widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Wednesday, August 10, 2011

கிறீஸ் பூதத்தை விடுவித்ததாக பரவிய வதந்தியால் பொலிஸாருக்கு தர்ம அடி!


கிறீஸ் பூதம் என அழைக்கப்படும் மர்ம மனிதர் ஒருவரை பொலிஸார் விடுவித்துள்ளதாக வதந்தி பரவியதை அடுத்து பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தை தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தில் 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு மவாட்டம் வாழைச்சேனையில் இச்சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது.

கிறீஸ் பூதம் என அழைக்கப்படும் மர்ம மனிதர் ஒருவர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி பிரதேசத்தில் வீதியில் இன்று காலை சென்றுகொண்டிருந்த 31 வயதான பெண்ணொருவரை தாக்கியதாகவும், குறித்த சந்தேகநபரை பொதுமக்கள் துரத்திப்பிடித்து தாக்கினர். காயமடைந்த நிலையில் அந்நபரை பொலிஸார் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் சந்தேகநபரை பொலிஸார் விடுதலை செய்துவிட்டனர் என்ற வதந்தி பரவிய நிலையில் ஓட்டமாவடி பிரதேசத்தில் பொலிஸார் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் 4 பொலிஸ் உத்தியோகத்தர்களும் காயமடைந்த குறித்த சந்தேகநபரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இரு பொலிஸ் வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்களும் இந்த மோதலில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்தினை தொடர்ந்து ஓட்டமாவடி பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதுடன் படையினர் வரவழைக்கப்பட்டு மேலதிக பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


0 comments:

Post a Comment