widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Thursday, June 30, 2011

மட்டக்களப்பில் அரச வங்கி ஆயுதமுனையில் கொள்ளை


- அபூ ஜுமைல் -
மட்டக்களப்பு மாநகர புறநகர்ப்பிரதேசமான புதூர் மக்கள் வங்கி கிளை இனந்தெரியாத ஆயுத தாரிகளினால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரஞ்ஜித் வனராஜா தெரிவித்தார்.
இன்று பிற்பகல் 2 மணியளவில் மக்கள் வங்கி என்ற பெயர்ப்பலகையை மாட்டிய வேனொன்றில் வந்த 5 பேரடங்கிய துப்பாக்கி நபர்கள் வங்கியில் ஆயுதத்துடனிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை வங்கி அறையொன்றினுள் பூட்டிவிட்டு அங்கிருந்த இலட்சக்கணக்கான ரூபாய் பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச்சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் நகைகளின் விபரங்கள் வங்கி அதிகாரிகளினால் சேகரிக்கப்பட்டுவருகின்றன.
1985ம் ஆண்டு காத்தான்குடியில் வங்கியொன்று விடுதலைப் புலிகளால் ஆயுத முனையில் கொள்ளையிடப்பட்டதை ஒத்த பாரிய வங்கிக் கொள்ளை ஒன்றாக இச்சம்பவம் நோக்கப்படுகின்றது.


Source: Kattankudi.info

0 comments:

Post a Comment