widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, April 20, 2012

ஹிந்தாவின் ஈரலும், மஹிந்தாவின் கீறலும்


மதியன்பன்-
ஆயுதப் படைகளின் ஆசியுடன்
அல்லாஹ்வின் இல்லத்துள்
இன்று
அத்துமீறல் அரங்கேறியது.
பேரினவாதிகளின்
மற்றுமொரு
போரியல் பொறிமுறை..!
இதை
கண்டிக்கவும், தண்டிக்கவும்
தைரியம் யாருக்கு உண்டு..?
முள்ளுக்கு வாலாட்டும்
முதுகெலும் பில்லா இவர்களால்
என்னதான் செய்ய முடியும்..?
ஜெனீவாவில்
பிரேரணை யென்றால்
பள்ளிகளில் பகிரங்க அறிவிப்பு
அரசுக்கு ஆசிவேண்டி
ஆர்ப்பாட்டங்களும் பிரார்த்தனைகளும்
வெற்றுக் கோசங்களோடு
பெஜ்ரோக்களில் வரும்
நம் தலைவர்கள்
எங்கே போனார்கள்..?
பள்ளிகளுக்குள் சுட்டபோது
நாம்
பாத்திஹா ஓதிக் கலைந்தோம்.
கபுறடியை உடைத்த போது
நாம் கதைகள் சொல்லி பிரிந்தோம்
இப்போது
பள்ளியை உடைக்கிறார்கள்.
நாம்
பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
என்ன கவலை..?
எங்கே போனது
எம் தலைவர்களின்
ஈமானின் ஈரத்தன்மை!
இருப்புக்களும்
இனிமேல் கேள்விக் குறிதானா..?
ஹிந்தாவின்
ஈரல் கதை சொல்லும்
உலமாக்களே
மஹிந்தாவின் கீறல் கதை
சொல்லமாட்டீர்களா..?
முஸ்லிம்களை குறிவைக்கும்
இந்த
மாற்று அரசியலிடம்
தோற்றுப்போன சமூகத்தை
தூக்கிவிட யார் முன்வருவீர்கள்;..?
தலைவர்களே..?
முதலமைச்சர் கோசத்தை
கொஞ்சம் தள்ளி வைத்துவிடுங்கள்.
முஸ்லிம்களின்
பள்ளிகளையும், இருப்புக்களையும்
பாதுகாக்க வழி சொல்லுங்கள்.
கள்ளியங்காட்டில்
பறிபோனது
நமது பூர்வீகப் பள்ளி வாயல்.
இப்போது
ஐம்பது வருடத்துப் பள்ளிவாயல்
தம்புள்ளயில்  தரைமட்டமாகிறது.
அரச வைபவம் அத்தனைக்கும்
சிரசாய் நின்று
துஆ ஓதும் உலமாவே..!
நீங்களாவது மஹிந்தவிடம்
………………………?
அல்லாஹ்விடம்
நாங்கள் கேட்கிறோம்

0 comments:

Post a Comment