widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, June 17, 2011

குருணாகலில் கோர விபத்து: ஒரே குடும்பத்தில் அறுவர் பலி


குருநாகல், மாவத்தகம பிரதேசத்தில் அதிகாலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில் இரண்டு பெண்கள், ஒரு சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் பரிதாபகரமாக உயிரிழந்தனர். 

குறித்த பகுதியினூடாகப் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் ஒன்றும், ஓட்டோ ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றது என மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர்.

பொசன் தின நிகழ்வுகளைப் பார்வையிட குடும்ப சகிதம் அநுராதபுரம் சென்ற இவர்கள் மீண்டும் ஓட்டோவில் வீடு திரும்பும் வழியிலேயே விபத்தில் சிக்கினர். 

இதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர் என்றும், ஏனைய இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சொந்த இடமான ஹத்தரலியத்த நோக்கி ஓட்டோவில் பயணித்த ஹேமாவதி (வயது53), ரத்னகுமார (வயது50), லலித்குமார (வயது30), ருவன்குமார(வயது20), வசந்த புஸ்பகுமாரி (வயது40), லக்மல் குமார (வயது12) ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவருமே உயிரிழந்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாவத்தகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment