widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Monday, January 16, 2012

உலகின் மிகப்பெரிய திருக்குர்ஆன் புத்தகம்


ஆப்கானிஸ்தானில் உலகின் மிகப்பெரிய குர்ஆன் உருவாக்கப்பட்டுள்ளது. 7 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்ட இப்புனித நூல் 218 பக்கங்கள் கொண்டதாகவும், 30 வகையான எழுத்துவடிவங்களையும் கொண்டுள்ளது.
மேலும் இந்நூலை உருவாக்குவதற்கு 5 வருடங்கள் தேவைப்பட்டுள்ளன. மொஹமட் சபீர் யாகோட்டிஹுஸைனி கேத்ரி என்பவர் தலைமையிலான குழுவினர் இந்நூலை உருவாக்கியுள்ளனர்.
இந்நூல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் முக்கிய மதப் பிரமுகர்கள் முன்னிலையில் திறந்துவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.




0 comments:

Post a Comment