widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Sunday, July 24, 2011

தாயினால் கிணற்றில் வீசப்பட்டு ஆறு மாதக் குழந்தை பரிதாப மரணம்: ஹைறாத் பகுதியில் சம்பவம்


காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி ஆறாம் குறிச்சியில் தாயொருவர் தனது ஆறுமாதக்குழந்தையை கிணற்றினுள் வீசி குழந்தையை கொலை செய்த சம்பவமொன்று இன்று (24.7.2011) காலை இடம்பெற்றுள்ளது.
ஹைறாத் நகரிலுள்ள வீடொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாலமுனைக்கிராமத்தில் வசித்து வரும் இத்தாய் தனது குடும்பத்தகராறு காரணமாக காத்தான்குடியிலுள்ள அவரது சகோதரியின் வீட்டுக்கு வந்து இன்று காலை சகோதரியின் வீட்டு கிணற்றினுள் தனது குழந்தை வீசியுள்ளார். இதையடுத்து குழந்தை கிணற்றினுள் உயிரிழந்துள்ளது.
இச்சம்பவத்தை கேள்வியுற்ற இந்த வீட்டு அயலவர்கள் காத்தான்குடி பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிசார் ஸ்த்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை ஆரம்பித்தள்ளனர்.
பாத்திமா ஹனா எனும் ஆறுமாதக்குழந்தையே இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய் ஜெமீலா என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இக்குழந்தையின் தந்தை வெளியூர் ஒன்றில் தொழில் செய்துவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment