widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Tuesday, January 31, 2012

இலவச கண் சத்திர சிகிச்சை (வெண்படலம் நீக்குதல்)



ஏறாவூர் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் நேற்று (31.01.2012) செவ்வாய்க்கிழமை ஏறாவூர் அல் அஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கண்ணில் வெண்படலத்தினை நீக்குவதற்கான இலவச சத்திரசிகிச்சைக்கு நோயாளிகளைத் தெரிவு செய்வதற்கான கண்பரிசோதனை முகாம் ஒன்று நடைபெற்றது. இச்சத்திரசிகிச்சையை வெளியில் செய்வதானால் ரூபா 55000.00 தொடக்கம் 110000.00 வரை செலவாகக்கூடிய இச் சத்திரசிகிச்சையை ஏறாவூர் தவ்ஹீத் ஜமாஅத்தினூடாக ஏறாவூரில் ஜம்இய்யது சபாப் நிறுவனம் செய்வது குறிப்பிடத்தக்கதாகும். இச்சத்திர சிகிச்சை எதிர்வரும் ஓரிரு வாரங்களில் காத்தான்குடி வைத்தியசாலையில் நடைபெறவிருக்கின்றது. 


இது சம்பந்தப்பட்ட அறிவித்தல்களை தவ்ஹீத் ஜமாஅத்தினர் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலமாக அறிவிக்குமாறு கேட்கப்பட்டும் இவ் ஏற்பாட்டை தவ்ஹீத் ஜமாஅத்தினர் செய்கின்றனர் என்ற காரணத்திற்காக ஒரு சில பள்ளிவாயல்களில் அறிவிக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரம் ரூபாய்கள் கொடுத்து செய்யவேண்டிய இச்சத்திர சிகிச்சையை இலவசமாக செய்யக்கூடிய வாய்ப்பு சிலருக்கு இல்லாமல் போயுள்ளது. 



இவ்வைத்திய முகாமில் சுமார் 150 பேரளவில் பங்குபற்றியதுடன் 30 பேருக்கு இலவசமாக கண் சத்திரசிகிச்சை பெறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. 




0 comments:

Post a Comment