widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Thursday, June 16, 2011

தாருல் அதரின் இணையத்தள வானொலி ஆரம்பம்


தாருல் அதர் அத்தஅவிய்யாவின் தஃவா எழுச்சியின் மற்றொரு வடிவமாக சர்வதேசமெங்கும் வாழ்கின்ற தமிழ் பேசும் இஸ்லாமிய உறவுகளுக்காக இன்ஷா அழ்ழாஹ் எதிர்வரும் 17.06.2011 வெள்ளிக்கிழமை முதல் Zajil FM எனும் பெயரில் தாருல் அதர் தனது உத்தியோகபூர்வ இணையத்தள வானொலி ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
மேற்கத்தேய இஸ்லாத்திற்கெதிரான சதித்திட்டங்களுக்கு மத்தியில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பிரச்சாரம் செய்வதற்கு இவ்வாறான இணையதள வானொலிகள் உருவாக்கப்பட வேண்டியதும் ஊக்குவிக்கப்பட வேண்டியதும் காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
இவற்றைக் கருத்திற்கொண்டு எமது அல் அதர் மீடியா குழவினரின் ஏற்பாட்டில் இன்ஷா அழ்ழாஹ் எதிர்வரும் 17.06.2011 வெள்ளிக்கிழமை அன்று எமது ஜாமிஉல் அதர் ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெறவிருக்கும் ஜும்ஆவை நேரடியாக அஞ்சல் செய்வதனூடாக Zajil FM தனது சேவையை ஆரம்பிக்கவிருக்கிறது, அல்ஹம்துலில்லாஹ்.
சகோதர சகோதரிகள் எமது இணையதள வானொலியை www.zajilfm.com எனும் இணையதள முகவரில் இலங்கை நேரப்படி பி.ப 4.00 மணி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணி வரை கேட்கலாம். விஷேடமாக இணைய வானொலி வசதி கொண்ட கைத்தொலைபேசிகளிலும் எமது நிகழ்ச்சிகளை கேட்கலாம்.
அல் அதர் மீடியா
தாருல் அதர் அத்தஅவிய்யா
காத்தான்குடி.
 
Rate This

0 comments:

Post a Comment