widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Thursday, August 11, 2011

கிறீஸ் மனிதர்கள் என்ற சந்தேகத்தில் இருவர் அப்புத்தளையில் பொதுமக்களால் அடித்துக் கொலை!


பொதுமக்களை பீதிக்கு உள்ளாக்கிய கிறீஸ் மனிதர் என்ற சந்தேகிக்கப்பட்ட இருவரை ஊவா மாகாணம் அப்புத்தளை தொட்டலாகல தோட்ட மக்கள் அடித்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை பகல் இடம்பெற்றுள்ளது.
இவர்கள் இருவரும் மேலும் இருவருடன் சேர்ந்து மோட்டார் சைக்களில் குறித்த தோட்டத்துக்கு சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நால்வரையும் பிடித்த தோட்ட மக்கள் அவர்களை மரங்களில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர். இதன்போது இருவர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலை தடுக்க முனைந்த பொலிஸார் மீதும் தோட்டபொது மக்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதன் காரணமாக சில பொலிஸ்காரர்களும் காயமடைந்து தியத்தலாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் கொலை செய்யப்பட்டவர்கள், தம்பேதன்ன என்ற இடத்தில் உள்ள சுற்றுலா தளத்திற்கு சென்றவர்களாக இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதேவேளை அப்புத்தளை தோட்டத்தில் பெண் ஒருவரை சீண்டினர் என்ற குற்றச்சாட்டின் பேரி;ல் உள்ளுர்வாசிகள் நான்கு பேர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்போதும் தலையீடு செய்த இரண்டு பொலிஸ்காரர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
உடம்பில் கிறீஸ் எண்ணெய்யை பூசிக்கொண்டு செல்வோர் பெண்களுடன் வன்முறையில் ஈடுபடுவதாகவும் அவர்களின் உடமைகளை கொள்ளையிடுவதாகவும் நாடு முழுவதிலும் இருந்து தகவல்கள் கிடைத்து வருகின்றன.
இதனையடுத்து குறிப்பாக பெருந்தோட்டங்களை சேர்ந்த தமிழ் தோட்டத்தொழிலாளர்கள் விழிப்பாக செயற்பட்டு வருகின்றனர்.
தமது தோட்டங்களுக்கு வெளியாட்கள் வருவதற்கு கூட அவர்கள் அனுமதி மறுப்பதாக தெரிவிக்க்ப்பட்டுள்ளது. 

0 comments:

Post a Comment