widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Tuesday, January 31, 2012

இலவச கண் சத்திர சிகிச்சை (வெண்படலம் நீக்குதல்)



ஏறாவூர் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் நேற்று (31.01.2012) செவ்வாய்க்கிழமை ஏறாவூர் அல் அஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கண்ணில் வெண்படலத்தினை நீக்குவதற்கான இலவச சத்திரசிகிச்சைக்கு நோயாளிகளைத் தெரிவு செய்வதற்கான கண்பரிசோதனை முகாம் ஒன்று நடைபெற்றது. இச்சத்திரசிகிச்சையை வெளியில் செய்வதானால் ரூபா 55000.00 தொடக்கம் 110000.00 வரை செலவாகக்கூடிய இச் சத்திரசிகிச்சையை ஏறாவூர் தவ்ஹீத் ஜமாஅத்தினூடாக ஏறாவூரில் ஜம்இய்யது சபாப் நிறுவனம் செய்வது குறிப்பிடத்தக்கதாகும். இச்சத்திர சிகிச்சை எதிர்வரும் ஓரிரு வாரங்களில் காத்தான்குடி வைத்தியசாலையில் நடைபெறவிருக்கின்றது. 


இது சம்பந்தப்பட்ட அறிவித்தல்களை தவ்ஹீத் ஜமாஅத்தினர் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலமாக அறிவிக்குமாறு கேட்கப்பட்டும் இவ் ஏற்பாட்டை தவ்ஹீத் ஜமாஅத்தினர் செய்கின்றனர் என்ற காரணத்திற்காக ஒரு சில பள்ளிவாயல்களில் அறிவிக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரம் ரூபாய்கள் கொடுத்து செய்யவேண்டிய இச்சத்திர சிகிச்சையை இலவசமாக செய்யக்கூடிய வாய்ப்பு சிலருக்கு இல்லாமல் போயுள்ளது. 



இவ்வைத்திய முகாமில் சுமார் 150 பேரளவில் பங்குபற்றியதுடன் 30 பேருக்கு இலவசமாக கண் சத்திரசிகிச்சை பெறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. 




Grade 5 புலமைப் பரிசில் பரீட்சையில் A/L பரீட்சையில் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதியான மாணவர்களைப் பாராட்டும் வைபவம்





2011ம் ஆண்டு நடைபெற்ற 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த, A/Lபரீட்சையில் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதியான  ஏறாவூரைச் சேர்ந்த மாணவர்களைப் பாராட்டி பரிசு வழங்கும் வைபவம் ஒன்றை ஏறாவூர் தவ்ஹீத் ஜமாஅத் இன்;~h அல்லாஹ் 03.02.2012 இல் பி.ப.4.00 மணிக்கு மட்/மம/அறபா வித்தியாலயத்தில் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளது. மட்டக்களப்பு மத்திய வலயக்கல்விப்பணிப்பாளர் அல்ஹாஜ் ULM. ஜெய்னுதீன் அவர்கள் இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார். பிரதம பேச்சாளராக மௌலவி முபாரக் மதனி (MA) அவர்கள் கலந்து கொள்வார்.



வட்டி சம்பந்தமாக புஹாரி ஹதீது கிதாபில் இடம்பெற்ற ஆதாரபூர்வமான ஹதீத்கள்


வட்டி சம்பந்தமாக புஹாரி ஹதீது கிதாபில் இடம்பெற்ற ஆதாரபூர்வமான ஹதீத்கள்
459. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
'பகரா' அத்தியாயத்தில் வட்டி (விலக்கப்பட்டது என்பது) பற்றிய வசனங்கள் இறங்கியபோது நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குச் சென்று மக்களுக்கு அவ்வசனங்களை ஓதிக் காட்டினார்கள். மதுபானங்கள் விற்பதும் விலக்கப்பட்டது என அறிவித்தார்கள். 
Volume :1 Book :8

1386. ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கி, 'இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா?' என்று கேட்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். எவரேனும் கனவு கண்டு அதைக் கூறினால், 'அல்லாஹ் நாடியது நடக்கும்' எனக் கூறுவார்கள். ஒரு நாள், 'உங்களில் யாரும் இன்றிரவு கனவு கண்டீர்களா?' என்று கேட்டதும் நாங்கள் இல்லை என்றோம். அவர்கள், 'நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன்; அதில் இருவர் என்னிடம் வந்து என்னுடைய கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். நின்றிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன. அவர் அதைக் கொண்டு உட்கார்ந்திருப்பவரின் கீழ்த்தாடையின் ஒருபுறம் குத்த அது அவரின் பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார். இதற்குள் தாடையின் முதற் பகுதி ஒழுங்காகிவிட்டது. பின்பு இது குத்தப்பட்டதும் அது பழைய நிலையை அடைந்தது. உடனே நான் இது என்ன?என்று கேட்டேன். அதற்கு அவ்விருவரும் 'நடங்கள்' என்றனர். அப்படியே நடந்தபோது அங்கு ஒருவர் மல்லாந்து படுத்திருந்தார். அவரின் தலை மாட்டிலே பெரிய பாறையுடன் நிற்கும் இன்னொருவர், அதைக் கொண்டு அவரின் தலையை உடைத்தார். அவ்வாறு உடைக்கும்போது பாறை உருண்டு ஓடிவிட்டது. அந்தப் பாறையை அவர் எடுத்து வருவதற்குள் சிதைந்த தலை பழைய நிலைக்கு மாறிவிட்டது. மீண்டும் வந்து உடைத்தார். உடனே 'இவர் யார்?' என கேட்டேன். அதற்கு அவ்விருவரும் 'நடங்கள்" என்றனர். எனவே நடந்தோம். அங்கு அடுப்பு போன்ற ஒரு பொந்து இருந்தது. அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்தன. அதற்குக் கீழ் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. நெருப்பின் உஷ்ணம் அதிகமாகும்போது அந்தப் பொந்தின் அடியிலுள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால் மேற்பகுதி குறுகலாயிருப்பதால் வெளியேற முடியவில்லை.) நெருப்பு அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும், பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார்கள். நான் 'இவர்கள் யார்?' எனக் கேட்டேன் அதற்கும் அவர்கள் 'நடங்கள்' எனக் கூறி விடவே மேலும் நடந்து ஓர் இரத்த ஆற்றின் பக்கம் வந்தோம். அந்த ஆற்றின் நடுப்பகுதியில் ஒருவர் நின்றிருந்தார். அவருக்கு முன்பாகக் கற்கள் கிடந்தன. ஆற்றின் ஓரத்தில் இன்னொருவர் நின்றிருந்தார். அந்த மனிதர் ஆற்றைவிட்டு வெளியேற முயலும்போது இவர் அவரின் வாயில் கல்லை எறிந்தார். அக்கல் பட்டதும் கரையேற முயன்றவர் முன்னிருந்த இடத்திற்குத் தள்ளப்பட்டார். இவ்வாறே அவர் வெளியேற முயலும் போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லால் அடிக்க, அவர் மீண்டும் பழைய இடத்திற்கே சென்றார். அப்போது நான் 'என்ன இது?' எனக் கேட்டேன். அதற்கு அவ்விருவரும் 'நடங்கள்' எனக் கூறிவிடவே நடந்து ஒரு பசுமையான பூங்காவுக்கு வந்தோம். அதில் ஒரு பெரிய மரம் இருந்தது. அதன் அடியில் ஒரு வயோதிகரும் சில சிறுவர்களும் இருந்தனர். அந்த மரத்திற்கு அருகீல் ஒருவர் இருந்தார். அவருக்கு முன்னால் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அதை அவர் மூட்டிக் கொண்டிருந்தார். பிறகு அவ்விருவரும் என்னை அம்மரத்தில் ஏற்றிக் கொண்டு போய் அங்கு ஒரு வீட்டில் பிரவேசிக்கச் செய்தார்கள். நான் இதுவரை அப்படி ஓர் அழகான வீட்டைப் பார்த்ததேயில்லை. அதில் சில ஆண்களும் வயோதிகர்களும் இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரும் இருந்தனர். பிறகு அவ்விருவரும் அங்கிருந்து என்னை அழைத்து மரத்தில் ஏற்றி இன்னொரு மாளிகையில் பிரவேசிக்கச் செய்தனர். அது மிகவும் அழகானதும் சிறப்பானதுமாக இருந்தது. அதில் வயோதிகர்களும் இளைஞர்களும் இருந்தனர். பிறகு நான் இருவரிடமும் 'இரவு முழுவதும் என்னை நீங்கள் சுற்றிக் காண்பித்தீர்களே, அப்போது நான் கண்டவற்றைப் பற்றி விவரங்களைச் சொல்லுங்கள்!' எனக் கேட்டேன். அதற்கு இருவரும் 'ஆம்! முதலில் தாடை சிதைக்கப்பட்ட வரைப் பார்த்தீரே! அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். அடுத்து தலை உடைக்கப்பட்ட நிலையில் நீர் பார்த்தீரே! அவருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுக் கொடுத்தும் அதைப் பயன்படுத்தாமல் இரவில் தூங்கிவிட்டார். பகலில் அதைச் செயல்படுத்தவில்லை. எனவே அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். அடுத்து ஒரு பொந்தில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள். (இரத்த) ஆற்றில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் வட்டி வாங்கித் தின்றவர்கள். மரத்தின் அடிப்பாகத்தில் இருந்த பெரியவர் இப்ராஹீம்(அலை) அவர்கள் அவரைச் சுற்றியிருந்த சிறுவர்கள் (முஸ்லிம்) மக்களின் குழந்தைகள். நெருப்பு மூட்டிக் கொண்டிருந்தவர் நரகக் காவலாளியான மாலிக்(அலை). நீர் நுழைந்த முதல் மாளிகை சராசரி இறைநம்பிக்கையாளர்களின் இருப்பிடம். அடுத்த மாளிகையோ உயிர்த்தியாகிகளின் இருப்பிடம். நான் ஜிப்ரீல். இவர் மீக்காயில்" என்று கூறிவிட்டு. 'இப்போது உம்முடைய தலையை உயர்த்தும்" என்றனர். நான் என்னுடைய தலையை உயர்த்தியதும் எனக்கு மேற்புறம் மேகம் போல் இருந்தது. அப்போது இருவரும் 'இதுவே (மறுமையில்) உம்முடைய இருப்பிடம்" என்றதும் நான் 'என்னுடைய இருப்பிடத்தில் என்னை நுழைய விடுங்களேன்" என்றேன். அதற்கு இருவரும் 'உம்முடைய வாழ்நாள் இன்னம் மிச்சமிருக்கிறது; அதை நீர் இன்னும் பூர்த்தி செய்யவில்லை. எனவே, அதனை நீர் பூர்த்தி செய்ததும் நீர் உம்முடைய இருப்பிடம் வருவீர்" என்றனர்" என்று கூறினார்கள். 
Volume :2 Book :23

2085. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்த தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்து நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது. அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும் போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறிய. அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்! "அவர் யார்?' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!" எனக் கூறினார்கள்." 
என ஸமுரா(ரலி) அறிவித்தார். 
Volume :2 Book :34

2086. அவ்ன் இப்னு அபீ ஜுஹைஃபா(ரஹ்) அவர்கள் கூறினார்: 
இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை என் தந்தை (அபூ ஜுஹைஃபா(ரலி)) விலைக்கு வாங்கினார்கள். (பிறகு, அவரின் தொழில் கருவிகளை உடைத்துவிட்டார்கள்.) இது தொடர்பாக அவர்களிடம் நான் (விளக்கம்) கேட்க, அவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் நாய் விற்ற கிரயத்தையும் இரத்தத்தின் கிரயத்தை (இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுப்பதற்குப் பெறுகிற கூலியை)யும் தடை செய்தார்கள்; பச்சை குத்துவதையும், பச்சை குத்திக் கொள்வதையும் தடை செய்தார்கள்; வட்டி உண்பதையும் வட்டி கொடுப்பதையும் தடை செய்தார்கள்! மேலும், உருவம் வரைபவனைச் சபித்தார்கள்!" என்று பதிலளித்தார்கள். 
Volume :2 Book :34

2134. ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்: 
"யாரிடமாவது சில்லறை இருக்கிறதா?' என்று மாலிக் இப்னு அவ்ஸ்(ரலி) கேட்டார்கள். அப்போது தல்ஹா(ரலி) 'என்னிடம் இருக்கிறது. என்றாலும் ஃகாபாவிலிருந்து கருவூலக் காப்பாளர் வரும்வரை தரமுடியாது!" என்றார்கள். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"தங்கத்திற்கு வெள்ளியை மாற்றிக் கொள்வது, உடனுக்குடன் மாற்றினாலே தவிர, வட்டியாகும்! தீட்டிய கோதுமைக்குத் தீட்டிய கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றினாலே தவிர! பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும். உடனுக்குடன் மாற்றினாலே தவிர! வாற்கோதுமைக்கு வாற்கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றினாலே தவிர!" என உமர்(ரலி) அறிவித்தார். 
Volume :2 Book :34

2170. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"கோதுமைக்கு கோதுமையை மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடக் மாற்றினாலே தவிர! வாற்கோதுமைக்கு வாற்கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும். உடனுக்குடன் மாற்றினாலே தவிர! பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றினாலே தவிர!" என உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :2 Book :34

2174. மாலிக் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார். 
நான் நூறு தீனார்களை (திர்ஹமாக) மாற்றித் தருமாறு கேட்டேன். தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி) என்னை அழைத்தார்கள். அவர்களிடம் வியாபாரம் பேசியதும் என்னிடமிருந்து தங்க நாணயங்களைப் பெற்றுக் கொண்டு கையில் வைத்துக் குலுக்கினார்கள். பிறகு 'ஃகாபாவிலிருந்து நம்முடைய கருவூலக் காப்பாளர் வரும் வரை சில்லறை தர முடியாது!" என்றார்கள். இதை உமர்(ரலி) கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவரிடமிருந்து சில்லறையைப் பெறாமல் நீர் பிரியக் கூடாது; ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் 'தங்கத்திற்குத் தங்கத்தை மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றினாலே தவிர! கோதுமைக்கு கோதுமையை மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றினாலே தவிர! பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக் கொள்வது வட்டியாகும். உடனுக்குடன் மாற்றினாலே தவிர!" என்று கூறினார்கள்!" என்று உமர்(ரலி) சொன்னார்கள். 
Volume :2 Book :34

2178. & 2179. அபூ ஸாலிஹ் அஸ் ஸய்யாத்(ரலி) அறிவித்தார். 
"தங்க நாணயத்திற்கு (தீனாருக்கு)த் தங்க நாணயத்தையும் வெள்ளி நாணயத்திற்கு (திர்ஹத்திற்கு) வெள்ளி நாணயத்தையும் விற்கலாம்!' என அபூ ஸயீத்(ரலி) கூறினார். அவரிடம் நான் இப்னு அப்பாஸ்(ரலி) இவ்வாறு கூறுவதில்லையே எனக் கேட்டேன். அதற்கு அபூ ஸயீத்(ரலி) 'நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் நீங்கள் இதை நபி(ஸல்) அவர்கள் வழியாகச் செவியுற்றீர்களா? அல்லது அல்லாஹ்வின் வேதத்தில் பார்த்தீர்களா? என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) அவ்வாறு நான் கூறவில்லை. என்னைவிட நீங்கள் அல்லாஹ்வின் தூதரைப் பற்றி நன்கறிந்தவர் என்றாலும், கடனில் தவிர வட்டி ஏற்படாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உஸாமா எனக்கு கூறினார் என்று விடையளித்தார் எனப் பதிலளித்தார். 
Volume :2 Book :34

2226. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
பகரா அத்தியாயத்தின் (வட்டியைத் தடை செய்யும் வசனத்திலிருந்து இறுதி வசனம் வரை இறங்கியபோது நபி(ஸல்) அவர்கள் (மக்களிடம்) வந்து, 'மதுபான வியாபாரம் ஹராமாக்கப்பட்டுவிட்டது!" என்றார்கள். 
Volume :2 Book :34

2238. அவ்ன் இப்னு அபீ ஜுஹைஃபா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். 
"என் தந்தை (அபூ ஜுஹைஃபா(ரலி)) இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை விலைக்கு வாங்கி, அவரின் தொழிற் கருவிகளை உடைக்கும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே, அவை உடைக்கப்பட்டன. அதுபற்றி நான் அவர்களிடம் கேட்டபோது, 'நபி(ஸல்) அவர்கள் இரத்தத்தின் கிரயம் (இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுப்பதற்காகப் பெறுகிற கூலி), நாயின் கிரயம், அடிமைப் பெண்ணின் சம்பாத்தியம் ஆகியவற்றைத் தடுத்தார்கள். பச்சை குத்திக் கொள்பவளையும், பச்சை குத்தி விடுபவளையும், வட்டி உண்பவனையும் (உயிரினங்களின்) உருவம் வரைபவனையும் சபித்தார்கள்!' என்று பதிலளித்தார்கள்!" 

2312. அபூ ஸயீத் குல் குத்ரீ(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்களிடம் பிலால்(ரலி) 'பர்னீ' எனும் (மஞ்சளான, வட்ட வடிவமான) உயர் ரக பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களிடம் 'இது எங்கிருந்து கிடைத்தது?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால்(ரலி) 'என்னிடம் மட்டரக பேரீச்சம் பழம் இருந்தது. நபி(ஸல்) அவர்களுக்கு உண்ணக் கொடுப்பதற்காக அதில் இரண்டு ஸாவைக் கொடுத்து இதில் ஒரு ஸாவு வாங்கினேன்! என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அடடா! இது வட்டியேதான்! நீர் (உயர்ரக பேரீச்சம் பழத்தை) வாங்க விரும்பினால் உம்மிடம் இருக்கும் பேரீச்சம் வாயிலாக விற்றுவிட்டு, பிறகு அதை வாங்குவீராக! என்றார்கள். 
Volume :2 Book :40

2766. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
"அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை எவை?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)" என்று (பதில்) கூறினார்கள். 
Volume :3 Book :55

3814. அபூ புர்தா ஆமிர்(ரஹ்) அறிவித்தார். 
நான் மதீனாவுக்கு வந்து அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் (என்னிடம்), 'நீங்கள் (என்னுடன்) வர மாட்டீர்களா? உங்களுக்கு நான் மாவையும் பேழீச்சம் பழத்தையும் உண்ணத் தருவேன். நீங்கள் நபி(ஸல்) அவர்கள் வருகை தந்த என்) வீட்டிற்கு வந்ததாகவும் இருக்குமே" என்று கேட்டார்கள். பிறகு, 'நீங்கள் வட்டி மலிந்துள்ள (இராக்) நாட்டில் வசிக்கிறீர்கள். உங்களுக்கு ஒருவர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்து. அவர் ஒரு வைக்கோல் போரையோ, வாற்கோதுமை மூட்டையையோ, கால்நடைத் தீவன மூட்டையையோ அன்பளிப்பாகக் கொடுத்தாலும் அதுவும் வட்டியாகும்" என்று கூறினார்கள். 
மற்றோர் அறிவிப்பில், '(என்) வீட்டிற்கு' என்னும் சொல் இடம் பெறவில்லை. 
Volume :4 Book :63

4540. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
அல்பகரா அத்தியாயத்தின் இறுதிவசனங்கள் (திருக்குர்ஆன் 02:275 - 281) வட்டி தொடர்பாக இறங்கியபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களுக்கு அவற்றை (பள்ளி வாசலில் வைத்து) ஓதிக் காட்டினார்கள். பிறகு, மது வியாபாரத்தைத் தடை செய்தார்கள். 
Volume :5 Book :65

4544. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் 
நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற இறுதி வசனம் வட்டியைக் குறித்த (இந்த 02:281 வது) வசனம் ஆகும். 
Volume :5 Book :65

5347. அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார் 
பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.103

5945. அவ்ன் இப்னு அபீ ஜுஹைஃபா(ரஹ்) அறிவித்தார் 
என் தந்தை (அபூ ஜுஹைஃபா(ரலி) குருதி உறிஞ்சி எடுக்கும் அடிமை ஒருவரை விலைக்கு வாங்கி, அவரின் குருதி உறிஞ்சி கருவிகளை உடைத்தபோது) அவர்களை நான் கண்டடேன். அப்போது அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் இரத்தத்தின் விலையையும், நாய் விற்ற காசையும் (பெறக் கூடாதெனத்) தடை செய்தார்கள். மேலும், வட்டி உண்பவனையும் அதை உண்ணக் கொடுப்பவனையும், பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக் கொள்பவளையும் (சபித்தார்கள்.)130 
Volume :6 Book :77

5962. அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார் 
நான் குருதி உறிஞ்சியெடுக்கும் அடிமை ஒருவரை (விலைக்கு) வாங்கினேன். (அவரின் குருதி உறிஞ்சி கருவிகளை உடைத்து விட்டேன். ஏனெனில்,) நபி(ஸல்) அவர்கள், இரத்தத்தின் விலையையும் நாய்விற்ற காசையும் விபசாரியின் சம்பாத்தியத்தையும் (ஏற்கக் கூடாதென்று) தடை செய்தார்கள். மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் உருவப் படங்களை வரைகிறவனையும் சபித்தார்கள்.139 
Volume :6 Book :77

6857. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள், 'பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்து விடுங்கள்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை யாவை?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதும்ட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்களின் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும்பாவங்கள்)' என்று கூறினார்கள்.70 
Volume :7 Book :86

7047. சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் 'உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?' என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: 
இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, 'நடங்கள்' என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். - அல்லது பிளந்தார் - பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம்விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், 'அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?' என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்' என்றனர். 
அப்படியே நாங்கள் நடந்து அடுப்பு போன்று (மேல் பகுதி குறுகலாகவும் கீழ்ப்பகுதி விசாலமாகவும்) இருந்த (பொந்து) ஒன்றின் அருகில் வந்தோம். அதனுள்ளிருந்து (மனிதர்களின்) கூச்சலும் ஆரவாரமும் கேட்டது. உடனே நாங்கள் அதற்குள்ளே எட்டிப் பார்த்தோம். அங்கு ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக இருந்தார்கள். அங்கு அவர்களுக்குக் கீழேயிருந்து நெருப்பு ஜுவாலை ஒன்று (மேலே) வருகிறது. அந்த ஜுவாலை அவர்களை அடையும்போது அவர்கள் ஓலமிடுகிறார்கள். 
நான் (என்னுடன் வந்த) அவ்விரு(வான)வரிடம், 'இவர்கள் யார்?' என்று கேட்டேன். அவர்கள், 'செல்லுங்கள், செல்லுங்கள்' என்று என்னிடம் கூறினர். 
அப்படியே நாங்கள் நடந்து ஓர் ஆற்றின் அருகே சென்றோம். அது இரத்தத்தைப் போன்று சிவப்பாக இருந்தது. அந்த ஆற்றில் ஒருவந் நீந்திக் கொண்டிருந்தான். ஆற்றின் கரையில் தமக்கருகே நிறைய கற்களைக் குவித்துவைத்தபடி ஒருவர் இருக்கிறார். அந்த நீச்சல்காரன் நீந்தி நீந்தி, கற்களைக் குவித்துவைத்துக் கொண்டிருக்கும் மனிதரிடம் (கரைக்குச்) சென்று அவருக்கு முன்னால் தம் வாயைத் திறக்கிறான். உடனே (கரையில் நிற்பவர்) அவனுடைய வாயில் கற்களைப் போடுகிறார். உடனே அவன் நீந்தியபடி (திரும்பிச்) சென்றுவிட்டு மீண்டும் அவரை நோக்கி வருகிறான். அவரிடம் அவன் திரும்பி வரும்போதெல்லாம் தன்னுடைய வாயை அவன் திறந்து காட்ட அவர் அவன் வாயில் கற்களைக் போட்டுக் கொண்டிருக்கிறார். (அவன் திரும்பி பழைய இடத்திற்கே தள்ளப்படுகிறான். இப்படியே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.) நான் அவ்விரு(வான)வரிடமும், 'இவ்விருவரும் யார்?' என்று கேட்டேன். அவர்கள், என்னிடம், 'செல்லுங்கள், செல்லுங்கள்' என்று கூறினார்கள். 
நாங்கள் அப்படியே நடந்து ஓர் அசிங்கமான தோற்றம் கொண்ட மனிதர் ஒருவரிடம் சென்றோம். அவர் நீ காணுகிற மனிதர்களிலேயே மிகவும் அருவருப்பான தோற்றமுடையவர் போன்று காணப்பட்டார். அங்கு அவர் தமக்கு அருகே நெருப்பை மூட்டி அதைச் சுற்றி வந்துகொண்டிருந்தார். நான் அவ்விருவரிடமும், 'இவர் யார்?' என்று கேட்டேன். அவர்கள் என்னிடம், 'செல்லுங்கள், செல்லுங்கள்' என்று கூறினர். 
அப்படியே நடங்கள் அடர்ந்துயர்ந்த பசுமையான ஒரு பூங்காவிற்குச் சென்றோம். அதில் வசந்த காலத்தின் எல்லா வண்ணப் பூக்களும் காணப்பட்டன. அந்தப் பூங்காவிற்கு நடுவில் உயரமான மனிதர் ஒருவர் இருந்தார். வான் நோக்கி உயர்ந்திருந்தால் அவரின் தலையை என்னால் (எளிதில்) பார்க்க முடியவில்லை. அந்த மனிதரைச் சுற்றி நான் ஒருபோதும் கண்டிராத அளவிற்கு ஏராளமான சிறுவர்கள் இருந்தார்கள். நான் அவ்விருவரிடமும், 'இந்த (உயரமான) மனிதர் யார்? இந்தச் சிறுவர்கள் யார்?' என்று கேட்டேன். அவர்கள் என்னிடம், 'செல்லுங்கள், செல்லுங்கள்' எனக் கூறிவிடவே நடந்து ஒரு பெரும் பூங்காவுக்கு வந்தோம். அதைவிட பெரிய அழகான பூங்காவை நான் ஒருபோதும் கண்டதில்லை. (அதில் ஒரு பெரிய மரமும் இருந்தது.) அவ்விருவரும் என்னிடம், 'அதில் ஏறுங்கள்' என்றனர். அப்படியே அதில் நாங்கள் ஏறி தங்கம் மற்றும் வெள்ளி செங்கற்களால் கட்டப்பட்டிருந்த ஒரு நகரத்திற்கு வந்தோம். அந்த நகரத்தின் தலை வாயிலை அடைந்து (அதைத்) திறக்குமாறு கூறினோம். உடனே எங்களுக்காக அது திறக்கப்பட்டது. நாங்கள் அதில் நுழைந்தோம். அங்கு நீ காணகிறவற்றிலேயே மிகவும் அழகான பாதித் தோற்றமும் நீ காணுகிறவற்றிலேயே மிகவும் அருவருப்பான (மறு) பாதித் தோற்றமும் கொண்ட சில மனிதர்கள் எங்களை எதிர்கொண்டனர். அவர்களைப் பார்த்து (என்னுடன் வந்த) அவ்விருவரும், செல்லுங்கள்; (சென்று) அந்த நதியில் குதியுங்கள்' என்றனர். அங்கு குறுக்கே ஒரு நதி பாய்ந்து கொண்டிருந்தது. அதன் நீர் தூய வெண்ணிறத்தில் காணப்பட்டது. எனவே, அவர்கள் சென்று அதில் விழுந்து (குளித்துவிட்டு) தங்களிடமிருந்து அந்த அசூசை நீங்கி விட்டிருந்த நிலையில் மிகவும் பொலிவான வடிவத்திற்கு மாறியவர்களாக எங்களிடம் திரும்பிவந்தனர்.
அவ்விருவரும் என்னிடம், 'இது (-இந்த நகரம்) தான் 'அத்ன்' எனும் (நிலையான) சொர்க்கமாகும். இதுவே உங்கள் ஓய்விடமாகும்' என்றார். நான் பார்வையை உயர்த்தி மேலே பார்த்தபோது அங்கு வெண் மேகத்தைப் போன்ற மாளிகையொன்றைக் கண்டேன். அவ்விருவரும் என்னிடம், 'இது உங்கள் இருப்பிடம்' என்றனர். நான் அவர்களிடம், 'உங்கள் இருவருக்கும் அல்லாஹ் சுபிட்சம் வழங்கட்டும்! என்னை விடுங்கள். நான் இதில் நுழைந்து கொள்கிறேன்' என்றேன். அவ்விருவரும், 'இப்போது முடியாது நீங்கள் (மறுமையில்) அதில் நுழையத்தான் போகிறீர்கள்' என்றனர். 
நான் அவ்விருவரிடமும், 'நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?' என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், '(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம். 
கல்லால் தலை நசுக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதருக்கு அருகில் முதலில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் குர்ஆனை (மனனம் செய்து) எடுத்துக்கொண்டுவிட்டுப் பிறகு அதை (மறந்து)விட்டவன் ஆவான். மேலும், அவன் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றாமல் தூங்கிவிட்டவனும் ஆவான். (அடுத்து) தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும். 
அடுப்பு போன்ற கட்டடம் ஒன்றில் நிர்வாணமாகக் கிடந்த ஆண்களும் பெண்களும் விபசாரம் புரிந்த ஆண்களும் விபசாரம் புரிந்த பெண்களுமாவர். ஆற்றில் நீந்திக்கொண்டும் (கரையை நெருங்கும்போது வாயில்) கல் போடப்பட்டுக் கொண்டும் இருந்த ஒரு மனிதனுக்கு அருகே நீங்கள் சென்றீர்களே! அவன் வட்டி வாங்கித் தின்றவன் ஆவான். நெருப்பை மூட்டி அதைச் சுற்றி வந்து கொண்டிருந்த அருவருப்பான தோற்றத்திலிருந்த அந்த மனிதர் நரகத்தின் காவலரான மாலிக் ஆவார். 
அந்தப் பூங்காவிலிருந்த உயரமான மனிதர் (இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்களாவார். அவர்களைச் சுற்றியிருந்த சிறுவர்கள் இயற்கை மரபில் (இஸ்லாத்தில்) இறந்துவிட்ட சிறுவர்கள் ஆவர். 
இதை நபி(ஸல்) அவர்கள் கூறியபோது முஸ்லிம்களில் சிலர், 'இறைத்தூதர் அவர்களே! இணைவைப்பாளர்களின் குழந்தைகளும் (அந்தப் பூங்காவில் இருந்த குழந்தைகளில் அடங்குவார்களா?)' என்று கேட்டனர். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(ஆம்) இணைவைப்பாளர்களுடைய குழந்தைகளும் தாம்' என்று பதிலளித்தார்கள்.66 
(தொடர்ந்து என்னுடன் வந்த அவ்விருவரும் கூறுகையில்,) ஒரு பாதி அழகாகவும் மறுபாதி அசிங்கமாகவும் காட்சியளித்த மக்கள், நல்லறங்களுடன் தீமைகளையும் கலந்துவிட்டவர்களாவர்; (பின்னர்) அவர்களை அல்லாஹ் மன்னித்துவிட்டான் (என்று கூறினர்). 

Saturday, January 28, 2012

தப்லீக் இயக்கத்தினர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டமை சரியானதே!


தப்லீக் இயக்கத்தினர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டமை சரியானதே!

கடந்த சில நாட்களுக்கு முன் தப்லீக் இயக்கத்தை சேர்ந்தவர்கள் இலங்கையை விட்டு அதிரடியாக வெளியேற்றப்பட்டார்கள். இது தொடர்பாக லங்கா நவ் என்ற இணையதளம் “தப்லீக் இயக்கத்தினர் வெளியேற்றப்பட்டமை சரியானதே!” என்ற தலைப்பில் தனது ஆசிரியர் தலையங்கத்தை அமைத்துள்ளது.  அந்த ஆக்கத்தை எவ்வித மாற்றமும் இன்றி நாமும் இங்கு வெளியிடுகிறோம்.

இலங்கை நாட்டின் சிறுபான்மை சமுதாயத்தில் இஸ்லாமியர்கள் முக்கியமானவர்கள். இவர்களில் தப்லீக், தவ்ஹீத், தரீக்கா, ஜமாத்தே இஸ்லாமி என்று பல பிரிவினர் இயக்க ரீதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களில் ஜமாத்தே இஸ்லாமி, தரீக்கா, தப்லீக் போன்ற இயக்கத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் அமீர் என்றொருவரை ஏற்படுத்திக் கொண்டு அவர் சொல்படி கேட்டு நடப்பவர்களாக இருக்கிறார்கள்.


தவ்ஹீத் என்ற அமைப்பனரோ முஹம்மது நபிதான் எங்கள் தலைவர் அவர் பேச்சைத் தான் நாங்கள் கேட்போம் அதற்குப் பின்புதான் மற்றவர்களின் பேச்சுக்களுக்கெல்லாம் முன்னுரிமை தருவோம் என்று வாதிடுகிறார்கள்.

எது எப்படியோ இஸ்லாமியர்களுக்கு மத்தியில் பிரபலமாக பேசப்படும் இரண்டு இயக்கத்தவர்களில் தப்லீக் மற்றும் தவ்ஹீத் ஆகிய இயக்கத்தவர்கள் முக்கியமானவர்கள்.

நாட்டின் இறையான்மை பாதுகாக்கப்பட வேண்டும்.

உலகின் எல்லா நாடுகளும் தங்கள் இறையான்மையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் கவணம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. கவணம் செலுத்த வேண்டும். நிலைமை இப்படியிருக்க கடந்த ஒரு சில நாட்களாக இலங்கைக்கு தப்லீக் விஷயமாக வருகை தந்த தப்லீக் இயக்க வாதிகள் சிலர் நாட்டை விட்டும் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அவர்கள் அப்படி வெளியேற்றப்பட்டமைக்கு வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அரச அனுமதியின்றி மதப் பிரச்சாரம் செய்தார்கள் என்பதே காரணமாக சொல்லப்படுகிறது.

எந்தவொரு வெளிநாட்டுப் பிரஜை நாட்டுக்குள் நுழைவதாக இருந்தாலும் அவர்கள் முறையான அனுமதியை பெற்றுக் கொண்டுதான் நாட்டுக்குள் நுழைய வேண்டும். இல்லாவிட்டால் குறிப்பிட்ட நாடு அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வது சகஜமான ஒன்றாகும்.

அந்த அடிப்படையில் தான் மேற் கூறப்பட்ட இஸ்லாமிய இயக்கத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மதப் பிரச்சாரத்திற்கு தனி அனுமதி.

இனிமேல் மதப் பிரச்சாரத்திற்காக வருகை தரும் மார்க்க அறிஞர்களுக்கு மார்க்கப் பிரச்சாரத்திற்கான அனுமதி வழங்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயினும் மதம் தொடர்பான விடயங்களுக்காக நாட்டுக்குள் நுழையும் பட்சத்தில் அவர்கள் மதப் பிரச்சாரத்திற்கான முறையான அனுமதியைப் பெற்றால் மாத்திரமே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவாவர்கள் என்பது மேலதிக தகவல்.

வெளிநாட்டினர் வருகையே இலங்கையின் முக்கிய வருமானம்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு பின்புலமாக கூறப்படும் கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவே இருக்கிறது. ஒரு நாட்டிற்கு வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் வரும் போது அவர்கள் தங்குவதற்காக உல்லாச விடுதிகள் வசதிக்கு ஏற்றால் போல் எல்லா நாடுகளிலும் நிறுவப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வருகை தரும் தப்லீக் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் விடுதிகளுக்கு பதிலாக பள்ளிகளில் தங்குவது நாட்டின் வருமானத்துக்கு குறை ஏற்படுத்துவதாகவும்இ இதே நேரம் அவர்கள் தங்கும் காலங்களில் எங்கு தங்குகிறார்கள் என்ற தெளிவான அறிவித்தல்கள் இல்லாத காரணத்தினால் நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் கேள்விகள் எழுவதும் நியாயமானதே!

வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

ஏற்கனவே கடந்த 2005ம் ஆண்டில் உலக மட்டத்தில் நன்மதிப்பைப் பெற்ற பிரபல பேச்சாளரான தென்னிந்திய இஸ்லாமிய அறிஞர் ஜெய்னுலாப்தீன் இலங்கை அழைத்து வரப்பட்டார். தற்போது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரில் நாடலாவிய ரீதியில் இயங்கும் இயக்கத்தினரே இவரை அப்போது இலங்கைக்கு அழைத்து வந்தனர்.

கொழும்பு மாவனெல்லை காலி புத்தளம் காத்தான்குடி அகுரனை போன்ற இடங்களில் இவர் பகிரங்க சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இவரின் சொற்பொழிவுகளுக்கு பல்லாயிரக் கணக்கில் மக்கள் வெள்ளம் போல் திரண்டு வரவேற்பளித்தனர்.

இலங்கை வரலாற்றில் இஸ்லாமிய இயக்கத்தினரின் நிகழ்ச்சிகளில் இவ்வளவு பெரிய கூட்டம் கூட்டப்பட்டது அதுவே முதல் தடவையாக இருந்தது.

இவரின் இறுதி நிகழ்ச்சி கொழும்பில் நடக்க இருந்த நேரம் பிரச்சினை உருவானதினால் நாட்டை விட்டு இவர் வெளியேற்றப்பட்டார். ஜெய்னுலாப்தீன் வெளியேற்றப்பட்டமைக்கு முழுக்க முழுக்க ஆனந்தத் தாண்டவம் ஆடியவர்கள் தப்லீக் இயக்கத்தை சேர்ந்தவர்களே.

தற்போது தங்கள் இயக்கத்தவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டவுடன் மாத்திரம் அரசாங்கத்தை குறை காண்பதென்பது எப்படி நியாயமாகும்.

தனக்கு ஒரு கண் போனாலும் பாரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்று நினைத்தால் இறுதியில் தனக்கும் அந்த நிலை வரும் என்பதை மனதில் வைக்க வேண்டும்.

எது எப்படியோ தப்லீக் இயக்கம் தொடர்பாக இப்போது ஒரு உடன்பாடு கண்டுள்ளதாக ஊடகங்கள் பேசிக் கொள்கின்றன.

ஆனால் எவ்வியக்கமாக இருந்தாலும் நாட்டின் சட்டத்தை மதித்து நடப்பதுதான் முறையானதாகும். மற்றவர்களுக்கு உபதேசிப்பதற்கு முன் அதனை தங்கள் வாழ்வில் தப்லீக் இயக்கத்தினர் கொண்டு வருவார்கள் என்று நாமும் நம்புவோமாக!

Tuesday, January 24, 2012

மீலாது விழா கொண்டாடலாமா?


மீலாது விழா கொண்டாடலாமா?

(photo: threeblindmen photography)
- மௌலவி M.முஜீபுர்ரஹ்மான் உமரீ -

فَلْيَحْذَرْ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ

”எவர் அவருடைய (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின்) கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக்கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24:63)
நபி(ஸல்)அவர்களின் பிறந்த நாள் விழா
ரபீவுல் அவ்வல் என்ற உடனேயே அது நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதமல்லவா! என்ற நினைவு வருகிறது. முஸ்லிம்களுக்கு மத்தியில் இவ்வளவு பிரபலமாகியிருக்கும் இம்மாதத்தில் நடைபெறும் செயல்கள் அல்லாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களும் வழிகாட்டியதின் அடிப்படையில் அமையவேண்டுமல்லவா? எனவே இம்மாதத்தில் நாம் செய்யும் செயல்களை அல்குர்ஆன் மற்றும் நபிமொழியின் ஒளியில் ஆராய்வோமே!
மீலாது விழா ஆரம்பமானது எப்போது?
நபி(ஸல்) அவர்களோ, நாற்பெரும் கலீஃபாக்களோ, மற்ற நபித்தோழர்களோ, அவர்களுக்குப் பின் தோன்றிய தாபியீன்களோ, அல்லது நபி(ஸல்) அவர்களால் போற்றப்பட்ட முந்தய மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்களோ மீலாது விழா கொண்டாடவில்லை. அப்படியானால் மீலாது விழா ஆரம்பமானது எப்போது? திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் ஒருவரான இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஹிஜ்ரீ 357 முதல் 567 வரை மிஸ்ரை (எகிப்து) ஆண்டு வந்த ஃபாத்திமியீன்களின் ஆட்சியில் அப்துல்லாஹ் பின் மைமூன் அல் கதாஹ் என்ற யூதனால் இஸ்லாத்தின் பெயரால் பல விழாக்கள் அரங்கேற்றப்பட்டன. அதில் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவும் ஒன்று. (நூல்: பிதாயா வன் நிஹாயா பாகம் 11 – பக்கம் 172)
ஆக இவ்விழா ஹிஜ்ரீ நான்காம் நூற்றாண்டில் யூதர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளது.
மீலாது விழாவும் சஹாபாக்களும்
நாற்பெரும் கலீஃபாக்களும் மற்ற நபித்தோழர்களும் அவர்களுக்குப் பின் தோன்றிய தாபியீன்களும் மார்க்கத்தை நன்கறிந்தவர்கள். நபி(ஸல்) அவர்களை மிக அதிகமாக நேசித்து மார்க்க அடிப்படையிலேயே தம் முழு வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள முழுமையாக பாடுபட்டவர்கள் என்பதை நாம் அனைவரும் ஏற்றுள்ளோம், மீலாது விழா கொண்டாடுவது நன்மையான செயல் என்றோ, அது நபி(ஸல்) அவர்களுக்கு புகழ் சேர்க்குமென்றோ எண்ணியிருந்தால் அவர்கள் பலவிழாக்களை கொண்டாடியிருப்பார்கள். ஆனால் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாளுக்கென எந்த விழாவும் கொண்டாடவில்லை.
மீலாது விழாவும் கிரிஸ்மஸும்
ஈஸா(அலை) அவர்களுக்கு கிருத்துவர்கள் பிறந்தநாள் விழாக் கொண்டாடுவது போன்று முஸ்லிம்களான நாம் நபி(ஸல்) அவர்களுக்கு விழாக் கொண்டாடுகிறோம். ஆனால் இந்த ஒப்பீடு சரிதானா?
பிறசமயக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவன் அந்த சமயத்தையே சார்ந்தவன் என நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: அபூதாவூத்)
கிருத்துவர்கள் பிறந்த நாளை விழா நாளாக கருதுவது போன்று நாமும் கருதினால் இவ்விஷயத்தில் நாம் கிருத்துவ மதத்தை சார்ந்துள்ளோம் என்றே இந்த நபிமொழி கூறுகிறது. எனவே நபிகளாரின் எச்சரிக்கைக்குப் பயந்து பிறந்த நாள் விழா மற்றும் இதுபோன்ற பிறமதக் கலாச்சாரங்களை விட்டும் முற்றிலும் விலகி, முழுமையான இஸ்லாமியராக வாழ முயற்சிக்க வேண்டும்.
அரபுக் கவிதைகள்
பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பல விசேஷ வழிபாடுகள் நம் சமுதாயத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளன. அதில் இன்றியமையாததாகக் கருதப்படுவது மவ்லிது என்ற பெயரால் பாடப்படும் அரபுக் கவிதைகள்தான். இக்கவிதைகளுக்கு நம் சமுதாயத்தில் மகத்தான மதிப்பிருக்கிறது. ஆனால் இஸ்லாத்தில் இதற்கெதிரான எச்சரிக்கைதான் இருக்கிறது. ஆனால் அவை பள்ளிவாசலிலும் கூட கூட்டம் கூடி, புனித வழிபாடாகக் கருதிப்பாடப்படுகிறது. நபி(ஸல்) அவர்களைப் புகழ்வதற்காக இயற்றப்பட்ட இப்பாடல்களின் பல வரிகள் புகழ்ச்சியில் வரம்புமீறி நபி(ஸல்) அவர்களுக்கு இறைத்தன்மைகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. நபி(ஸல்) அவர்களிடம் உதவிதேடுவது, அவர்களிடம் பாதுகாப்புத் தேடுவது, அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்று நம்புவது போன்ற ஷிர்க்கான (இறைவனுக்கு இணைவைக்கும்) கருத்துக்களை இப்பாடல்கள் தன்னுள் கொண்டுள்ளன.
எந்தக் கொள்கையை விட்டும் மக்களைத் தடுப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்டார்களோ அதே கொள்கையைக் கொண்ட பாடல்களை அவர்களை புகழ்வதற்கே பாடப்படுகிறது. இது மிகப்பெரிய அநீதி இல்லையா? அதைவிடக் கொடுமை என்னவெனில் அல்லாஹ்வை மட்டுமே அழைக்கப்படவேண்டிய பள்ளிவாயிலிலேயே அவனுக்கு இணைவைக்கும் இக்கவிதைகள் மிகவும் பக்திப்பரவசத்தோடு பாடப்படுவதுதான். அல்லாஹ்வின் தண்டனைக்கு பயப்படக்கூடிய மக்களாக இருந்தால் தவ்பாச் செய்து உடனே இச்செயலை விட்டும் விலகிவிட வேண்டும்.
பிறந்த நாள் விழாவா? இறந்த நாள் விழாவா?
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் என்னவெனில் எந்த நாளில் நபி(ஸல்)அவர்கள் பிறந்தார்கள் என்று கூறுகின்றார்களோ அதே நாளில்தான் நபி(ஸல்)அவர்கள் இறந்தும் உள்ளார்கள். இவ்வாறிருக்க இவர்களின் விழாக்களும் வழிபாடுகளும் நபி(ஸல்)அவர்களின் பிறப்பிற்காகவா? அல்லது இறப்பிற்காகவா?
இது சரியான காரணம்தானா?
மீலாது விழாவிற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும் நபிகளாரை கண்ணியப்படுத்தும் விதமாக நாமாகக் கொண்டாட வேண்டும் என்று சிலர் காரணம் கூறுவர்.
வெளிப்படையாகப் பார்த்தால் இக்கருத்து நபி(ஸல்) அவர்களை போற்றுவது போன்று தோன்றினாலும் உண்மையில் இது நபி(ஸல்) அவர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்தும் வார்த்தையாகும். இதனடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் சில நல்லறங்களை இச்சமுதாயத்திற்கு சொல்லவில்லை, மறைத்துவிட்டார்கள் என்று கூற வேண்டிவரும். நபித்தோழர்களும் இந்நல்லறங்களை செய்யவில்லை என்று அவர்கள் மீதும் குறை கூறவேண்டிவரும். -நவூது பில்லாஹ்- இந்நிலையை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:
நல்லறங்கள் அனைத்தையும் தத்தமது சமுதாயத்திற்கு அறிவித்துவிடுமாறு அல்லாஹ் அனைத்து நபிமார்களுக்கும் கட்டளையிட்டுள்ளான். (ஹதீஸின் சுருக்கம் – முஸ்லிம்)
நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட தூதுப்பணியை முழுமையாக நிறைவேற்றியவர்களும் இறுதி நபியும் ஆவார்கள். அவர்கள் இச்சமுதாயத்திற்கு தேவையான எந்தச் சட்டத்தையும் உபதேசத்தையும் கூறாமல் விட்டுவிடவில்லை. மீலாது விழாக் கொண்டாடுவது மார்க்கத்தில் ஒரு அங்கமாக இருக்குமேயானால் நிச்சயம் அதனையும் சொல்லியிருப்பார்கள். செய்திருப்பார்கள். அதனை நபித்தோழர்களும் பின்பற்றியிருப்பார்கள்.
நபி(ஸல்) அவர்களை நேசிப்பது எப்படி?
வருடத்தில் இது போன்ற ஓரிரு விழாக்களை கொண்டாடிவிட்டு, அதன் பிறகு நாம் நினைத்தது போன்று வாழ்ந்து கொள்வது நபி(ஸல்)அவர்களை நேசிப்பதாகாது. நம் வாழ்வின் அனைத்துத்துறைகளையும் அனைத்துச் செயல்களையும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளவேண்டும். அவர்களை முழுமையாக பின்பற்றவேண்டும்.
இதனை அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:

قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمْ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ

நீங்கள் அல்லாஹ்வை நேசிக்கக் கூடியவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள்! அப்போது தான் அல்லாஹ் உங்களை நேசிப்பான் என்று நபியே நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 3:31)
உங்களில் ஒவ்வொருவரும் சொர்க்கத்தில் நுழைந்து விடுவீர்கள் மறுப்பவரைத் தவிர என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களே! மறுப்பவர் என்றால் யார்? என்று தோழர்கள் கேட்டனர். என்னைப் பின்பற்றுபவர் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவார். எனக்கு மாறுசெய்பவர் நிச்சயமாக என்னை மறுத்தவராவார் -அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்- என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்)
எனவே நபி(ஸல்)அவர்களை பின்பற்றி நடப்பதே அவர்களை மதிப்பதின் அடையாளமாகும்.
மார்க்கம் முழுமையாக்கப்பட்டுவிட்டது. அல்லாஹ் நபி(ஸல்)அவர்களோடு இம்மார்க்கத்ததை முழுமையாக்கிவிட்டதாக குர்ஆனில் அறிவித்துவிட்டான்.

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا

இன்றய தினம் உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்காக நாம் முழுமையாக்கி விட்டேன். நம்முடைய அருட்கொடையை உங்கள் மீது பரிபூரணப்படுத்தி விட்டேன். உங்களுடைய மார்க்கமாக நான் இஸ்லாத்தைப் பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன் 5:3)
இந்த வசனம் ஹஜ்ஜத்துல் விதாவில் (விடைபெரும் ஹஜ்ஜில்) அரஃபா தினத்தன்று இறங்குகிறது. நபி(ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போதே மார்க்கம் முழுமை பெற்றுவிட்டது எனும்போது, நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்கள் கற்றுத்தராத ஒன்றை மார்க்கத்தில் இணைக்கவோ, அவர்கள் கட்டளையிட்டவற்றை நீக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது. இதனடிப்படையில் மீலாது விழா என்பது நபி(ஸல்) அவர்கள் மரணித்து நான்கு நூற்றாண்டுகளுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டது எனும்போது அதற்கு மார்க்க சாயம் பூசுவது இறைவனுடைய அதிகாரத்தில் நமது கரங்களை நுழைப்பதாகும். இதுபோன்று மார்க்க விஷயத்தில் விளையாடிய யூத, கிருத்துவர்களுக்கு கிடைத்த தண்டனைகளையும் கிடைக்கவிருக்கும் மறுமை வேதனைகளையும் திருக்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான். எனவே நாம் இதுபோன்று மார்க்கத்தில் புதிய செயல்களை உறுவாக்குவதை விட்டும் முற்றிலும் தூரமாகி விடவேண்டும்.
மார்க்கத்தில் நூதனச் செயல்
மார்க்கத்தில் புதிதாக உறுவாக்கப்படுபவை அனைத்தும் பித்அத் (மார்க்கத்தில் நூதனச்) செயலாகும். அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் கற்றுதராதவற்றை மார்க்கத்தின் அங்கமாக நினைத்து செயல்படுத்தப்பட்டால் நிச்சயமாக அது வழிகேடாகும். அது மறுமையில் நிராகரிக்கப்பட்டுவிடும். அதற்குரிய தண்டனையும் கிடைக்கும்.
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்படும் அனைத்தும் வழிகேடாகும். (நூல்: புகாரி)
யார் நம்முடைய இந்த மார்க்க விஷயத்தில் அதில் இல்லாத ஒன்றை புதிதாக உறுவாக்குகின்றாரோ அது மறுக்கப்பட்டுவிடும். (நூல்: முஸ்லிம்)
மஹ்ஷரில் கவ்ஸர் எனும் தடாகத்திலிருந்து நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பார்கள். அதில் நீர் அருந்துவதற்காக மார்க்கத்தில் நூதனச் செயல்களை உண்டாக்கியவர்களும் வருவார்கள். அவர்களை தண்ணீர் அருந்த விடாமல் மலக்குகள் இழுத்துச் சென்று விடுவார்கள். (ஹதீஸின் சுருக்கம்: புகாரி)
எனவே மீலாது விழாவும் மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்டவையே! இதற்காக செலவிடப்படும் பணத்திற்கோ, உழைப்பிற்கோ அல்லாஹ்விடத்தில் எந்த நன்மையும் கிடைக்காது. மாறாக மஹ்ஷரில் நபி(ஸல்)அவர்கள் புகட்டும் தண்ணீரை அருந்தும் வாய்ப்பை இழந்து கொடிய வெப்பத்தில் தாகத்தால் பரிதவிக்க நேரிடும்.
எனவே அன்பிற்கினிய சகோதரர்களே! மீலாது விழா உட்பட மார்க்கத்தில் முரணான எந்தச் செயலுக்கும் பொருளாலோ, உழைப்பாலோ, ஆலோசனையாலோ வேறு எந்த விதத்திலும் உதவவேண்டாம் என அன்புடன் வேண்டுகிறோம்.
(நன்றி: இஸ்லாம்கல்வி.கொம்)

கல்வி - இரண்டல்ல, ஒன்றே!


கல்வி - இரண்டல்ல, ஒன்றே!
 M.A.முஹம்மது அலீ
[ மனிதன்; கல்வி என்பதை பொதுவில் வைத்து உலகம், மார்க்கம் சார்ந்த அனைத்தையும் கற்கும்போதுதான் அவனால் முழுமையாக இஸ்லாத்தை விளங்கி பேணுதலாக வாழமுடியும். இல்லையேல் பேணுதாலக வாழ்வதுபோல் நடிக்கத்தான் முடியும். அல்லாஹ் அனைத்தையும் அறிவான்.
கல்வியை இரண்டாகப் பிரிப்பவர்கள் நிச்சயமாக முழுமையான கல்வியாளராக இருக்க முடியாது. ஒன்றை இரண்டாகப் பிரித்து; அதில் ஒன்றை மட்டும் கற்பவர் எவ்வாறு எல்லாவற்றையும் விளங்கியவராக முடியும்?
"பித்அத்" கள் தலைவிரித்தாடுவதற்கு முக்கிய காரணமே உலகக்கல்வியை மூட்டை கட்டி வைத்ததுதான். உலக்கல்வியை ஒதுக்கித் தள்ளியதாலேயே இன்றைக்கு "பித்அத்து''கள் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன.
தொழுகைக்கு "வுளூ" செய்வது விஞ்ஞானப்பூர்வமானது. மெய்ஞானத்தின் சுவையை அறிய அல்லாஹ் முதலில் விஞ்ஞானத்தைக் கற்றுக்கொடுக்கின்றான். மெய்ஞானம் பரிபூரணமானது, தூய்மையானது. அதனை தூய்மை படுத்துவது விஞ்ஞானம் என்றுகூட சொல்லலாம்.
மெய்ஞானம் மனம் சார்ந்தது எனில் விஞ்ஞானம் உடல் சார்ந்தது என்று சொல்லலாம். உடல் அசைவுகள் இல்லாமல் தொழுகையில்லை. மெய்ஞானத்தை கற்க விஞ்ஞான ரீதியாக உடல் அசைவுகள் தேவை. இல்லையெனில் மெய்ஞானத்தின் பாதையே இல்லாமல் போய்விடும்.
திருக்குர்ஆனில் மறுமையைப்பற்றி எந்த அளவுக்கு வசனங்கள் இடம் பெற்றுள்ளனவோ அதே அளவுக்கு இம்மையைப்பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. கல்வியை இரண்டாகப் பிரிப்பவர்கள் திருக்குர்ஆனை பாதி மட்டுமே விளங்க விரும்புகின்றவர்கள்.
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான், ‘அவர்கள் கண்களால் காண்பதையும் நம்புவார்கள், (கண்களால் காண முடியாத) மறைவானவற்றையும் நம்புவார்கள்’ .கண்களால் காண்பது விஞ்ஞானமெனில், கண்களால் காணாமல் நம்புவது மெய்ஞானம்.]
கல்வி - இரண்டல்ல, ஒன்றே!
 M.A.முஹம்மது அலீ
இந்த உலகின் மாபெரும் அற்புதம் நிச்சயமாக அகிலத்தின் அதிபதியான அல்லாஹ்வால், அகிலத்தின் அருட்கொடையான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மூலம் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டியாக இறக்கியருளப்பட்ட ''திருக்குர்ஆன்'' தான். அதற்கு இணையான ஒரு அற்புதத்தை எவராலும் காண்பிக்க முடியாது.
திருக்குர்ஆன் ஓர் அற்புதம் மட்டுமல்ல, மனிதவர்க்கத்திற்கு அல்லாஹ்வால் அருளப்பட்ட மாபெரும் பரிசாகும். அதில் சொல்லப்படாத விஷயங்கள் எதுவுமேயில்லை. சிந்திப்பவர்களுக்கு அதில் கிடைக்காதது எதுவுமில்லை.
ஏழு கடல் நீரை மையாகப் பயன்படுத்தி, உலகெங்குமுள்ள மரம், செடி, கொடிகளை எழுதுகோலக பயன்படுத்தி, இந்த பூமியை விரிப்பாக்கி திருக்குர்ஆனுக்கு விளக்கமளிக்க முயன்றாலும் முடியாது. இதுபோன்று இன்னுமொரு மடங்கு கடல்நீரை பயன்படுத்தினாலும் சரியே, கடல் நீர்தான் வற்றிப்போகுமே தவிர அல்லாஹ்வின் வார்த்தைகள் அல்ல! அந்த அளவுக்கு பொருள் பொதிந்தது அல்லாஹ்வின் திருவேதம்.
திருக்குர்ஆனைப்பற்றி அல்லாஹ் என்ன சொல்கின்றான் என்பதைக் கவனியுங்கள்;
''(நபியே!) நீர் கூறுவீராக் ''என் இறைவனுடைய வார்த்தை(களை எழுதுவதற்)காக கடல் (முழுவதும்) மையாக ஆகுமானாலும், என் இறைவனுடைய வார்த்தைகள் (எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீர்ந்து விடும்; அதைப் போல் (இன்னொரு கடலையே) நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரி!'' (அல்குர்ஆன் 18:109)
''மேலும், நிச்சயமாக இப்பூமியிலுள்ள மரங்கள் யாவும் எழுது கோல்களாகவும், கடல் (நீர் முழுதும்) அதனுடன் கூட மற்றும் ஏழு கடல்கள் அதிகமாக்கப்பட்டு (மையாக) இருந்த போதிலும், அல்லாஹ்வின் (புகழ்) வார்த்தைகள் முடிவுறா. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.'' (அல்குர்ஆன் 31:27)
 உலகக் கல்வியாம் மார்க்கக் கல்வியாம்...
திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் உலகக்கல்வி மார்க்கக்கல்வி என்று இறைவன் பிரித்து சொல்லவே இல்லை. ஆனால் மொழி பெயர்க்கும்போது கல்வி என்று வருகின்ற இடங்களிலெல்லாம் மார்க்கம் என்பதை பிரேக்கட்டில் (அடைப்புக்குறியில்) போட்டு தங்கள் வாதத்துக்கு அதை பயன்படுத்திக் கொள்கிறனர், ஒரு சாரார்!
கல்லூரியில் கற்பதை மட்டுமே உலகக்கல்வி என்று தவறாக விளங்கி வைத்துள்ளோம். ஆலிம்கள் ஏழு வருடமோ, எட்டு வருடமோ அல்லது தற்போது சில இடங்களில் இருப்பதுபோல் ஐந்து வருடமோ ஓதி படித்துவிட்டு மதரஸாவை விட்டு வெளியே வந்த பிறகு உலகக்கல்வி சிறிதும் தெரியாமல் அவர்களால் ஒரு கட்டுரை எழுதமுடியுமா? அல்லது ஒரு சொற்பொழிவுதான் ஆற்ற முடியுமா? வாழ்வதோ இவ்வுலகில் ஆனால் இவ்வுலகம் சார்ந்த கல்வி இரண்டாம் பட்சமானது என்று எண்ணக்கூடியவர்களின் சிந்தனையில் விழுந்த மிகப் பெரும் ஓட்டை இது என்றுதான் சொல்ல வேண்டும்.
மறுமைக்கான விளைநிலம்தான் இவ்வுலகம். அப்படியிருக்கும்போது இவ்வுலகைப்பறிய எந்த ஞானமும் இல்லாமல் மறுமைக்கு எப்படி ஒருவர் தன்னை முழுமையாக தயார் செய்துகொள்ள முடியும்? உலகக்கல்வி இல்லாமல் இவ்வுலகை எங்ஙனம் ஆராய்ச்சி செய்வது என்பதை அவர்கள் விளக்கவேண்டும். ஆராய்ச்சி செய்யுங்கள்... ஆராய்ச்சி செய்யுங்கள்... சிந்தியுங்கள்... சிந்தியுங்கள்... என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் மனிதனின் ஆராய்ச்சிக்கு பச்சை விளக்கு கண்பிக்கும்போது - ஆராய்ச்சி செய்யத் தூண்டும்போழுது; ஆராய்ச்சியே வேண்டாம் (அதாவது இந்த உலகக்கல்வியே வேண்டாம்) என்று ஒருவர் வாதிடுவாரேயானால் அவர் நிச்சயமாக இறை வேதத்தை சரியாக விளங்காதவராகத்தான் இருக்க முடியும். நமக்கு ஒரு சந்தேகம், சந்தேகம் மட்டுமல்ல இன்றைய எதார்த்தமான உண்மையும்கூட. உலகக்கல்வியை மட்டம் தட்டிப் பேசுகின்றவர்கள்தான் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இஸ்லாத்தின் அசலையே முடக்கி வைத்துள்ளனர்.
"பித்அத்" கள் தலைவிரித்தாடுவதற்கு முக்கிய காரணமே உலகக்கல்வியை மூட்டை கட்டி வைத்ததுதான். உலக்கல்வியை ஒதுக்கித் தள்ளியதாலேயே இன்றைக்கு "பித்அத்து''கள் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன என்பது கண்கூடு.
உலகக்கல்வி மார்க்கக்கல்வி இரண்டிற்கும் மூல நூலே திருக்குர்ஆன் தான் என்பதை எடுத்துச்சொல்ல தவறிவிட்டோம். அதன் காரணத்தாலேயே சிந்திப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சடங்குகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து திருக்குர்ஆனை பரண் மீது ஏற்றி வைத்துள்ளோம்.
இன்னொரு விஷயத்தையும் சமுதாய மக்களிடம் தவறாக பதிய வைக்கப்பட்டுள்ளது. அதாவது மதரஸாக்களில் ஓதியவர்கள் மட்டுமே மார்க்கக்கல்வி அறிந்து தெளிந்தவர்கள். மற்றவர்களெல்லாம் கல்லூரியில் எவ்வளவுதான் பயின்றாலும் அவர்கள் மார்க்கத்தை முழுமையாக விளங்கியிருக்க முடியாது என்பதாகும். இந்த எண்ணம் மிகக் கடுமையாக ஆட்சேபணைக்குறிதாகும். மதரஸாக்களில் ஓதிய சிலர் சொல்வதுபோல் (அவர்கள் தோனியில்) மார்க்கக்கல்வி (மட்டும்தான்) உயர்ந்தது எனில் எதற்காக பெரும் உலமாக்களில் பலர் தங்களது சந்ததிகளை மற்ற கல்லூரிகளில் படிக்க வைக்கின்றனர்.
காரணம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இவ்வுலகில் வாழ்வதற்கு உலகக்கல்வி அவசியம் என்பது நிதரிசணமான உண்மை. இவ்வுலகில் மனிதன் தனது தேவைக்கான அடிப்படை வசதிகளைக்கூட அவன் பெற்றுக்கொள்ளவில்லை எனில் நிச்சயமாக அவனால் ஹலால் ஹராம் என்பதை வாழ்க்கையில் சரிவர பின்பற்ற முடியாது.
கல்வி என்பதை பொதுவில் வைத்து உலகம், மார்க்கம் சார்ந்த அனைத்தையும் மனிதன் கற்கும்போது தான் அவனால் முழுமையாக இஸ்லாத்தை விளங்கி பேணுதலாக வாழமுடியும். இல்லையேல் பேணுதாலக வாழ்வதுபோல் நடிக்கத்தான் முடியும். அல்லாஹ் அனைத்தையும் அறிவான்.
கல்வியை இரண்டாகப் பிரிப்பவர்கள் நிச்சயமாக முழுமையான கல்வியாளராக இருக்க முடியாது. ஒன்றை இரண்டாகப் பிரித்து; அதில் ஒன்றை மட்டும் கற்பவர் எவ்வாறு எல்லாவற்றையும் விளங்கியவராக முடியும்?
திருக்குர்ஆனில் மறுமையைப்பற்றி எந்த அளவுக்கு வசனங்கள் இடம் பெற்றுள்ளனவோ அதே அளவுக்கு இம்மையைப்பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. கல்வியை இரண்டாகப் பிரிப்பவர்கள் திருக்குர்ஆனை பாதி மட்டுமே விளங்க விரும்புகின்றவர் என்றுகூட சொல்லலாம்.
 விஞ்ஞானமும் மெய்ஞானமும் :
நம்மில் பெரும்பாலோர் விஞ்ஞானத்தை உலகக்கல்வி என்றும் மெய்ஞானத்தை மார்க்கக்கல்வி என்றும் விளங்கி வைத்துள்ளோம்.
விஞ்ஞானம், மெய்ஞானம் - இவையிரண்டில் எது உயர்வானது என்ற கேள்வி எழுமானால் ஆன்மீகவாதி என்று சொல்லிக் கொள்வோர் மெய்ஞானமே உயர்வானது என்றும், சிந்தனையாளர் என்று தங்களை நினைத்துக் கொண்டிருப்போர் விஞ்ஞானமே உயர்வானது என்றும் சொல்வதை பார்க்கிறோம். ஆனால் உண்மையாக சிந்திப்பவர்களுக்கு இவையிரண்டுமே சிறந்ததுதான், இவையிரண்டையும் உருவாக்கிவன் ஒருவனே என்பது மட்டுமின்றி இவையிரண்டும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமான தொடர்புடையது என்பதை விளங்கிக் கொள்வார்கள்.
என்ன இப்படி சொல்கிறீர்கள்?! இவையிரண்டும் ஒன்றுக்கொன்று எதிரும் புதிரும் என்றல்லவா உலகம் கருதிக் கொண்டிருக்கிறது! நெருக்கம் எப்படி ஏற்படும் என்கிறிர்களா?!
ஆம் சகோதரரே! ஏற்படும், நிச்சயமாக இவையிரண்டுக்குமுள்ள நெறுக்கமான தொடர்பை சிந்தித்தால் எளிதாக விளங்கிக் கொள்ளலாம்.
ஆன்மீகவாதிகள் போன்றிருக்கும் சிலரிடம் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பற்றி கூறினால், பெரும்பாலும் அவைகள் மனிதனை வழிகெடுக்க ஷைத்தானால் உருவாகக்கப்பட்ட வழிகேடுகள் என்று சொல்லக்கூடியவர்களும் உண்டு. விஞ்ஞானத்தால் மெய்ஞானத்தை நெருங்கக்கூட முடியாது என்பது அவர்கள் கருத்தாக இருக்கலாம். அதே சமயம் அந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்வதில் தவறுவதும் இல்லை. இது எங்குமுள்ள எதார்த்த நிலை.
இந்த உலகைப் படைப்பதற்கு முன்பே எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லாவற்றையும் நிர்ணயித்து விட்டான். அவைகளை சங்கிலித் தொடராக கியாமநாள் வரை வெளிப்படுத்திக் கொண்டே வருவான். அப்படி வெளிப்படுத்தக்கூடிய ஒரு உபகரணமாகத்தான் மனிதனைப் படைத்து தனது சாம்ராஜ்யத்தில் உலவவிட்டிருக்கிறான். அப்படி அல்லாஹ்வால் படைக்கப்பட்ட மனிதன் அல்லாஹ் வழங்கிய அறிவைக்கொண்டு கண்டுபிடித்தவைகளை ‘தனது ஆற்றலால்’ என கருதிக்கொண்டு அவைகளுக்கு விஞ்ஞானம் என பெயரிட்டு அழைக்கின்றான்.
உண்மையில் விஞ்ஞானம் - மெய்ஞானம் இவையிரண்டுமே அல்லாஹ்வை அறிவதற்காக அவனால் மனதனுக்கு வழங்கப்பட்ட அருட்கொடையே! இவையிரண்டும் ஒன்றுக்கொன்று மிக நெறுக்கமானது என்பதோடு ஒன்று மற்றொன்றை வலுப்படுத்தவும் செய்கிறது என்பதே உண்மை.
ஹைட்ரஜனும், ஆக்ஸிஜனும் ஒன்று சேர்ந்தால் தண்ணீர்.
ஹைட்ரஜனின் எறியக் கூடியது!
ஆக்ஸிஜன் இல்லாமல் எதுவுமே எரியாது!
எரியக்கூடிய தன்மை கொண்ட இவையிரண்டும் ஒன்று சேர்ந்து தண்ணீராக மாறும்போது அது எரியும் நெருப்பை அணைக்கக் கூடியதாக மாறுகிறதே எப்படி? இது ஆச்சர்யமான முரண்பாடல்லவா? இந்த தன்மையை தண்ணீருக்குள் வைத்தவன் அல்லாஹ் அல்லவா!
மனிதனைப் படைப்பதற்கு முன்பே அல்லாஹ் தண்ணீரைப் படைத்துவிட்டானே! ஆக ஏற்கனவே அல்லாஹ்வால் படைக்கப்பட்டவைகளை மனிதன் சிந்தித்து ஆராய்ந்து கண்டுபிடிக்கும்போது அதை தனது கண்டுபிடிப்பாக பெயரிட்டு அவைகளுக்கு விஞ்ஞானம் என்று பெயர்சூட்டி மகிழ்கின்றான் என்பதே உண்மை.
விஞ்ஞானத்தால் அனைத்தையும் அறிய முடியாது, விஞ்ஞானம் தோற்கிற அல்லது அறிய முடியாத இடங்களுக்குக்கூட மெய்ஞானம் செல்லும் என்பது ஆன்மீகவாதிகளின் கூற்று.
பொதுவாக மனிதன், கண்களால் கண்டு அறிவால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவைகளை விஞ்ஞானம் எனவும், ஆத்மார்த்தமான இறைநம்பிக்கையை மெய்ஞானம் எனவும் விளங்கி வைத்துள்ளான்.
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான், ‘அவர்கள் கண்களால் காண்பதையும் நம்புவார்கள், (கண்களால் காண முடியாத) மறைவானவற்றையும் நம்புவார்கள்’ .
மெய்ஞானம் மட்டுமின்றி விஞ்ஞானமும் இறைநெருக்கத்தை பெற்றுத்தரக் கூடியதே! அதுமட்டுமின்றி, ‘விஞ்ஞானம் மெய்ஞானத்தை வலுப்படுத்துவதோடு, வளர்க்கக்கூடியதாகவும், இருக்கிறது’ என்பதும் உண்மை.
விஞ்ஞானத்தின் மூலம் மெய்ஞானத்தை அறியும்போது ஈமான் இன்னும் உறுதியாகிறது, வலுவடைகிறது. உதாரணமாக மரம், செடி, கொடி, மரங்கள், மலைகள் யாவும் அல்லாஹ்வை ‘திக்ரு’ செய்கின்றன, ‘ஸுஜூது’ செய்கின்றன என்பதை திருக்குர்ஆன் மூலம் அறிந்து நம்புவது மெஞ்ஞானம் எனில் அதே மரம், செடி, கொடிகள் அந்த ஏக இறைவனை துதிக்கின்றன என்பதை மனிதனாக ஆராய்ந்து கண்டுபிடிக்கும்போது அதற்கு விஞ்ஞானம் என்று பெயர் சூட்டப்படுகிறது.
மலைகள், மரம். செடி, கொடிகளெல்லாம் அல்லாஹ்வை திக்ரு செய்வதாக, ஸுஜூது செய்வதாக இஸ்லாம் கூறுகிறது. இறைவன் படைத்த அத்தனை படைப்பினங்களும் அவனை ஸுஜூது செய்யத்தான் செய்கின்றன. மனிதர்களாகிய நாம்தான் அதனை அறியவில்லை. ஆனால், படைத்த ரப்புல் ஆலமீன் அதனை நன்கறிவான். இவ்வுலகில் மனிதன் மரம் செடி கொடிகளை நடுவது விஞ்ஞானம் எனில் அதற்கான நன்மை அல்லாஹ்விடம் கிடைக்கும் என்று நம்புவது மெய்ஞானம்.
இறைவனை துதிபாடக்கூடிய அந்த மரங்களையும், பயிர்களையும் மனிதனைக் கொண்டே அல்லாஹ் பயிர் செய்விக்கச் செய்வது அவனின் மாபெரும் அருட்கொடையின் வெளிப்பாடு. மனிதர்களின்; உணவு தேவைகளுக்கு என்கின்ற நன்மைகளுக்காக என்பது மட்டுமின்றி, வளர்கின்ற பருவத்தில் அந்த பயிர்கள் அல்லாஹ்வை திக்ரு செய்கின்றனவே, அதை உற்பத்தி செய்த மனிதனுக்கு அந்த பயிர்கள் ‘திக்ரு’ செய்வதால் கிடைக்கக்கூடிய நன்மைகளும் நிச்சயமாக கிடைக்கத்தானே செய்யும். ஏனெனில் அல்லாஹ் அருள் மழை பொழிவதில் மாபெரும் கொடையாளன் என்பதில் எவருக்கேனும் சந்தேகமுண்டா?
ஏதேனும் ஒரு நன்மையான காரியத்தை ஓருவர் துவக்கி வைப்பாரானால் அதனால் விளையக்கூடிய நன்மைகள் அனைத்திலும் அவருக்கும் பங்குண்டு என்பது நபிமொழியல்லவா! பயிர் செய்வது நன்மையான காரியம்தான். அதனால் மனிதனுக்கு கிடைக்கும் நன்மைகளை அவன் வாழும் காலத்தில் அனுபவித்து நன்மையடைகின்றான். ஆனால் அந்த பயிர்கள் அல்லாஹ்வை ‘திக்ரு’ செய்கின்றனவே அதனால் கிடைக்கும் நன்மைகளை அந்த மனிதர்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா?! மனிதன் அறியாமலேயே அவனுக்கு நன்மைகளை சேர்க்கும் இறைவனின் இந்த ரஹ்மத்தை என்னவென்று சொல்வது!
மிக நெருக்கமான ஒருவர் ஒரு விவசாயியாக இருக்கும்போது தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டதில்: காலை வேளை ஸுப்ஹு தொழுதுவிட்டு வயல்வெளிகளை தனியாக சுற்றிப்பார்க்கச் செல்லும்போது ஒவ்வொரு நாளும் நெற்கதிர்களின் வளர்ச்சியைக் கண்டு பூரிப்புடன் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லக் கூடியவராக இருந்தார்.
வரப்புகளில் நடந்து செல்லும்போது சப்தமிட்டு கலிமாவை ஒலித்தவண்ணம் நடக்க ஆரம்பிப்பாராம். தான் ஓதியதை கேட்கும் இந்த பயிர்கள் மறுமையில் அல்லாஹ்விடம் சாட்சி பகரும் என்கின்ற நம்பிக்கையே காரணம் என்பதை அறியும்போது வியக்காமல் இருக்க முடியவில்லை. அந்த சிந்தனையை அவரது உள்ளத்தில் உதிக்கச் செய்த அல்லாஹ்வை எப்படி புகழ்வது! அல்ஹம்துலில்லாஹ். இங்கு விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் அவர் மெய்ஞானத்தை காண்கிறார் என்று கூட சொல்லலாம்.
சரி, விஷயத்திற்கு வருவோம். விஞ்ஞானம் மெய்ஞானத்தை வலுப்படுத்துகிறது, ஈமானை மென்மேலும் உறுதியடையச் செய்கிறது என்பதற்கான ஆதாரங்கள் இஸ்லாமிய வரலாறுகளில் - குறிப்பாக நபிமார்களின் வரலாறுகளிலேயே கூட காணலாம். அழுத்தமான சான்றாக, திருக்குர்ஆன் சுட்டிக்காட்டும் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தையும்;, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மிஃராஜ் விண்ணுலகப் பயணத்தையும் குறிப்பிடலாம்.
 மெய்ஞானத்தை வலுப்படுத்தும் விஞ்ஞானம்!
எதையும் சிந்தித்து அதை நேரடியாக பார்க்கும்போது ஏற்படுகின்ற நம்பிக்கையும் உறுதியும் அழுத்தமானது. உதாரணமாக, இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் அவன் உயிரைப்படைக்கும் விதத்தை தான் தெரிந்து கொள்ள விரும்புவதாக வேண்டுகோள் வைக்கும்போது அந்த ஏக இறைவன் நபியைப் பார்த்து ‘என் மீது நம்பிக்கையில்லையா?’ என்று கேட்கிறான்.
அதற்கு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ‘யா அல்லாஹ்! உன்னிடம் நம்பிக்கையில்லாமலா! அப்படியில்லை: எனது மனம் சாந்தியடைவதற்காக கேட்கிறேன் என்று பதில் சொல்கிறார்கள்.
அதன் பிறகு ஏக இறைவன் அவரிடம் ஒரு பறவையை நான்கு துண்டாக வெட்டி ஒரு மலையின் நான்கு முனையிலும் அதை பிரித்து வைக்கச்சொல்லி, பிறகு ஓரிடத்தில் நின்று தன் பெயரைச்சொல்லி அந்த பறவையை அழைக்கச் சொல்கிறான்.
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அது போல அப்பறவையை நான்கு துண்டாக வெட்டிப் பிரித்து நான்கு மூலையிலும் வைத்து விட்டு அல்லாஹ்வின் பெயர்கூறி அதனை அழைக்கும்போது அப்பறவை ஒன்றாகி எழுந்து ஓடி வருவதைக் காண்கிறார்கள். இங்கு ஆன்மீகத்தின் ஊற்றான இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நம்பிக்கை இன்னும் உறுதியடைகிறது. அந்த அதிசயத்தை அற்புதத்தை அவர்கள் கண்ணால் கண்டது அவர்களைப் பொருத்தவரை விஞ்ஞான பூர்வமானது இல்லையா?
இது போல மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின்மீது அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்ட ஒரு நபிதானே! அவர்கள் அல்லாஹ்வை நேரடியாகக் காண ஆவல் கொள்கிறார்களே! அது ஏன்? தன்னைப் பார்ப்பதற்கான சக்தியை அவர் பெறமாட்டார் என்று இறைவன் சொல்லியும் அவர்கள் மீண்டும் மீண்டும் தனது ஆவலை அல்லாஹ்விடம் வற்புறுத்திக் கேட்டு அந்த தூர்ஸீனா மலையில் அல்லாஹ்வின் பேரொளியின் ஒரு துளியைக்கண்டு மூர்ச்சையடைகிறார்களே! இவையெல்லாம் என்ன?
இச்சம்பவங்கள் மறைவானவற்றையும் முழுமையாக நம்பும் ஆன்மீகத்தின் வழிகாட்டியான அந்த மாபெரும் நபிமார்களின் இறைநம்பிக்கையை மென்மேலும் உறுதிபடச் செய்திருக்கும் என்பதை எவரேனும் மறக்க முடியுமா?
அகிலத்தின் அருட்கொடை, நமது உயிரனும் மேலான, கண்மணி ரஸூலல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்விலும் இதுபோன்று மறைவான விஷயங்களைக் கண்களால் விஞ்ஞானப்பூர்வமாக காணும் சந்தர்ப்பம் கிடைக்கத்தானே செய்தது. ஆம்! மிஃராஜ் விண்வெளிப்பயணம் எவருக்குமே வாய்க்காத ஒரு அற்பதப்பயணத்தின் மூலம் அவர்களின் இறை நம்பிக்கை அசைக்க முடியாத அளவுக்கு உறுதியடைந்தது என்பதை அவர்களின் சொல் மூலமாகவே அறிந்து கொள்ளலாமே!
ஒரு சமயம் சில ஸஹாபாப் பெருமக்கள் சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததைக் கண்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘நான் கண்டதை நீங்கள் கண்டிருந்தால் இதுபோன்று சிரித்துக் கொண்டிருக்க மாட்டீர்கள்!’ என்று மிஃராஜின்போது தான் நரகில் கண்டவற்றைக் குறிப்பிட்டுக் கூறியதை எண்ணிப்பார்க்கும்போது, நேரடியாக அந்த நரகக்காட்சியைக் கண்டதால் அவர்கள் மென்மேலும் இறையச்சமுடையவர்களாக விளங்கினார்கள் என்பதை இச்சம்பவம் தெளிவு படுத்துகிறதல்லவா.
அறிவியல் துறையில் ஆராய்ச்சி செய்வதை மிகப்பெரும் வணக்கமென்றே இஸ்லாம் கூறுகிறது. ஏறத்தாழ 780 திருமறை வசனங்கள் விஞ்ஞானத்தை வலியுறுத்திக் கூறுகின்றனவே! ஏன்? எதற்காக? சிந்திக்க வேண்டாமா?
அல்லாஹ் படைத்த வானத்தையும் பூமியையும் கோள்களையும், நட்சத்திரங்களையும், உயிர் ஜீவராசிகளையும் ஆராய்ச்சி செய்யும் மனிதன் வியந்து போய் அந்த ஏக இறைவனுக்கு முன்னால் கூனிக்குறுகி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டே தீர்வான். அப்படிக் கூனிக்குறுகிப்போகும்போது அவனிடம் இருக்கும் பெருமை, கர்வம், தான் என்ற அகம்பாவம் அத்தனையும் இருந்த இடம் தெரியாமல் போய், இவ்வுலகைப் படைத்த அந்த ரப்புல் ஆலமீனுக்கு முன், தான் ஒரு அடிமையிலும் அடிமை என்பதை உணர்வான்.
விஞ்ஞானத்தை ஆராயும் மனிதன் தான் எவ்வளவு சாதாரணமானவன் என்பதை உணராமல் இருக்க முடியாது. ஒரு முறை விஞ்ஞானி Dr.A.P.J.அப்துல் கலாமிடம் ‘விஞ்ஞானிகள் இறைநம்பிக்கையற்றவர்களாக இருக்கிறார்களே!’ என்று கேள்வி தொடுக்கும்போது, அவர் உடனே, ‘யார் சொன்னது அப்படி? விஞ்ஞானிகளுக்குத்தான் நிச்சயமாக இறை நம்பிக்கை அதிகமிருக்கும்' என்றார்.
ஏனெனில் வானத்தையும், பூமியையும், அதிலுள்ள இறைவனின் படைப்புகளைப் பற்றி ஆராயக்கூடிய மனிதன் தான் கண்டுபிடித்தவைகளோடு அணைத்தும் முற்றுப்பெற்று விட்டது என்று எண்ண மாட்டான், எண்ணவும் முடியாது. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குப் பிறகு தனது இயலாமையை அவன் உணரத்தான் செய்வான். அப்போது அவனது நிலை கீழ்க்காணும் வசனத்தில் இறைவன் குறிப்பிட்டதுபோல் தான் இருக்கும்.திருக்குர்ஆனின் 29 ஆவது ஜுஸ{வில் முதலாக வரும் 'ஸூரத்தலுல் முல்க்' (தபாரகல்லதீ... ஸூரா) உடைய ஆரம்ப வசனங்களை சற்று சிந்தித்துப் பாருங்கள்!
''எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்''. (67:1)
''உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.'' (67:2)
''அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர், பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா?'' (67:3)
''பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார், உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும்.'' (67:4)
இவ்வசனத்தில், மரணத்தையும் வாழ்வையும் படைத்ததற்காண காரணத்தை குறிப்பிடும் இறைவன், அவன் அடுக்கடுக்காகப் படைத்த வானத்தைப்பார்த்து சிந்திக்கும்போது மனிதனின்; பார்வை களைத்து மழுங்கிச் சிறுமையடைந்து திரும்பும் என்று கூறுகின்றானே, ஆராய்ச்சி மனப்பான்மை இல்லாமல் வானத்தை வெறுமனே பார்க்கும் மனிதனுக்கு என்ன விளங்கும்?
ஆராய்ச்சி மனப்பான்மையுடன் அவன் வானத்தைப் பார்க்கும்போதுதான் அவன் வியந்து போய் முன் சொன்னதுபோல் கூனிக்குறுகி தான் அப்பட்டமான அடிமை என்பதை துளிக்கூட சந்தேகமின்றி விளங்கிக்கொள்வான். அப்படி அவன் விளங்கிக்கொண்டு தொழுகையில் ருகூஉ, ஸுஜுது செய்யும்போது சாதாரண நிலைக்கும் இப்போதைய அவனது நிலைக்கும் மிகப்பெரிய வேறுபாட்டைக் காண்பான்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருக்குர்ஆனிலுள்ள சில ஸூராக்களின் உயர்வைப்பற்றி குறிப்பிடுகையில் முப்பது ஆயத்துக்களைக் கொண்ட இந்த ஸூரத்துல் முல்க் (தபாரகல்லதீ...), ஒவ்வொரு முஃமீனுடைய உள்ளத்திலும் மனனமாக இருக்க வேண்டும் என தான் விரும்புவதாகச் சொன்னார்களே! அதன் காரணத்தை என்றைக்காவது நாம் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? சிந்தித்தால் விளங்கியிருப்போம், மெய்ஞானத்திற்கு வழிகாட்டி விஞ்ஞானம் என்று!
இதைப்படிப்பவர்கள் தயவு செய்து தான் மட்டுமின்றி தன் குடும்பத்தார்கள் அனைவரையும் இந்த ஸூராவை (அர்த்தத்துடன்) மனனம் செய்யத் தூண்டுங்கள். இன்ஷா அல்லாஹ், விஞ்ஞானியாகவும் மெய்ஞானியாகவும் ஆகலாம். முடியாது என்று ஒருவர்கூட எண்ணிவிடாதீர்கள். அசைக்க முடியாத நம்பிக்கையை அல்லாஹ்வின் மீது வைத்துப்பாருங்கள், அத்தனையையும் சாத்தியமாக்கி வைப்பதற்கு அந்த ரப்புல் ஆலமீன் போதுமானவனாக இருக்கிறான் என்பதை மறந்து விடாதீர்கள்.
அழுத்தமாக பதிய வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்; விஞ்ஞானம், மெய்ஞானம் இவையிரண்டுக்கும் மூல நூலே திருக்குர்ஆன்தான். இதையே வேறு விதமாக சொல்ல வேண்டுமானால்"உலகக்கல்வி மார்க்கக்கல்வி இரண்டிற்கும் மூல நூலே திருக்குர்ஆன் தான்".
தொழுகைக்கு "வுளூ" செய்வது விஞ்ஞானப்பூர்வமானது. மெய்ஞானத்தின் சுவையை அறிய அல்லாஹ் முதலில் விஞ்ஞானத்தைக் கற்றுக்கொடுக்கின்றான். மெய்ஞானம் பரிபூரணமானது, தூய்மையானது. அதனை தூய்மை படுத்துவது விஞ்ஞானம் என்றுகூட சொல்லலாம்.
நோயைக்கொடுப்பவனும் அல்லாஹ் அதற்கான நிவாரணத்தை - சுகத்தை கொடுப்பதும் அல்லாஹ்வே. அதற்காக நோயுற்ற எவரும் சிகைச்சைக்காக மருந்து உண்ணாமல் இல்லையே! நோய்க்கு மருந்து மூலம் - புறச்செயல்கள் மூலம் சிகிச்சை அளிப்பது விஞ்ஞானம். நலத்தை கொடுப்பது அல்லாஹ். அவனிடன் துஆ வேண்டுவது மெய்ஞானம். இன்னும் விளக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் ''ஒட்டகத்தைக் கட்டிப்போடுவது விஞ்ஞானம். அல்லாஹ்வை நம்புவது மெய்ஞானம்''.
மெய்ஞானம் மனம் சார்ந்தது எனில் விஞ்ஞானம் உடல் சார்ந்தது என்று சொல்லலாம். உடல் அசைவுகள் இல்லாமல் தொழுகையில்லை. மெய்ஞானத்தை கற்க விஞ்ஞான ரீதியாக உடல் அசைவுகள் தேவை. இல்லையெனில் மெய்ஞானத்தின் பாதையே இல்லாமல் போய்விடும்.
விஞ்ஞானப்பூர்வமாக அல்லாஹ்வின் அத்தாட்சிகள் உலகெங்கும் விரவிக்கிடக்கின்றன. உலகக்கல்வி இல்லாமல் இதனை சிந்தித்து ஆராய்ந்து கூனிக்குறுகிப்போவது எப்படி சாத்தியம்? அல்லாஹ்வின் அத்தாட்சிகளை ஆராய்ந்து கண்டுபிடிப்பதன் மூலம் அவனது மாபெரும் வல்லமையை அறிந்து தன்னுடைய இயலாமையால் மனிதன் கூனிக்குறுகிப் போகும்போது அவனிடமுள்ள அகம்பாவம், தலைக்கணம் கர்வம் அத்தனையும் இருந்த இடம் தெரியாமல்; சத்தியமாக நான் படைத்த அந்த ரப்புல் ஆலமீனுக்கு முற்றிலும் அடிமை என்னும் முடிவுக்கு வரும். அந்த சந்தர்ப்பம் ஒவ்வொரு முஃமினுக்கும் தேவையில்லையா? உலகக்கல்வியை ஒதுக்கித்தள்ளிவிட்டு எதை ஆராச்ய்ச்சி செய்யப்போகிறீர்கள்?! மஸாயில்களையா? மஸாயில்களை ஆராய்வதாகக் கூறி சமுதாயத்தில் பிரிவுகளைத்தானே ஏற்படுத்த முடிந்தது!
ரப்பிஜித்னீ இல்மா (rabbi zithnee ilmaa) இறைவா! எனது கல்வியை அதிகப்படுத்துவாயாக! O GOD! INCREASE MY KNOWLEDGE.
Source: nidur.info