கை குறித்து குர்ஆனின் கண்ணோட்டம் என்ன என்று ஆராய்வோம். இந்த விஷயத்தில் குர்ஆனை முன்னிறுத்துவதும் அதனிடம் கருத்து கேட்பதும்தான் நமக்கு நல்லது.

ஏனெனில் இவ்வுல வாழ்வு குறித்து முஸ்லிம்களின் அறிவுகளும் சிந்தனைகளும் தடுமாறிப்போய் உள்ளன. இந்த வாழ்க்கையின் உண்மையான மதிப்பு என்ன, அந்தஸ்து என்ன என்பதில் ஆய்வாளர்களின் கருத்துகளும் சிதறிப் போய் உள்ளன!
குர்ஆன் மிகத் தெளிவாகவும் உறுதியுடனும் வெளிப்படையாகவும் அறிவித்துவிடுகிறது., இவ்வுலக வாழ்வின் தற்காலிகத்தையும் தாழ்வு நிலையையும் - மறுவுலகத்திற்கு எதிரில் அதன் மதிப்பின்மையையும்!
"உலக வாழ்க்கையின் இன்பங்கள் அனைத்தும் மறுமைக்கு எதிரில் எதுவுமே இல்லை, மிகச் சொற்பமே"(சூரத்துல் பராஆ 38)
"மேலும் இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் வேடிக்கையுமே அன்றி வேறில்லை. நிலையாக வாழ்வதற்கான இல்லம் மறுமை இல்லம்தான்! அந்தோ! இவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே!" (சூரத்துல் அன்கப+த் 64)
இன்னோர் இடத்தில்,
"நன்கு அறிந்துகொள்ளுங்கள்: இவ்வுலக வாழ்க்கை (மறுமைக்கு எதிரில்) விளையாட்டும் வேடிக்கையும் வெளிப்பகட்டும் மற்றும் உங்களுக்கிடையே ஒருவருக்கொருவர் பெருமையடித்துக் கொள்வதும், செல்வங்கள் - குழந்தைகள் ஆகியவற்றில் ஒருவரை ஒருவர் முந்திட முற்படுவதுமே அன்றி வேறில்லை. (இதன் உவமை) எவ்வாறெனில் மழை பொழிந்து, அதன் மூலம் விளைகிற தாவரங்களைப் பார்த்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைவது போன்றது! பின்னர் அவை உலர்ந்து விடுகின்றன. அவை மஞ்சணித்துப் போவதையும் பதராகிப் போவதையும் நீர் காண்கிறீர். (இதற்கு மாறாக) மறுமையி(ன் நிலை யாதெனி)ல் கடும் தண்டனை உண்டு. இறைவனின் மன்னிப்பும் உவப்பும் உண்டு. ஆனால் உலக வாழ்க்கை வெறும் ஏமாற்றுச் சாதனமே அன்றி வேறில்லை" (சூரத்துல் ஹதீத் 20)
மேலும் குர்ஆன் இவ்வாறே தெளிவாகவும் உறுதியுடனும் இவ்வுலவாழ்வு மறுமைக்கான பாலம் என்றும் பணியாற்றும் கால அவகாசம் என்றும் அறிவிக்கிறது.
மேலும் பல இடங்களில்!
"திண்ணமாக நாம் இப்ப+மியின் மீதுள்ள அனைத்தையும் இப்புவி (வாழ்வு)க்கு அலங்காரமாக ஆக்கியுள்ளோம்., இவர்களில் யார் மிகச் சிறந்த செயலைச் செய்பவர் என்று சோதித்துப் பார்ப்பதற்காக!" (சூரத்துல் கஹ்ஃப் 7)
வேறோர் இடத்தில்,
"அவனே மரணத்தையும் வாழ்கையும் படைத்தான்., உங்களில் யார் நல்லமல் புரியக்கூடியவர் என்று உங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காக! மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன். பெரும் மன்னிப்பாளன்" (சூரத்துல் முல்க் 2)
மேலும் மறுமை வாழ்க்கையே சிறந்தது, நிலையானது என்று கூறுகிறது குர்ஆன்:
"உலக வாழ்க்கை என்பது விளையாட்டும் வேடிக்கையுமே தவிர வேறில்லை. உண்மையில் எவர்கள் தீய நடத்தையைத் தவிர்க்க விரும்புகிறார்களோ அவர்களுக்கு மறுமை இல்லைமே மிகச் சிறந்தது. (என்னே பரிதாபம்! இவ்வளவுகூட) நீங்கள் அறிந்து கொள்ள மாட்டீர்களா?" (சூரத்துல் அன்ஆம் 32)
மற்றோரிடத்தில்,
"உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பவை யாவும் உலக வாழ்வின் இன்பச் சாதனங்களும் அலங்காரமும் தான். ஆனால் அல்லாஹ்விடம் உள்ளதே மிகச் சிறந்ததும் நிலையானதுமாகும். (இதனைக் கூட) நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா?" (சூரத்தல் கஸஸ் 60)
ஆகையால் தான் என்றென்றும் நிலையான, விரிவான, அசுத்தங்களை விட்டும் தூய்மையான, அபாயங்கள் இல்லாத மறுமை வாழ்க்கையைப் புறந்தள்ளிவிட்டு அழியுந்தன்மை கொண்ட, தற்காலிகமான, நிம்மதியில்லாத, நிலைபாடற்ற இவ்வுலக வாழ்வுக்கு முன்னுரிமை கொடுப்பவர்களை இகழ்கிறது., இழித்துரைக்கிறது குர்ஆன்!
"எவர்கள் நமது சந்திப்பை எதிர்பார்ப்பதில்லையோ மேலும் உலக வாழ்க்கையில் திருப்தி கொண்டு அதில் முழு நிம்மதியும் அடைந்தார்களோ மற்றும் எவர்கள் நம்முடைய சான்றுகள் குறித்து பராமுகமாக இருக்கிறார்களோ அத்தகையவர்களுக்கு (அவர்களின் தவறான கொள்கை - நடைமுறை மூலம்) அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீமைகளின் காரணமாக நரகம் தான் புகலிட(மாகக்கிடைக்)கும்" (சூரத்து ய+னுஸ் 7–8)
வேறோர் இடத்தில்,
"எவர்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் விரும்புகிறார்களோ அவர்களுக்கு, அவர்களின் செயல்களுக்கேற்ற கூலியை இங்கேயே நாம் நிறைவாக அளித்துவிடுகிறோம். அதில் அவர்களுக்கு எவ்விதக் குறைவும் செய்யப்பட மாட்டாது. ஆனால் இத்தகையவர்களுக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவும் இல்லை. உலகில் அவர்கள் உருவாக்கியவை அனைத்தும் அடியோடு அழிந்து போய் விட்டன (என்பதும்) அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்கள் அனைத்தும் வீணானவையே (என்பதும் அங்கு அவர்களுக்குப் புரிந்துவிடும்)" (சூரத்து ஹ_த் 15 -16)
வேறோர் இடத்தில்,
"சத்தியத்தை நிராகரித்தவர்களுக்குக் கடுமையான தண்டனையினால் அழிவு உள்ளது. அவர்கள் மறுவுலகத்தை விட இவ்வுலக வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். மேலும் அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாமல் (மக்களைத்) தடுக்கிறார்கள். அது (அவர்களின் விருப்பத்திற்கேற்ப) கோணலாகிவிட வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் வழிகோட்டில் வெகுதூரம் சென்று விட்டார்கள்" (சூரத்து இப்றாஹீம் 2 - 3 )
மற்றோர் இடத்தில்,
"இவர்கள் உலக வாழ்க்கையின் புறத்தோற்றத்தை மட்டுமே அறிகின்றனர். மறுவுலகத்தைப் பற்றி அவர்கள் அலட்சியமாக உள்ளனர்" (சூரத்துர் ரூம் 7)
வேறோர் இடத்தில்,
"எவன் நமது அறிவுரையைப் புறக்கணித்தானோ மேலும் உலக வாழ்;க்கையைத் தவிர வேறெந்தக் குறிக்கோளும் அவனுக்கு இல்லையோ அவனை அதே நிலையிலேயே விட்டுவிடுவீராக! -இப்படிப்பட்டவர்களுடைய அறிவின் எல்லை அவ்வளவுதான்! உம் இறைவனே நன்கு அறிபவன் தனது பாதையை விட்டு வழி பிறழ்ந்தவர் யார், நேர் வழியில் செல்பவர் யார் என்பதை!" (சூரத்துந் நஜ்ம் 29 -30)
இன்னோர் இடத்தில்,
"திண்ணமாக இவர்கள் உடனடியாகக் கிடைக்கக் கூடிய (உலகத்)தை நேசிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குப் பின்னால் வர விருக்கும் ஒரு கடினமான (மறுமை) நாளை அலட்சியமாக விட்டு விடுகிறார்கள்" (சூரத்தல் இன்ஸான் 27)
வேறோர் இடத்தில்,
"எவன் வரம்பு மீறினானோ மேலும் உலக வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுத்தானோ அவனுக்குத் திண்ணமாக நரகம் தான் புகலிடமாகும்" (சூரத்துந் நாஸியாத் 37–39)
ஆனால் இவ்வுலகின் நலனையும் மறுவுலகின் நலனையும் இரண்டையும் கருத்தில் கொண்டு அதே நேரத்தில் மறுவுலக வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதன் உயர்வையும் சிறப்பையும் அந்தஸ்தையும் உணர்ந்து அதை அடைவதற்கு ஆர்வம் கொண்டு வாழ்பவர்கள் யாரோ அவர்களை குர்ஆன் புகழ்கிறது!
"மக்களில் இவ்வாறு பிரார்த்தனை செய்வோரும் உள்ளனர்: எங்கள் இறைவனே! எங்களுக்கு உலகத்திலேயே எல்லாம் வழங்கிவிடு - இத்தகையவருக்கு மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை. இன்னும் - எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகிலும் நன்மையைக் கொடு., மறுவுலகிலும் நன்மையைக் கொடு. மேலும் நரக வேதனையில் இருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக என்று கூறும் சிலரும் அவர்களில் உள்ளனர்!" (சூரத்துல் பகறா 200 – 201)
ஓரிடத்தில் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்ததாகச் சொல்லிக் காட்டுகிறது குர்ஆன்:
" ....(இறைவா!) இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை எழுதி வைப்பாயாக. மறுமையிலும் நன்மையை அருள்வாயாக! திண்ணமாக நாங்கள் உன் பக்கமே திரும்பி விட்டோம்" (சூரத்துல் அஃராஃப் 156)
ஓரிடத்தில் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் புகழ்ந்துரைத்து அதன் மூலம் வழிகாட்டுகிறது:
"மேலும் இவ்வுலகிலும் அவருக்கு நன்மையை வழங்கினோம். திண்ணமாக அவர் மறுவுலகிலும் நல்லோர்களில் ஒருவராக இருப்பார்" (சூரத்துந் நஹ்ல் 122)

Wednesday, December 18, 2013

இறைநம்பிக்கையின் பலம்


நம்மை படைத்த அல்லாஹ் நாம் சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளான். அதில் தலையாயது தான் அவன் மீது நாம் கொள்ள வேண்டிய நம்பிக்கை. அவனை மட்டுமே இறைவனாக ஏற்க வேண்டும் என்ற கட்டளை.
இஸ்லாத்தின் அடிப்படையாக இந்த இறைநம்பிக்கை உள்ளது.

எதற்காக? இந்த இறை நம்பிக்கை ஒருவன் மனதிற்கு சென்றுவிட்டால் அவன் அளப்பறிய சக்தியை பெறுகிறான். அல்லாஹ்வை தவிர வேறு எவருக்கு அஞ்சாததால் அவனது வாழ்க்கையில் எவ்வித சலனமும் இல்லை. அல்லாஹ்வின் மீதான அச்சம் இருப்பதால் அவனை கொண்டு மற்றவர்களுக்கு தொந்தரவுகள் எதுவும் இல்லை. இதனை தான் வரலாறு நமக்கு சொல்லித் தருகிறது.
இன்று நாமும் இறைநம்பிக்கை கொண்டுள்ளோம். நம்மில் பலருக்கு இந்த இறைநம்பிக்கை என்னும் பரிசு மிகவும் எளிதாக கிடைத்தது என்பதை மறுப்பதற்கில்லை. எளிதாக கிடைத்ததால் தான் என்னவோ நாம் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை போலும்! இதனால்தான் நமக்கு பல படிப்பினைகளை அல்லாஹ் சொல்லித் தருகிறான்.
குர்ஆனிலும் சான்றோர்களின் வாழ்க்கையிலும் இதற்கான பல ஆதாரங்கள் உள்ளன. ஆனால் குர்ஆனின் ஒரு சம்பவம் இறை நம்பிக்கையின் பலம், எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நமக்கு காட்டுகிறது.
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனின் செய்தியை பெற்றுக் கொண்டு அதனை அப்போதைய அரசனாக இருந்த ஃபிர்அவ்னிடம் கொண்டு செல்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தை மொத்தமாக வைத்து அனுபவித்து கொண்டிருப்பவனுக்கு அல்லாஹ் மட்டும்தான் கடவுள் என்பதை ஜீரனிக்க முடியவில்லை. ‘நீர் கொண்டு வந்திருக்கும் அத்தாட்சி எதையும் காட்டும்’ என்று முதலில் கேட்டான். மூஸா அலைஹிஸ்ஸலாம் தனது கைத்தடியை எறிந்தார். உடனே அது பெரிய பாம்பாகிவிட்டது. தனது கையை சட்டைப்பையில் இருந்து வெளியே எடுத்தார். அது பார்ப்பவர்களுக்கு வெண்மையாக இருந்தது.
ஃபிர்அவ்னின் மனது உண்மையை ஏற்க மறுத்தது. அவனது துதிபாடிகளும் ‘இவர் ஒரு திறமையான சூனியக்காரர்’ என்று கூறினர். ‘இவரை எவ்வாறு எதிர்கொள்வது?’ என்று தனது சகாக்களுடன் ஆலோசணை செய்தான். ‘நமது நாட்டின் திறமையான சூனியக்காரர்கள் அனைவருக்கும் அறிவிப்பு கொடு. அவர்கள் இவருடன் போட்டியிட்டும்’ என்று கூறினர் சகாக்கள்.
வந்த சூனியக்காரர்கள் போட்டி ஆரம்பம் ஆவதுற்கு முன் தெளிவாக ஒரு கேள்வியையும் கேட்டுக் கொண்டார்கள்.

‘மூஸாவை வென்றுவிட்டால் அதற்குரிய வெகுமதி எங்களுக்கு கிடைக்குமல்லவா?’ என்று கேட்டார்கள். தங்கள் சூனியத்தின் மீது அவர்கள் கொண்ட நம்பிக்கை நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் என்ற எண்ணத்தை அவர்களுக்கு கொடுத்தது. ஃபிர்அவ்னும் வாக்குறுதியை கொடுத்தான். ‘நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்’ என்றான். இதை விட வேறு என்ன வேண்டும்? ஆட்சியை கையில் வைத்திருப்பவனுக்கு நெருக்கமாகி விட்டால் விரும்பியது எல்லாம் கிடைக்குமே. அதிகாரத்தை பயன்படுத்தி நாமும் சிறிது ஆட்டம் போடலாமே! இன்று அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நெருக்கமாக உள்ளவர்கள் போடும் ஆட்டத்தை பார்த்தால் அந்த சூனியக்காரர்களின் நிலையை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
ஃபிர்அவ்னின் வார்த்தைகள் கொடுத்த உற்சாகத்தில் போட்டியில் குதித்தனர். தங்களின் தடிகளை எறிந்து மக்களின் கண்களை மயக்கி மகத்தான சூனியத்தை செய்தனர். வெற்றியின் விளிம்பில் தாங்கள் இருப்பதாக அவர்கள் உணர்ந்த போது, அல்லாஹ் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை தடியை எறியுமாறு அறிவித்தான். எறிந்தவுடன் அது பெரிய பாம்பாகி அவர்களின் கற்பனைகள் அனைத்தையும் விழுங்கி விட்டது. சூனியக்கலையில் ஜாம்பவான்களாக இருந்தவர்களுக்கு இது பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. தங்களின் சூனியங்கள் வீணாகி விட்டதை உணர்ந்த அவர்கள் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டனர். தாங்கள் சிறுமைபடுத்தப்பட்டதையும் உணர்ந்தனர்.
தோல்வியை கண்டவர்கள் அத்துடன் நிற்கவில்லை. இத்தனை காலம் தாங்கள் செய்து வந்த சூனியங்கள் அனைத்தும் பொய்யானவை என்பதையும் உணர்ந்தனர். மூஸா என்ற சாதாரண மனிதரால் இதனை செய்திருக்க முடியாது. அவருக்கு மேலாக ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்தார்கள். தங்களின் சக்திகளுக்கெல்லாம் மேலான சக்தி பெற்றவன் அல்லாஹ் மட்டும்தான் என்பதையும் அறிந்தனர்.
தங்களின் சூனியத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஃபிர்அவ்னை விட அல்லாஹ்தான் உயர்ந்தவன் என்பதை உணர்ந்து கொண்டனர். உணர்ந்தவர்கள் உடனே உரக்க உரைத்தனர், ‘அகிலங்களின் இரட்சகனான அல்லாஹ் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டோம். அவனே மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவன் ஆவான்’ அதுவரை நிராகரிப்பின் பக்கம் இருந்தவர்கள், அல்லாஹ்வின் வல்லமையை கண்டவுடன் சரண் அடைந்தனர்.
தன்னுடைய அதிகாரத்தை காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சூனியக்காரர்கள் மூஸாவின் பக்கம் சென்றதை பிர்அவ்ன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ‘நான் உங்களுக்கு அனுமதி அளிக்கும் முன்னரே நீங்கள் நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? இது மூஸாவுடன் சேர்ந்து நீங்கள் செய்த சூழ்ச்சி என்று கூறினான். எஞ்சியிருக்கும் மக்களையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்த ஃபிர்அவ்ன் அராஜகத்தின் பக்கம் திரும்பினான்.
புதிதாக நம்பிக்கை கொண்ட அந்த மக்களை நோக்கி ‘உங்கள் அனைவரையும் மாறு கை மாறு கால் வாங்கி சிலுவையில் அறைவேன்’ என்று பயமுறுத்தினான். இப்போது தானே நம்பிக்கை கொண்டார்கள், சிறிது பயம் காட்டினால் மீண்டும் நம் பக்கம் திரும்பி விடுவார்கள் என்று நினைத்தான் போலும்.
ஆனால் அந்த மக்களோ மிகவும் உறுதியாக இருந்தார்கள். ‘நாங்கள் எங்கள் இரட்சகனின் பக்கமே திரும்ப செல்வோம். அவனது அத்தாட்சிகளை நாங்கள் நம்பிக்கை கொண்டதற்காக நீ எங்களை பழி வாங்குகிறாய்’ என்ற தெளிவாக கூறினார்கள். தங்களின் நம்பிக்கையில் தாங்கள் உறுதியாக இருக்க இறைவனிடம் ஒரு பிரார்த்தனையும் செய்தார்கள். ‘எங்கள் மீது பொறுமையை பொழிவாயாக, முஸ்லிம்களாக எங்களை கைப்பற்றி கொள்வாயாக’ என்று பிரார்த்தனை செய்தார்கள்.
மூஸாவை தோற்கடிக்க வேண்டும், பிர்அவ்னுக்கு நெருக்கமானவர்களாக ஆக வேண்டும் என்று விரும்பிய மக்கள், அல்லாஹ்வின் வல்லமையை புரிந்து அவனை நம்பிக்கை கொண்ட பிறகு அப்படியே மாறிவிட்டார்கள். ஃபிர்அவ்னின் நெருக்கத்தை விட அல்லாஹ்வின் நெருக்கத்தை தேர்ந்தெடுத்தார்கள். ஃபிர்அவ்னிடம் கொள்ளும் நெருக்கமானது சில காலம் மட்டுமே நிலைத்திருக்கும், ஆனால் அல்லாஹ்வின் நெருக்கம் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதை உணர்ந்தார்கள்.
அல்லாஹ்வின் நம்பிக்கை மனதில் வந்த பிறகு வேறு எந்த சக்திக்கும் அவர்கள் அடிபணிபவர்களாக இல்லை. ஃபிர்அவ்னின் குணத்தையும் அவனது கொடூரத்தையும் நேரடியாக கண்டவர்கள். அதிகார மமதையில் எதை வேண்டுமென்றாலும் செய்வான் என்பதையும் அறிந்தே வைத்திருந்தார்கள். அதுவரை அவன் முன் குனிந்து நின்றவர்கள், இறைநம்பிக்கை வந்தவுடன் அவனுக்கெதிராக உறுதியாக நின்றார்கள். தங்களின் நம்பிக்கையும் உறுதியும் தங்களின் உயிரை பறிக்கும் என்பதை அறிந்த பிறகும் அதற்கு அவர்கள் கவலைபடவில்லை.
ஃபிர்அவ்ன் கொடுக்கும் தண்டனை சில நிமிடங்களிலோ அல்லது மாதங்களிலோ முடிந்து விடும். ஆனால் பிர்அவ்னுக்கு கட்டுப்பட்டால் நிலையான மறுமையில் நிரந்தரமான வேதனையை அனுபவிக்க வேண்டுமே என்ற பயம் அவர்கள் மனதில் இருந்தது. நிலையற்ற உலகத்தை விட நிலையான மறுமையை தேர்ந்தெடுத்தார்கள். எவ்வளவுதான் உறுதியாக இருந்தாலும் அல்லாஹ்வின் உதவியின்றி எதையும் செய்ய முடியாது. எனவேதான் தங்களுக்கு உறுதியை வழங்குமாறு பிரார்த்தனையும் செய்தார்கள்.
இதுதான் சூனியக்காரர்களாக வந்து இறை நம்பிக்கையாளர்களாக மாறியவர்களின் சம்பவம். இறைநம்பிக்கை மனதிற்கு சென்றால் என்னவெல்லாம் செய்யும் என்பதை இவர்களின் வாழ்க்கை நமக்கு சொல்லித் தருகிறது. நமது இறை நம்பிக்கையை சற்று உரசிப் பார்ப்போமா?
சிந்நதனைக்கு
-ஏர்வை ரியாஸ்

இறைநம்பிக்கையின் அடையாளங்கள்


  அ.மு. கான் பாகவி  
நம்பகத் தன்மையும் நாணய மும் இறை நம்பிக்கை யின் அடையாளங்கள் எனலாம். நம்பியவனை ஏமாற்றிவிட்டு, சட்டத்தின் பிடியிலி ருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்றிருந்தாலும், இறைவன் என்னைத் தண்டித்து விடுவான் என்ற அச்சம் இருக்க வேண்டும். அதுதான் உண்மையான இறையுணர்வு; அதுதான் இறையாற்றலை உண்மையி லேயே புரிந்துகொண்டதன் விளைவு.
“உண்மையே பேசி, பொருளின் குறையை மறைக்காமல் நடந்துகொண்டால் வணிகத்தில் வளம் கிடைக்கும். பொய்பேசி, குறையை மறைத்தால் அந்த வணிகத்தில் ‘பரக்கத்’ (வளர்ச்சி) இருக்காது” என்றார்கள் நபிகளார்.
“வாய்மையோடும் நம்பகத் தன்மையோடும் நடந்துகொள்ளும் வணிகர், (மறுமையில்) இறைத்தூதர்கள், வாய்மையாளர்கள் (ஸித்தீகீன்), உயிர்த் தியாகிகள் (ஷுஹதா) ஆகியோருடன் இருப்பார்” என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெரிவித்தார்கள்.
அவ்வாறே, ஒருவர் ஏற்கும் பதவி, பொறுப்பு, நிர்வாகம், பணி... இவையெல்லாம்கூட, அவரை நம்பி ஒப்படைக்கப்படும் அமானிதங்கள்தான். அந்த அமானிதத்தை அவர் முறையோடு காக்க வேண்டும். அதற்கான ஆற்றல் இல்லையென்றாலோ, இருந்தும் மனமில்லை என்றாலோ அப்பொறுப்பை ஏற்கவே கூடாது. ஏற்றபின் கடமையாற்றாது பொறுப்பை வீணாக்குவதோ தவறாகப் பயன்படுத்துவதோ நம்பிக்கைத் துரோகமாகும்.
ஆனால், எங்கும் இந்தத் துரோகம்தான் இன்று நடக்கிறது. ஒருவர் நபிகளாரிடம் வந்து, யுகமுடிவு எப்போது? என்று வினவினார். மக்கள்முன் உரையாற்றிக்கொண்டிருந்த நபிகளார் தமது உரையை முடித்தபின், “நம்பகத்தன்மை (அமானிதம்) பாழ்படுத்தப்பட்டால் யுகமுடிவை நீர் எதிர்பார்க்க லாம்” என்றார்கள். அம்மனிதரோ, “அது பாழ்படுத்தப்படுவது எவ்வாறு?” என்று வினா தொடுத்தார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “தகுதியற்றவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படும்போது, நீர் மறுமையை எதிர்பாரும்” என்றார்கள்.
பொறுப்பில் உள்ளவர்கள், மக்களுக்குப் பதில் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும்! படைத்தவனுக்குப் பதில் சொல்ல வேண்டுமே! அவனை ஏமாற்ற முடியாதே! அவன் தண்டிக்க ஆரம்பித்துவிட்டால் யாராலும் காப்பாற்ற முடியாதே! எனவே, அமானிதம் காப்பது அனைவரின் சமய, சமூகக் கடமையாகும்.

Wednesday, October 16, 2013

ஒரு ஹாஜியின் உளக்குமுறல்..!

இப்போதுதான் என் உள்ளம் புரிந்து கொண்டது. தாயின் கரங்களைப் பற்றிக் கொண்டு என் இறுதி மூச்சுக்களையாவது சுவாசிக்கலாமென என் எண்ணம் துடிக்கிறது"
  ஒரு ஹாஜியின் உளக்குமுறல்..!  
பணம் பணம் என்று வாழ்ந்த நான் என் வாழ்வில் நிறைந்திருக்கும் பாவக்கறைகளை அகற்றிடுவதற்காய் புறப்பட்டேன் படைத்தவன் ரஹ்மானின் இல்லத்தை நோக்கி ஹஜ் எனும் கடமைக்காய்.
ஆடம்பரமும், கட்பணைகளும்தான் என் வாழ்வின் இலட்சியங்களாய் ஒரு காலத்தில் என்னை சுற்றி வந்தன.
பணக்காரர்களும், பதவியுடையோர்களும்தான் என் பாச உறவுகளாய்த் தெரிந்தார்கள். என் மனைவின் கருத்துக்களும், கட்டளைகளும்தான் எனக்கு வேத வசனங்களாய்த தோன்றின.
தந்தையின் மரணத்தோடு என் தாய் பற்றிய எண்ணங்களும் தானாகவே மறைந்தன. என்மீதுள்ள என் தாயின் பாசமட்டும் சிறிதளவேனும் குறையவில்லை என்பதை என் உள்ளம் கண்டு கொள்ள மறுத்தது.
என் மகிழ்சியிலும், முன்னேற்றத்திலும் என் தாய் அவளின் அனாதரவை மறந்திருந்ததும் எனக்குப் புரியவில்லை. என் குழந்தைகளும், மனைவியும்தான் என் வாழ்வின் முகவரியாய்த் திகழ்ந்தார்கள்.
பணமோகத்தால் நான் கண்டது பல நோய்களைத்தான். நிம்மதி தேடிச் சென்ற எனக்கு பணம் தந்த பரிசு அது. உலக மோகத்தால் என் உடலை மறந்தேன். மன நிம்மதியை இழந்தேன்.
இப்போது என் தீராத வியாதிகளைத் தீர்க்கச் சென்றதில் என் சொத்துக்கள் எல்லாம் தீர்ந்துவிட்டன. இப்போதுதான் நான் என் மரணத்தின் வாடையை நுகர்கிறேன்.
அன்று தொழுகை, நோன்பு, ஸகாத் எல்லாமே வயோதிபர்களின் அடையாளங்கள் என்று நான் எண்ணினேன். ஹஜ் பணபலமுடையோரின் சமூக முத்திரை என்றே நான் கருதினேன்.
கஃபாவைக் கண்டதும் என் கால்கள் முன்நோக்கி நகர மறுத்தன. என் பாவக்கறைகள் என் அர்த்தம் புரியா வாழ்வை உணர வைத்தன. இப்போது நான் எதுவுமற்ற ஒரு பாவி. என் உடலையும், உள்ளத்தையும் பணத்திற்காய் பறிகொடுத்த ஒரு நோயாளி.
தன்னடக்கம் பேணி தவாபை முடித்தேன். என்னையறியாமல் என் கண்கள் கலங்கிக் கொண்டிருந்தன. களைப்பைப் போக்க கையில் ஒரு தண்ணீர் குவளையை எடுத்தேன். ஸம் ஸம் என்னை நில் நில் என்றது.
அப்போதுதான் என் தாயின் நினைவுகள் என் இதயத் துடிப்பை இரட்டிப்பாக்கியது. ஸம் ஸம் நீர் தாயிற்குள்ள பிள்ளைப் பாசத்தின் ஓர் அழியா அத்தாட்சி. தாய்க் குலத்திற்கு இறைவன் கொடுத்த கௌரவம். தாயே! இப்போது தான் குப்பி விளக்கெரியும் உன் குடிசை என் கண்முன் தோன்றுகிறது.
பல இலட்சம் ரூபாய்கள் கையிலிருந்தும் நீ கூனி நடக்கும் வரை என்னால் உன்னை இங்கு கூட்டிவரவேண்டும் என்ற எண்ணம் வந்ததில்லையே. ஒரு தடவையேனும் உன் ஆசைகளைக் கேட்டு நிறைவேற்றியதில்லையே என்பதை நினைக்கும் போது என் உள்ளம் குமுறுகின்றது.
கண்களைத் துடைத்தவனாய் ஸஃபா, மர்வா குன்றுகளுக்கிடையில் தொங்கோட்டம் ஓடச் சென்றேன். அங்கு நான் எடுத்து வைத்த ஒவ்வொரு பாதடிகளும் என் உளக்குமுறலை உக்கிறமாக்கின.
ஒவ்வொரு எட்டுக்களும் அன்று ஹாஜர் அலைஹிஸ்ஸலாம் தன் குலந்தையின் தாகம் தீர்க்க ஓடிய நிகழ்வை நிஜமாக்கிக் கொண்டிருந்தன. ஒரு வரலாற்று நிகழ்வை வருடம்தோரும் ஹாஜிகள் ஞாபகப்படுத்துவது வெறும் சடங்கிற்காக அல்ல என்பதை இப்போதுதான் என் உள்ளம் புரிந்து கொண்டது.
தாயின் கரங்களைப் பற்றிக் கொண்டு என் இறுதி மூச்சுக்களையாவது சுவாசிக்கலாமென என் எண்ணம் துடிக்கிறது. தாயின் முகம் காணும் ஆசையுடன் என் கால்கள் விரைகின்றன. தாயே என் பாதடிகள் உன் பாசத்தை சொல்கின்றன...
நன்றி : அப்துல் ஹபீழ், மதீனா இஸ்லாமியக் பல்கலைக்கழகம் @ www.jaffnamuslim.com

Eravur Thowheeth Jamaath Haj Festival Prayer at BT/BC/ Aligahar Central College










Wednesday, March 27, 2013

அல்லாஹ்வின் நேசம் பெறாதவர்


அல்லாஹ்வின் நேசம் பெறாதவர்
2:190. உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
2:205. அவன் (உம்மை விட்டுத்)திரும்பியதும், பூமியில் கலகத்தை உண்டாக்கவே முயல்வான்; விளை நிலங்களையும், கால்நடைகளையும் அழிக்க முயல்வான்; கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.
2:276. அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
3:32. (நபியே! இன்னும்) நீர் கூறும்: "அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள்." ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை.
3:57. ஆனால், எவர் ஈமான் கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களோ, அவர்களுக்குரிய நற்கூலிகளை (அல்லாஹ்) முழுமையாகக் கொடுப்பான்; அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்கமாட்டான்.
3:140. உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால், அதே போன்று மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது; இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்; இதற்குக் காரணம், ஈமான் கொண்டோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும்; இன்னும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை.
4:36. மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும்,அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.
4:107. (நபியே!) பிறருக்கு தீமை செய்து அதனால் எவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களோ அவர்களுக்காக நீர் வாதாட வேண்டாம்; ஏனென்றால் கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
5:64. "அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது" என்று யூதர்கள் கூறுகிறார்கள்; அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்;அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன; தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்; உம் மீது உம் இறைவனால் இறக்கப்பட்ட (இவ்வேதம்) அவர்கள் அநேகரில் வரம்பு மீறுதலையும் குஃப்ரை (நிராகரிப்பை)யும் நிச்சயமாக அதிகப் படுத்துகிறது, ஆகவே அவர்களிடையே பகைமையும், வெறுப்புணர்ச்சியையும் இறுதி நாள்வரை நாம் போட்டுவிட்டோம்; அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும்போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான்; (ஆயினும்) இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் செய்து கொண்டே திரிகின்றனர்; அல்லாஹ் குழப்பம் செய்பவர்களைநேசிக்க மாட்டான்.
5:87. முஃமின்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கி (ஆகுமாக்கி)யுள்ள, பரிசுத்தமான பொருட்களை ஹராமானவையாக (விலக்கப்பட்டவையாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள்; இன்னும் வரம்பு மீறியும் செல்லாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
6:141. பந்தல்களில் படரவிடப்பட்ட கொடிகளும், படரவிடப்படாத செடிகளும், பேரீத்த மரங்களும் உள்ள சோலைகளையும், புசிக்கத்தக்க விதவிதமான காய், கறி, தானியங்களையும், ஒன்றுபோலும் வெவ்வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும், அவனே படைத்தான். ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள்- நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
7:31. ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
7:55. (ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.
9:24. (நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும்,அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.
16:23. சந்தேகமின்றி அல்லாஹ், அவர்கள் மறைத்து வைத்திருப்பதையும்; அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும்; நிச்சயமாக அறிவான்; (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களை அவன் நிச்சயமாக நேசிப்பதில்லை.
22:38. நிச்சயமாக, அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை (முஷ்ரிக்குகளின் தீமைகளிலிருந்து) பாதுகாத்துக் கொள்கிறான் - நம்பிக்கை மோசம் செய்பவர்களையும், நன்றி கெட்ட மோசக்காரர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
28:76. நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்: "நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்" என்று கூறினார்கள்.
28:77. "மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை" (என்றும்கூறினார்கள்).
30:45. ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்தவர்களுக்கே அவன் தன் அருளிலிருந்து (நற்) கூலி கொடுக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிக்கமாட்டான்.
31:18. "(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
42:40. இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.
57:23. உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

அல்லாஹ்வின் நேசம் பெற்றவர்


அல்லாஹ்வின் நேசம் பெற்றவர்
2:222. மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: "அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்."
3:31. (நபியே!) நீர் கூறும்: "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
3:76. அப்படியல்ல! யார் தம் வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார்களோ, (அல்லாஹ்வுக்கு) அஞ்சியும் நடக்கின்றார்களோ (அவர்கள் தாம் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள்); நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான்.
3:134. (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
3:146. மேலும் எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் ரிப்பிய்யூன்கள் (என்னும் இறையடியார்களும்) பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர்; எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை, பலஹீனம் அடைந்து விடவுமில்லை; (எதிரிகளுக்குப்) பணிந்து விடவுமில்லை - அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான்.
3:148. ஆகவே, அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகத்தில் நன்மையையும், மறுமையின் அழகிய நன்மையையும் கொடுத்தான்; இன்னும், அல்லாஹ் நன்மை செய்யும் இத்தகையோரையே நேசிக்கின்றான்.
3:159. அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர,சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீதுபொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.
5:13. அப்பால், அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம்; அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம்; (இறை)வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்; ஆகவே அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே!) நீர் தவறாமல் கண்டு கொண்டே இருப்பீர்; எனவே நீர் அவர்களை மன்னித்துப் புறக்கணித்து விடுவீராக. மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
5:42. அன்றியும், இவர்கள் பொய்யையே அதிகமாகக் கேட்போராகவும், விலக்கப்பட்ட பொருட்களையே விழுங்குவோராகவும் இருக்கின்றனர்; (நபியே!) இவர்கள் உம்மிடம் வந்தால், இவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்கும்; அல்லது இவர்களைப் புறக்கணித்து விடும்; அப்படி இவர்களை விடுவீராயினும், இவர்கள் உமக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது; ஆனால், நீர் (இவர்களிடையே) தீர்ப்பளிப்பீராயின்நியாயமாகவே அவர்களிடையில் தீர்ப்பளிப்பீராக; ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களையே நேசிக்கின்றான்.
5:93. ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டு, ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால், சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள் வருமுன்) தடுக்கப்பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது; நன்மை செய்கிறவர்களையே அல்லாஹ்நேசிக்கிறான்.
9:4. ஆனால், நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இந்த முஷ்ரிக்குகளில், எதையும் குறைத்துவிடாமலும், உங்களுக்கு விரோதமாக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர: அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களின் காலக் கெடுவரையில் பூரணமாக நிறைவேற்றுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
9:7. அல்லாஹ்விடத்திலும், அவனுடைய தூதரிடத்திலும் முஷ்ரிக்குகளுக்கு எப்படி உடன்படிக்கை இருக்க முடியும்? ஆனால், நீங்கள் மஸ்ஜிதுல் ஹராம் (கஃபத்துல்லாஹ்) முன்(எவர்களுடன்) உடன்படிக்கை செய்து கொண்டீர்களோ, அவர்களைத் தவிர; அவர்கள் (தம் உடன்படிக்கைப்படி) உங்களுடன் நேர்மையாக நடந்து கொள்ளும்வரை நீங்களும் அவர்களுடன் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
9:108. ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் - நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது; அதில் நீர் நின்று (தொழவும்,தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது; அங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.
10:63. அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்.
49:9. முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால்,அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.
60:8. மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.
61:4. எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகிறார்களோ, அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கின்றான்.
எத்தகையோரை அல்லாஹ் நேசிக்கமாட்டான் என்றும் அல்லாஹ் நமக்கு சொல்லி தருகிறான். அந்த இலக்கணத்தையும் சற்று பார்த்து, அப்படிப்பட்ட குணங்களை விட்டொழிந்து வாழ்ந்தால் அல்லாஹ்வின் நேசத்தை பெறலாம்.....இறைநேசராக வாழலாம்.....வாங்க.....

Monday, February 4, 2013

இணைகற்பித்தால் உங்கள் சுவனம் ஹராமாக்கப்படும்!


எனக்கு எதையும் இணையாக்காமல் என்னிடமே கேளுங்கள்
"...எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை." (அல்குர்ஆன் 5:72 )
அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் கொடுத்துள்ளான். அல்லாஹ் மனிதனிடம் கூறுவது ஒன்றே ஒன்றுதான். ‘நீ எனக்கு மட்டுமே அடிபணியவேண்டும் எனக்கு எதையும் இணையாக்காதே’ என்பது தான் அது! இவ்வாறு இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று தான் அல்லாஹ்வை மட்டும் அழைத்து பிரார்த்தனை செய்வது!
அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ‘பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்’ பிறகு, ‘என்னை அழையுங்கள்! உங்களுக்கு பதிலளிக்கிறேன். எனக்கு அடிபணி வதை விட்டும் பெருமையடிப் போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். (40:60) என்ற இறை வசனத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிக்காட்டினார்கள். (அறிவிப்பு: நுஃமான் பின் பஷீர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி)
எனவே இந்தப் பிரார்த்தனை என்ற வணக்கத்தை வல்ல அல்லாஹ் ஒருவனிடம் மட்டுமே செய்ய வேண்டும். அல்லாஹ் அல்லாத வேறு எவரிடமும் நம்முடைய தேவைகளைக் கேட்கக் கூடாது என்பது தெளிவாகிறது. ஆனால் இன்று முஸ்லிம் சமூகத்தில் பெரும்பாலான மக்கள் இந்த இறைவசனத்தற்கு மாற்றமாக சமாதி வழிபாட்டில், அவ்லியாக்கள், நாதாக்கள் என்ற பெயரில் வழிபடும் அவநிலையை காண நேரிடுகிறது.
இந்த அவல நிலைக்கு 7 வருடம் அரபு மதரஸாக்களில் மார்க்கக் கல்வி பயின்ற மவ்லவிமார்களும்ஆதரவு தெரிவிப்பது, அறியாத மக்களை, நாளை மறுமையில் இறைவனுக்கு இணை வைப்பான ‘ஷிர்க்’ என்ற மாபாதக செயலை செய்ததற்கான கூலியாக நரக வேதனையில் கொண்டு போய் சேர்க்கும் என்ற உண்மையை மறைப்பது ஏன்?
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ‘நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்’ என்று அல்லாஹ் அல்குர்ஆன் 2:186 வசனத்தில் கூறுகின்றான்.  
பிரார்த்தனையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள்:
பிரார்த்தனை செய்யும்போது அனைத்து ஆற்றல்களையும் உள்ளடக்கியிருக்கும் சர்வ வல்லமை படைத்தவனின் முன்னிலையில் நாம் இருக்கின்றோம் என்ற எண்ணத்துடன் அடக்கத்தோடும், பணிவோடும் பிரார்த்திக்க வேண்டும். உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55) நபி ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். (அல்குர்ஆன் 19:3)
அச்சத்துடனும் உறுதியான நம்பிக்கையுடனும் அல்லாஹ்வை மட்டும் பிரார்த்தனை செய்யுங்கள் ‘நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.’ (அல்குர்ஆன் 7:6)
வலியுறுத்திக்கேட்பது:
அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும் போது ‘நீ விரும்பினால் தா! இல்லையென்றால் தர வேண்டாம்’ என்பது போன்று கேட்கக் கூடாது. மாறாக, ‘இதை நீ தந்து ஆகவேண்டும் உன்னால் தான் தரமுடியும். வேறு யாராலும் தரமுடியாது’ என்று வலியுறுத்திக் கேட்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நீங்கள் பிரார்த்தனை செய்தால் வலியுறுத்திக் கேளுங்கள். அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு! என்று கேட்க வேண்டாம். வலியுறுத்திக் கேட்பது அல்லாஹ்வை நிர்பந்திக்காது. ஏனெனில் அவனை (அல்லாஹ்வை) நிர்ப்பந்திப்பவர் யாருமில்லை. (அறிவிப்பு: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)
பாவமானதைக் கேட்கக் கூடாது:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ‘நான் பிரார்த்தனை செய்தேன். ஆனால் என் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப் படவில்லை’ என்று மனிதன் கூறுகின்றான். உறவை துண்டிக்கும் விஷயத்திலும் பாவ மானவற்றிலும் பிரார்த்தனை செய்தால் அது அந்த அடியாருக்கு (பிரார்த்தனை செய்பவருக்கு)ப் பதில் அளிக்கப்படாது. (அறிவிப்பு: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
அவசரப்படக்கூடாது:
பிரார்த்தனை செய்யும்போது அவசரப்படக்கூடாது. பலமுறை திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். ஓரிரு முறை மட்டும் கேட்டு விட்டு, நான் பிரார்த்தனை செய்தேன் எனக்கு இறைவன் எதுவும் தரவில்லை என்று கூறி பிரார்த்தனை செய்வதையே விட்டு விடக்கூடாது. இத்தகைய எண்ணத்துடன் பிரார்த் தனை செய்தால் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாது ‘நான் பிரார்த்தனை செய்தேன். ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப் படவில்லை என்று கூறி நீங்கள் அவசரப் படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்க ப்படும்’. என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பு: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)
நிராசை அடையக்கூடாது:
சிலர் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள் அவர்கள் கேட்கும் அந்த காரியம் நிறைவேறவில்லையென்றால் அல்லாஹ்வின் அருளில் நிராசை அடைந்து விடுவார்கள். அல்லாஹ்வின் அருள் விசாலமானது. எனவே அவனது அருளில் நிராசையடையக் கூடாது ‘அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (அல்லாஹ்வை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்கமாட்டார்கள்’ (அல்குர்ஆன் 12:87)
’என் அடியார்களே! எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைக்க வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்: மிக்க கருணையுடையவன் என்று (அல்லாஹ் கூறுவதை) (அல்குர்ஆன் 39:53) தெரிவிப்பீராக!
உணவு உடை ஹலாலாக இருத்தல்:
நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங் களுக்கு அளித்து உள்ளவற்றிலிருந்து தூய் மையானவற்றையே உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப் பின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள். (அல்குர்ஆன் 2:172)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தூய்மை யானவன். தூய்மையானதைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக் கொள்ளமாட்டான். அல்லாஹ் நபிமார்களுக்கு எதை ஏவினானோ அதையே முஃமின்களுக்கும் ஏவுகின்றான் என்று கூறிவிட்டு, ‘தூதர்களே! நல்ல பொருள் களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள். (ஸாலிஹான) நல்ல அமல்களைச் செய்யுங்கள்! நிச் சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன். (அல்குர்ஆன் 23:51)
ஒரு மனிதரைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள். ‘அவனோ நீண்ட தூரம் பயணத்தில் இருக்கின்றான். அவனுடைய தலை புழுதிபடிந்த பரட்டையாக இருக்கின்றது. அவன் வானத்தின்பால் கைகளை உயர்த்தி, எனது இறைவனே! எனது இறைவனே! என்று அழைக்கின்றான். அவனது ஆடை அவனது உணவு அவனது குடிப்பு ஆகிய அனைத்தும் ஹராமாக இருக்கின்றது. அவனோ ஹராமில் மூழ்கிவிட்டான். இந்த நிலையில் அவனது பிரார்த்தனை எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படும். என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பு: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
அல்லாஹ் தன் அடியார்கள் மீது மிகவும் கருணையுள்ளவன். அந்த அடியான் வெளித் தோற்றத்தை வைத்துக் கொண்டு அவனுடைய அறியாமையினால் தீங்கு தரக்கூடியதைக் கேட்பான். உதாரணமாக, தனக்கு அதி கப்படியான, செல்வம்ஃபணம் வேண்டுமென்று பிரார்த்தனை செய்வான். ஆனால் அந்த செல்வம் பணம் அவனை இறை நிராகரிப்புக்கு இழுத்துச் செல்லும் என்றிருந்தால் அதைக் கொடுக்காமல் அதைவிடச் சிறந்ததை இறைவன் கொடுப்பான். ஒருவன் தனக்கு ஏற்படவுள்ள ஆபத்தை உணராமல் தனது தேவையைக் கேட்கிறான். அனைத்தையும் அறிந்த அல்லாஹ் அதைக் கொடுப்பதற்கு பதிலாக அவனுக்கு வரவிருக்கும் ஆபத்தை நீக்குகிறான். அதுவும் இல்லையென்றால் அவன் கேட்டதைக் கொடுக்காமல் அதற்கு பகரமாக மறுமையில் அவனது நிலையை உயர்த்துவான்.
’உறவைத் துண்டிக்காமலும் பாவமான காரியம் அல்லாமலும் எந்த ஒரு பிரார்த்த னையை ஒரு முஸ்லிம் செய்தாலும் அவரது அந்த பிரார்த்தனை விரைவாகப் பதில் அளிக்கப்படும் அல்லது அதை அல்லாஹ் மறுமையில் ஒரு சேமிப்பாக ஆக்குகிறான் அல்லது அந்தப் பிரார்த்தனைக்குத் தக்க வாறு அவனது பாவத்தை அழிக்கின்றான். இவ்வாறு மூன்று விதங்களில் ஏதேனும் ஒரு விதத்தில் அல்லாஹ் பதிலளிக்கிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நாங்கள் அதிகமாகப் பிரார்த்தனை செய்தால் என்ன? என்று நபித் தோழர்கள் கேட்டனர். அதற்கு ‘அல்லாஹ் அதிகமாக்குவான்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அபூஸயீத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத்.
ஒரு அடியான் அல்லாஹ்விடம் பிரார்த் தனை செய்யும்போது அவனை வெறுங்கையு டன் அனுப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகின்றான். உங்களுடைய இறைவன் சங்கையானவன் அவனுடைய அடியார் தனது கையை அவன் பக்கம் உயர்த்தும் போது அந்த இரு கைகளையும் வெறுமனே அனுப்புவதற்கு வெட்கப்படுகிறான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பு: ஸல்மான் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னு மாஜா)
பதிலளிக்கப்படும் பிரார்த்தனைகள்:
கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகை யையும் நிறைவேற்றிய பின் கேட்கப்படும் பிரா ர்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும். எந்தப் பிரார்த்தனை செவியேற்கப்படும்? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இரவின் கடைசியிலும், கடமையாக்கப்பட்ட தொழுகைக்குப் பின்னரும் கேட்கும் பிரார்த்தனை ஆகும் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பு: அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)
இரவின் கடைசி நேரத்தில்....
இரவின் கடைசிப் பகுதியில் கேட்கப்படும் பிரார்த்தனை பதிலளிக்கப்படும் பிரார்த்தனைகளில் ஒன்று. எனவே அந்த நேரத்திலும் அதிகமாகப் பிரார்த்திக்க வேண்டும். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இரவை மூன்றாக பிரித்து கடைசிப் பகுதியில் அல்லாஹ் முதல் வானத்திற்கு தினமும் இற ங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் கேட்டால் நான் அதை ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் மன்னிப்புக் கேட்டால் நான் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான். (அறிவிப்பு: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1ஃ1145)
அல்லாஹ் தன்னுடைய நெறிநூலாகிய அல்குர்ஆனில் இறை நம்பிக்கை உடையவர் இரவின் கடைசி நேரத்தில் மன்னிப்பு கேட்பவராக இருப்பார் என்று கூறுகின்றான். (அல்குர்ஆன் 3:17)
ஸஜ்தாவின்போது...
ஓர்அடியான் அல்லாஹ்விடம் மிக நெருக் கமாக இருக்கும் நேரம் ஸஜ்தாவாகும். எனவே இந்த சந்தர்ப்பத்தில் கேட்கப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. ஸஜ்தாவில் இருக்கும் நிலையில் ஓர் அடியான் தன் னுடைய இறைவனை நெருங்குகின்றான் எனவே ஸஜ்தாவில் பிரார்த்தனையை அதிகப் படுத்துங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பு: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில்....
பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பு: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவுத்)
தந்தை பிள்ளைகளுக்கான பிரார்த்தனையின் போது...
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: மூன்று பிரார்த்தனைகள் இருக்கின்றன. அவற்றிற்குப் பதிலளிக்கப்படும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 1.அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை. 2. பிரயாணியின் பிரார்த்தனை. 3.தந்தை தனது பிள்ளைகளுக்காகச் செய் யும் பிரார்த்தனை. (அறிவிப்பு: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னு மாஜா)
ஜும்ஆ நாளில்....
வெள்ளிக்கிழமை அன்று ஒரு நேரம் உண்டு. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தால் அதை அல்லாஹ் அவருக்கு கொடுக்காமல் இருப்பதில்லை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அந்த நேரம் மிகக் குறைவானது என்பதைத் தமது கையால் சைகை காட்டினார்கள். (அறிவிப்பு: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரி)
நோன்பாளி நோன்பு திறக்கும் போது...
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: மூன்று நபர்களின் பிரார்த்தனை மறுக்கப்படாது.
1. நீதியான அரசன்,
2. பாதிக்கப்பட்டவர் செய்யும் பிரார்த்தனை
3. நோன்பாளி நோன்பு திறக்கும்போது கேட்கும் பிரார்த்தனை. (அறிவிப்பு: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னுமாஜா)
எனவே நாம் பிரார்த்தனை செய்யும் போது, நம்மைப் படைத்த அல்லாஹ்வை மட்டுமே அழைத்து முறையிட்டு, அவனுடன் யாரையும் கூட்டாக்காமல், பிரார்த்தனையின் போது மேற்கண்ட குர்ஆன் ஹதஃத் ஒழுங்கு முறைகளுடன் பிரார்த்திப்போமாக! வல்ல இறைவன் நம்முடைய அனைத்து பிரார்த்தனைகளையும் ஏற்றுக் கொள்வானாக! ஆமீன்.
பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆகீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ(இ) லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்(இ)து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(இ)(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ(இ)வு ல(க்)க பி(இ)னிஃமதி(க்)க அலய்ய, வஅபூ(இ)வு ல(க்)க பி(இ)தன்பீ(இ) ப(எ)க்பி(எ)ர்லீ ப(எ)இன்னஹு லா யஃக்பி(எ)ருத் துனூப(இ) இல்லா அன்(த்)த
இதன் பொருள்:
இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. (ஆதாரம்: புகாரி 6306)
இணைகற்பித்தால் உங்கள் சுவனம் ஹராமாக்கப்படும்
அல்லாஹ் கூறுகிறான்:
 "....எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை." (அல்குர்ஆன் 5:72 )

"விஸ்வரூபம்' எழுப்பியுள்ள கருத்துரிமைப் பிரச்சினை!


விஸ்வரூபம்' எழுப்பியுள்ள கருத்துரிமைப் பிரச்சினை!
கமலஹாசனின் "விஸ்வரூபம்' தான் இப்போது தமிழகத்தில் சூடான பிரச்சினை. இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டுள்ளபோது முதலமைச்சர் ஜெயலலிதா இந்தப் படத்திற்கு அரசு தடை விதித்தது பற்றி நேரடி ஒளிபரப்பில் விளக்கமளித்துக் கொண்டிருந்தார். படத்தை அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும். 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் அளவிற்கு மாநில அரசிடம் காவல் பலம் இல்லை என்று சொல்லிப் புன்னகைக்கிறார்.
முன்னதாக நீதிமன்றம் தடையை நீக்கி ஆணையிட்ட உடன், இரவோடிரவாக தலைமை நீதிபதிப் பொறுப்பில் உள்ளவரை நள்ளிரவில் எழுப்பி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது ஜெயா அரசு. கூடவே எல்லா மாவட்ட ஆட்சியர்களுக்கும் செய்தி பறந்தது. அடுத்த நாள் காலை திரையரங்கு உரிமையாளர்கள் பாதுகாப்புக் கருதி படம் ஓடுவதை நிறுத்துமாறு மாவட்ட நிர்வாகங்கள் கேட்டுக் கொண்டன. அதே நேரத்தில் தமிழக அரசு வழக்குரைஞர் இவ்வாறு தமிழகம் முழுவதும் படம்"ஓடாத நிலையைக்' காட்டிச் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் எனவும் தடையைத் தொடரவேண்டும் எனவும் வாதிட்டார். நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. திரைப்படத் தணிக்கை வாரியம் சார்பாக வாதிட்ட மத்திய அரசு வழக்குரைஞர், தணிக்கை வாரியம் அனுமதித்தபின் ஒரு படத்தைத் தடை செய்ய மாநில அரசுக்கு உரிமை இல்லை என வாதிட்டார்.
ஆக மத்திய அரசைச் சீண்டுவதற்கன இன்னொரு வாய்ப்பாக இந்தப் பிரச்சினையையும் பயன்படுத்திக் கொண்டது ஜெயா அரசு. இதன் மூலம் வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் வாக்கு வங்கியையும் அது உறுதி செய்துகொள்ள முயற்சிக்கிறது.
இந்த மாநிலம் மதச் சார்பற்ற மாநிலம் என்கிற நிலையிலிருந்து வழுவிவிட்டது. ஏதாவது மதச் சார்பற்ற மாநிலம் அல்லது நாட்டுக்குப் புலம் பெயரப் போகிறேன் எனக் கமலஹாசன் சிந்திய கண்ணீர் அவரது ரசிகர்களை மட்டுமல்ல தமிழக அறிவுஜீவிகள், முகநூல் பதிவர்கள் எல்லோரையும் கூட இளக்கிவிட்டது."கலைப் படைப்புகளுக்கு முழுமையான கருத்துச் சுதந்திரம்' என்கிற முழக்கம் இப்போது இந்தத் தரப்பிலிருந்து உரத்து ஒலிக்கிறது.
முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் இப்படித் தீவிரவாதிகளாகவும் சந்தேகத்திற்குரியவர்களாகவும் தொடர்ந்து திரைப்படங்களில் சித்திரித்து வந்ததன் விளைவுகளை அன்றாடம் சந்தித்து வருபவர்கள். சில அனுபவங்களைச் சொன்னால்தான் இங்குள்ள நிலைமை உங்களுக்குப் புரியும்.
1. ரெனி அய்லின் கேரளத்தில் நன்கு அறியப்பட்ட ஒரு மனித உரிமைச் செயலாளி. பிறப்பால் கிறிஸ்தவர். சென்ற ஆண்டு திருச்சியில் ஓர் கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டோம். எப்போது வந்தீர்கள் என்றேன்?"இரவு 12 மணிக்கு திருச்சி சந்திப்பில் இறங்கினேன். ஒரு லொட்ஜிலும் ரூம் தர மறுத்து விட்டார்கள். அடையாள அட்டையைக் காட்டியும் பயனில்லை. அவர்கள் என்னை முஸ்லிம் எனச் சந்தேகப்பட்டார்கள்' என்று பதிலுரைத்தார். ரெனி ஒல்லியாய், உயரமாய் முகத்தில் தாடியுடன் நீண்ட குர்தா வேறு அணிந்திருப்பார். கேட்க வேண்டுமா?
2. சில ஆண்டுகட்கு முன் ஒரு இளம் பத்திரிகையாளர். ஏதோ ஒரு வேலையாக வீட்டிற்கு வந்திருந்தார். இரவு கவியக் கவிய அவர் புறப்பட அவசரப்பட்டார். வேலை முடியவில்லை. முடித்த பின் போகலாமே என்றேன். "இல்லை சார், நேரமாகிவிட்டது. விநாயகர் ஊர்வலம் அது இதுன்னு நான் ரூமுக்குப் போற வழியில் ஒரே பிரச்சினை. நான் தாடி வேற வச்சிருக்கேனா...' எனச் சொல்லி நகர்ந்தார். அவர் வீட்டுக்குச் செல்லும் வழியில் சமீபமாக ஒரு மதக் கலவரம் நடந்திருந்தது.
நான் மிகைப்படுத்திச் சொல்கிறேன் எனத் தோன்றலாம். ஆனால் இவை இரண்டு மட்டுமல்ல இதைப்போல ஏகப்பட்ட நிகழ்வுகள், அனுபவங்கள் எனக்கு உண்டு. உங்களுக்கெல்லாம் தெரிந்த ஒன்றை நினைவூட்டுகிறேன். அவர் இந்திய இளைஞர்கள் பலரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர். இந்த நாட்டின் மிக உயரிய பதவியில் இருந்தவர். அப்துல் கலாம் என்கிற அவரது பெயர் ஒன்று போதுமானதாக இருந்தது, அவரை நிர்வாணமாக்கிச் சோதனை இடுவதற்கு இல்லையா? இது அமெரிக்க விமான நிலையத்தில் நடந்தது என்றாலும் இங்கும் நிலைமை இப்படித்தான்.
முஸ்லிம்களுக்கு நகரங்களில் வீடு கிடைப்பது எளிதல்ல. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு புகழ்பெற்ற வட இந்திய முஸ்லிம் நடிகருக்கு இப்படி ஒரு நிலை மும்பையில் ஏற்பட்டது பத்திரிகைகளில் விவாதத்திற்குள்ளானது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6 வந்தால் போதும் எங்கள் காவல் துறையினருக்கு எல்லா முஸ்லிம்களும் சந்தேகத்திற்குரியவர்களாகி விடுவர். ரயில் மற்றும் விமான நிலையங்களில் அத்தனை கெடுபிடிகள் இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக ஒவ்வொரு முஸ்லிமையும் மற்றவர்கள் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் நிலை இன்று ஏற்பட்டுவிட்டது.
என்னை முஸ்லிம் எனச் சந்தேகப்பட்டார்கள்..... எனச் சொல்ல நேர்வது எத்தனை கொடுமை? இங்கே ஒரு தலித் அனுபவிக்கும் இழிவையும், ஒரு முஸ்லிம் அனுபவிக்கும் இந்த வெறுப்பையும் ஒரு தலித்தாகவும், முஸ்லிமாகவும் இருந்துதான் புரிந்து கொள்ள இயலும்.
இப்படியான ஒரு சூழல் உருவாகியுள்ளதில் இங்கு மேலெழுந்துள்ள இந்துத்துவ வலதுசாரி பாசிசத்திற்கு ஒரு பங்குண்டு என்பதில் ஐயமில்லை. ஆனால், இத்தகைய கருத்துகள் அந்த அமைப்புகளைத் தாண்டி சாதாரண மக்கள் மனதின் அடியாழத்திலும் போய்ப் படிந்துள்ளதில் அந்த விஷமப் பிரசாரங்களைக் காட்டிலும் நமது அச்சு, காட்சி மற்றும் திரைப்பட ஊடகங்களுக்கு அதிகப் பங்குண்டு.
நாடகம், திரைப்படம் ஆகியவற்றுக்கு ஒரு கலைப் படைப்பு என்பதற்கு அப்பால் அவற்றிற்கு ஒரு பிரசார மதிப்பும் உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அவை மிகப் பெரிய அரசியல் மாற்றங்களுக்குக் காரணமான வரலாறுகளும் உண்டு.
தமிழ் சினிமா வரலாற்றில் நீண்டகாலம் வரை முஸ்லிம்களை ரொம்பவும் நேசத்துடனும் உயர்வாகவும் சித்திரிக்கும் நிலைதான் இருந்து வந்தது. சிவாஜி படங்களில் "பாவமன்னிப்பு', எம்.ஜி.ஆர் படங்களில் "ராஜாதேசிங்கு', "குடியிருந்த கோயில்' முதலியன உடனடியாக நினைவுக்கு வரும் படங்கள். எண்பதுகளில் வெளிவந்த ரஜினியின் படிக்காதவன் படத்தையும் கூட இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம்.
திரைப்படங்களில் திராவிட இயக்கத்தினர் கோலோச்சிய காலம் இது என்பதை நாம் அவ்வளவு எளிதாகப் புறந்தள்ளிவிட இயலாது. திராவிட இயக்கம் முஸ்லிம்களை நேச சக்தியாகவே பார்த்தது என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. முஸ்லிம்கள் குறித்து எதிர்மறையான கருத்துகளைத் திரைப்படங்களில் பதியும் நிலையைப் பாலச்சந்தரின் ஓரிரு படங்களில் காணலாம். அவரது மனதில் உறுதி வேண்டும்' படத்தில் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு எதிரான கருத்துகள் பேசப்படும்.
தொண்ணூறுகளின் தொடக்கத்தோடு உலகளவில் "இஸ்லாமிய பயங்கரவாதம்' கட்டமைக்கப்பட்டது. சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சிக்குப் பின் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு "நேட்டோ' முதலான தனது கூட்டமைப்புகளையும் ஆதரவுகளையும் தக்கவைப்பதற்கு"கம்யூனிச பயங்கரவாதத்திற்கு'ப் பதிலாக வேறு ஏதேனும் ஒரு எதிரி தேவைப்பட்டபோது கட்டமைக்கப்பட்டதுதான் இஸ்லாமியப் பயங்கரவாதம்.
கம்யூனிசக் கருத்தியலுக்கு ஏற்பட்ட பின்னடைவோடு உலகெங்கிலும் ஒரு பக்கம் மத, சாதி,இன அடிப்படையிலான இயக்கங்களும், இன்னொருபக்கம் நியோ பாசிசமும் அரைப் பாசிசமும் தலையெடுக்க நேர்ந்தது தற்செயலான ஒன்றல்ல. இந்தியாவிலும் இந்துத்துவப் பாசிசம் வீச்சுடன் மேலெழுந்தது. உலக மயப் பின்னணியில் பெரிய அளவில் வளர்ச்சியுற்ற மத்தியதரவர்க்கத்தின் மத்தியில் இந்துத்துவக் கருத்தியலுக்கு ஒரு இடமிருந்தது.
இத்தகைய பின்னணியில் தமிழ்த் திரைப்பட உலகில் மேலுக்கு வந்தவர்கள்தான் கமலஹாசன், பாலச்சந்தர், மணிரத்னம், விஜயகாந்த், அர்ஜுன் முதலானோர். 1993 இல் வெளிவந்த பாலச்சந்தரின் "ஜாதிமல்லி' படம் முஸ்லிம் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் அதில் முக்கிய பாத்திரம்.
திரைப்படங்களில் முஸ்லிம்கள் எதிர்மறையாகச் சித்திரிக்கப்படும் நிலை உருவானதன் பின்னணியை இப்படித்தான் நாம் பார்க்க வேண்டியுள்ளது.
விஸ்வரூபம் திரைப்படப் பிரச்சினையை ஒட்டி இன்று தமிழ்ச் சூழலில் கருத்துச் சுதந்திரம் குறித்த விவாதம் மேலெழுந்துள்ளது. சமீபத்தில் ராஜஸ்தான் தலை நகரம் ஜெய்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கருத்துச் சுதந்திரம் குறித்து நடை பெற்ற ஒரு விவாதம் விஸ்வரூபத்துடன் தொடர்புடையது இல்லை ஆயினும் இங்கே குறிப்பிடத்தக்க ஒன்று.
டெஹெல்கா இதழின் நிர்வாக ஆசிரியை ஷோமா சவுத்ரி, கருத்துச் சுதந்திரத்திற்கு நியாயமான கெடுபிடிகளை விதிக்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 19(2) பிரிவில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றார். அரசியல் சட்டம் புனிதமான ஒன்றல்ல. மாற்றங்கள் தேவைப்பட்டால் செய்ய வேண்டியதுதான். நியாயமான கெடுபிடிகள் என்ற பெயரில் கெடுபிடிகளை மேற்கொள்ளும் அதிகாரத்தை நாம் அரசின் கைகளில் கொடுத்துவிட இயலாதுதான். அரசின் கைகளில் இருக்கும் கெடுபிடி அதிகாரம் என்றைக்கும் மக்களுக்கு ஆபத்தானதுதான். அந்த வகையில் ஷோமாவின் கருத்தை யாரும் ஆதரிக்கத்தான் செய்வர்... அதுவும் கலைப்படைப்புகளுக்கு எவ்விதக் கருத்துச் சுதந்திரத் தடையும் இருக்கக் கூடாது என ஷோமா அடுத்து இதை வெளிப்படையாகச் சொன்னார். விஸ்வரூபத் திரைப்படப் பிரச்சினையில் கருத்துச் சுதந்திரத்தையும் கமலஹாஸனையும் தீவிரமாக ஆதரிப்பவர்களும், கலைப் படைப்புகளுக்குத் தணிக்கை கூடாது; கருத்துச் சுதந்திரத் தடை கூடாது என்றுதான் சொல்கிறார்கள்..
ஆனால் ஷோமா அத்தோடு நிறுத்திவிடவில்லை. அவர் இந்தியத் துணைக் கண்டத்து மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் பலவற்றையும் கூர்ந்து கவனித்து வரும் ஒரு இதழாளரும் கூட. அவரால் அத்தோடு நிறுத்திக் கொண்டு போய்விட இயலவில்லை. ஆனால், மேடைப் பேச்சு போன்ற பொதுச் சொல்லாடல்களில் முழுமையான கருத்துச் சுதந்திரம் என்பதற்கு இடமில்லை என்றார். இந்துத்துவவாதிகளான தொகாடியா, உமாபாரதி வகையறாக்களின் மேடைப் பேச்சுகளின் உடனடி விளைவுகளை ஒரு இதழாசிரியரால் எப்படி மறக்க இயலும்?
நிகழ்ச்சியில் பார்வையாளராக இருந்த திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான ஜாவேத் அக்தார், கருத்துச் சுதந்திரத்திற்கான எல்லையை எவ்வாறு வரையறுப்பது? பொதுப் பேச்சுகளில் கருத்துச் சுதந்திரத்திற்கு எல்லை விதிக்கலாம் என்றால் பின், முழுமையான கருத்துச் சுதந்திரத்திற்கு இடமில்லை என்கிற இடத்திற்குத்தானே திரும்பி வருகிறோம்? என்று கேட்டபோது ஷோமா சொன்னார்: தகவல் அடிப்படையில் பொய்யாக இருக்கிற, வன்முறைகளைத் தூண்டுகிற கருத்து வெளிப்பாட்டு முறைகளை நாம் எளிதில் அடையாளம் காண இயலும்.
அதாவது, மேடைப் பேச்சு முதலியவற்றில் பொதிந்துள்ள இத்தகைய வன்முறைகள் உடனடி விளைவை ஏற்படுத்திவிடும் என ஷோமா கருதுவது புரிகிறது. ஆக இதுபோன்ற உடனடி வன்முறைகளைத் தூண்டக் கூடிய வெளிப்பாடுகள் அவை எந்த ஊடகமாக இருந்தபோதிலும், அவை கலைப் படைப்பு என்கிற போர்வைக்குள்ளிருந்து வெளிப்பட்டபோதிலும் அவற்றிற்கு முழுச் சுதந்திரத்தை அளித்துவிட இயலாது என்பதுதான் அவரது கருத்து என்றே நாம் புரிந்து கொள்கிறோம். ஆனால், கலைப்படைப்புகள் இப்படி உடனடி வன்முறைக்கு வித்திடாது என அவர் நம்புகிறார்.
சரி அப்படி உடனடி வன்முறைகளுக்கு வித்திடாமல், தொலை நோக்கில் நிரந்தரமான ஒரு வெறுப்பையும் சந்தேகத்தையும் பிறர் மீது உருவாக்கும் வெளிப்பாடுகளை முழுமையான கருத்துச் சுதந்திரம் என விட்டுவிட இயலுமா? இந்தியச் சூழலில் இப்போது காணப்படும் முஸ்லிம் வெறுப்பில் இப்படியான கலை வெளிப்பாடுகளின் மூலமான வெறுப்பூட்டல்களுக்குப் பங்கே இல்லையா என்கிற கேள்வி நமக்கு எழுகிறது.
ஆக, ஷோமா இறுக்கமாகவும் தெளிவாகவும் கட்டுப்பாடற்ற கருத்துச் சுதந்திரம் வேண்டும் எனக் கூறியிருப்பதுபோல மேலோட்டமாகத் தோன்றினாலும், ஒரு பத்திரிகையாளர் என்கிற வகையில் இன்றைய யதார்த்தத்தின் நியாயங்களிலிருந்து அவரால் தப்ப இயலவில்லை என்பதுதான் உண்மை. பாசிசம் தலை எடுக்கும் சூழலில் முழுமையான கருத்துச் சுதந்திரம் என்பது எந்த அளவிற்குப் புரட்சிகரமான கருத்தாக இருக்கும்?
கருத்துச் சுதந்திரம் குறித்த இந்த விவாதம் புதிதான ஒன்றில்லை. நீண்ட வரலாறு இதற்கு உண்டு. இந்த விவாதத்தில் இப்படி அல்லது அப்படி என இதுவரை முடிவு வந்ததுமில்லை.
ஒரு நண்பர் ஒரு கதை அல்லது ஒரு கவிதை எழுதுகிறார். அது அவரது கருத்துச் சுதந்திரம். அது என்னைப் பாதிக்கிறது என நான் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது எனது கருத்துச் சுதந்திரம். இதை நாம் ஏற்க வேண்டும். வன்முறை கூடாது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் இன்று கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் முன்வைக்கப்படும் கருத்துகள் யாவும் அரசின் தடையை எதிர்ப்பதாக இருப்பதைக் காட்டிலும் முஸ்லிம்களின் எதிர்ப்பை விமர்சிப்பதாகவே உள்ளன. அந்த வகையில் முஸ்லிம்கள் இன்று தனிமைப் படுத்தப்பட்டுள்ள நிலை மிகவும் கவலை அளிக்கிறது.
சரி, இப்படியான சூழலில் அரசுக்குத் தலையிடும் உரிமை உள்ளதா இல்லையா? இல்லை எனச் சொல்லி நான் என்னை எளிதாகப் புரட்சியாளனாகக் காட்டிக்கொள்ள முடியவில்லை. இன்றைய சூழலில் அரசுக்கு ஒரு பொறுப்பு உண்டு என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அரசு இப்படியான பிரச்சினைகளில் முற்று முழுதான அதிகாரமாக அதைக் கைக் கொள்ளாமல் இன்னும் விசாலமான சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் அடங்கிய குழுவிடம் இந்தப் பொறுப்பைக் கையளிக்க வேண்டும்.
அந்தக் குழுமட்டும் சரியாகச் செயல்பட்டுவிடுமா? அரசால் அமைக்கப்படும் அந்தக் குழுவே அரசின் கைப்பாவையாகத்தானே இருக்க முடியும்? என்கிற கேள்விகள் இயல்புதான். அப்படியாகும் வாய்ப்பு நிச்சயம் உண்டு. அதையும் எதிர்த்துப் போராடித்தான் ஆக வேண்டும். போராட்டங்களுக்கு முடிவு ஏது?. தெரிதா சொன்னதுபோல ஜனநாயகம் என்பது என்றைக்கும் வந்து முடிந்துவிடுகிற விடயமல்ல. ஜனநாயகம் என்பது ஜனநாயகத்திற்கான போராட்டம் மட்டுமே. ஒரு தேவதூதனின் வருகைக்காகக் காத்திருப்பதுபோல நாம் ஜனநாயகத்திற்காகவும் காத்திருந்துதான் ஆக வேண்டும். அந்தக் காத்திருப்பின் வடிவம் கையாலாகாத்தனமல்ல. போராட்டம்தான்.
தடையற்ற கருத்துரிமை குறித்த அந்தப் புகழ்பெற்ற வாசகந்தான் நினைவுக்கு வருகிறது. நீ உன் கைத்தடியைத் தெருவில் நின்று கொண்டு சுழற்றுவதற்கு உனக்கு எல்லா உரிமையும் உண்டு. ஆனால் அந்த உரிமை என் மூக்கு நுனி வரைதான் என்பதை நினைவிற் கொள்.