widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Saturday, June 25, 2011

அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் தரப்பு பிரதிநிதித்துவும் உள்ளடக்கப்பட வேண்டும்


அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் தரப்பு பிரதிநிதித்துவமும் உள்ளடக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
முஸ்லிம் தரப்பு உள்ளடக்கப்படாது நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளின் மூலம் நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் இணைத்துக் கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் குனியோ தக்காஷியுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
முஸ்லிம் தரப்பினை புறக்கணித்து தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது சாத்தியப்படாது என அமைச்சர் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.
-நெருடல்-

0 comments:

Post a Comment