widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Monday, June 27, 2011

கையடக்கத் தொலைபேசிகளின் கட்டணத்தை குறைக்க தீர்மானம்


கையடக்கத் தொலைபேசிக்கான ஆகக் குறைந்த கட்டணத்தை மேலும் குறைப்பதற்காக தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் அனுமதி பெறுவதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு தீர்மானம் எடுத்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் அனூஷ பெல்பிட்ட தெரிவித்துள்ளார்.
அதன்படி தற்போதுள்ள கையடக்க தொலைபேசிக்காக தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவினால் விதிக்கப்படும் குறைந்தபட்ச கட்டணமானது 2 ரூபா எனவும் எதிர்வரும் மாதம் முதல் நிமிடம் ஒன்றுக்கு ஒரு ரூபா 50 சதம் (1.50) வரை குறைக்குமாறு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிரந்தர தொலைபேசி இணைப்புக்களுக்கு சமாந்திரமாக கையடக்க தொலைபேசி இணைப்புக்களிலும் பாரிய வளர்ச்சியொன்றைக் காணக்கூடியதாக உள்ளது எனவும் நாட்டில் தற்போது தொலைபேசி பாவனையானது 20 மில்லியனுக்கும் 17 மில்லியனுக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் காணப்படுவது டன் அதில் அதிகமானவை கையடக்கத் தொலைபேசி பாவனை என பணிப்பாளர் நாய கம் அனூஷ பெல்பிட்ட மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment