widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, August 31, 2012


இவ்வார ஜூம்ஆ உரை (31.08.2012)
குத்பா உரை: மௌலவி இஸ்மாயில் மதனி
தலைப்பு: பெரும் பாவங்கள்


Monday, August 27, 2012

ஸஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுமா?







Saturday, August 25, 2012


மறுமையை நோக்கி...



Friday, August 24, 2012

மறந்துவிட்ட மறுமை நாள்


இவ்வார ஜும்ஆ(24.08.2012)

குத்பா உரை: மௌலவி அப்துல் ஹமீட் (சரயீ)

தலைப்பு : அல்லாஹ்வின் சோதனைகள்




Monday, August 20, 2012


ஒர்ஜினல் தவ்ஹீதும் டூப்ளிக்கேட் தவ்ஹீதும்….

தவ்ஹீத் என்ற சொல் இன்று படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது. சிலருக்கு இந்த சொல்லைக் கேட்டாலே அலர்ஜியாக இருக்கிறது. அதை வெறுப்புடன் பார்க்கின்றனர்.
தவ்ஹீதுவாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளக்கூடியவர்கள் தான் பச்சை முஷ்ரிக்குகள் என்று வாய் கூசாமல் சொல்கின்றனர். ஆக பல்வேறுபட்ட பெயர்களிலே தமிழ் நாட்டில் தவ்ஹீது நடமாடிக் கொண்டிருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில், ஒரு உண்மை இறை நம்பிக்கையாளன் எது உண்மையான தவ்ஹீது, எது போலி தவ்ஹீத் என்று அடையாளம் காண்பது அவசியமாகும். அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும், அல்லாஹ்வுடைய ஆளுமையிலும், அவனுடைய பண்புகள், அவனுடைய தன்மைகள் அவனுடைய நாமங்கள் அவனுடைய உரிமை ஆகியவற்றில் அவனை ஒருமைப்படுத்தி, அவனை மட்டுமே வணங்குவதுதான் ‘தவ்ஹீது கொள்கை’ என்று கூறுகின்றோம், இந்த கொள்கையின்பால் யாரெல்லாம் மக்களை அழைக்கின்றார்களோ அவர்களை ஏகத்துவ கொள்கைவாதி, அல்லது தவ்ஹீத்வாதி என்று அழைக்கின்றோம்.
ஆனால் இன்று இவர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் எதிரும் புதிருமாக இருந்து வருகின்றனர். இப்படிப்பட்ட மக்களுக்கு சரியான கொள்கை விளக்கம் கொடுப்பது நமது கடமையாகும்.
அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கையைத் தெளிவுபடுத்தாதவரை மற்ற எந்த செயல்பாடுகளும் பயனற்றதாக ஆகிவிடுகிறது. தவ்ஹீது கொள்கையின் முக்கிய அம்சமே அல்லாஹ்வைப் பற்றி அறிவது தான்
அல்லாஹ் அவன் யார்?
அவன் எங்கு இருக்கிறான்?
அவனுடைய பண்புகள் என்ன?
அவனுக்கும் படைப்புக்குமிடையிலுள்ள உறவு என்ன?
அவனைப் பார்க்க முடியுமா?
பார்த்தவர்கள் உண்டா?
அவனுடன் பேசமுடிமா?
பேசியவர்கள் உண்டா?
என்பனபோன்ற விஷயங்களுக்கு சரியான விடை காண்பது தான் தவ்ஹீத்.
அல்லாஹ் ஒருவன் இருக்கிறான், அவன்தான் நம்மைப் படைத்தான் என்பதிலே கருத்து, வேறுபாடுகள் காணப்படவில்லை. அந்த வகையில் எல்லோருக்குமிடையில் ஒரு இணக்கம் இருக்கிறது. அல்லாஹ் இருக்கிறான், அவன்தான் படைத்தான் என்ற நம்பிக்கையில், நபி(ஸல்) அவர்கள் காலத்தில்வாழ்ந்த மக்கத்து குறைஸிகள் மிகவும் உறுதியானவர்களாக இருந்தனர் இது குறித்து திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.
அல்லாஹ் கூறுகிறான்: ”நபியே! நீர் அவர்களிடத்தில்” வானங்களையும் பூமியையும் படைத்தது யார்? சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்தில் வசப்படுத்தியிருப்பவன் யார்? என்று கேட்டால் ”அல்லாஹ்” என்றே அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள். அவ்வாறாயின் அவர்கள் உண்மையை விட்டு எங்கே திருப்பப் படுகிறார்கள். அல்குர்ஆன் 29:61
”இன்னும் அவர்களிடத்தில்” வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப் பூமியை அது காய்ந்து செத்தபின் உயிர்ப் பிப்பவன் யார்? என்று நீர் கேட்டால் ‘அல்லாஹ் என்றே அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள். (அதற்கு) புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே, என்று நீர் கூறு வீராக! எனினும் இவர்களில் பெரும்பாலானவர்கள் விளங்கமாட்டார்கள். அல்குர்ஆன் 29:63
ஆனால் இவர்களைப் பொறுத்தவரையில் அல்லாஹ்வுக்கு உரிய உரிமைகளில் தான் அவர்கள் குளறுபடி செய்தார்கள். அதாவது அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளில் சிலதை அல்லாஹ் அல்லாதவர்களுக்கும் செய்து அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையில் இடைத்தரகர்களை ஏற்படுத்தினர். இதன் காரணத்தினாலேயே அவர்கள் இணைவைப்பாளர்களாகக் கருதப்பட்டார்கள். அதைப் போன்றுதான் இன்றைய முஸ்லிம்களில் பலர் அல்லாஹ்தான் படைத்து பரிபாலிப்பவன் என்று நம்பும் அதே வேளையில் அல்லாஹ் அல்லாதவர்களுக்கும் வணக்க வகைகளில் சிலவற்றைச் செலுத்துவதைக் காண்கின்றோம். உதாரணமாக படைத்த அல்லாஹ் ஒருவனால் மட்டுமே முடியக்கூடிய விஷயங்களை அவனுடைய அடியார்களிடம், குறிப்பாக மரித்துப் போனவர்களிடம் கேட்பது, இப்படிக் கேட்கின்றவர்கள் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடியவர்களில் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்டவர்கள் அல்லாஹ்வை ஏற்றிருந்தாலும் அவனை நம்ப வேண்டிய விதத்தில் நம்பாததினாலும் அவனுடைய உரிமையை அவனுக்கு மட்டுமே கொடுத்து அவனை ஏகத்துவப்படுத்தாததினாலும் அவர்கள் உண்மையான ஏகத்துவ கொள்கையுடையவர்கள் என்று சொல்ல முடியாது.
காரணம் இவர்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான விஷயத்தை அவனுடைய அடியாருக்கு செலுத்திவிட்டனர். எனவே இப்படிப்பட்டவர்கள் போலி தவ்ஹீத் கொள்கையுடையவர்கள் என்று இனம் கண்டு கொள்ளவேண்டும். உதாரணத்திற்கு மறைவான அறிவு அல்லாஹ் ஒருவனுக்கே இருக்கிறது. இந்த தன்மை அல்லாஹ்வுடைய அடியாருக்கும் இருக்கிறது என்று நம்புவதாகும்.
இப்படி நம்பிக்கொண்டு ஒருவன் தன்னை தூயமுஸ்லிம் என்று சொல்ல முடியாது. கொள்கையில் கலப்படம் செய்தவனாகக் கருதப்படுவான். இதைப் போன்று தான் மற்ற விஷயங்களும் அதை ஒன்றன் பின் ஒன்றாகப் பார்ப்போம்.
முஸ்லிம்களில் பலர் நாங்கள் ஓர் இறைக்கொள்கை என்னும் தவ்ஹீதைத்தான் ஏற்றுள்ளோம், என்று வாயளவில் சொல்லிக் கொண்டு, அல்லாஹ்வை பற்றிய நம்பிக்கையில் தவறான கொள்கையில் இருந்து வருகின்றனர். அல்லாஹ் எங்கே இருக்கின்றான் என்பதைக் கூட சரியாகப் புரிந்து கொள்ளாமல் மாற்று மதத்தவர்கள் நம்பி வைத்திருப்பது போன்று அல்லாஹ் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான், அவன் எங்கும் நிறைந்திருக்கின்றான் என்ற தவறான கொள்கையில் இருந்துவருகின்றனர். இப்படிப்பட்ட கொள்கையில் இருந்து கொண்டு, தங்களை ஒரிஜினல் தவ்ஹீத்வாதி என்று கூறிவருகின்றனர்.
அல்லாஹ்வைப் பற்றிய இந்த கொள்கை உண்மையில் சரியானதுதானா? இந்த கொள்கையுடையவர்களை உண்மையான தவ்ஹீத் கொள்கையுடையவர்கள் என்று சொல்லமுடியுமா என்று நாம் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். அல்லாஹ் எங்கும் இருக்கின்றான், எதிலும் இருக்கின்றான் என்ற கொள்கை அத்வைத கொள்கையாகும். இந்த கொள்கையுடையோர் படைத்தவனும் படைப்புகளும் ஒன்று தான் படைத்தவனையும் படைப்புகளையும் பிரித்துப் பார்க்கக் கூடாது. அவனுக்கென ஒரு இடத்தை சுட்டிக்காட்டக் கூடாது. அப்படிக் காட்டும் போது இறைவன் படைப்புகளுக்கு ஒப்பாகிவிடுகின்றான் என்று தங்களின் சிற்றறிவிற்கு எட்டியவாறு கூறுகின்றனர். இதைத்தான் உண்மையான தவ்ஹீது என்று அத்வைத கொள்கைவாதிகளான காண்பதெல்லாம் கடவுள்’ என்ற கொள்கையுடையவர்கள் நம்புகின்றனர். இப்படிப்பட்ட கொள்கையை இஸ்லாமின் பெயரில் முஸ்லிம்களிடையில் பரப்பியவர்களில் குறிப்பிடத் தக்கவர் முஹையத்தீன் இப்னு அரபி என்பவராவார். இவர் தர்க்கக் கலையை கற்றுத்தேறியவர். கிரேக்கத்தத்துவங்களைப் படித்தவர், விவாதக்கலையை அறிந்தவர், இவர் அத்வைத கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு அதைப் பற்றி பல புத்தகங்களை அரபியில் எழுதியிருக்கின்றார். இவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் அரபுநாட்டில் வாழ்ந்தவர்கள், அவருடைய கொள்கையைப் பிடித்து அவருடைய வாதக்கலையின்பால் ஈர்க்கப்பட்டவர்கள் தான். இன்றும் அல்லாஹ் எங்கும் இருக்கின்றான் என்ற அத்வைதக் கொள்கையைப் பரப்பி வருகின்றனர். இந்த கொள்கை முற்றிலும் தவறானது. இஸ்லாமிய கொள்கைக்கு எதிரானது. குர்ஆன், சுன்னாவின் போதனைக்கு மாற்றமானது. படைப்புகளைவிட்டும் படைத்தவனை வேறுபடுத்தி, படைத்தவனுக்குரிய பண்புகளை அவனுக்கே கொடுப்பதுதான் உண்மையான தவ்ஹீதாகும்.
அல்லாஹ் எங்கும் வியாபித்து இருக்கவில்லை. அவன் வானத்தில் அர்ஷ்ல் இருக்கின்றான் என்று நம்புவது இஸ்லாமிய இறைக் கொள்கையாகும். அல்லாஹ் மேலே அர்ஷ்ல் இருக்கின்றான் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் குர்ஆனில் உள்ளன.
”அளவற்ற கருணையாளனாகிய அல்லாஹ் அர்ஷ் என்னும் அரியாசனத்தின் மீது நிலைத்தான்” அல்குர்ஆன் 20:5
நிச்சயமாக உங்கள் இரட்சகன் அல்லாஹ்தான் அவன் வானங்களையும், பூமியையும், ஆறு நாட்களில் படைத்தான். பின் தன் மகத்துவத்திற்கு தக்காவாறு அர்ஷ் என்னும் அரியாசனத்தின் மீது நிலையானான். அல்குர்ஆன் 18:3
”அர்ஷுக்குரிய நாயன் அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் தன்மைகளை விட்டும் மிகவும் தூய்மையானவன். அல்குர்ஆன் 21:22
இதுபோன்ற நிறைய வசனங் களில் வல்ல அல்லாஹ் தான் அர்ஷ்ல் உயர்வான இடத்தில் இருப் பதாகக் கூறுகின்றான்.
உண்மையான கொள்கையுடையவர்கள் இதை அப்படியே நம்ப வேண்டும். இதில் எந்த வித சுயவிளக்கத்தையும் கொடுப்பதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. எனவே அல்லாஹ் எங்கும் இருக் கின்றான், எதிலும் இருக்கின்றான் என்று நம்புகின்றவர்கள் போலி தவ்ஹீத்வாதிகளாவார்கள். அல்லாஹ் வானத்தில் அர்ஷ்ல் இருக்கிறான் என்று நம்புகின்ற காரணத்தினால் அவன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒதுங்கிவிடுவாதாகக் கருதப்படும் என்று சொல்வது சரியான வாதம்தானா?
அல்லாஹ் கூறுகிறான்:
”அல்லாஹ் வானங்கள், பூமிஆகியவற்றின் ஒளியாக இருக்கின்றான். அவனுடையஒளிக்குஉதாரணம்ஒரு மாடத்தைப்போன்றுஇருக்கிறது.அதில்ஒருவிளக்குஇருக்கிறது.அவ்விளக்குஒருகண்ணாடியினுள்இருக்கிறது. அக்கண்ணாடிஒளி வீசும் நட்சத்திரங்களைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்றஜைத்தூன் மரத்தின் எண்ணையினால் எரிக்கப்படுகிறது. அது கிழ்த்திசையைச் சார்ந்ததுமல்ல, மேல்திசையைச் சார்ந்ததுமல்ல, அதனைநெருப்புதொடாவிட்டாலும்அதன்எண்ணைஒளிவீசமுற்படும்,இவையெல்லாம்சேர்ந்து,ஒளிக்குமேல்ஒளியாகும்.அல்லாஹ்தான்நாடியவரைதன்னுடையஒளிஎன்னும்சத்தியவழியின்பால்நடத்திச்செல்கின்றான்.மனிதர்களுக்கு இத்தகையஉதாரணங்களைஅல்லாஹ்கூறுகிறான்.அல்குர்ஆன் 24:35
‘ ‘அல்லாஹ்வுடைய (குர்சி)இருக்கை வானம் பூமி அள விற்குவிசாலமானதாக இருக்கிறது.அல்குர்ஆன் 2:255 அவனுடைய இருக்கையேவானம் பூமியை விடவும் விசாலமானதாக இருக்கிறதென்றால் அவனு
டைய ”அர்ஷ் என்னும் சிம்மாசனம்எவ்வளவு விசாலமானதாக இருக்கும் என்பதை நம்முடைய சிற்றறி
படைத்த நாயன் அல்லாஹ்மேலே அர் ஷில் இருக்கிறான்,அங்கே இருந்துகொண்டு இந்தபிரபஞ்சத்தில்நடக்கின்றஒவ்வொருஆடல்அசைவுகளையும்கண்காணித்துக்கொண்டிருக்கின்றான்.ஒவ்வொருமனிதனுடையஎண்ணஓட்டங்களையுன்றான். அவனுடைய அறிவுக்குஅப்பால் அவனுக்குத் தெரியாமல்மரத்தின் ஒரு இலை கூட விழுவதில்லை.இவை எல்லாவற்றையும் வல்லஅல்லாஹ் மேலே இருந்து கொண்டேகண்காணிக்கின்றான். அப்படி கண்காணிக்கின்ற பேராற்றல் அவன்ஒருவனுக்கு மட்டுமே உள்ளது.அல்லாஹ் கூறுகிறான்:’அல்லாஹ்விடமே மறைவானவற்றின் திறவுகோல்கள்இருக்கின்றன” அவற்றை அவனன்றி எவரும்அறியமாட்டார்கள். மேலும் கரையிலும், கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான், அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை.பூமியின் ஆழத்தின் அடர்ந்தஇருள்களில் கிடக்கும் சிறு வித்தும்,பசுமையானதும் உலர்ந்ததுமானஎந்த ஒன்றும் அவனுடைய பதிவேட்டில் இல்லாமலில்லை.அல்குர்ஆன் 6:59
ஒரு இடத்தில் ஒதுங்கிவிட்டான்என்று சொல்ல முடியாது. அவனைமனிதர்கள்தங்கள்சிற்றறிவில்கற்பனை செய்துபார்க்கின்றகாரணத்தினால்தான்இவ்வாறுகூறுகின்றனர்.இவர்களாகஒன்றைக்கற்பணைசெய்துவைத்துக்கொண்டு அதோடுஒத்துப் பார்க்கின்றனர்.இதனால்தான்அல்லாஹ்வுடையதன்மைகளிலும்கற்பனையைப் பயன்படுத்துகின்றனர்.ஆனால்வல்லஅல்லாஹ்இவர்களுடையகற்பனைகளுக்கெல்லாம்அப்பாற்பட்டவன்,
வல்ல அல்லாஹ் மேலே இருந்துகொண்டு இவற்றையெல்லாம் கண்காணிக்கின்றான் என்பதால் அவன்
வில்உரசிப்பார்த்தால்எதுவும்புலப்படாது.ஆனால்அதைநம்பித்தான்ஆகவேண்டும்.அதுதான்’ஒரிஜினல்தவ்ஹீத்’கொள்கையாகும்.என்னுடையஅறிவுக்குஇதுபொருந்தவில்லைஎன்றுகூறிஇவற்றையெல்லாம்மறுத்துக்கொண்டு நானும்இஸ்லாத்தில்தான்இருக்கிறேன்என்று கூறுவது டூப்ளிகேட் தவ்ஹீத்கொள்கையாகும்.ஈமான் என்பதுநம்பிக்கையைஅடிப்படையாகக்கொண்டதாகும்.அல்லாஹ்வுடையபண்புகளைப்பற்றிகுர்ஆனிலும், சுன்னாவிலும்வருகின்றவற்றை ஆய்வுகளுக்கு உட்படுத்தாமல் நம்பவேண்டும்.காரணம் அல்லாஹ் ஒப்பு உவமை இல்லாதவன், அவனைபடைப்புகளுடன் ஒப்பிட்டுக்காட்டமுடியாது.எனவேஅல்லாஹ்வானத்தில் அர்ஷில்இருக்கிறான் என்பதை எந்தவிதமாககுறுக்குக்கேள்வியும் கேட்காமல் அப்படியேநம்பவேண்டும்.

Source: http://jaqh.org

Sunday, August 19, 2012


ஏறாவூரில் இன்று இடம்பெற்ற பெருநாள் தொழுகை !

ஏறாவூரில் திறந்த வெளி மைதானத்தில் இன்று இடம்பெற்ற பெருநாள் தொழுகையின் போது பெரும் எண்ணிக்கையிலான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.








Saturday, August 18, 2012

ஏறாவூரில் இன்று இடம்பெற்ற பெருநாள் தொழுகை !





Friday, August 17, 2012


பெருநாள் எப்படி?


உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
ரமழான் பற்றிய பேசும் ஸுரதுல் பகராவின் 185 வது வசனத்தின் இறுதியில் ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடுவதன் நோக்கம் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான். “நீங்கள் (ரமழான் மாதத்தைக் கணக்கிட்டு நோன்பின்) எண்ணிக்கையை நிறைவு செய்ய வேண்டும். மேலும் (இந்த மாதத்தில் குர்ஆனை இறக்கி) உங்களுக்கு (உங்களது இரட்சகன்) நேர்வழி காட்டியதற்காக தக்பீர் முழங்க வேண்டும். நீங்கள் நன்றியுள்ளவர்களாக மாறலாம்.”
குர்ஆனை இறக்கியருளி நேர்வழிகாட்டிய அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் பொருட்டு, அவனது நாமத்தை தக்பீராக முழங்கி கொண்டாட வேண்டிய நாள்தான் நோன்பு பெருநாள் என்பதை இந்த வசனம் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.
மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இஸ்லாமிய சுலோகம்தான் தக்பீர் – அல்லாஹு அக்பர்!
பெருநாள், மகிழ்ச்சியின் நாளாகும் . அன்றைய மகிழ்ச்சி, புத்தாடை அணிகிறோம், அறுசுவை உண்டு சுவைக்கிறோம் என்பது மட்டுமல்ல.
உலகில் நாம் வாழ வேண்டிய வழியை அல்லாஹ் எமக்கு காட்டிவிட்டான் என்பதே பெருநாளின் மகிழ்ச்சியாகும்.
முஸ்லிம்கள் அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக அழகியதொரு வழிமுறையை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வகுத்து தந்திருக்கிறார்கள்.
பெருநாள் தினம் சுபஹ் தொழுகைக்கு முன்பே முஸ்லிம்கள் தமது பெருநாள் கொண்டாட்டத்திற்குத் தயாராக வேண்டும். குளிப்பு, புத்தாடை, நறுமணம் என்பவற்றோடு சுபஹ் தொழுகைக்காக செல்லும் முஸ்லிம்கள் சுபஹை முடித்துக் கொண்டு ஒரு திறந்த வெளியில் ஒன்று கூடுவார்கள். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் அனைவரும் இந்த ஒன்று கூடலில் பங்கேற்பார்கள். மாதவிலக்கு காரணமாக தொழு முடியாதிருக்கும் பெண்களாக இருப்பினும் கூட இந்தப் பெருநாள் ஒன்று கூடலில் பங்கேற்பதை தவிர்க்கக் கூடாது. ஆண்கள் முன்வரிசையிலும், சிறுவர்கள் அதற்குப் பின்னாலும், பெண்கள் பின் வரிசையிலும் அணிவகுத்து நிற்பார்கள்.
சுபஹ் தொழுகை முடிந்ததும் சூரிய உதயம் கழித்து, அடிவானில் சூரியன் ஒரு ஈட்டியளவு உயரும் வரை அந்த வெளியில் அனைவரும் காத்து நிற்பார்கள். பெருநாள் தொழுகை ஆரம்பமாகும். இந்த நேரம் வரை தக்பீர் முழக்கத்தால் தங்களது மகிழ்ச்சி பிரவாகத்தை அவர்கள் வெளிப்படுத்துவார்கள்.
ஒரு திறந்த வெளியில் மண்ணிலிருந்து விண்ணை நோக்கி உயரும் இந்த தக்பீர் மூலமாகத்தான் விண்ணிலிருந்து மண்ணை நோக்கி அருளப்பட்ட குர்ஆனுக்காக முஸ்லிம்கள் நன்றி தெரிவிக்கிறார்கள்.
அந்த நன்றி முழக்கத்தோடு பெருநாள் தொழுகை ஆரம்பிக்கிறது. பின்னர் ரமழானின் பரிசாகிய ஹிதாயத்தை பெற்றுக்கொண்டு ரமழானை வழியனுப்பும் ஒரு பேருரை பெருநாளுரையாக நிகழ்த்தப்படுகிறது. அது சடங்குக்காக நிகழ்த்தப்படும் உரையல்ல. ரமழானை முடித்துக்கொண்ட முஸ்லிம் உம்மத்தின் அடுத்த 11 மாதகாலத்திற்க்கான பிரகடன உரையாகும்.
அந்த உரையோடு விண்ணினதும் மண்ணினதும் இரட்சகனுக்கு  கூறிய முஸ்லிம்கள் முஸாஹபாவும், முஆனகாவும் செய்து ஒருவரை ஒருவர் வாழ்த்தும் கண்கொள்ளாக்காட்சி உலகில் எந்த கொண்டாட்டத்திற்கும் ஈடாக மாட்டாது.
இவை யாவற்றையும் முடித்துக் கொண்டு வந்த வழியை விட்டு வேறு வழியாகத் தங்களது வீடுகளை நோக்கி திரும்பிச் செல்லும் போது இன்னுமுள்ள முஸ்லிம் சகோதரர்களையும் சந்தித்து ஸலாம கூறும் வாய்ப்புக் கிட்டுகிறது.
இவ்வாறு அல்லாஹ்வின் தூதர்  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்மாதிரிக்கமைய கொண்டாடப்பட வேண்டிய பெருநாள் இன்று அதன் தன்மையயை முற்றாக இழந்து நிற்கிறது.
எதற்காக, எந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக இப்பெருநாளைக் கொண்டாடுகிறோம் என்பது எமக்குப் புரியாமல் இருக்கிறது.
காலை 9.00 மணிக்கும் 10.00 மணிக்கும் தான் பெருநாள் தொழுகை ஆரம்பிக்கிறது. சுபஹ் தொழுகையை தூக்கத்தில் “கழா” வாக்கிவிட்டு தாமதமாக துயிலெழுந்து ஆறுதலாக குளித்து விட்டு பெருநாள் தொழுகைக்காக பள்ளிவாசல் நோக்கிச் செல்லும் சோம்பேறித்தனம்தான் இன்றைய பெருநாட்களை அலங்கரிக்கிறது.
ஆண்கள் பள்ளிக்குப் போகிறார்கள்.  பெண்கள் ஆங்காங்கே வீடுகளிலும், தக்கியாக்களிலும் சிறு சிறு குழுக்களாக பெருநாள் தொழுகையை நிறைவேற்றுகிறார்கள். அவர்களுக்கு குத்பா இல்லை.
தாமதமாகி பள்ளிக்குச் செல்லும் ஆண்களுக்கு குத்பாவின் பின்னரும் பெருநாள் தொழுகை தொழுவிக்கப்படுகிறது. ஏற்கனவே தொழுகை ஒன்பது பத்துமணி வரை தாமதமாவது ஒருபுறம், அதற்கு மத்தியில் சோம்பேறித்தனத்திற்கு கண்ணியம் வேறு.
இவ்வாறு கொண்டாடப்படும் இந்தப் பெருநாளில், பெருநாளின் நோக்கம் சிறிதளவும் பிரதிபலிப்பதில்லை. குர்ஆனை அருளி ஹிதாயத்தைத் தந்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் தன்மையை இன்றைய பெருநாட்களில் காண முடியாதிருக்கிறது. பட்டாசு கொழுத்தி ரமழானை விரட்டும் ஒருவகை வறட்டு மகிழ்ச்சிதான் இன்றைய பெருநாட்களின் தோரணையாக மாறியிருக்கிறது.
ஏன் இப்படி? அல்லாஹ்வின் தூதர் காட்டித் தந்த முன்மாதிக்கமைய எமது பெருநாட்களை கொண்டாட முடியாதா? ஆண்கள், பெண்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு திரையில்லாத ஒரு பெருவெளியில் நபிகளாரின் பெருநாளைப் போல நாம் பெருநாள் கொண்டாடினால் என்ன? என்று சமூகத்தை கேட்டுப்பார்த்தால் கிடைக்கும் பதில்கள்ஆச்சரியமாக இருக்கின்றன.
ரமழானில் பள்ளிவாசல்களிலும், தக்கியாக்களிலும் ஆங்காங்கே வீடுகளிலும் தராவீஹ் தொழுகை நடாத்தியவர்களுக்கு கிடைக்க வேண்டிய “பெருநாள் கலெக்சன்” இல்லாது போய்விடும் என்ற பயம்தான் பெருநாளின் தாக்கத்தையும் இல்லாது செய்து நபிகளாரின் முன்மாதிரியையும் குழிதோண்டி புதைக்கிறது.
என்ன ஆச்சரியம்! தரவீஹ் தொழுகை நடாத்தியவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகத்தான் பெருநாள் கொண்டாடப்படுகிறதா? குர்ஆனின் மூலம் ஹிதாயத்தை அருளிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் நோக்கில் பெருநாள் கொண்டாடப்படுகிறதா? புரியவில்லை.
ஒரு திறந்த வெளியில் பெருநாள் கொண்டாடுவதற்கு முற்படுகின்ற போது ஒவ்வொரு தக்கியாவிலும் தராவீஹ் தொழுதவர்கள் அந்தத் தக்கியாவிற்குரிய நன்கொடையை வெவ்வேறாக செலுத்துவதற்குரிய ஒரு முறையைக் கையாளலாம். அப்போது “பெருநாள் கலெக்சன்” பாதிப்படைவதற்கில்லை.
எனினும் இத்தகைய வழிமுறைகளைக் கையாளாமல் நபிகளாரின் சுன்னாவை புறக்கணித்துவிடும் எமது சமூகம் மார்க்கத்தின் ஏனைய சுன்னாக்களை ஏவ்வாறுதான் உயிர்பெறச் செய்ய முடியும்!?
அது மட்டுமல்ல, சன்மார்க்க விவகாரங்களில் பங்கெடுப்பதற்கு இஸ்லாம் அனுமதித்த எந்த இடத்திற்கும் முஸ்லிம் பெண்களை நாம் அனுமதிக்க மாட்டோம் என்பதில் பிடிவாதமாக இருக்கும் ஒரு கூட்டம் நபிகளாரின் முன்மாதிரியைப் பின்பற்றி பெருநாள் கொண்டாடுவதற்கு மற்றுமொரு தடையாக இருக்கிறது.
இவர்களது வாதம் என்னவென்றால் ஆண்களும், பெண்களும் ஒரே வெளியில் ஒன்றுகூடுவதை  அனுமதிக்க முடியாது என்பதாகும்.
உண்மையில் இவர்கள் பெண்கள் சமூகத்தைப் பாதுகாப்பதாக நினைத்து அல்லாஹ்வின் தீனை விட்டும் அவர்களைத் தூரமாக்கும் வேலைகளையே செய்கிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்படுத்திய சமூகமாற்றத்திற்கான காரணங்களுள் ஒன்று ஆண்களைப் போலவே சமூகத்தில் சரிபாதியான பெண்களை சன்மார்க்க விவகாரங்கள் அனைத்திலும் அவர்கள் பங்குகொள்ளச் செய்ததாகும்.
ஆனால் இன்று இஸ்லாமிய பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், பெண்கள் மார்க்கம் படிக்க வேண்டியதில்லை, பெண்களை பாடசாலைகளுக்கும் பல்கலைகழகங்களுக்கும் அனுப்ப வேண்டியதில்லை. பெண்கள் இஸ்லாமிய பணிகளில் ஈடுபடவும் கூடாது. இதேபோன்றுதான் பெண்கள் ஜுமஆத் தொழுகைகளிலோ பெருநாள் தொழுகைகளிலோ கலந்து கொள்ளவும் தேவையில்லை என்று கூறுகிறார்கள்.
இந்தக் கொள்கையை விடாப்பிடியாக செயல்படுத்தும் சில மார்க்க பக்தர்கள் காரணமாக பெண்கள் சமூகம் இஸ்லாத்திலிருந்து வெகுதூரம் விலகிச் சென்று கொண்டிருக்கிறது. இஸ்லாத்தின் எத்தனையோ சுன்னாக்களும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அவற்றுள் ஒன்றுதான் நபிகளார் கொண்டாடிய பெருநாள்.
நாம் இன்று கொண்டாடும் பெருநாளுக்கும் நபிகளாரின் பெருநாளுக்கும் இடைவெளி தூரம். இந்த இடைவெளியைக் குறைக்க பெருநாள் கொண்டாடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் எமது சமூகமும்  சமூகத்தை வழிநடாத்தும் மார்க்க அறிஞர்களும் தயாராவார்களா?
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
Eid Mubarak - 2012



(ஈதுல் ஃபித்ர்)


    மாதம் ஒரு பண்டிகை நாள். ஊருக்கொரு திருநாள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவரவர் நேசிக்கும் அவ்லியாக்களுக்கொரு பெருநாள் என எந்த நன்மையும் இல்லாத பற்பல பெருநாட்களை கொண்டாடி வரும் இன்றைய முஸ்லிம்களுக்கு இறைத்தூதர் நபி அவர்கள் காட்டிச் சென்ற பெருநாட்களை தெளிவாக அறிந்து கொள்வோம்.

      நபி அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா குடியேறியபோது மதீனத்து மக்கள் இரு பண்டிகைகளை கொண்டாடி வந்தனர். அதிலொன்று வருடாந்திர விளையாட்டு (sports day) ஆக்கிக்கொண்டனர். இதனை செவியுற்ற நபி நீங்கள் ஆக்கிக்கொண்ட இந்நாட்களை மாற்றி அதைவிடச் சிறந்த இரு நாட்களை அல்லாஹ் உங்களுக்கு தேர்வு செய்துள்ளான், அதில் ஒன்று ஈகைத் திருநாள், மற்றொன்று தியாகத் திருநாள் என்றார்கள். இந்த நபி மொழியை மாலிக்(ரலி) அறிவிக்க அபூதாவூத், பைஹகீ, நஸயீ என்ற நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.

    கடமையான ஃபித்ரா
    பசி தாகத்துடன் நோன்பு வைத்த நாம் பெருநாளுக்கு முன் தான தர்மத்தைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது என நபி அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
   
    நபி அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி "தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸதத்துல் ஃபித்ர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்" என்ற வாசகத்தை கூறச் சொன்னார்கள். ஆதாரம்: திர்மிதி

    நோன்பில் நகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி அவர்கள் ஸதகாத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். ஆதாரம்: அபூதாவூத்

    நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான தவறுகள் ஆகியவற்றிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும், ஏழைகளுக்கு உணவாக இருக்கும் பொருட்டும் நபி அவர்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) அபூதாவுத், இப்னுமாஜா

    நபி காலத்தில் உணவுப் பொருட்களில் ஒரு "சாவு" ஃபித்ரா கொடுத்துக்கொண்டிருந்தோம் என நபித்தோழர் அபூசயீத் அல்-குத்ரி(ரலி) கூறும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, அஹ்மது, இப்னு மாஜ்ஜா போன்ற ஹதீஸ் நூற்களில் காணப்படுகிறது.

    முஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறியவர், அடிமை சுதந்திரமாணவர் அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தார்மமாக ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு பேரித்தம் பழம் ஆகியவற்றை ''தர்மமாக" கொடுக்கும்படி நபி அவர்கள் கடமையாக்கினார்கள். மேலும் இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் கொடுத்துவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

    ரமளானின் இறுதியில் உங்கள் நோன்புத் தர்மத்தைக் கொடுத்து விடுங்கள் என்று கூறி இத்தருமத்தை நபி அவர்கள் கடமையாக்கியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: அபூதாவூத், நஸயீ

    நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்;. எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான். அல்குர்ஆன் 3:93

    நாம் விரும்பி உண்ணும் உனவுப் பொருட்களையே பெருநாள் ஃபித்ரா தர்மமாக கொடுக்க வேண்டுமேயன்றி நாம் பிரியப்படாததை, விரும்பாததை அளவுக்கதிகமாக கொடுத்தாலும் நாடிய நன்மை கிடைக்காது என்பதை திருக்குர்ஆன் 3:92 நமக்கு தெளிவுபடுத்துகிறது. ஃபித்ரா தர்மத்தை தனது பொறுப்பில் உட்பட்டவர்களான தாய், தந்தை, பாட்டன் பாட்டி, மகன், பேரன் மனைவி ஆகியோருக்கு கொடுக்க முடியாது. இவர் சொந்த பொறுப்பிலிருப்பதால் அவர்களுக்காகவும் நாம் ஃபித்ரா தரவேண்டும். மற்ற உறவினர்களில் ஏழை எளியவர்கள் இருந்தால் அவர்களுக்கு முதலிடமளித்து ஃபித்ரா கொடுக்கவேண்டும்.

    வெளியூர்களில் இருக்கும் ஏழை எளியவர்களுக்கு ஓரிரு நாட்கள் முன்பாகவே அனுப்புவதை இஸ்லாம் அனுமதிக்கிறது. நபித்தோழர் இப்னு உமர்(ரலி) தனது ஃபித்ரா தர்மத்தை பெருநாளைக்கு முன்பே அனுப்பி வைத்த நிகழ்ச்சி அபூதாவூதில் இடம்பெற்றுள்ளது. இவ்விதம் ஃபித்ரா தர்மத்தைக் கொண்டு இப்பெருநாள் தொடங்குவதால் இதற்கு ஈதுல் ஃபித்ர் ஈகைப்பெருநாள் என பெயரானது.

    பெருநாள் தொழுகையின் நேரங்கள்    
    ஈத் பெருநாட்களில் குளிர்ந்த காலை நேரங்களில் அவரவர் வீடுகளிலிருந்து வெளிப்பட்டு (தொழ) செல்பவர்களுக்கு அல்லாஹ் அளப்பரிய அருளைப் பொழிகிறான். அறிவிப்பவர்: அனஸ்பின் மாலிக்(ரலி) நூல்: இப்னு அஸாகிர்

    இரண்டு ஈட்டிகளின் உயரத்திற்கு சூரியன் உயரும்போது நோன்புப் பெருநாள் தொழுகையை நபி தொழுவார்கள். (ஒரு ஈட்டியின் உயரம் என்பது ஏறத்தாள மூன்று மீட்டர்களாக ஆகும். அறிவிப்பாளர்: ஜுன்துப்(ரலி) நூல்: அஹ்மது இப்னுஹஸன்

     நோன்புப் பெருநாளில் தொழச் செல்வதற்கு முன்பே சாப்பிடுவது.
    நபி அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள் என புரைதா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: திர்மிதீ
    சில பேரிச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி அவர்கள் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) புகாரி மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

    நபி அவர்கள் ஈதுல் பித்ர் (நோன்பு) பெருநாளன்று காலையில் ஏழு பேரித்தம் பழங்களை சாப்பிடாமல் வெளியேற மாட்டார்கள் அறிவிப்பாளர்: ஜாபிர்பின் சம்ரா(ரலி) நூல்: தப்ரானி

    மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) புகாரி

    தக்பீர்
    ஈத் பெருநாட்களை அல்லாஹ்வைப் புகழ்வது கொண்டும் தக்பீரைக் கொண்டும் அழகு படுத்துங்கள். அறிவிப்பாளர்: அனஸ்பின் மாலிக்(ரலி) ஆதாரம்: நயீம்

    ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகைக்கு வீட்டிலிருந்து புறப்படும்போது தக்பீர் சொன்னவர்களாகப் புறப்படுவார்கள். தொழும் இடம் (முஸல்லா) வரும் வரை தக்பீர் சொல்வார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி) நூல்கள்: ஹாகிம் சுனன்பைஹகீ, இப்னு அஸாகீர்.

    பெருநாள் வந்துவிட்டால் நபி அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள். புகாரி

    நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (திடலில் தொழுவதால் தடுப்பாக) நபி அவர்களுக்கு முன்னால் ஓர் ஈட்டி நாட்டப்படும். நபிஅவர்கள் (அதை நோக்கித்) தொழுவார்கள். 
இப்னு உமர்(ரலி), புகாரி

    நபி அவர்கள் (பெருநாள் தொழுகைக்காகத்) தொழும் திடலுக்குப் புறப்படுவார்கள். அவர்களுக்கு முன்பே கைத்தடி எடுத்துச் செல்லப்பட்டுத் தொழும் இடத்தில் அவர்களுக்கு முன்னால் நாட்டப்படும். அதை நோக்கி நபி தொழுவார்கள். 
இப்னு உமர்(ரலி), புகாரி
 
    திடலில் பெருநாள் தொழுகை
        பெரும்பாலும் நபி அவர்கள் பெருநாள் தொழுகைகளை திறந்த பொது மைதானத்தில் தொழுதுள்ளார்கள். மழை காலத்தில் பெருநாள் தொழுகையை பள்ளியில் நடத்தினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) அபூதாவூத், இப்னுமாஜ்ஜா
   
    நபி அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள்; (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள். அபூ ஸயீத்(ரலி), புகாரி

    பெருநாள்களில் பாங்கு இகாமத் சொல்லப்பட்டதில்லை
    ஜாபிர்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோர் கூறினார்கள்: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை. புகாரி

       நபி அவர்கள் (பெருநாள் தொழுகைக்குத்) தயாராகித் தொழுகையைத் துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். நபி அவர்கள் (உரை நிகழ்த்தி) முடித்து இறங்கிப் பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால்(ரலி) உடைய கை மீது சாய்ந்து கொண்டு பெண்களுக்குப் போதனை செய்தார்கள். அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி), புகாரி

    பிலால்(ரலி) தம் ஆடையை ஏந்திக்கொள்ள, பெண்கள் தங்கள் தர்மத்தை அதில் போடலானார்கள். நான், நபி அவர்கள், அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோருடன் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுபவர்களாக இருந்தனர். புகாரி

        நபி அவர்கள், அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) ஆகியோர் இரண்டு பெருநாள்களிலும் உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுபவர்களாக இருந்தனர். இப்னு உமர்(ரலி), புகாரி

    பெருநாள் தொழுகைக்கு முன்பும் பின்பும் எந்தத் தொழுகையும் இல்லை
     நபி அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அவர்களுடன் பிலால்(ரலி) அவர்களும் சென்றனர் என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: புகாரி

         நபி அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள். அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ்(ரலி), புகாரி

   முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும்
    நபி அவர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: அஹ்மத், இப்னுமாஜா

    ''நோன்புப் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீரும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீரும் உள்ளது. அவை இரண்டிற்கும் பின்னரும் கிராஅத் (குர்ஆனை ஓதுதல்) உண்டு'' என நபி அவர்கள் கூறினார்கள் என அம்ரு இப்னு ஷுஐப் தம் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார்.  புகாரி, திர்மிதீ

    பெருநாள் தொழுகைக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும்
    நபி அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), புகாரி

    வீட்டில் தனித்து இருக்கும் நாங்கள் மாதவிடாய் பெண்கள் முதற்கொண்டு இரு பெருநாள் தொழுகைக்கு வெளியே வர ஆணையிடப்பட்டோம். தொழுகையில் கலந்து கொள்ளவும், பிரார்த்தனைகளில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டோம். ஆனால் மாதவிடாய் பெண்கள் தொழுமிடத்திலிருந்து ஒதுங்கி இருக்க பணிக்கப்பட்டோம். அப்போது ஒரு பெண் அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்காவது உடை இல்லையெனில் என்ன செய்வது என வினவினார். அதற்கு நபி அவர்கள் உங்களது தோழிகளிடமிருந்து ஓர் உடையை கடனாக வாங்கி உடுத்தி வாருங்கள் என பதில் கூறினர். அறிவிப்பவர் உம்மு அதிய்யா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயி, இப்னுமாஜ்ஜா
   
    நபி அவர்கள் (பெருநாள் தொழுகைக்குத்) தயாராகித் தொழுகையைத் துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். நபி அவர்கள் (உரை நிகழ்த்தி) முடித்து இறங்கிப் பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால்(ரலி) உடைய கைமீது சாய்ந்து கொண்டு பெண்களுக்குப் போதனை செய்தார்கள். பிலால்(ரலி) தம் ஆடையை ஏந்திக் கொள்ள, பெண்கள் தங்கள் தர்மத்தை அதில் போடலானார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி), புகாரி

    நபி அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி), புகாரி
 
    ஓதிய வசனங்கள் 
    நபி அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும் ஜுமுஆத் தொழுகையிலும் ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (87வது அத்தியாயத்தையும்) ஹல் அதாக்க ஹதீஸுல் காஷியா (88வது அத்தியாயத்தையும்) ஓதி வந்தனர். பெருநாளும், ஜுமுஆவும் ஓரே நாளில் வரும்பொழுது இந்த இரண்டு அத்தியாயங்களை இரண்டு தொழுகையிலும் ஓதுவார்கள். அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர்(ரலி) நூமான் இப்னு பஷீர், நூல்கள்: முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயீ

    50வது அத்தியாயத்தையும் 54வது அத்தியாயத்தையும் ஓதியதாக ஓர் அறிவிப்பு முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பிரார்த்தனை
    பருவமடைந்த மற்றும் மாதவிடாய் பெண்களையும் பெருநாள் தொழுகைக்கு வெளியே அனுப்புமாறு நபி அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். நற்பணிகளில் மற்றும் முஸ்லிம்களுடைய துஆவில் அவர்கள் பங்கு பெறுவதற்காக. ஆனால், மாத விலக்கான பெண்கள், தொழும் இடத்தின் ஓரப்பகுதியில் இருக்க வேண்டும். என உம்மு அதிய்யா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
 
    
பெருநாளில் நாங்கள் (தொழும் திடலுக்கு) புறப்பட வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி) நூல்கள்: புகாரீ, முஸ்லிம்

    கட்டாயம் பெண்கள் பெருநாள் தொழுகைக்கு வர நபி அவர்கள் ஆனையிட்டிருக்க மாதவிடாய் கண்ணிப்பெண்கள் முதற்கொண்டு அனைவரும் பெருநாளின் பொது தொழுகையின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதித்து இருக்க நாம் தமிழகத்தில் அவர்களை அனுமதிக்காமலிருப்பது நபிஅவர்களின் ஆணைக்கு கட்டுப்படாமையைக் குறிக்கும் என்பதை உணரலாம்.
   
    நாம் பெண்களை தொழுமிடத்திற்கு வராமல் தடுப்பதால்தான் தங்களது போக்கிடமாக அவர்கள் சினிமாக்களையும், தர்ஹாக்களையும் தேடி ஓடுகிறார்கள். அல்லாஹ் நம்மனைவரின் அமல்களை அவனுக்கு உகப்பானதாக ஆக்கி வைப்பானாக! நபி அவர்கள் காட்டிய வழியில் செயல்பட தவ்பீக் தந்தருள்வானாக! ஆமீன்.