widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, August 12, 2011

மர்மமனிதனின் தாக்குதலில் தப்பிய இளம் யுவதி: திருகோணமலையில் சம்பவம் _

ss
திருகோணமலை, சங்கமம் கிராமத்தில் மர்ம மனிதனின் தாக்குதலில் இருந்து இளம் பெண்ணொருவர் மயிரிழையில் தப்பித்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7.45 மணியளவில் இடம் பெற்றுள்ளது. 


தம்பலகாமம் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் டபிள்யு.பி. நிதிசானி (வயது21) என்ற இளம் பெண்ணே தாக்குதலில் இருந்து தப்பித்தவராவார். சங்கமம் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வேலை முடிந்து கணேஸ் வீதி வழியாக இந்த யுவதி சென்று கொண்டிருந்த போதே சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த நபர் யுவதியை மறித்து தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார். 

யுவதியை பிடித்த மர்ம மனிதர் தன் வசமிருந்த கத்தியை எடுத்து தாக்குதல் நடத்த முயற்சித்த போது யுவதி கூச்சலிட்டு கத்தியுள்ளார். இதனையடுத்து அயலில் நின்றவர்கள் ஒன்று கூடியதை அடுத்து மர்மமனிதன் மோட்டார் சைக்கிளில் தப்பியோடியுள்ளார். 

இச் சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. தனக்கு நேர்ந்த ஆபத்து குறித்து நிதிசானி விபரிக்கையில்: எனது சொந்த இடம் குருநாகல் ஆகும். தொழில் காரணமாக இங்கு வந்து தங்கியுள்ளேன். மாலை 5.45 மணியளவில் வேலை முடித்து பஸ்ஸில் வந்து கணேஸ்வீதியில் இறங்கி சங்கமம் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு சென்று கொண்டிருந்தேன். கணேஸ் வீதி பள்ளிக்கு முன்பாக உள்ள வீதியில் நான் வரும் போது சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் திடீரென எனது முன் வந்து என்னை மறித்து எனது இடது மார்பகத்தைப் பிடித்தார். அதேநேரம் பையிலிருந்து எதனையோ எடுக்க முயன்ற வேளை நான் கூச்சலிட்டுக் கத்தினேன். இதனையடுத்து குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் திருகோணமலை பக்கமாக தப்பிச் சென்று விட்டார். 

எனக்கு இரு நகக்கீறல் காயங்கள் மட்டுமே ஏற்பட்டன. வந்த நபர் சிவப்பு தலைக் கவசத்தையும் அணிந்திருந்தார். அவர் தப்பியோடும் போது கத்தியொன்றின் உறையையும் கைவிட்டுச் சென்று விட்டார். இதனையடுத்து பொலிஸுக்கு தகவல் தெரிவித்தோம். பின்னர் பொலிஸார் வராததால் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறையிட்டோம் என்று தெரிவித்தார். ___




http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=33227
vv
wwwwwwww,

0 comments:

Post a Comment