widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Saturday, August 13, 2011

ஏறாவூரில் இடம்பெற்ற ஷுஹதாக்கள் நினைவு தின நிகழ்வுகள்


-ஏ.எச்.ஏ. ஹூஸைன், ஏறாவூர்-
1990 ம் ஆண்டு ஏறாவூரில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பினரால் நிகழ்த்தப்பட்ட முஸ்லிம் இனப் படுகொலையின் 21 வது ஆண்டை நினைவு கூரும் ஷுஹதாக்கள் தின நிகழ்வு படுகொலை செய்யப்பட்டவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஏறாவூர் நூருஸ்ஸலாம் பள்ளிவாயலில்  (காட்டுப்பள்ளிவாயல்) வெள்ளிக்கிழமை (12.08.2011) அஸர் தொழுகையின் பின்னர் இடம்பெற்றது.
இந்த நினைவு நிகழ்வுகளில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், ஊர்ப்பிரமுகர்கள், உலமாக்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். சுபைர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
ஏறாவூர் பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நினைவு நிகழ்வில் குர்ஆன் ஓதல், நினைவுச் சொற்பொழிவுகள் மற்றும் துஆ பிரார்த்தனை என்பனவும் இடம்பெற்றன.
ஏறாவூரில் புலிகள் இயக்கத்தினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட இவ்வினச்சுத்திகரிப்பு நடவடிக்கைகயில் ஒரே இரவில் வீடுகளிலிருந்த 121 பேர் பயங்கரவாதிகளால் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டதுடன் இருநூறு பேருக்கு மேல் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Source: Kattankudi.info

0 comments:

Post a Comment