widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, July 15, 2011

ரிஸானாவின் விடுதலைக்கு உயிர்ப் பலி கொடுக்க முயன்ற மந்திரவாதி


எஜமானரின் குழந்தையை கொன்றார் என்கிற வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு இலங்கைப் பணிப்பெண் ரிஸானா நௌபீக்கின் விடுதலைக்காக மந்திரவாதி ஒருவர் உயிர்ப் பலி கொடுக்க முயன்று இருக்கின்றார். திருகோணமலை மாவட்டத்தில் மூதூர்ப் பிரதேசத்தில் உள்ள ரிஸானாவின் வீட்டுக்கு மந்திரவாதி சென்று இருக்கின்றார்.

ரிஸானாவின் விடுதலைக்காக மந்திர பூசைகள் செய்ய வேண்டும் என்றும் பலி கொடுக்க சேவல் ஒன்று தேவை என்றும் சொல்லி இருக்கின்றார். பூசைக்கான ஆயத்தங்களை மேற்கொண்டு இருக்கின்றார். ஆனால் முஸ்லிம்களுக்கு இவற்றில் நம்பிக்கை இல்லை என்று தெரிவித்து மந்திரவாதியை ரிஸானாவின் பெற்றோர் திருப்பி அனுப்பி விட்டனர்.

0 comments:

Post a Comment