widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Saturday, July 30, 2011

நெருங்கி விட்டது ரமளான் மாதம்


அல்லாஹ்வின் திருப்பெயரால்....

شَهْرُ رَمَضَانَ الَّذِيَ أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ...

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும்... திருக்குர்ஆன். 2:185
நெருங்கி விட்டது ரமளான் மாதம்

ஆண்டான் - அடிமைதலையில் பிறந்தோன் – காலில் பிறந்தோன்கருப்பன்- சிவப்பன் என்ற அடிமை விலங்கை உடைத்தெறிந்து ஆதமின் மக்கள் அனைவரும் சமமே என்று முழங்கிய திருமறைக் குர்ஆன் இறங்கிய அருள்மிகு மாதம் நெருங்கி விட்டது.

பெண் சிசுவை உயிருடன் புதைத்துபெண் இனத்திற்கு ஆன்மா உண்டா என்று ஆய்வுக்குட்படுத்திய பெண்ணடிமைத் தனத்தை உடைத்தெறிந்து ஆணும் - பெண்ணும் ஓரினமே என்று முழங்கிய நீதமிகு  குர்ஆன் இறங்கிய அருள்மிகு மாதம் நெருங்கி விட்டது.

நன்மை தீமைகளைப் பிரித்தறிவித்து மனிதனை மனிதனாக வாழச் செய்ய நேர்வழிக் காட்டிய  மகத்துவமிக்க குர்ஆன் இறக்கி அருளப்பட்ட மாதம் நெருங்கி விட்டது.

நிரந்தர மறுமை வாழ்வின் இன்பத்தை மறந்து நிலையில்லா உலக வளங்களின் மீது மூழ்கிக் கிடந்தவர்களுக்கு மறுமை வாழ்வின் இன்பத்தை நிணைவூட்ட நெருங்கி விட்டது ரமளான் மாதம்.

கல் நெஞ்சை கரையச் செய்து இறக்க குணத்தை வளரச் செய்த ஈகை மிகு மாதம் நெருங்கி விட்டது.

பாவங்கள் அழிக்கப்பட்டு நன்மைகள் குவிக்கப்படும் பாக்கியமிக்க மாதம் நெருங்கி விட்டது.

நரக வாயில்கள் பூட்டப்பட்டு சுவன வாயில்கள் திறக்கப்படும் நன்மையின் மாதம் நெருங்கிவிட்டது.

அமல்களின் வாசல்கள் திறக்கப்படும் அருள் மிகு மாதம் நெருங்கி விட்டது.

அருள்மிகு மாதத்தில் அமல்கள் அதிகம் செய்து அளவற்ற அருளாலனின் நிகரற்ற அன்பை அடைந்து  கொள்வோம் 

ரமளான் மாதத்தின் நன்மைகளை பூரணமாக அடைந்து கொள்வதற்கு கீழ் காணும் லிங்கை சொடுக்குங்கள்.


2-கட்டுரைகள் கேள்விகள்

3- ஆடியோ வீடியோக்கள்

5- நோன்பு குறித்த சட்டங்களை அறிந்திட

6- தராவீஹ் தொழுகை

7-பெருநாள் தொழுகை
பெருநாள் தக்பீர் முறை என்ன
பெருநாள் தொழுகை சட்டங்கள்
பெருநாளின் தனித்தன்மை
பெருநாள் தொழுகைக்கு இரு உரைகள் உண்டா
பெருநாள் தொழுகையில் கைகளை உயர்த்துதல்
பெருநாள் தொழுகை தக்பீர் எத்தனை
பெருநாள் குர்பானி சட்டங்கள்
பெருநாள் தொழுகை சட்டங்கள்
பெருநாள் தினத்தில் தொழுகைகளுக்குப் பின் தக்பீர் கூறுதல்
பெருநாள் தொழுகை தக்பீர் எத்தனை

நோன்பு - கேள்விகளின் தொகுப்பு
துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பது சரியா?
நாளின் ஆரம்பம் எது?
ஆறு நோன்பு வைப்பது நபிவழியா?
நோன்பு வைத்துக் கொண்டு இரத்தம் கொடுக்கலாமா? குளுகோஸ் ஊசி போடலாமா?
நோன்பை தாமதமாக திறத்தல்
விட்ட நோன்பை கற்பிணிகள் நிறைவேற்றுவது ஆவசியமா?
ஆஷீரா நோன்பு
ஆஷீராவிற்கு பல நிலைபாடுகள்
அரஃபா நோன்பு உண்டா? 


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104.


0 comments:

Post a Comment