widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Wednesday, October 5, 2011

பதவி தானாகவே வரட்டும்!


* உங்களில் சிலருக்கு, வேறு சிலரை விட உயர்ந்த படித்தரங்களை அவன் (இறைவன்) வழங்கியிருக்கிறான். 
* இறை நம்பிக்கை கொண்டவர்களே! பன்மடங்காகப் பெருகி வளரும் வட்டியை உண்ணாதீர்கள். இறைவனுக்கு 
அஞ்சுங்கள், நீங்கள் வெற்றி பெறக்கூடும்.
* எவரிடத்தும் எதற்காகவும் கையேந்துவதில்லை என்ற உறுதிமொழியை ஒருவர் எனக்கு அளித்தால், அவர் சுவனம் (சொர்க்கம்) செல்வதற்கான உறுதிமொழியை நான் அவருக்கு அளிக்கிறேன்.
* எவருக்கும் உரிமை இல்லாத நிலத்தை, எவர் உழுது பயிரிடுகிறாரோ அந்நிலத்தின் மீது அவருக்கே அதிக உரிமை உண்டு.
* எவனொருவன் பிறிதொருவனுக்கு வாழ்வு அளிக்கின்றானோ, அவன் எல்லா மனிதர்களுக்கும் வாழ்வு அளித்தவன் போல் ஆவான்.
* நெருப்பால் தண்டனை வழங்குவதற்கு நெருப்பின் அதிபதியைத் தவிர (இறைவனைத் தவிர) வேறு யாருக்கும் உரிமை கிடையாது.
* மனிதர்களில் சிறந்தவர்கள், பதவி தானாகவே அவர்களை வந்தடையும் வரை அதனை அறவே விரும்பாதவர்களாகவே இருப்பார்கள்.

0 comments:

Post a Comment