widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, June 24, 2011

கல்வி அமைச்சின் 1000 பாடசாலைத்திட்டத்தின் கீழ் பட்டதாரி ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன


கல்வி அமைச்சரின் பணிப்புரைக்கமைய நடைமுறைப்படுத்தப்படும் ஆரம்ப பாடசாலை வலைப்பின்னலை மேம்படுத்தும் 1000 இடைநிலைப் பாடசாலைகளை வளர்ச்சிப்படுத்தும் வேலைத்திட்டத்திற்காக தகவல் தொடர்பாடல் தொழினுட்பம், ஆங்கிலம் மற்றும் அறிவியல் / கணிதம் போன்ற பாடங்கள் ஒவ்வொன்றிக்கும் 1000 பட்டதாரி ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் இணைத்துக் கொள்வதற்கான விபரங்கள் மற்றும்விண்ணப்பப் படிவங்கள் வெளியிடப் பட்டுள்ளன.
இந்த மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கு ஏற்ப விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து 2011-06-30 ம் திகதிக்கு முன்பு “பரீட்சை ஆணையாளர் நாயகம், ஒழுங்கமைப்பு மற்றும் வெளிநாட்டுப் பரீட்சைகள் கிளை, இலங்கைப் பரீட்சைத் திணைக்களம், பெலவத்தை, பத்தரமுல்லை என்ற முகவரிக்கு பதிவு அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவத்திற்கும் மேலதிக விபரங்களுக்கும் கல்வி அமைச்சின் இணையத்தளத்தை நாடுங்கள்

0 comments:

Post a Comment