widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Sunday, August 14, 2011

மூதூர் கடல் படை முகாம் மீது பொதுமக்கள் சரமாரித் தாக்குதல்


கிறிஸ் பூதங்களால் ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து மூதூர் கடல் படை முகாம்ம் இன்று காலை தாக்கப்பட்டது. கடல் படை முகாம் மீது பொதுமக்கள் கல்லெறித் தாக்குதல் நடத்தினர். அத்துடன் தண்ணீர் தாங்கியை எரித்தனர்.கடல் படை முகாமுக்குள் கிறிஸ் மனிதர் ஒருவர் நுழந்தமையை கண்டமையை அடுத்து இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அத்துடன் நிலைவரத்தைக் கட்டுப்படுத்த வந்த பொலிஸார் மீதும் சரமாரித் தாக்குதல்கள், கல்லெறிகள் மேற்கொள்ளப்பட்டன.

பொலிஸ் ஜீப் சேதம் அடைந்து உள்ளது. பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் காயப்பட்டு உள்ளார்.

தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ள போதிலும் பிரதேசம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

0 comments:

Post a Comment