widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, June 10, 2011

பாராளுமன்றத்தில் தமிழ் மொழிப் பயிற்சி!


மாணவர்களாக  எம்.பி.க்கள்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் மொழி பயிற்சி வழங்கும் திட்டம் ஒன்று இன்று ஆரம்பமாகின்றது.
தேசிய மொழி மற்றும் நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் ஆலோசனையின் பேரில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது.
ஆறு மாதங்களுக்கான இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 30 பேருக்கு பயிற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
பயிற்சி நெறியானது பாராளுமன்றம் கூடும் ஒவ்வொரு புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை வேளையில் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெறும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்தார். 

0 comments:

Post a Comment