widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Tuesday, June 28, 2011

கட்டாரில் பெண்களுக்கு மட்டுமான திரையரங்கம் _


பெண்களை மட்டுமே அனுமதிக்கும் விசேட திரையரங்கமொன்று கட்டாரின் டோஹா நகரில் எதிர்வரும் வியாழக்கிழமை திறக்கப்படவுள்ளது.

குறித்த திரையரங்கமானது எஸ்பயர் சோன் பவுண்டேசனினால் அந்நாட்டு அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் விளையாட்டு வளாகத்தின் பெண்களுக்கான பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இத்திரையரங்கிற்கான அனைத்து திரைப்படங்களும் கட்டார் சினிமா மற்றும் திரைப்பட விநியோக நிறுவனத்தினால் வழங்கப்படவுள்ளன. 

ஒவ்வொரு வார இறுதியிலும் 3 படங்கள் திரையிடப்படவுள்ளதுடன் சனிக்கிழமைகளில் பெண்களுடன் சமூகமளிக்கும் சிறுவர்களை கருத்தில்கொண்டு மேலதிகமாக 1 படம் காண்பிக்கப்படவுள்ளது. 

குறித்த திரையரங்கில் 154 ஆசனங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

திரையிடப்பட்டுள்ள படங்கள் குறித்த விபரம் 3 வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்படுமென அதன் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். 

இதன் டிக்கெட் விலைகள் டோஹாவில் உள்ள மற்றைய முக்கிய திரையரங்குகளின் வி.ஐ.பி. டிக்கெட் விலையை ஒத்ததாக இருக்குமென்பதுடன் இடைவேளையின் போது சத்தான உணவு மற்றும் பானங்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். __

0 comments:

Post a Comment