widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, July 15, 2011

கரடியனாறு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி


மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

பதுளை- கொழுவாமடு வீதியில் இன்று முற்பகல் 10 மணியளவில் இந்தவிபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

ரிப்பர் வண்டியொன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் வண்டியின் சாரதியும், உதவியாளரும் பலத்த காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 comments:

Post a Comment