widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Wednesday, August 1, 2012



பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்கள்…



1. இரவின் நடுப்பகுதி


2. இரவில் கடைசிமூன்றாவது பகுதி


3. ஒவ்வொரு தொழுகையின் கடைசி நேரத்தில் (அதாவது அத்தஹியாத்தில்ஸலாம் கொடுப்பதற்கு முன்பு)


4. அதானுக்கும் இகாமத்திற்கும் மத்தியில்


5. பர்ளான தொழுகைக்கு அதான் சொல்லப்படும் போது


6. மழை பொழியும் போது


7. உண்மையான (நம்பிக்கையான) எண்ணத்துடன் ஸம்ஸம் தண்ணீரைக் குடிக்கும் போது


8. (தொழுகையில்)ஸுஜூது செய்யும் போது


9. ஒரு முஸ்லிம் தன்னுடைய இன்னொரு முஸ்லிம் சகோதரருக்குசெய்யும் பிரார்த்தனை


10. அரஃபாவுடைய நாளில் செய்யும் பிரார்த்தனை


11. தந்தைபிள்ளைகளுக்கும், பிள்ளைகள் தந்தைக்கும் செய்யும் பிரார்த்தனை


12. பிரயாணியின் பிரார்த்தனை


13. பெற்றோருக்குக் கட்டுப்பட்டு நடக்கும் பிள்ளையின்பிரார்த்தனை


14. சிறிய ஜம்ராவிற்குக் கல் எறிந்தபிறகுகேட்கும் பிரார்த்தனை


15. நடு ஜம்ராவிற்குக் கல் எறிந்த பிறகுகேட்கும் பிரார்த்தனை


16. கஃபாவிற்குள் கேட்கும்பிரார்த்தனை. ஹிஜ்ருக்குள் (கஃபத்துல்லாஹ்வை ஒட்டிஇருக்கும் அரைவட்ட வடிவத்திற்குள்) யார் தொழுகின்றாரோ அவர் கஃபாவிற்குள்தொழுதவரைப் போல் கணக்கிடப்படுவார்.


17. ஸஃபா மற்றும் மர்வா மலைகள் மீது கேட்கும்பிரார்த்தனை.


18. (முஸ்தலிஃபாவிலுள்ள) மஷ்அருள் ஹராம் என்னுமிடத்தில் கேட்கும்பிரார்த்தனை


19. நோன்பாளியின் பிரார்த்தனை.


20. நோன்பு திறக்கும் நேரத்தில்கேட்கும் பிரார்த்தனை


0 comments:

Post a Comment