widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Sunday, June 26, 2011

இஸ்ரேலிய பிரதமரின் இளம் மகன் முஸ்லீம்கள் குறித்து பேஸ்புக்கில் இழிந்து கருத்துக்களை வெளியிட்டார்


இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நதன்யஹூவின் 19 வயது மகனும், ராணுவ செய்தித் தொடர்பாளருமான யாயிர் நதன்யஹூ, அராபியர்களையும் குறித்தும், இஸ்லாம் குறித்தும் அவதூறான இழி கருத்துக்களை பேஸ்புக்கில் வெளியிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இந்த ஆண்டு, யாஸிர் நெடான்யஹு தனது பேஸ்புக் பக்கத்தில் “மரணத்தையும் துவேஷத்தையும் கொண்டாடுபவர்கள் முஸ்லீம்கள் என்று கூறியுள்ளார்”. அத்தோடு மாத்திரம் நின்று விடாமல் “தீவிரவாதத்திற்கு ஒரு மதம் உண்டு என்றால் அது இஸ்லாம் மட்டுமே” (terror has a religion and it is Islam) என்று தனது நச்சுக் கருத்தை கக்கியுள்ளார்.
இந்த தீங்கான விஷக் கருத்துக்கள் உடனடியாக பாலஸ்தீனர்களின் கண்டனத்திற்கு உள்ளானது. அத்துடன்  இவரின் தந்தை நெடான்யஹு தானா பாலஸ்தீனர்களுக்கு ஒரு நாட்டை அமைப்பதற்கான விருப்பத்தை அறிவித்தார் என்று பாலஸ்தீனர்கள் மத்தியில் கடும் ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், யாஸிர் நெடான்யஹு  “பாலஸ்தீனம் ஒரு போதும் தனி நாடாக முடியாது” என்று எழுதியுள்ளதுடன், ஏற்கனவே 23 பேருடன் சேர்ந்து ஒரு குரூப்பை பேஸ்புக்கில் ஆரம்பித்து,“அரபு தொழில்களையும், உற்பத்திப் பொருட்களையும் யூதர்கள் புறக்கணிக்க வேண்டு்ம்”என்று அறைகூவல் விடுத்துள்ளார்.
யாயிரின் இந்த விஷக் கருத்துக்கள் குறித்த செய்தி வெளியான இரண்டு மணி நேரத்தில், பேஸ்புக், யாசிரின் கருத்துக்களை நீக்கி விட்டது. இதுகுறித்து பெஞ்சமின் நதன்யஹூ இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் இஸ்ரேல் அரசு வழக்கறிஞர் டேவிட் ஷிம்ரோன் கூறுகையில், இரு ஒரு இளைஞனின் கோபத்தால் எழுந்த வார்த்தைகள்தான். தற்போது அது நீக்கப்பட்டு விட்டது.
யாயிரின் இந்த அவதூறு கருத்துக்கள் குறித்த செய்தி வெளியான இரண்டு மணி நேரத்தில், பேஸ்புக், யாசிரின் கருத்துக்களை நீக்கி விட்டது. இதுகுறித்து பெஞ்சமின் நதன்யஹூ இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் இஸ்ரேல் அரசு வழக்கறிஞர் டேவிட் ஷிம்ரோன் கூறுகையில், இரு ஒரு இளைஞனின் கோபத்தால் எழுந்த வார்த்தைகள்தான். தற்போது அது நீக்கப்பட்டு விட்டது.
பிரதமர் நதன்யஹூவும், அவரது மனைவியும் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். மத பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் அவர்கள் மதிக்கிறார்கள். தங்களது பிள்ளைகளையும் அவர்கள் அப்படித்தான் வளர்த்தி வருகிறார்கள். ஏதோ கோபத்தில் யாயிர் அவ்வாறு எழுதி விட்டார். தற்போது அது பேஸ்புக்கில் இல்லை என்றார்.
பாலஸ்தீன செய்தித் தொடர்பாளர் ஹுசம் ஸோம்லாட் இந்த கருத்து தொடர்பாக கூறுகையில்,
“இதுதான் அவருடைய தந்தையின் போதனை. அதைத்தான் இப்போது மகன் வெளிப்படுத்தியுள்ளான். இதுதான் நதன்யஹூவினால் உருவாக்கப்பட்ட குடும்பம், இதுதான் அவரால் உர்வாக்கப்பட்ட சமூகம். இதன்மூலம் தனது குடும்பத்தை எப்படி வளர்த்து வருகிறார் நதன்யஹூ என்பது யாயிரின் பேச்சைப் பார்த்தாலே தெரிகிறது” என்று கடுமையாக யாசிரையும், அவரது தந்தையையும் சாடியுள்ளார்.
இதற்கிடையே, யாயிரின் கருத்துக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் கண்டனம் தெரிவித்துள்ளது.  இதற்கிடையே, யாயிரின் கருத்துக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ராணுவத் தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், யாயிர் நதன்யஹூவுடன் ராணுவத் தளபதிகள் பேசியுள்ளனர். அப்போது யாயிரின் தவறு அவருக்கு சுட்டிக் காட்டப்பட்டது. இதுபோன்ற செயலில் ஒரு ராணுவ வீரர் ஈடுபடக் கூடாது என்றும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழியாக்கம்: காத்தான்குடி இன்போ நிர்வாகம்

0 comments:

Post a Comment