widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Thursday, June 16, 2011

இன்று பூரண சந்திர கிரகணம்: நள்ளிரவில் ஏறாவூர் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளிவாசலில் கிரகணத் தொழுகை


இன்று 15.06.2011 புதன்கிழமை நள்ளிரவுக்கு கிட்டியதாக ஏற்படும் பூரண சந்திரக் கிரகணத்தை இலங்கை உட்பட ஆசிய நாடுகளில் காண முடியும் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இக்கிரகணம் பற்றி விடுத்துள்ள அறிவித்தலில் கிரகணம் இன்றிரவு 10:53 முதல் வியாழக்கிழமை அதிகாலை 4:22 வரையான நேரத்துக்குள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்திகள் பூரண சந்திரக் கிரகணம் இலங்கையில் இரவு 11:53 தொடக்கம் வியாழக்கிழமை அதிகாலை 3:22 வரை தென்படும் என்றும் தெரிவிக்கின்றன.
ஏறாவூர் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளிவாசலில் கிரகணத் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் மௌலவி NLM.Asmi Hafees தொழுகையை நள்ளிரவு 12:00 மணியளவில் தொழுகை நடாத்துவார்.

0 comments:

Post a Comment