widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, July 1, 2011

முஸ்லிம்கள் தொப்பி மற்றும் ஹிஜாப் அணிந்த புகைப்படங்களை சமர்ப்பிப்பது குறித்து எழுந்துள்ள சர்ச்சை


தேசிய அடையாள அட்டைக்காக முஸ்லிம்கள் தொப்பி மற்றும் ஹிஜாப் அணிந்த புகைப்படங்களை சமர்ப்பிப்பது குறித்து எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக சுற்றாடல் பிரதியமைச்சர் ஏ. ஆர். எம். அப்துல் காதர் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் ஜகத் வி. விஜேவீரவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சில் இன்று முதலாம் திகதி விசேட கூட்டமொன்று நடத்தப்படும் என்று ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் தம்மிடம் கூறியதாக பிரதியமைச்சர் ஏ. ஆர். எம். ஏ. காதர் நேற்றுக் கூறினார்.
இவ்விசேட கூட்டத்திற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் மெளலவி ரிஸ்வி முப்தி மற்றும் முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களப் பணிப் பாளர் வை. எல். எம். நவவி ஆகியோரை அழைக்கும் படி தாம் சிபாரிசு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக பிரதியமைச்சர் காதர் மேலும் கூறுகையில் : தேசிய அடையாள அட்டைக்காக முஸ்லிம்கள் தொப்பி, ஹிஜாப், மற்றும் முக்காடு அணிந்த புகைப்படங்களை சமர்ப்பிப்பது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள விவகாரத்தை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை எனது கவனத்திற்குக் கொண்டு வந்தது. இதனடிப்படையில் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்துடன் நேற்று முன்தினம் அவசர சந்திப்பொன்றை நடத்தினேன்.
தேசிய அடையாள அட்டைக்காக முஸ்லிம்கள் தொப்பியோ அல்லது ஹிஜாப் மற்றும் முக்காடு அணிந்த புகைப்படங்களை சமர்ப்பிப்பது குறித்து முன்னொரு போதுமே சர்ச்சை எழுந்தது கிடையாது. பயங்கரவாதம் நிலவிய போது கூட இது பிரச்சினையாகவில்லை. நான் சுமார் 25 வருடங்களாகத் தொடராக பாராளுமன்ற உறுப்பினராக உள்ளேன்.
ஆனால் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அமைதி, சாமாதானத்தை ஏற்படுத்தியுள்ளார். அத்தோடு இன, மத, மொழி, பிரதேச பேதங்களைப் பாராது அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்றார். எமது ஜனாதிபதி ஒரு போதுமே இன ரீதியாக சிந்திக்காதவர்.
இப்படியான நிலையில் தேசிய அடையாள அட்டைக்காக முஸ்லிம்கள் தொப்பி மற்றும் ஹிஜாப் அணிந்த புகைப்படங்களை சமர்ப்பிப்பதை சர்ச்சையாகி இருப்பது ஆச்சரியத்தையும் கவலையும் தருகின்றது.
ஆகவே தற்போது எழுந்துள்ள இச் சர்ச்சையை நியாயமாகவும், சுமுகமாகவும் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். அவருடனான சந்திப்பு திருப்திகரமானதாக அமைந்திருந்தது. அதனால் இன்றைய விசேட கூட்டத்தில் திருப்திகரமான முடிவுகள் வெளியாகலாம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Source: Thinakaran

0 comments:

Post a Comment