widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Wednesday, August 10, 2011

தொடரும் மர்ம மனிதன் பற்றிய பீதி!


வாழைச்சேனையில் இன்று (10.8.2011) முற்பகல் மர்ம மனிதன் ஒருவன் பெண்ணொருவரை காயப்படுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை கேணி நகரைச்சேர்ந்த பெண்ணொருவரை நாவலடியில் வைத்து மர்ம மனிதன் ஒருவன் கம்பியால் அப்பெண்ணை தாக்கி விட்டு  தப்பிச்சென்றுள்ளான்.
இதையடுத்து காயமடைந்த அப் பெண் வாழைச்சேனை ஆதார  வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று முற்பகல் 12.40 மணியளவில் நடைபெற்றுள்ளது.
இப்பெண்னுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து வாழைச்சேனை ஓட்டமாவடி பிரதேசங்களில் அச்சமும் பீதியும் ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் இம் மர்ம மனிதன் பற்றிய அச்சம் பீதி எற்பட்டுள்ளது.
இதனால் பெண்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்படுவதுடன் நோன்பு கால தறாவீஹ் போன்ற தொழுகைகளுக்கு செல்வதற்கும் பெண்கள் அச்சப்படுகின்றனர்.
நேற்றிரவு ஓட்டமாவடி பிரதேசத்தில் 6 மர்ம மனிதர்கள் வீதியில் நடமாடியதாகவும் இதையடுத்து பிரதேச மக்கள் அவர்களை துரத்தியதாகவும் பின்னர் பிரதேசமே அச்சத்தில் மூழ்கியதாகவும் தெரியவருகின்றது.
அம்பாறை மாவட்டததில் இறக்காமம், வரிப்பத்தாஞ்சேனை போன்ற பிரதேசங்களில் கடந்த வாரங்களில் இடம்பெற்ற இவ்வாறான சம்பவங்கள் பற்றி மப்றூக் அவர்களால் தமிழ் டெய்லிமிரர் இணையத்தளத்தில் எழுதப்பட்ட விரிவான கட்டுரையை வாசகர்கள் இந்த இணைப்பில் காணலாம்.
Kattankudi.info

0 comments:

Post a Comment