widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Monday, August 15, 2011

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பொதுமக்களுக்கும் பொலிசாருக்குமிடையில் நட்புறவை ஏற்படுத்தும் கூட்டம்


ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பொதுமக்களுக்கும் பொலிசாருக்குமிடையில் நட்புறவை ஏற்படுத்தி தற்போது ஏற்பட்டுள்ள கிறீஸ் மனிதன் தொடர்பான அச்சத்தை போக்கும் கூட்டமொன்று  இன்று மாலை (15.8.2011) மட்டக்களப்பு மயிலம்பாவெளியிலுள்ள அமெரிக்க இலங்கை மிஸன் திருச்சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பொலிஸ் மா அதிபரினால் கிறீஸ் மனிதன் தொடர்பாக ஏற்பட்டுள்ள பதற்ற நிலை குறித்து மக்களுக்கு விழிப்பூட்டுவதற்காக மட்டக்களப்புக்கு அனுப்பப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரம், மற்றும் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் விஜேகுணவர்த்தன, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகா ரவீந்திர கரவிட்டகே மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேந்திரன், ஏறாவூர் நகர சபை தலைவர் அலிசாஹீர் மௌலானா உட்பட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், ஏறாவூர் பிரதேச செயலாளர் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கிராம உத்தியோகத்தர்கள், சமய பிரமுகர்கள் சிவில் பாதுகாப்புக்குழுக்களின் பிரதி நிதிகள் கலந்த கொண்டனர்.
இக் கூட்டத்தில் பொலிஸ் பொதுமக்கள் நட்புறவு மற்றும் கிறீஸ் மனிதன் தொடர்பான பல் வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.


Source: Kattankudi.info

0 comments:

Post a Comment