widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, July 22, 2011

மேற்குலகை சிந்திக்க தூண்டிய ஒரு மனிதர்; அஹ்மத் தீதாத்


மேற்குலகை சிந்திக்க தூண்டிய ஒரு மனிதர்; அஹ்மத் தீதாத் ரஹ்மதுல்லாஹி அலைஹி
இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த காலம் அது,

சீராத் என்பது இந்திய நாட்டின், குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமமாகும். அங்கு 1918ம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி ஹுஸைன் காஸிம் தீதாத் மற்றும் பாதிமா தம்பதியினருக்கு பிறந்தவர்தான் அந்த வீரமிகு, விவேகமிகு சிறுவன், அஹ்மத் தீதாத்.
தனது ஊரில் தந்தை ஒரு விவசாயி, தாய் அதற்கு உதவியாக இருந்து நாட்கள் நகர்ந்தன. விவசாயத்தில் தொடர்ந்த ஹுஸைன் காஸிம் தீதாத் அவர்கள் தனது உழைப்பு குடும்ப வாழ்க்கைக்கு போதியதாக இல்லை என்பதை கருத்தில் கொண்டு தென்னாபிரிக்காவுக்குப் பயணமானார். அங்கு ஒரு தையல்காரனாக தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தார்.
சிறிய வயதிலேயே தந்தையை தூரப்படுத்திய அஹ்மத் தீதாத் தனது தாய் தந்தையருடன் சேர்ந்து வாழும் காலத்தை எதிர்பார்த்திருந்த அந்த கனாக் காலம் நீங்கி தனது அறுமை தாயை 1925ம் ஆண்டு இழந்தார்கள். மகனின் தனிமையை கவனத்தில் கொண்ட தந்தை மகனை தன்னுடன் இணைத்துக் கொள்ளும் வகையில் தன்னுடன் வாழ தென்னாபிரிக்காவுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்தியாவில் வாழ்ந்த அஹ்மத் தீதாத் என்ற ஒன்பது வயது சிறுவன் தென்னாபிரிக்காவுக்கு இந்திய கடவுச்சீட்டு மூலம் போகமுடியாத நிலைக்குள்ளானார். பிரித்தானிய ஆட்சியில் இந்தியா முடங்கிக் கிடந்த காலம் அது. அதனால் பிரித்தானிய கடவுட் சீட்டுடன் 1926ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் கால் பதித்தார். வாழ்க்கையில் முதல்தடவையாக கப்பல் பயணம் மேற்கொண்ட அனுபவம் அவருக்கு.
புதிய மண், சரியாக தெரியாத சூழல், மாற்று உலகம், அறிமுகமற்ற முகங்கள், அதிசய அனுபவம் என்று ஆரம்பித்தது தென்னாபிரிக்க வாழ்க்கை.

பாடசாலை தொடக்கம் கற்காத, அரியாத ஆங்கில மொழியில் ஆரம்பித்தது வாழ்க்கைச் சூழல் ஒரு கிறிஸ்துவ மண் வாசனை வீசுவதாக காட்சிப்பட்டது.

அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் பற்றி கிடைக்கும் ஆவணச் சுருக்கங்கள்
தொட்டால் சிணுங்கிக்கென்று ஒரு வரலாறு, கட்டெரும்புக்கு என்று ஒரு வரலாறு, காட்டு எருமைக்கு என்று ஒரு வரலாறு, வேட்டைக்காரனுக்கு என்று ஒரு வரலாறு, வேளையில்லாதவனுக்கு என்று ஒரு வரலாறு என்று எது எதற்கோ எல்லாம் வரலாறு எழுதவேண்டுமென்று விவரமறியாதவர்களுக்கு விவரம் தேவைப்படுகிறது.

சத்தியம் அசத்தியம் அதன் வேறுபாடு, நாகரிகரம் அநாகரிகம் அதன் வேறுபாடு, வாழ்க்கை, விவஸ்தை அதன் வேறுபாடு என்று நெறி காட்டித்தந்தவர்கள் உலகில் பலர் மைல்கற்களாக பர்ணமிக்கிறார்கள். ஆதாரமற்றவைகளுக்கு ஆதாரம் தேடும் ஆணவர்களை தலைகுனியச் செய்த ஆன்மாக்களின் வரலாற்று தடங்கள் நிறையவே இருக்கின்றன.
முஸ்லிம் உலகில் சிங்கமாய், சிகரமாய், சீரிய வரலாறு அஹ்மத் தீதாத் என்ற ஒரு அறிஞருக்குமுண்டு.
கிறிஸ்தவர்கள் நிறைய பேர் நன்றி சொல்ல வேண்டிய ஒரு மனிதர் இவர்.

காரணம் அவர்கள் சிந்திக்கக் கற்றது இவரில் தான்.

அந்த அறிஞருக்கு பல வரலாற்றுத் தகவல்கள், ஆவணச் சுருக்கங்கள் இன்று பிற மொழிகளில் கிடைக்கின்றன. குறிப்பாக ஆங்கிலம், சூளு, ஆபிரிக்கானா, அரபு போன்ற பல மொழிகளில் கிடைக்கப்பெருகின்றன.

அவைகளில் இங்கு தமிழிலும் ஒன்று:

1) 2006 நவம்பர் 17ம் திகதி கானூ குடியரசைச் )Kanoo state) சேர்ந்த ஆளுநர் மாலம் இப்ராஹிம் செகாரு (Governer Malam Ibrahim Shekarau) தனது குடியரசு சார்பாக இரண்டு பேர் கொண்ட ஒரு தூதுக்குழுவை அறிஞர் அஹ்மத் தீதாதின் வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.
அறிஞர் அஹ்மத் தீதாத் முஸ்லிம் உலகிற்கு ஆற்றிய சேவையை கெளரவிக்கும் நோக்கிலும் ஷேக் அஹ்மத் தீதாதை பிரிந்த கவலையில் இருக்கும் அவரின் வீட்டாருக்கு ஆறுதல் கூறும் எண்ணத்துடனும் இந்த ஏற்பாடு அமைந்திருந்தது.
இவர்கள் இருவரும் தெர்பன், தெந்நாபிரிக்கா (Durban, South Africa) வில் அமைந்துள்ள ஷேக் அஹ்மத் தீதாத் அவர்களின் இல்லத்திற்கு விஜயம் செய்து அவரது மகன் யூசுப் அஹ்மத் தீதாத் அவர்களை கண்டு தங்களது செய்திகளை பரிமாரிக்கொண்டனர்.
இவர்களின் வருகையை மையமாக வைத்து "ஷேக் அஹ்மத் தீதாதின் வாழ்க்கை ஒரு விசித்திரமான வரலாறு" (My Father Sheikh Ahmed Deedat, A moving story) என்ற தலைப்பில் ஒரு ஆவண தகடை வெளியிட்டனர்.
ஷேக் அஹ்மத் தீதாதின் வாழ்க்கை சுருக்கத்தை சொல்லும் இந்த தகடில் அவரது மகன் யூசுப் தீதாத் அவர்கள் தனது தந்தையின் வாழ்க்கையின் முக்கிய பல செய்திகளை எமது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
இந்த ஆவணச்சுருக்கத்திலிருந்துள்ள செய்திகள் இந்த புத்தகத்தில் வேறு சில தலைப்புக்களில் உள்ளடக்கப்படுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2) ஜக்கிய அரபு இராச்சியத்தின், அபூதாபி கெளரவ ஷேக் ஸைத் பின் சுல்தான் அல் நஹ்யான் (His Royal Highness Sheikh Zaid Bin Sultan Al Nahyan) அவர்கள் ஷேக் அஹ்மத் தீதாதை அவரது மாளிகையில் சந்திக்க விஷேட ஏற்பாடு செய்திருந்தார். இந்த சந்திப்பின் போது முஸ்லிம் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் பாராட்டத்தக்கது என்று ஷேக் அஹ்மத் தீதாத் அவர்கள் இஸ்லாத்தின் சேவகன் (the servent of Islam) என்ற கருத்தையும் உலக மக்களுக்கு பதிவு செய்தார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து அபூதாபியிலுள்ள தொலைக்காட்சி அலைவரிசை (UAE TV 2 )யில் Sheikh Ahmed Deedat on the spotlight என்ற தொனியில் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியும் மேடையேற்றப்பட்டது.
இந்த நேர்காணல் நிகழ்ச்சியில் தனது வாழ்க்கையின் வீழ்ச்சி, வளர்ச்சி, தான் எதிர்நோக்கிய சவால்கள், முகங்கொடுத்த முக்கிய சந்தர்ப்பங்கள் என்று பல செய்திகளை எமக்கு தந்திருக்கிறார்.
இந்த புத்தகத்தில் இடம்பெரும் தகவல்களுக்கு அவரது இந்த பேட்டியும் ஒரு முக்கிய ஆதாரமாக அமையும் என்பது மறக்காமல் சொல்லவேண்டிய ஒரு செய்தியாகும்.
3) சர்வதேச இஸ்லாமிய அழைப்பு மையம் (IPCI) அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்களின் வாழ்க்கைச் (Ahmed Deedat a Man with a Mission / the life and times of Sheikh Ahmed Deedat) சுருக்கம் என்ற தலைப்பில் ஒரு கானொலி தகடு வெளியிட்டிருந்தனர்.
இந்த சிறிய வரலாற்றுக்குறிப்பில் அவர்கள் வாழ்ந்த வீடு, படித்த பாடசாலை, வேலை செய்த தொழிற்சாலை, அவர் ஸ்தாபித்த அஸ் ஸலாம் கல்வி நிருவனம் மற்றும் வேறு சில முக்கிய காட்சிகளை உள்ளடக்கியதாக அமைத்திருக்கின்றார்கள்.
அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் தஃவா பணியின் போது அவர் கையாண்ட நுட்பங்கள், சாணாக்கியங்கள் தொடர்பான பல செய்திகளையும் சொல்லியிருக்கிறார்.
4) Dr. சாகிர் நாய்க் அவர்கள் பல இடங்களில் அறிஞர் அஹ்மத் தீதாதி வரலாற்றை சிறு சிறு துணுக்காக, தேவைப்படுகின்ற போது தேவையான விதத்தில் சொல்லியிருக்கிறார்.
5) Dr. ஜாகிர் நாய்க் அவர்களின் தலைமையில் இயங்கும் Peace தொலைக்காட்சி அலைவரிசையில் அறிஞர் அஹ்மத் தீதாதின் சொற்பொழிவுகள், விவாதங்கள், சிந்தனைகள் ஒலிபெருக்கப்படுவதுடன் தேவையான சந்தர்ப்பத்தில் இடத்தில், அவரது வரலாற்றின் பகுதிகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.
6) எழுத்துவடிவில் கட்டுரைகளாக பல ஆக்கங்கள் இணையத்தளங்களில் கிடைக்கின்றன. (அந்த இணைத்தள விபரங்களை இந்த தொடரின் முடிவில் வெளியிடுவோம்.)

சந்தித்த விவாத மேடைகள்
அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் பல விவாத களங்களில் காலூன்றியிருக்கின்றார்கள்.

அவைகள் அனைத்தும் வரலாற்றில் மைல் கற்களாகவும், உலக மக்களுக்கு பாரிய பிரயோசனங்களை வகுத்துக் கொடுக்கக் கூடியவைகளாகவும் இருந்து வருகின்றன.
அந்த விவாதங்களில் ஒரு சில இங்கு குறிப்பிடத்தக்கவை:
1. ஏ. டபுல்யு. ஹாமில்டன் (A.W. Hamilton of Kimberle) என்பவருடன் 1961ம் ஆண்டு செய்த விவாதம்.
2. பேராசிரியர் சிரில் சிம்கின்ஸ் (Cyril Simkins - Professor of New Testament Exegesis from Tennessee) என்பவருடன் ஒரு விவாதம் 1963ம் ஆண்டு நடந்தேரியது.
3. 1966ம் ஆண்டு பிரபல பைபிள் அறிஞர் டேவிட் லூகெல் (David - prominent Seventh Day Adventist) என்பவருடன் ஒரு விவாத மேடையில் சந்தித்தார்.
4. பாலஸ்தீன அமெரிக்க அறிஞர்களில் ஒருவரான கலாநிதி. அனிஸ் சரோஸ் (Dr. Anis Sarrosh) என்பவருடன் இரு தடவைகள் விவாதம் செய்யப்பட்டன.
o 1985ம் ஆண்டு டிசம்பர் மாதம் "இயேசு கடவுளா?" (is Jesus God?) என்ற தலைப்பிலான விவாதம் "Royal Albert hall – UK" ரோயல் ஆல்பர்ட் ஹாலில் நடந்தேறியது,
o 1988ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி இங்கிலாந்திலுள்ள பிர்மிங்கம் (Birmingham- United statues)ல் "இறை வேதம் அல் குர்ஆனா அல்லது புனித பைபிளா?" என்ற (the Quran or Bible, which is God’s word?)" தலைப்பில் ஒரு விவாதமும் அரங்கேற்றப்பட்டன.
o இவர்களால் நடத்தப்பட்ட விவாதத்தில் தான் முதன் முதலில் கேள்வி பதில் என்ற ஒரு நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டு விவாத மண்டபத்திற்கு சமூகமளிக்கும் பொதுமக்களுக்கு கேள்வி கேட்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
5. "சிலுவை மரணம் நிஜமா அல்லது கற்பனையா?" (Crucifixion: Fact or Fiction.) என்ற தலைப்பிலான விவாதம் கலாநிதி இராபர்ட் டக்லஸ் (Dr. Robert Douglas, PhD) அவர்களுடன கான்சாஸ் பல்கலைக்கலகத்தில் (Zwimmer Institute) at the University of Kansas நவம்பர் 1986ம் ஆண்டு நடந்தேறியது.
o இந்த விவாதத்தின் போது அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் சிலுவை மரணம் கற்பனை என்பதை தோலுரித்துக் காட்டியதுடன் இயேசுவின் நிலை என்ன? என்ற கேள்விக்கு விடை சொல்லத் தெரியாது திகைத்து தலைப்பை மாற்றிய கலாநிதி இராபர்ட் டக்லஸ் அவர்களின் காட்சி கவலைக்குரியத்தும் சிந்திக்கத்தக்கதுமாகும்.
•அதே மேடையில் "இயேசு யோனா போன்று" என்ற கீழ் வரும் பைபிள் வசனம் கூறும் யோனாவின் அடையாளம் என்பது எப்படியானது (WHAT WAS THE SIGN OF JONAH?) என்ற கேள்விக்கு தலை சிறந்த பல பெரிய பைபிள் அறிஞர்களால் பதிலளிக்க முடியவில்லை என்பதையும் அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் பகிரங்கமாக கூறினார்கள்.
(அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக; இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுக்ஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்." (மத்தேயு 12 :39 -40)
-இந்த பைபிள் வசனத்தை விளக்கும் முகமாக யோனா வின் அடையாளம் என்ன? (WHAT WAS THE SIGN OF JONAH?) என்ற தலைப்பில் அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் ஒரு புத்தகமும் வெளியிட்டிருக்கிறார்கள்.
6. 1984ம் ஆண்டு வத்திகான் மாநகரில் பகிரங்கமான விவாதமொன்றுக்கு அறிஞர் தீதாத் அவர்கள் இரண்டாம் ஜான் பவுல் அவர்களுக்கு சவால் விட்டிருந்தார். அதற்கு அவர், "விவாதம் நடப்பதாக இருந்தால் மூடப்பட்ட அரையில் தான் நடக்க வேண்டுமென்று" மறுத்துவிட்டார். இவர் பின்வாங்கியதனால் 1985ம் ஆண்டு அது தொடர்பான துண்டுப்பிரசுரம் ஒன்றையும் அஹ்மத் தீதாத் அவர்கள் வெளியிட்டிருந்தார்.

7. 1991ம் ஆண்டு இரண்டு முக்கிய விவாதங்கள் இடம்பெற்றன,

o கிறிஸ்துவ அறிஞர் பாஸ்டர் ஸ்டான்லிவ் ஸ்ஜோபர்க் (Pastor Stanley Sjய்berg) என்பவருடன் சுவிடனில் ஸ்டொக்லம் (Stockholm) நகரில் "புனித பைபிள் உண்மையான கடவுள வார்த்தைகளா?" என்ற தலைப்பில் ஒன்றும்
o அதே ஆண்டு டென்மார்க்கில் (Copenhagen - Denmark) பாஸ்டர் எரிக் பொக் (Pastor Eric Bock) என்கின்ற அறிஞருடன் இயேசு கிறிஸ்து கடவுளா? (Is Jesus God?) என்ற மகுடத்தில் இரண்டாவது ஒரு விவாதமும் இடம்பெற்றது.
8. மேற்கத்திய தொலைக்காட்சி திரைகளில் அதிகம் பேசப்பட்ட, கிறிஸ்து உலகம் நம்பிய பைபிள் பேரஞர்களில் ஒருவரான ஜிம்மி சுவேகாத் (Jimmy Swaggart) என்ற அமெரிக்கருடனான விவாதம், அறிஞர் அஹ்மத் தீதாதின் அறிவையும் அந்தஸ்தையும் உலக மக்களிடத்தில் மிக ஆழமாக படம்பிடித்து காட்டியது என்றால் மிகையாகாது. இந்த விவாதம் 1986ம் ஆண்டு பைபிள் அறிஞர் ஜிம்மி சுவேகாத் அவர்களின் சொந்த நகரில் லூசியான பல்கலைக்கழக மண்டபத்தில் (University of Louisiana) எட்டாயிரத்திற்கும் மேலான மக்கள் கலந்துகொள்ளும் விதத்தில் அறங்கேறின. இந்த விவாதத்தில் "பைபிள் கடவுள் வார்த்தைகளா?" (is Bible Gods word?) என்ற தலைப்பில் இது அமைந்திருந்தது.
o அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் இந்த விவாத்ததின் போது அறிஞர் ஜிம்மி சுவேகாத் அவர்கள் எழுதிய பல புத்தகங்கள் பற்றியும் மேற்கத்திய நாடுகள் சரியான வழிகாட்டல்கள் இல்லாமல் ஒழுக்க சீரழிவுக்குள்ளாகி இருப்பது பற்றியும் மக்களுக்கு மிகச் சுருக்கமாக விளக்கினார்.
o இந்த விவாத்ததின் போது மேற்கத்திய கிறிஸ்தவ உலகம் (western Christian society) நம்பிய ஜிம்மி சுவேகாத் அவர்களால் பைபிள் கடவுள் வார்த்தைகள் என்பதை சரியான ஆதாரங்கள் என்பதை ஏற்றுக்கொள்ளத்தக்க, அறிவுப்பூர்வமாக விளக்கமுடியாமல் திகைத்த்துடன் இது கடவுள் வார்த்தைகள் தான் என்பதற்கு இந்த பைபிளை படிப்பதால் பின்பற்றுவதால் தான் நேர்மையான நல்ல மனிதனாக இருக்கிறேன் என்று சாதாரணமாக கூறி பார்வையாளர்களின் இழிபார்வைக்குள்ளானார். இவ்வாறு பகிரங்கமாக சொல்லி ஒரு சில மாதங்களில் இரு தடவை பாலியல் குற்றச்சாட்டில் மாட்டிக்கொண்டு சந்தி சிரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
o இஸ்லாம் 4 திருமணத்தை அங்கீகரிப்பதாகவும் கிறிஸ்தவம் ஒரு திருமண முறையை அனுமதிப்பதாகவும் கூறிய அவர் தான் எனக்கு பிடித்த ஒரே ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்திருப்பதாகவும் கூறினார். கூறி சில மாதங்களில் பாலியல் குற்றவாளியாக மாட்டி உலகம் சிரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது இங்கு மறக்காமல் சொல்ல வேண்டிய அம்சமாகும்.
o விவாதம் நடந்தேறிய திகதியிலிருந்து தொடர்ந்து வந்த ஜந்து வருட பகுதியில் 2 பெரிய பாலியல் சம்பவங்களில் சிக்கி சந்தி சிரித்தது உலகமறிந்த உண்மை.
o அல்ஹம்துலில்லாஹ், எல்லாப் புகழும் அல்லாஹூக்கே, இந்த விவாத்திற்கு பின் மேற்க்குலகில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு பாரிய மதிப்பும், கெளரமும் கிடைத்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
9. A televised debate - channel SABC, Islam and Christianity - Cape Town - South Africa - 1984
"இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவம்" என்ற தலைப்பில் ஒரு விவாதம் 1984ம் ஆண்டு தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் (Cape Town - South Africa) இயங்கிவரும் SABC என்ற தொலைக்காட்சி அலைவரிசையினால் ஏற்பாடு செய்யப்பட்டது, அதில் முஸ்லிம்கள் சார்பாக அஹ்மத் தீதாத் மற்றும் மெளானா ஏ. ஆர். சூபி அவர்களும் கிறிஸ்துவர்கள் சார்பாக பாதர் பொனாவெந்தர் ஹின்வுட் (father Bonaventure Hinwood) மற்றும் ஜான் கில்கிரிஸ்ட் ( John Gilchrist) ஆகியோரும் பங்கேற்றனர்.
10. 1985ம் ஆண்டு July 7அமெரிக்க கிறிஸ்தவ போதகர் Professor Floyd Clark ஒரு விவாதம் பிரித்தானிய ரோயல் ஆல்பர்ட் மண்டபத்தில் Royal Albert Hall - LONDON – Britain ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வழமை போல் இந்த விவாதத்திலும் கிறிஸ்தவ சகோதர்கள் கைசேதத்துடன் வீடு திரும்பினர்.
சிலுவை என்பது உண்மையா? (Is the crucifixion of Christ, right?) என்ற தலைப்பில் கனடாவில் (Maple Leaf Gardens - Canada.) கிறிஸ்தவ அறிஞர், போதகர் வெஸ்லி ஜெனரல் (ً
wesley H. Wakefield General) அவர்களுடன் ஒரு விவாத்த்தில் அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் மேடையேறினார்கள்.


அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் கலந்துகொண்ட விவாதங்களை மிக அமைதியா செவியுறுகின்ற போது புதுமையாக அறிவுபூர்வமான பல தந்திரங்களும், வழிகாட்டல்களும், தேவையான வழிகாட்டல்களும் எமக்கு கிடைக்கும்.

பைபிளை கடவுள் வார்த்தைகள் அல்லது இயேசு கடவுள் அல்லது இயே கடவுள் மகன் என்று நிரூபிக்க வரும் எந்த கிறிஸ்துவ சமூக பிரதிநிதிகளும், அல்லது கிறிஸ்துவ உலகில் பிரபல்யம் பெற்றுள்ள எந்த பைபிள் அறிஞர்களும் விவாதத்தின் போது போதுமான அல்லது தேவையான இடங்களில் பைபிள் வசங்களையோ அல்லது அதற்கு எதிர்தரப்பில் இருக்கும், புனித இஸ்லாம் மார்க்கம் சார்பாக பேச வந்த அஹ்மத் தீதாத் அவர்களால் வேத நூலாக கொண்டுள்ள அல்குர் ஆனிலிருந்தோ எந்த வசனக்களையும் சரியான மக்கள் நம்புகின்ற அளவுக்கு வசன வாக்கிய எண்களுடன் கேடிட்டுக்காட்டியதாக அல்லது எதிர்தரப்பில் இருக்கும் இஸ்லாமிய அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் ஆதாரங்களாக காட்டும் எந்த பைபிள் வசங்கலையும் அல்லது அல்குர் ஆன் வசங்களையும் அல்லது ஏனைய வரலாற்று ஆதாரங்களை நியாயமாக மறுத்து பேச முடியாத சாதாரண பாமர மக்களை போன்று கலந்துகொண்டதை இன்று வரை அந்த காட்சி வீடியோக்கள் எமக்கு சான்றுபகர்வனவாக இருக்கின்றன.
எந்த விவாதங்களையும் கருத்தூந்திப்பார்க்கும் போது, ஒரு ஆச்சரியமான செய்தி புலப்படும். அதாவது, அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்களுக்கு எதிரணியில் விவாதிக்க வரும் எவரும் சுதந்திரமாக, ஆழமாக திடகாத்திரமாக தங்களது கருத்துக்களை, விவாத தகவல்களை அல்லது கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான விடையை வழங்கியதாக சரித்திரம் இல்லை.
இதிலிருந்து ஒரே ஒரு உண்மை மட்டும் தெரிகின்றது, அதாவது சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது, அசத்தியம் எப்போதும் அழிந்துகொண்டே இருக்கும் என்ற அல்லாஹ்வின் புனித வாக்கியம் மட்டும் உலகில் உண்மைப்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே அதுவாகும்.

உலக மக்களுக்கு மனந்திறந்து சொன்னவை
அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் தனது 4 தசாப்த கல அழைப்புப் பணியில் பல்வேறுபட்ட நாடுகளில் பல மேடைகளில் வாய் திறந்து சொன்ன சில செய்திகள் இன்றும் மறக்க முடியாதவைகளாகும்.

1. இஸ்லாத்திற்கு நான் ஒரு சுதந்திரமான சேவகன், என்னை நீங்கள் இலவசமாக பயன்படுத்தலாம்,
எனது இலக்கியப் படைப்புக்கள், புத்தகங்கள் எதற்கும் பதிப்புரிமை கொடுத்து வரையருக்கவில்லை. அதனால் எவர் வேண்டுமானாலும் இலவசமாக வெளியிடலாம் அல்லது போதியளவு அச்சிட்டு விற்பனை செய்யலாம்.
2. எனது ஒளி ஒலி நாடாக்களும் அப்படித்தான், எதற்கும் பதிப்புரிமை இல்லை. எவர் வேண்டுமானாலும் அதனை நல்லதுக்கு பயன்படுத்தலாம்.
3. வாழும் காலத்தில் எந்த நாட்டுக்கு, பகுதிக்கு என்னை அழைத்தாலும் எனது செலவில் நான் அங்கு வந்து நிகழ்ச்சிகள் செய்வேன், விவாதங்கள், கலந்துரையாடல்கள் என்று எந்த ஏற்பாடுகளாகட்டும் அதற்கு நான் தயார்.
4. உலகிலுள்ள முஸ்லிம் பல்கலைக்கழகங்களுக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள மாணவர்களுக்கு கருத்தறங்குகளை நடத்த எந்த நேரமும் தயாராக இருக்கின்றேன், இஸ்லாத்தைப் படித்துவிட்டு மக்களிட்த்தில் பிரச்சாரகராக கடமையாற்றும் அனைத்து அழைப்புபணியாளர்களுக்கும் மதங்களுக்கிடையில் ஒப்பீட்டாய்வு முறையைப் படிப்பிப்பதில் நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்.
5. பிற மதத்தவர்களுக்கு இஸ்லாத்தை போதிப்பதற்குத் தேவையான வழிகாட்டல்களை முஸ்லிம் மார்க்க அறிஞர்களுக்கு தெளிவுபடுத்த தயாராக இருப்பதாக தனது அபூதாபி தொலைக்காட்சி அலைவரிசைக்கு வழங்கிய நேர்காணலில் பகிரங்கப்படுத்தினார்.
6. கிறிஸ்துவ போதகர்கள் தங்கள் மதத்தை பறப்பும் பிரதேங்களின் வாழும் போது மிக்க் கவனமாக இருக்கும்படியும் அவர்களின் தூண்டிலில் சிக்குண்டு மாட்டிகொள்ள வேண்டாம் என்று அனைத்து முஸ்லிம் சகோதரர்களையும் வேண்டிக்கொண்டார்.
கிறிஸ்வ போதகர்கள் முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம்கள் போன்று நடித்தே முஸ்லிம்களை மதமாற்றிவிடும் செயல்பாட்டுடையவர்கள் என்பதையும் தெளிவுபடுத்தினார்.
7. முஸ்லிம் சமூகம் அதிகமாக அல் குர்ஆனை ஆய்வு செய்ய வேண்டும்.
8. அல் குர்ஆனுடன் பிற மதவேத நூல்களை ஒப்பீட்டாய்வு செய்து அதனை பிறருக்குப் போதிக்க முன்வர வேண்டும்.

இஸ்லாத்தை உலக மக்கள் எல்லோருக்கும் போதிப்பதற்காக பல பிற மத வேத நூல்களைத் தேடிக் கற்றுக்கொண்டது போல் பல நாட்டு மொழிகளையும் கற்றுக்கொண்டார், அவர் ஆங்காங்கே பட்டியலிட்ட சில மொழிகளை இங்கு நான் பட்டியல் படுத்தியிருக்கிறேன்.

1. குஜராத்தி,
2. ஆபிரிக்கானா,
3. ஆங்கிலம்,
4. அரபு,
5. உருது,
6. ஹிந்தி,
7. சூளு,
8. பிரான்ஸ்,
9. இந்துநெசியன்,
10. ஹீப்ரு,
11. கிரேக்,
12. ஜெர்மனி
13. பெங்காளி
14. டச்
இன்னும் பல....

0 comments:

Post a Comment