widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, June 10, 2011

இலங்கை மாணவர்களுக்கு துருக்கியின் புலமைப்பரிசில்


துருக்கி அரசாங்கத்தில் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2011/2012 கல்வியாண்டுக்கான பட்டப்படிப்பு புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்களை உயர் கல்வியமைச்சு கோரியுள்ளது.
மருத்துவ விஞ்ஞானம் தவிர்ந்த வேறெந்தத் துறைக்கும் உரிய தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன் விண்ணப்பிக்க முடியுமெனவும் உயர் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலதிக விபரங்களையும் விண்ணப்பப் படிவங்களையும் www.mohe.gov.lkஎன்ற இணையத்தளம் மூலம் பெறமுடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011/2012 ஆம் கல்வியாண்டுக்காக ஐந்து புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாக உயர்கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment