widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Monday, June 13, 2011

நான்கு தசாப்தங்களின் பின்னர் நீண்ட நேரத்திற்கு தென்படும் பூரண சந்திர கிரகணம்


நான்கு தசாப்தங்களின் பின்னர் நீண்ட நேரத்திற்கு தென்படும் பூரண சந்திர கிரகணம் ஒன்றை காண்கதற்கான வாய்ப்பு இலங்கை மக்களுக்கு கிட்டவுள்ளது.

இந்த சந்திரக் கிரகணம் பொசன் பூரணை தினத்தன்று இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் இலங்கையில் தென்படும் முதலாவது பூரண சந்திர கிரகணம் இதுவாகும் என இலங்கை வான சாஸ்திரவியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் கலாநிதி காவன் ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 15 ஆம் திகதி இலங்கை நேரப்படி இரவு 11.53 இல் இருந்து 16 ஆம் திகதி அதிகாலை 2.33 வரை இந்த சந்திரகிரகணத்தை இலங்கை மக்கள் காணமுடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

0 comments:

Post a Comment