widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Saturday, June 25, 2011

19 வருடங்களாக தலையால் ஒட்டிய நிலையில் வாழும் இணை பிரியா சகோதரர்கள்



ஸ்டீபன் மற்றும் டைலர் டெல்ப் ஆகிய இருவரும் தலையால் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். 

இருவரும் 19 வருடங்களாக ஒன்றாகவே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் மிக அரிதாகவே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துள்ளனர். அதுவும் கண்ணாடி வழியாகத்தான்.

தலையால் ஒட்டியிருக்கும் இவர்களின் முகங்கள் எதிர் எதிர் பக்கங்களாக அமைந்துள்ளன. எனவே ஒருவரை மற்றவர் கண்ணாடியின் உதவியின்றி பார்க்கவே முடியாது. உலகில் இத்தகைய இரட்டையர்கள் பிறந்து இவ்வளவு காலம் உயிர் வாழ்வதென்பது மிகவும் அபூர்வமான ஒரு விடயமாகும்.



இவர்கள் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் தென் ஜேர்ஸி பகுதியைச் சேர்ந்தவர்கள். முதல் தடவையாக இவர்கள் ஊடகங்களுக்கு முன்னாள் தோன்றி தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.



இவர்களுள் ஒருவர் எதிர்ப்பால் உணர்வுடையவர்.மற்றவர் ஓரினச் சேர்க்கை ஆர்வமுள்ளவர். ஆனால் இவர்கள் வாழ்க்கையில் ஒரு நொடி கூட பிரிந்திருக்க முடியாது. 



இருவரும் நன்றாக வயலின் வாசிக்கக் கூடியவர்கள். ஒருவருக்கொருவர் சகோதரர்களாக மட்டுமன்றி நல்ல நண்பர்களாகவும் உள்ளனர்.

இவர்களின் பெற்றோர்கள் இவர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளனர். இருவருமே இறைவன் தங்களுக்களித்த கொடை என்று அவர்கள் நம்புகின்றனர்.

விஷேட தேவைகள் உடைய பிள்ளைகளுக்கான பாடசாலையில்தான் இருவரும் படித்து வருகின்றனர்.அதற்கு மேலதிகமாக பிரதான பாடசாலைக்கும் செல்லுகின்றனர்.

படிப்பில் இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று அவர்களின் அசிரியர்கள் கூறுகின்றனர். ஒருவர் திரைப்படத் துறையிலும் மற்றவர் இசைத் துறையிலும் ஆர்வம் கொண்டுள்ளதாக இவர்களின் அசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments:

Post a Comment