widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Tuesday, July 5, 2011

சம்மாந்துறை வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் சுபைர் உடனடி விஜயம்


சம்மாந்துறையிலுள்ள பாடசாலையொன்றில் நீர் நஞ்சானதால் அதைப்பருகிய மாணவர்களுக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் குறித்த சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை நடாத்துமாறு பிரதிப்பொலிஸ் மா அதிபர் குணவர்த்தனவுக்கு தான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
இச்சம்பவத்தை கேள்வியுற்ற தான் உடனடியாக சம்மாந்துறை வைத்தியசாலைக்கு விஜயம் செய்து அங்கு நிலைமைகளை நேரில் அவதானித்ததுடன் அங்கு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கவும் அவசர சிகச்சைப்பிரிவில் தேவையான வைத்தியர்களை ஏனைய இடங்களில் இருந்து வரவழைக்கவும் நடவடிக்கை எடுத்ததாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இச்சம்வபம் தொடர்பாக முழுமையான விசாரணைகளை நடாத்தி அது தொடர்பான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு தான் கிழக்கு மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா  அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தற்போது மாணவர்கள் தேறிவருவதாகவும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் மாகாண சுகாதார அமைச்சர் சுபைர் மேலும் தெரிவித்தார்.
Source; Kattankudi.info

0 comments:

Post a Comment