widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Saturday, June 25, 2011

கட்டண அதிகரிப்பை ஏற்க முடியாது: நாளை நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் _


அரசாங்கத்தின் பஸ் கட்டண அதிகரிப்பு வீதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, திட்டமிட்டபடி நாளை ஞாயிற் றுக்கிழமை நள்ளிரவு முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும். 

போராட்டத்தை உதாசீனம் செய்து 15 வீதமான கட்டண அதிகரிப்பை கொடுக்க மறுத்தால் தொடர் போராட்டத்தில் குதிப்போம் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் அந்த சங்கத் தலைவர் கெமுனு விஜேரட்ண கூறுகையில், கடந்த இரண்டு வருட காலமாக அரசாங்கம் தனியார் பஸ் உரிமையாளர்களை ஏமாற்றி வருகின்றது. சம்பள செலவீனம் டயர் உள்ளிட்ட ஏனைய உதிரிப்பாகங்களின் விலை அதிகரிப்பு என்பவற்றினை கருத்தில் கொண்டு 15 வீதத்தினால் தனியார் பஸ் கட்டணத்தை அதிகரிக்கும்படி பலத் தடவைகள் வலியுறுத்தி வந்தோம். ஆனால் அரசாங்கம் கோரிக்கைகளை காலத்தை கடத்தி வந்தது. வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அறிவித்ததுடன் அரசாங்கம் 7.6 வீதத்தினால் கட்டணத்தை அதிகரித்துள்ளது. 

இந்த கட்டண அதிகரிப்பை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. 15 வீதமான கட்டண அதிகரிப்பு உறுதியாக தரப்பட வேண்டும். அதனை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். 

0 comments:

Post a Comment