widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Wednesday, March 28, 2012

ளுஹா தொழுகை


ஆன்சார் தப்லீகி

சிலர் ளுஹா தொழுகை தொழ வேண்டும் எனக் கூறுகிறார்கள்.இதேவேளை நபி (ஸல்) அவர்கள் 
தொழவில்லை எனவும் கூறுகின்றார்கள் . இதன் நிலைப்பாடு என்ன?
விடை
ளுஹா தொழுகை தொடர்பாக நபி (ஸல்) அவர்களைத் தொட்டும் வரக் கூடிய ஆதாரமான 
ஹதீஸ் களை நாம் பார் க்கும் போது இதற் கான பதிலை தெரிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் பெரும்பாலும் ளுஹா தொழமாட் டார்கள். ஆனால் வெளியில் சென்று வந் தால் 
தொழுவார் கள்.
இதை ஆயிஸா (ரழி) அவர் கள் அறிவிக் கின்றார்கள்.
அப்துல் லாஹ் பின் ஸகீக் கூறுகின்றார் நபி (ஸல்) அவர்கள் ளுஹா தொழுபவர்களாக 
இருந்தார்களா ? என ஆயிஸா (ரழி) அவர் களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'இல் லை . 
வெளியிலிருந்து வந் தால் தவிர'' என பதிலளித் தார் கள். (புகாரி)
இவ்வாறே மக்கா வெற்றியின் போது நான் நபி (ஸல்) அவர் களிடம் சென்றிருந் த வேளையில் 
அவர் கள் எட் டு ரக் அத்துகள் தொழுததாக உம்முஹானி (ரழி) அவர் கள் கூறுகிறார்கள். (புகாரி).
இதேவேளை நான் கு ரக்அத்துகளும் தொழுபவர் களாவும் இருந்திருக் கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் எத் தனை ரக் அத்துகள் ளுஹா  தொழுபவர் களாக இருந் தார்கள் என ஆயிஸா 
(ரழி) அவர்களிடம் கேட்ட போது நான்கு ரக்அத் தொழுபவர் களாக இருந் தார்கள். மேலும் 
அதைவிடவும் கூடுதலாகவும் தொழுவார்கள். (புகாரி)
ஏன் தொடராக தொழவில்லை?
மக்களுக்கு பர்ளாக் கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தொடர்ச்சியாக அதைத் தொழாதவர் களாக 
அவர்கள் இருந் திருக்கிறார் கள் என்பதையும் ஆயி~h (ரழி) அவர் கள் பின்வருமாறு 
விளக்குகிறார் கள்.
நபி (ஸல்) அவர்கள் ஓர் சில அமலை அவர்கள் செய் வதை பார் த்து மக் களும் செய் தால் மக்கள் மீது 
கடமையாக் கப்பட்டு விடுமோ எனப் பயர் கின்ற போது அதை செய்வதற்கு விரும்பினாலும் அதை 
செய்வதை விட்டுவிடுவார்கள். நபி (ஸல்) அவர் கள் அறவே ளுஹா தொழவில்லை (வெளியில் 
இருந்து வந் தால் தவிர) . ஆனால் நான் தொழுது வருகின்றேன். (புகாரி)
ஏனையவர்கள் வழமையாக்கிக் கொள்ளலாமா?
இது நபி (ஸல்) அவர்களின் நிலையாக இருந் தாலும் பிறருக்கு தொழுவதற் கு ஆசையூட்டுபவர்களாக 
இருந்துள்ளார்கள். 
அபூஹ_ரைரா (ரழி )அவர் கள் கூறுகின்றார்கள்இரண்டு ரக் அத் ளுஹா தொழுவதற்கும் ஒவ் வொரு மாதத்திலும் மூன்று நோன்பு பிடிப்பதற்கும் 
தூங்குவதற்கு முன் வித்று தொழுவதற் கும் என் னுடைய நேசர் எனக்கு உபசேதம் செய்தார்.
இதனால் தான் ஆயி~h (ரழி) அவர்களும் நபி (ஸல்) அவர் கள் தொழாவிட்டாலும் நான் 
தொழுதுவருகின் றேன் எனக் கூறியுள்ளார் கள்.
இதே வேளை இன்னும் சில ஸஹாபாக்கள் நபி (ஸல் ) அவர்கள் ளுஹா தொழவில்லை எனக் கூறி 
உள்ளனர். இப் னு உமர் (ரழி)அவர்கள் இது பித் அத் என கூறிய செய் திகளும் வந்துள்ளது. அந்த 
செய்திகள் தொழுததாக வருவதற்கு முரண்படாது.
ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் பெரும்பாலும் ளுஹா தொழுபவராக இல்லாததால் 
அதிகமானவர் களுக்கு அவர்கள் சில சந்தர்ப்பங் களில் தொழுதது தெரியாதிருந்திருக் கிறது. 
அதனால் அவர் கள் தொழவில் லை என அறிவித் திருக் கின்றார்கள்.
இதேவேளை சில சந் தர்ப்பங்களில் தொழுததை கண்ணுற்ற ஆயிஸா (ரழி) போன்ற ஒருசிலர் 
தொழுததாகவும் அறிவித்துள்ளார் கள்.
இதனாலேயே இந் த மாறுபட்ட அறிவிப்புகள் வந்துள்ளது.
எனவே முடியுமானவர்கள் வழமையாக இரண் டோ அல்லது நாலோ அல்லது எட்டோ முடியுமானதை 
தொழுதுவரலாம். தவறினால் முடியுமான நேரங்களில்  தொழுது கொள்ளலாம். அதிலும் குறிப்பாக 
பிரயானங்களிலிருந்து வந்தால் தொழுது கொள்ளலாம். 
இவ்வாறே ளுஹா நேரத் தில் ஊருக் கு வரவேண்டி ஏற்பட்டால் ஆரம்பத்தில்; பள்ளிவாயலுக்கு சென்று 
இரண்டு ரக் அத் தொழுவிட்டு பின்னர் வீட்டிற்கு வருவது நபிவழியாக வந்துள்ளதால் அதைப் போன் று 
நாமும் செய்ய பழகிக் கொள் வோமாக.
இவ்விரண்டு ரக்அத்துகள் பள்ளிக் காணிக்கையா ? அல் லது ளுஹாத் தொழுகையா ? எனும் 
சர்ச்சை இருந்தாலும் அந் த நேரத்தில் அவ்வாறு தொழுவது சுன்னாவாகும்.
Source: srilankamoors.com

கொள்கைவாதிகளுக்குள் மறைந்திருக்கும் சீதனம்


ஆசிரியர் பஹீம் தாலிப் -

கொள்கைவாதிகளே சீதனத்தை திருப்பிக் கொடுத்துவிட்டீர்களா?
பல கன்னிப் பெண்கள் கன்னிகளாகவே முதிர்ந்து விட்ட பரிதாபமான நிலமைக்கு எங்கள் இளைஞர் சமுதாயம்; கேள்வி கணக்கு 
கேட்கப்படும்  நாளில் பதில் சொல்லக் கடமைபட்டுள்ளனர்.
குர்ஆன் சுன் னாவின்; எழுச்சிக்குப் பின்னர் எங்கள் நாட்டில் சில இளைஞர்கள் மஹர் கொடுத்து திருமணம் செய்யக் 
கூடியவர்களாக சுன்னாவினடிப்படையில் இருக்கிறார்கள் . 
இது உண்மையில் மகிழ்ச்சிக்குரிய சந்தோசப்பட வேண்டிய விடயமாகும்.
தன்னை நம்பிவரும் பெண்ணுக்கு இருக்க இடமும் உடையும் உணவும் கொடுக்க எவன் சக்தி பெறவில்லையோ அவன் அவற்றை 
பெறும் வரை நோன்பு பிடிக்கட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டியிருப்பது  எந்தளவு பெண்ணுக்கு ஆண் பொறுப்பானவன் 
என்பதை காட்டுகிறது.
ஆனால் அதிகமானவர்கள் திருமணம் பேசும் புரோகிதரர்;களிடம் முதலில் கேட்பது பெண்ணுக்கு அவளுடய தாய் தகப்பன் என்ன 
கொடுப்பாங்க என்பதுதான். 
தன்னை வெட்கமின்றி விற்றுவிடும் இளைஞர்கள் இன்று எத்தனை பேர் பெருமையுடன் அதனை மற்றவர்களிடமும் பீற்றிக் 
கொள்கின்றனர்.
தன்னுடய ஆண்மையை அடகுவைத்த இத்தகையவர்களை ஆண்கள் என்று அழைக்கலாமா?
இது மட்டுமல்லாமல் இன்னும் சிலர் கொள்கையை ஏற்பதற்கு முன் னர் சீதனம் வாங்கி இருப்பார்கள்
ஒரு சிலரைத் தவிர அதிகமானவர்கள் அதனை திருப்பிக் கொடுப்பதில்லை. 
அவர்கள் சொல்லும் நொண்டிச் சாட்டு என்னவென்றால் அது என் மனைவியுடய பங்கு, அவள் எனக்கு அனுமதித்திருப்பதால் 
நான் அதனை அனுபவிக்கிறேன்.
இப்படி சொல்பவர்கள் பாமரர்கள் மட்டுமல்ல மேடையேறி மக்களுக்கு உபதேசம் செய்யும்  மௌலவிமார்களாகவும் இருப்பது 
மிகவும் கவலைக்குரிய விடயமுமாகும்.
அவர்களில் ஒருசாரார் தௌஹீத் கொள்கையை ஏற்பதற்கு முன்னும்; திருமணத்துக்கு முன்னும் மிகவும் சாதாரண நிலையில் 
இருந்தவர்கள்.
மனைவியின் தகப்பனால் இஸ்லாத்தினடிப்படையில் பிரிக்கப்படாத சொத்திலிருந்து கைக் கூலியாக கொடுத்ததை வைத்துக் 
கொண்டு அதனை முதலீடாக பயன்படுத்தி தொழில் செய்து இன்று பெரிய பணக்காரர்களாய் இருக்கின்றனர். 
பின்னர் இது தவறு என்று தெரிந்தாலும் நப்ஸ_க்கு கட்டுபட்டவர்களாக அவற்றை திருப்பிக் கொடுப்பதில்லை.  
அப்படி கொடுக்காமல் நாங்களும் தௌஹீத் வாதிகள் தான் என் று இன்று எம் மத்தியில் மார் தட்டிக் கொண்டிருப்பதும் 
கவலைக்குரிய விடயமாகும். 
எத்தனையோ பேர் அவர்கள் சுமந்திருப்பது அவர்களுடய மனைவியின் சகோதரர்களுக்கு சேர வேண்டிய பங்குளான நரகத்தின் 
நெருப்பாகும் என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர்.
சிலர் அதற்கு இஸ்லாத்தில் எங்கேயாவது வீக் பொயின்ட் இருக்கிறதா என்று தேடுகின்றனர். அதாவது நபி (ஸல்) அவர்கள் 
அன்னை கதீஜாவினுடய வீட்டில் இருந்தார்கள் தானே என்று எந்த ஆதாரமும் இல்லாமல் கேட்கின்றனர்.
நபி (ஸல்) அவர்கள் நபித்துவத்துக்கு முன் தான் அன்னையவர்களை மணந்தார்கள் மஹருடய சட்டம் இறங்கிய பின்னாலல்ல 
என்பதை இவர்கள் சிந்திக்கவேண்டும்

source: srilankamoors.com

Tuesday, March 27, 2012

புஹாரி 6088 - தரங்கெட்ட அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம்



மாமனிதர்
நூல்கள்: புஹாரி 6088, முஸ்லிம் 2296.
அனஸ் (ரலி) கூறுகிறார்கள்:
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். கரைப்பகுதி கடினமான நஜ்ரான் நாட்டுப் போர்வை ஒன்றை அவர்கள் அணிந்திருந்தார்கள். அப்போது எதிரே வந்த கிராமவாசி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் போர்வையுடன் சேர்த்துக் கடும் வேகமாக இழுத்தார். இழுத்த வேகத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கிராமவாசியின் மார்பில் சாய்ந்தார்கள். அவர் கடுமையாக இழுத்ததன் காரணமாகப் போர்வையின் கனத்த கரைப்பகுதி அவர்களின் தோள்பட்டையைக் கன்றிப்போகச் செய்தது. பிறகு கிராமவாசி, 'முஹம்மதே! உம்மிடமுள்ள செல்வத்தில் எனக்கும் தருமாறு கட்டளையிடுவீராக!' என்று கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தார்கள். பிறகு அவருக்கு ஏதேனும் வழங்குமாறு கட்டளையிட்டார்கள்.
விளக்கம்:
மதத் தலைவராகவும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் அதிபராகவும் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பணியாளரான அனஸ் எனும் சிறுவருடன் தனியாக வீதியில் நடந்து சென்றதாக இந்த வரலாற்றுக் குறிப்பு கூறுகின்றது.
சாதாரண மனிதர்கள் சர்வ சாதாரணமாக நடந்து செல்வதை நாம் பார்த்திருக்கிறோம். ஒரு மதத்தின் மாபெரும் தலைவராக இருப்பவர் முன்னறிவிப்பின்றி - பக்தகோடிகள் புடை சூழாமல் - பந்தாக்கள் செய்யாமல் - சர்வசாதாரணமாக நடந்து செல்வதை உலக வரலாற்றில் நீங்கள் கண்டதுண்டா? அவரையும் அவரது மார்க்கத்தையும் அழித்தொழிக்க எதிரிகள் சமயம் பார்த்துக் கொண்டிருந்த அச்சம் சூழ்ந்த நேரத்தில் இப்படி நடந்து செல்வதைக் கற்பனையாவது செய்ய முடியுமா?
சட்டமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சியின் பொறுப்பாளர்கள் நடத்தும் பந்தாக்களைப் பார்த்துவரும் மக்களே! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு நடந்து சென்றபோது அகில உலகும் அஞ்சக் கூடிய மாபெரும் வல்லரசின் அதிபர் என்பதைக் கவனத்தில் வையுங்கள்.
இப்படி இருவிதமான தலைமையையும் பெற்றிருந்த நேரத்தில் சிறுவயது பணியாளர் ஒருவரை மட்டும் அழைத்துக் கொண்டு மிகச் சாதாரணமாக நடந்து சென்ற வரலாற்றை அறியும் போது அந்த மாமனிதரின் அடக்கம் துணிச்சல் நம் கண்களைக் கலங்கச் செய்து விடுகின்றன.
இந்த மாமனிதர் அணிந்திருந்த ஆடை என்ன? அரசுக் கருவூலத்தில் ஆபரணங்களும் ஆடைகளும் குவிந்து கிடக்கும் போது - மக்களெல்லாம் அவர்களிடம் வந்து அதைப் பெற்றுச் செல்லுமளவுக்கு அரசுக் கருவூலம் நிரம்பியிருந்த போது - ஒரு மேல் துண்டை மட்டுமே போர்த்திக் கொண்டு வீதியில் நடந்து செல்கிறார்கள். அலங்காரம் இல்லை! உயர்ரக ஆடைகள் அணியவில்லை! தைக்கப்பட்ட சட்டை போன்ற ஆடைகூட அணியவில்லை! அணிந்திருந்த மேல் துண்டு கூட மேனியை உறுத்தாத வகையில் உயர்தரமாக, மென்மையாக இருந்ததா என்றால் அதுவுமில்லை! முரட்டுத்துணியை - மேனியை உறுத்தக் கூடிய துணியைச் சுற்றிக் கொண்டு வாழ்ந்த அதிசய வாழ்க்கை அந்த மாமனிதருடையது. நம்மைப் போல சாதாரணமானவர்கள் கூட அணிந்து வெளியே செல்ல வெட்கப்படும் ஆடையை அணிந்து வெளியே செல்வதற்கு அசாத்தியமான மனவுறுதி வேண்டும். நேர்மையாக வாழ்வதில் எவரைப் பற்றியும் எதைப்பற்றியும் கவலைப்படாத - மற்றவர்களிடம் தமது இமேஜ் - மதிப்பு - பாதிக்குமே என்பதைப் பற்றிப் பொருட்படுத்தாமல் வாழ்ந்த அந்த மாமனிதரிடம் இந்த உலகம் படிக்க வேண்டிய பாடங்கள் ஏராளம் உள்ளன.
முன்பின் தெரியாதவர் - நாட்டுப்புறத்தைச் சார்ந்தவர் - ஆட்சித் தலைவரை நேரடியாக நெருங்க முடிகின்றது, சட்டையைப் பிடித்து, கீழே விழும் அளவுக்குப் படுவேகமாக இழுக்க முடிகின்றது. அந்த நிலையிலும் அவர்களால் சிரிக்க முடிகின்றது! என்னே அற்புத வாழ்க்கை!
எம்.ஜீ.ஆர் அணிந்திருந்த தொப்பியைத் தவறுதலாகத் தட்டிவிட்ட தொண்டரை எம்.ஜீ.ஆர் மக்கள் மத்தியில் அறைந்ததையும், அதற்காக போலீஸ் தொண்டரை சித்திரவதை செய்ததையும் இந்த இடத்தில் நினைத்துப் பாருங்கள். ஒரு மாநில முதல்வரின் நிலை இதுதான். மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் அதிபராக இருந்த நபிகள் நாயகத்தின் சட்டையைப் பிடித்து முன்பின் அறிமுகமில்லாதவர் இழுத்ததும் அந்த நேரத்தில் கடுகளவு அதிருப்தியைக்கூட வெளிப்படுத்தாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்ததும் அவர் மாமனிதர் என்பதற்கு மகத்தான சான்று.
அந்தக் கிராமவாசி, சட்டையைப் பிடித்து இழுத்து ஏதேனும் நியாயம் கேட்க வந்தாரா? நபிகள் நாயகம் செய்த தவறைச் சுட்டிக்காட்டுவதற்காக இப்படி இழுத்தாரா? இல்லை. நபிகள் நாயகத்திடம் உதவி கேட்டுத்தான் இழுத்திருக்கிறார்.
உதவி கேட்டு வருபவரிடம் அடக்கம் இருக்க வேண்டும், பணிந்து, குழைந்து கோரிக்கையை முன் வைக்க வேண்டும். பொதுப்பணத்தைக் கேட்பதென்றாலும் கொடுப்பவரைப் புகழ்ந்து தள்ள வேண்டும், இல்லை என்றால் பெற முடியாது என்பது பொதுவான உலகியல் நடப்பு.
இந்தக் கிராமவாசியின் அணுகுமுறையைப் பாருங்கள்! நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களிடம் அவர் இப்படி நடந்து கொண்டால் கூட ஒங்கி அறைந்து விடுவோம்.
சட்டையைப் பிடித்துத் தோள்பட்டை கன்றிப் போகும் அளவுக்கு இழுத்ததும் முஹம்மதே! என்று பெயர் சொல்லி அழைத்ததும் அல்லாஹ் உம்மிடம் தந்தவற்றிலிருந்து எனக்குத் தருவீராக! என்று அதிகாரத் தோரணையில் கேட்டதும் அதன் பிறகும் நபி (ஸல்) அவர்கள் சிரித்தது மட்டுமின்றி அவருக்குக் கொடுத்து அனுப்பியதும்; உலக வரலாற்றில் வேறு எவரிடமும் காண முடியாத அற்புத நிகழ்ச்சியாகும்.
கிராமவாசியின் துணிச்சல் என்று இதைக் கருதக் கூடாது. இவரிடம் சகஜமாக நடந்து கொண்டாலும் நம் இயல்புக்கு ஏற்ப நடந்து கொண்டாலும் இந்த மாமனிதர் ஆத்திரப்பட மாட்டார் என்பது கிராமவாசிக்குத் தெரியும். மக்களுக்கே தெரியும் அளவுக்கு அவர்களின் எளிமை பிரசித்தமாக இருந்துள்ளது. இதன் காரணமாகவே அவரால் இப்படி நடந்து கொள்ள முடிந்திருக்கிறது.
இந்த மாமனிதரைத் தலைவராகக் கொண்ட சமுதாயம் தரங்கெட்ட அரசியல்வாதிகளைத் தலைவர்களாக ஏற்று அவர்களின் பின்னே சென்று கொண்டிருக்கும் அவர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்.

நன்றி;இஸ்லாமியதாவா .காம்

Saturday, March 24, 2012

சொத்துப் பங்கீட்டில் பெண்களுக்கு குறைவாக கொடுக்கப்பட்டது ஏன்?




சொத்துப் பங்கீட்டில்  பெண்களுக்கு குறைவாக  கொடுக்கப்பட்டது ஏன்?
சொத்துப் பங்கீடு பற்றி பலரும் இஸ்லாத்தின்மீது விமர்சனங்களை வைக்கின்றார்கள். எனவே இது பற்றிய விபரத்தை நாம் தெளிவாக புரிந்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளோம்.
நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த அன்றைய சமூக சூழலில் ஆண்கள் சகல விதங்களிலும் பெண்களை அடக்கியாண்டு உரிமைகளைப் பறித்துக் கொண்டிருந்தார்கள். "பலமுள்ளவன் தான் சரியானவன்" என்ற தத்துவத்தின் அடிப்படையில் தகப்பனோ சகோதரனோ விட்டுச் செல்லும் சொத்துக்களில் பெண்களுக்குரிய பங்கினை வழங்காது பலாத்காரமாகச் சூறையாடிக் கொண்டுமிருந்தார்கள்.
தந்தையைப் பறிகொடுத்து விட்டு தவிக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கும், கணவனை இழந்துவிட்டு கண்ணீரோடு வாழும் விதவைப் பெண்களுக்கும் அச்சொத்திலிருந்து எதுவும் கிடைக்க மாட்டாது. இவர்கள் அடுத்தவர்களிடத்தில் கையேந்தி மற்றவர்களின் தயவில் வாழக்கூடிய பரிதாபகரமான நிலை காணப்பட்டது. இந்நிலையில் இக்கொடுமைக்கு ஆரம்ப கட்டத் தீர்வாக அல்லாஹ் பின்வரும் வசனத்தை அருளினான்.
"உங்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கும் போது அவர் ஏதேனும் செல்வத்தை விட்டுச் செல்வாராயின் அவர் பெற்றோருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் நல்ல முறையில் (மரண சாசனம்) வஸீய்யத் செய்வது உங்கள் மீது விதியாக்கப்பட்டுள்ளது. பயபக்தியாளர்களுக்கு இது கடமையாகும்.
எவர் அ(ம்மரணசாசனத்)தை செவியேற்ற பின்பும் அதை மாற்றி விடுகின்றாரோ அதன் குற்றம் அதை மாற்றியவர்களையே சாறும். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவன் நன்கறிந்தவன்.
ஆனால் வஸீய்யத் செயபவரிடம் அநீதத்தையோ பாவத்தையோ எவரேனும் அஞ்சி (சம்பந்தப்பட்ட) அவர்களுக்கிடையே (வஸீய்யத்தை சீர்செய்து) சமாதானம் செய்தால் அவர் மீது குற்றமில்லை. நிச்சமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையவன். (அல்குர்ஆன் 2:180-182)
இதனடிப்படையில் சொத்துக்களை விட்டுச் செல்பவர் தன்னுடைய பெற்றோர் மனைவி பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு அச்சொத்திலிருந்து பங்குகிடைக்கக்கூடியதாக மரண சாசனம் செய்யவேண்டும். அதன் பத்திரமும் எழுதப்பட வேண்டும் என்ற சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. மரண சாசனத் தில் அநீதி காணப்படுமானால் அதனை சீர்படுத்துவதற்கும் உரிமை வழங்கப்பட்டது.
மரணசாசனம் தெரிவிக்க ஏதேனும் பொருளைப் பெற்றுள்ள எந்த முஸ்லிமுக்கும் அவர் தமது மரண சாசனத்தை எழுதி வைக்காமல் இரண்டு இரவுகளைக் கழிப்பதற்குக் கூட அனுமதியில்லை என நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)
இதன் மூலம் பெண்களுக்கும் நியாயமாக பங்கீடு கிடைக்க வழி காட்டப்பட்டது.
இச்சட்டம் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில் ஸஅத் இப்னு ரபீஃஆ ரளியல்லாஹு அன்ஹு என்பவரின் மனைவி தனது இரு பெண் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் களிடம் வந்து "அல்லாஹ்வின் தூதரே! இதோ இவ்விருவரும் ஸஃத் இப்னு ரபீஆவின் புதல்வியர்கள். இவர்களுடைய தந்தை உங்களுடன் உஹது யுத்தத்திலே பங்குகொண்டு கொல்லப்பட்டு விட்டார்.
இவர்களுடைய தந்தையின் சகோதரர் இவர்களுடைய முழுச் சொத்தையும் எடுத்துக் கொண்டார். இவர்களுக்காக எதையும் விட்டுச் செல்லவில்லை. இவர்களுக்கென சொத்து எதுவும் இல்லையென்றால் அவர்களைத் மணம் முடித்துக் கொடுக்கவும் முடியாது என்று முறையிட்டார்.
இந்த முறைப்பாட்டை செவியேற்ற நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நிச்சயமாக அல்லாஹ் இதற்கோர் தீர்வை வழங்குவான் எனக் கூறினார்கள். இச்சந்தர்ப்பத்தில் இப்பெண்மணியின் முறையீட்டிற்குப் பதில் கூறுமுகமாக பின்வரும் சட்டம் அருளப்பட்டது.
1) இரு பெண்களுக்குரிய பங்கு போன்றது ஒரு ஆணுக்குண்டு என உங்கள் பிள்ளைகள் விடயத்தில் அல்லாஹ் உங்களுக்கு (சொத்துப் பங்கிடும் முறைப்பற்றி) கட்டளையிடுகின்றான்.
- (இறந்தவர் விட்டுச்செல்லும் சொத்துக்கு ஆண்பிள்ளை இல்லாமல்) இரண்டு பெண்கள் அதற்கு மேற்பட்டவர்கள் இருந்தால் அவர் விட்டுச்சென்றதில் மூன்றில் இருபங்கு (2/3) அப் பெண்களுக்குண்டு.
- ஒரே ஒருபெண் மட்டும் இருந்தால் அவளுக்கு அதில் அரைவாசிப் (பங்கு) உரியது.
2) இறந்தவருக்குப் பிள்ளை இருப்பின் அவர் விட்டுச் சென்றதில் (அவருடைய) தாய், தந்தைக்கு ஆறில் ஒரு (1/6) பங்குண்டு.
- அவருக்கு பிள்ளை இல்லாமல் அவரது பெற்றோரே அவருக்கு வாரிசாக இருப்பின் அவரது தாய்க்கு மூன்றில் ஒரு (1/3)பங்குண்டு. (மீதி தந்தைக்குரியது)
- இறந்தவருக்கு (பிள்ளைகள் இல்லாமல்) சகோதரர்கள் இருப்பின் அவரது தாய்க்கு ஆறில் ஒரு (1/6) பங்குண்டு.
- (இவ்வாறு பங்கீடு செய்வது) அவர் செய்த மரணசாசனம் அல்லது அவரது கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்னரேயாகும்.
- (சொத்துப் பங்கீடு பெறுவதில்) உங்கள் பெற்றோர், மற்றும் பிள்ளைகளில் உங்களுக்கு அதிகமாக பயனளிப்பதில் மிக நெருக்கமானவர்கள் யார்? என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்.
"இவை அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டவையாகும். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:11)
3). (இறந்துபோன) உங்கள் மனைவியருக்கு பிள்ளை இல்லையெனில் அம்மனைவியர் விட்டுச் சென்றதில் (கணவராகிய) உங்களுக்கு அரைவாசி (1/2) உண்டு.
- அவர்களுக்கு பிள்ளை இருப்பின் அவர்கள் விட்டுச் சென்றதில் (கணவராகிய) உங்களுக்கு நாலில் ஒரு (1/4) பங்குண்டு. (இது) அவர்கள் செய்த மரணசாசனம் அல்லது கடன் என்பவற்றை நிறைவேற்றிய பின்னரேயாகும.
- உங்களுக்கு (கணவனாகிய நீங்கள் இறந்த பின்) பிள்ளை இல்லையெனில் நீங்கள் விட்டுச் சென்றதில் (மனைவியர்களான) அவர்களுக்கு நாலில் ஒரு (1/4)பங்குண்டு.
- உங்களுக்கு பிள்ளை இருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதில் (மனைவியர்களான) அவர்களுக்கு எட்டில் ஒரு (1/8) பங்குண்டு. (இது) நீங்கள் செய்த மரண சாசனம் அல்லது கடன் என்பவற்றை நிறைவேற்றிய பின்னரேயாகும்.
4. (பெற்றோர் பிள்ளைகள் ஆகிய) வாரிசுகள் இல்லாத ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ மரணித்து அவருக்கு ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு (1/6) பங்குண்டு. அவர்கள் இதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு (1/3) பங்கில் அவர்கள் பங்குதாரர்களாவார்கள். (இது) பாதிப்பு அற்றவிதத்தில் செய்யப்பட்ட மரணசாசனத்தையும் அல்லது கடனையும் நிறை வேற்றிய பின்னரேயாகும். இது அல்லாஹ்விடமிருந்துள்ள கட்டளையாகும். அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனும் சகிப்புத்தன்மையுடையவனு மாவான். (அல்குர்ஆன் 4:12)
இவ்வசனம் அருளப்பட்டதும் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஃத் இப்னு ரபீஃஆவின் சகோதரரை வரவழைத்து அவர் எடுத்துச் சென்ற சொத்தை பின்வருமாறு பங்கீடு செய்தார்கள்.
இரு பெண் பிள்ளைகளுக்கும் (தலா ஒருவருக்கு 1/3 என்ற பங்கு வீதத்தில்) 2/3 பங்குகளும், இவர்களின் தாய்க்கு எட்டில் ஒருபங்கும் (1/8) பங்கும் மீதியை ஸஃத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் சகோதரர்களுக்கும் கொடுத்தார்கள். (நூல்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா)
தனக்கும் தனது பெண் பிள்ளைகளுக்கும் சொத்துரிமை விவகாரத்தில் உரியபங்கு கிடைக்கவில்லையென்று ஒரு பெண் மணி நீதி கேட்டு வந்தபோது அப்பெண் மணிக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கவே வாரிசுரிமைச் சட்டம் அருளப்பட்டது.
மகன், மகள், சகோதர சகோதரி, மனைவி, தாய் தந்தை ஆகியோருக்கு இச்சட்டத்தின் மூலம் சொத்துக்களில் பங்கு கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.
இதைவிட பெண்ணுக்குரிய அந்தஸ்த்தும் உரிமையும் வேறு எங்கும் எந்த மதத்திலும் கோட்பாட்டிலும் காண முடியாது.
இவ்வாரிசுரிமைச் சட்டம் அருளப்பட்டபின் மரண சாசனத்தின் மூலம் சொத்துக்கள் பங்கீடு செய்யும் சட்டம் ரத்துச் செய்யப்பட்டதோடு வாரிசுகளுக்கு சொத்துக்கள் சம்பந்தமாக மரணசாசனம் செய்யவோ எழுதவோ அல்லது சிபாரிசு செய்யவோ தடுக்கப்பட்டது. வாரிசுகளுக்கு எத்தனை வீதம்பங்கு கொடுக்க வேண்டும்; என்று அல்லாஹ் விபரித்துக் கூறியுள்ளானோ அதே அடிப்படையிலும் இத்திருமறைக் குர்ஆனுக்கு விளக்கவுரையாக நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படிச் செயல்படுத்தி பங்குவைத்துக் காட்டினார்களோ அதே அடிப்படையிலும் தான் உலகம் அழியும் வரை பங்கீடு செய்யப்பட வேண்டும். இதில் எவரும் மாற்றம் செய்ய முடியாது.
வாரிசுகள் அல்லாத வேறு எவருக்கேனும் அல்லது நற்பணிகளுக்கேதும் சொத்தில் குறிப்பிட்ட ஓர்அளவு கொடுக்க வேண்டும் என்று விரும்பினால் அதுசம்பந்தமாக வஸீய்யத் செய்வது தடுக்கப்படவில்லை.
உதாரணமாக, சமுதாயத்தின் கல்வி அறிவு வளர்ச்சிக் காக மறுமலர்ச்சித் திட்டங்களுக்காக அல்லது ஏழை எளியவர்கள் அநாதைகள் விதவைகள் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோரின் நலன்களைக் கவனத்திற் கொண்டு அவர்களது மேம்பாட்டிற்காக ஒருவர் தனது சொத்தில் குறிப்பிட்ட ஒருபங்கை மரணசாசனம் செய்ய விரும்பினால் அவர் தாராளமாக செய்யலாம். ஆனால் மொத்த சொத்தையும் தர்மஸ்தாபனங்களுக்கோ பொது நிருவனங்களுக்கோ எழுதிவைத்து விட முடியாது. அவரது மரணசாசனம் மொத்தச் சொத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் (1/3) அதிகமில்லாமல் இருப்பதையே இஸ்லாம் விரும்புகின்றது.
ஸஃத் இப்னு அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ''நான் (நபியவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது மக்காவில்) நோயுற்று விட்டேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். அப்போது நான்அல்லாஹ்வின் தூதரே! என் செல்வம் அனைத்தையும் மரணசாசனம் செய்ய விரும்புகின்றேன். எனக்கு இருப்பதெல்லாம் ஒரு மகள்தான். (எனவே என்சொத்தில்) பாதிப் பாகத்தை மரணசாசனம் செய்யட்டுமா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பாதி அதிகம்தான் என்றார்கள். அப்படி என்றால் மூன்றில் ஒரு பங்கு (1/3) என்று கேட்டேன். மூன்றில் ஒரு பங்கா? அதுவும் அதிகம்தான். நீங்கள் உங்கள் வாரிசுகளை தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வது அவர்களை மக்களிடம் கையேந்தும்படி ஏழைகளாக விட்டுச் செல்வதை விட நல்லதாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' நூல்: புகாரி)
பெண் பிள்ளைகளுக்குரிய சொத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் தன்னிறைவுள்ளவர்களாக அவர்களை ஆக்குவதற்கும் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உரிய கவனம் செலுத்தினார்கள்.
வாரிசுகளை நிர்ணயிப்பதில் ஒவ்வொரு சமுதாயத்திலும் வெவ்வேறான அளவுகோல்கள் இருப்பதைப் பார்க்கின்றோம். வாரிசுகள் என்போர் யார்? அவர்கள் எந்த அடிப்படையில் வாரிசுகளாகிறார்கள்? அவர்களில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டியவர்கள் யார்? அவர்களில் யாருக்கு எந்தளவு பங்கு கொடுக்கப் படவேண்டும் என்ற விபரங்களெல்லாம் இஸ்லாம் தெளிவுப் படுத்துகிறது.
சொத்துக்களுக்கு மனிதன் சொந்தக்காரனாக இருந்தாலும் அவனாக முடிவுசெய்து விரும்பிய விதத்தில் வாரிசுக்ளுக் கிடையில் பங்கிட முடியாது. இஸ்லாம் தயாரித்துத் தந்திருக்கின்ற பட்டியல் முறையில் தான் பங்கீடு செய்யவேண்டும். சொத்துக்கள் தலைமுறை தலைமுறையாக குடும்பத்திற்குள் மாறிவருவதல்ல முக்கியம். அச்சொத்துக்களால் பலபேருடைய வாழ்வும் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதே முக்கியம்.
எனவே, ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் மொத்த சொத்து களையும் வழங்கிடாமல் பெண்களுக்கும், பெற்றோருக்கும் உடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் உரிய முறையில் பங்குவைத்து பங்குதாரர்களாக ஆக்குவதன் மூலமே குடும்பம் சீர்குலையாமல் சீரழிவுக்குள்ளாகாமல் பாதுகாக்க முடியும். ஒருவரை ஒருவர் தாங்கி நிற்கக்கூடிய வகையில் சொத்தைப் பங்கிடுவதன் மூலமே பொருளாதார சுபீட்சத்தினையும் சந்தோசமான கட்டுக்கோப்பான குடும்ப வாழ்வையும் உருவாக்கிட முடியும். அதன் காரணமாகவே வாரிசுகள் என்போர் யார்? என்ற பட்டியலை இஸ்லாம் தயாரித்துத் தந்துள்ளது.
தந்தை மரணித்துவிட்டால் அக்குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்பு ஆண் பிள்ளையைச்சாரும். ஆண்பிள்ளை இல்லையென்றால் தந்தையின் சகோதரனைச் சாரும். அவர் அக்குடும்பத்திற்கு- பராமரிப்பாளராக- வாரிசுதாரராக ஆக்கப்படுகின்றார். அதனால் தான் தந்தை விட்டுச் செல்லும் சொத்துக்களை பங்கு வைக்கும் போது அச்சொத்தின் மீதிப் பங்கிற்கு இவர் பங்காளியாக ஆக்கப்படுகின்றார். இதன் மூலம் ஆண் துணையில்லாத குடும்பத்திற்கு இவர் மூலம் பாதுகாப்பு அரண் போடப்படுகின்றது.
இச்சிறப்பான சட்டத்தின் வாயிலாகவே பெண் சமுதாயம் பாதுகாக்கப்படுகின்றது. தங்களுடைய ஜீவனோபாயத்தை தாங்களே தேடிக்கொள்வதற்காக தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொள்வதற்காக தொழில் தேடிச்செல்லும் முஸ்லிம் அல்லாத பெண்களுக்குள்ள நிலை இஸ்லாமியப் பெண்ணுக்குவராது. வாரிசுரிமைச் சட்டத்தின் மூலம் அவள் பாதுகாக்கப்படுகின்றாள்.
முஸ்லிமான ஒருபெண்ணும் முஸ்லிம் அல்லாத ஒரு பெண்ணும் தொழிலுக்குச் செல்வதில் அடிப்படையில் வேற்றுமை உண்டு. முஸ்லிமல்லாத பெண்ணைப் பொறுத்தவரை அவள் அவளது வாழ்வை அமைத்துக் கொள்ள சம்பாதித்தேயாக வேண்டும். அவளைப் பொறுப்பேற்று வளர்ப்பதற்கு வாழ்வை அமைத்துக் கொடுப்பதற்கு எவரும் இல்லை. சொத்தில் ஒரு பங்குமில்லை. ஆகவே அவள் சார்ந்திருக்கும் மதவாதச் சிந்தனையும் சமூகக்கோட்பாடும் அவளுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ளதால் அவள் பருவ வயதை அடைந்த பின் வீட்டை விட்டு வெளியேறியாக வேண்டும். இஸ்லாமிய பெண்ணுடைய நிலை இதை விட முற்றிலும் மாறுபட்டுள்ளது.
அவளை பொறுத்தவரை அவள் வீட்டிலிருந்து கொண்டே சகல உரிமைகளையும் அனுபவிப்பதற்கு வழிகாட்டப்பட்டிருக்கிறாள். வறுமை மற்றும் தேவை அல்லது மேலதிக வருமானம் கருதி அவள் தொழிலைத் தேடிக்கொள்ள விரும்பினால் அதற்கு தடையேதும் இல்லை. தங்களது மார்க்க கொள்கை ஒழுக்கவியல் மற்றும் கற்பையும் பேணிக் கொள்ளும் வகையில் நடந்து கொள்ள முடியுமான சூழல் இருக்குமானால் தொழிலுக்குச் செல்லலாம் என்ற அனுமதி அவளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
வாரிசுரிமைச் சட்டத்தின் இறுதிவசனத்தில் அல்லாஹ் கூறும் போது "உங்கள் சொத்துக்கு மிகவும் நெருக்கமானவர்கள் பயன் தரக்கூடியவர்கள் யார்? என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்" என்று கூறுவதன் விளக்கம் எவ்வளவு அற்புதமானது என்பதனை இங்கே சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
நாம் மேலே இலக்கமிட்டு வரிசைப்படுத்திக் காட்டிய வாரிசுரிமைச் சட்டத்தின் நான்காவது சட்டத்தினை மேலும் தெளிவுபடுத்தி இன்னுமொரு வசனமும் அருளப்பட்டது. இச் சட்டத்தில் ஒருவர் விட்டுச் செல்லும் சொத்துக்கு அதற்கு வாரிசுகளான தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள் ஆகியோர் இல்லாமல் சகோதர சகோதரிகள் மட்டும் இருந்தால் அவர்களிடையே எப்படி பங்கீடு செய்வது என்று பின்வருமாறு விளக்கப் பட்டது. (இச்சட்டத்திற்கு கலாலா எனப்படும்).
"நபியே! உம்மிடம் அவர்கள் "கலாலா" பற்றி மார்க்கத் தீர்ப்புக்கோருகின்றனர். ''கலாலா'' குறித்து அல்லாஹ் உங்க ளுக்குத் தீர்ப்பளிப்பான் எனக் கூறுவீராக.
பிள்ளை இல்லாத ஒருவன் தனக்கு ஒரு சகோதரி இருக்கும் நிலையில் மரணித்தால் அவன் விட்டுச் சென்றவற்றில் அரைவாசி அவளுக்குண்டு. (ஒரு பெண் மரணித்து) அவளுக்குப் பிள்ளை இல்லாமல் இருந்தால் (சகோதரனான) அவன் அவளுக்கு வாரிசாவான்.
அவர்கள் இரு பெண்களாக இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் மூன்றில் இருபங்கு (2/3) அவ்விருவருக்குமுண்டு. அவர்கள் ஆண்கள் பெண்கள் என் சகோதரர்களாக இருப்பின் அவர்களில் இரு பெண்களுக்குரிய பங்கு போன்றது ஒரு ஆணுக் குண்டு;. நீங்கள் வழிதவறாது இருப்பதற்காக அல்லாஹ் இவ்வாறுஉங்களுக்குத் தெளிவுப்படுத்துகின்றான். அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனாவான். (அல்குர்ஆன் 4:176)
வாரிசுரிமை தொடர்பாக இறுதியாக இறங்கிய வசனம் இது என பராஉ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல்: புகாரி 4605)
வாரிசுரிமைச் சட்டத்தின் அனைத்து விளக்கங்களையும் அல்லாஹ் விளக்கிக் கூறி விட்டு இச் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகின்றவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். நிரந்தரமான நரகில் இருப்பார்கள் என எச்சரிக்கின்றான்.
"இவை அல்லாஹ் விதித்த வரம்புகள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் வழிப்பட்டு நடக்கிறாரோ அவரை சுவர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும்.
யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுகின்றானோ அவனை நரகத்தில் அவன் நுழைவிப்பான். அவன் அதில் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனையுண்டு (அல்குர்ஆன் 4:13-14)
சொத்துக்களை ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் அல்லது பெண்பிள்ளைகளுக்கு மட்டும் கொடுக்கமுடியாது. சகல பிள்ளைகளுக்கும் வாரிசுதாரர்களுக்கும் உரிய முறையில் பங்குவைத்தாக வேண்டும். மாறு செய்பவர்கள் குற்றத்திற்குரியவர்களாகிவிடுவர்.
இறந்தவர் விட்டுச் செல்லும் சொத்தை பங்கு வைக்கமுன் அவருடைய கடனையும் மரணசாசனத்தையும் முதலில் நிறை வேற்றவேண்டும் என்பதும் முக்கிய நிபந்தனையாகும். பெற்றோர் தங்களது பிள்ளைகள் மீது அன்புகாட்டுவதை விட அல்லாஹ் தன்படைப்புக்கள் மீது அதிக அன்புள்ளவனாக உள்ளான் என்ப தை இச்சட்டங்கள் காட்டவில்லையா?
பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுத்த இஸ்லாம் ஆண்களை விடக் குறைவாக கொடுத்தது ஏன்? என்ற சந்தேகம் எழுவது இயற்கையே அதனை நிவர்த்தி செய்வது நல்லது என நிகைக்கிறேன்.
ஆண் சம்பாதித்து தன்னுடைய தாய் தந்தை சகோதர சகோதரிகள் மற்றும் மனைவி என்ற வட்டத்திற்குள் உள்ள அக்குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்புள்ளவனாக இருக்கிறான். அவனுடைய உழைப்பின் கீழேயே பெண் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறாள். அப்பெண்ணை மணம்முடித்து வைக்க வேண்டிய பொறுப்பும் செலவினங்களும் அவனையே சாரும். கணவனால் தலாக் சொல்லப்பட்டால் மீண்டும் அவளை பராமரிக்கும் பொறுப்பும் மணமுடித்;து வைக்கும் கடமையும் அவனை வந்தடைகிறது.
இவன் ஒரு பெண்ணை மணக்கும் போது அவளுக்குரிய மஹரை கொடுத்து வாழ்வதற்கான வசதிகளையும் செய்து கொடுத்து தன்னுடைய பிள்ளைகள் மற்றும் குடும்பத்தையும் பராமரிக்கக் கூடியவனாக இருக்கிறான்.மனைவி விவாகரத்தச் செய்யப்பட்டால் அப்போதும் அவளுக்கு ஏதேனும் வசதிகள் அல்லது உதவிகள் செய்திடவேண்டும்.
சொத்துப் பங்கீட்டின் போது தந்தை, சகோதரர்கள், பிள்ளைகள் போன்றோரிடமிருந்து இவளுக்குரிய பங்குகளை பெற்றுக் கொள்ளும் அதே வேளை மகளாக, மனைவியாக, தாயாக, சகோதரியாக இருக்கும் நிலைகளிலும் அவளுக்குரிய பங்குகள் வந்து சேர்கின்றன. சொத்தில் தனக்குரிய பங்குகளை பெறும் அதே வேளை கணவராக வருபவரிடத்திலிருந்தும் மஹராகவும் ஒரு பகுதியை பெற்றுக் கொள்ளும் உரிமை படைத்தவளாக திகழ்கிறாள்.
வெளிப்படையாக பாரக்கும் போது பெண் குறைவாகவும் ஆண் அதிகமாகவும் பெறுவதாகவே தோன்றும். இஸ்லாம் கூறும் காரணங்களை கவனித்தால் பெண் அனைத்து உரிமைகளையும் அதிகமாக அனுபவிப்பதை காணலாம்.
பொருளீட்டுவதற்கான உரிமை ஆண்களுக்குக் கொடுக்கப்பட்டடுள்ளது போல் பெண்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மனைவியுடைய சம்பாத்தியத்தை அவளுடைய அனுமதியில்லாமல் கணவன் தொடமுடியாது. அவளாக கணவனுக்குக் கொடுத்தால் அது தர்மம் செய்த நன்மை சாரும் என இஸ்லாம் கூறுகிறது.
பெண்களே! நீங்கள் தர்மம் செய்யுங்கள். உங்களின் நகைகளாக இருப்பினும் சரியே! தர்மம் செய்யுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதைக் கேட்ட நான் (என் கணவரான) அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்களிடம் வந்தேன். நீங்கள் வறுமையில் உள்ளீர்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தர்மம் செய்யும்படி எங்களுக்கு ஏவினார்கள். எனவே, அவர்களிடம் நீங்கள் சென்று (என் தர்மத்தை நீங்கள்) பெறலாமா? எனக் கேட்டு வாருங்கள். அது சரியாக இருந்தால் என்னிடமிருந்து அதைக் கொடுப்பது போதுமாகும். இல்லையெனில் மற்றவருக்கு நான் அதைக் கொடுப்பேன் என்று கூறினேன். அப்போது அவர் நீ போய் கேட்டுவா என்று கூறினார்.
நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டுக்குச் சென்றேன். வீட்டு வாசலில் அன்ஸாரிப் பெண் ஒருவர் நினறு கொண்டிருந்தார். என் தேவையை போலவே அவர் தேவையும் இருந்தது. அப்போது எங்களிடம் பிலால் ரளியல்லாஹு அன்ஹு வந்தார்கள். நாங்கள் அவரிடம் நீங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று இரு பெண்கள் வந்து தங்களிடம் உள்ள தர்மப் பொருளை தங்களின் கணவர்களுக்கோ, தங்கள் மடியில் வளரும் அனாதைகளுக்கோ கொடுக்க விரும்புவது கூடுமா? என்று உங்களிடம் கேட்பதற்காக வாசலில் நிற்கின்றோம் என்ற செய்தியை கூறுங்கள். நாங்கள் யார் என்ற விபரத்தை அவர்களிடம் கூறாதீர்கள் என்று கூறினோம்.
பிலால் ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று இது பற்றிக் கேட்டார்கள். அப்போது அவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்விருவரும் யார்? என்று கேட்டார்கள். "ஒருவர் அன்ஸாரிப் பெண் மற்றவர் ஸைனப் என்று பிலால் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள். எந்த ஸைனப் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்க, அப்துல்லாஹ்வின் மனைவி என பிலால் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள். அப்போது நபியவர்கள், "உறவினரை ஆதரித்தல்,தர்மம் செய்தல் என இரண்டு வகைக் கூலிகள் அந்த இரண்டு பெண்களுக்கும் உண்டு" என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸைனப் அத்தகபீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி-1466, முஸ்லிம்-1000)
நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உருவாக்கி வளர்த்து விட்ட பெண் சமூகத்தின் சுதந்திரத்தை பாருங்கள். சட்டரீயாக சொத்துப் பங்கீட்டின் ஒழுங்குகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்ட பிறகும் அவள் சம்பாதிக்கும் உழைப்பில் இருந்து கணவனுக்கு கொடுக்க வேணடிய கட்டாயம் இல்லை. அவளாக விரும்பி கொடுத்தால் தர்மத்துடைய நன்மை கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.
பெண்களுக்கான உரிமைகளை வழங்கி அவர்களை வாழ வைத்த மார்க்கம் எது என்பதை இப்போதாவது உங்கள் மனசாட்சி பிரகாரம் கூறுங்கள்.
-எம்.எஸ்.எம்.இம்தியாஸ் ஸலபி
 Source: nidur.info

அல்லாஹ்விடம் மிகவும் கோபத்திற்குள்ளாகிறவர்கள் அதிகமாகக் தர்க்கம் புரிபவரே!


'தேவையற்ற விஷயத்தில் எவர் தர்க்கம் செய்வதைக் கைவிட்டு விடுகிறாரோ அவருக்குச் சுவனபதியைச் சூழ ஓர் இல்லம் கட்டப்படும். அன்றி உண்மையின் மீதிருந்தும் எவர் தர்க்கம் செய்வதைக் கைவிட்டு விடுகிறாரோ அவருக்கு சுவனபதியின் மத்தியில் ஓர் இல்லம் எழுப்பப்படும். மேலும் எவர் நற்பண்புகள் உள்ளவராக இருக்கின்றாரோ அவருக்குச் சுவனபதியின் மேலே ஓர் இல்லம் நிர்மாணிக்ப்படும்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: திர்மதீ)
''அல்குர்ஆனில் வீண் தர்க்கம் செய்வது நிராகரிப்பாகும்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அபூதாவூத்)
''நிச்சயமாக அல்லாஹ்விடம் மனிதர்களில் மிகவும் கோபத்திற்குள்ளாகிறவர்கள் அதிகமாகக் தர்க்கம் புரிபவரேயாவர்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ)
நாங்கள் விதி பற்றி தர்க்கம் செய்து கொண்டிருக்கும்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தார்கள். (இதனைக் கண்ட) அவர்கள் மாதுளம் சுளைகளை அவர்களுடைய முகத்தில் பதித்து விட்டதைப் போன்று அவர்களுடைய முகம் சிவப்பாகும் வரை சினமுற்றனர். அப்பொழுது அவர்கள் 'இது கொண்டா கட்டளையிடப்பட்டுள்ளீர்கள்? இதற்குத்தானா நான் உங்களிடம் தூதுவனாக அனுப்பப்பட்டேன்? நிச்சயமாக உங்களுக்கு முன்னிருந்தோர் தங்களின் மார்க்க விஷயத்தில் அதிகமாக தர்க்கம் செய்ததன் காரணமாகவும், தங்களின் நபிமார்களுடன் மாறுபட்டதன் காரணமாகவும் தான் அழிந்தனர் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: திர்மிதீ)
ஒரு தடவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் தோழர்களுடன் அமர்ந்திருந்தனர். (அப்பொழுது) திடீரென ஒருவன் வந்து அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது வசைமாரி பொழிந்து அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினான். ஆனால் அவர்களோ ஏதும் கூறாமல் வாய் மூடி இருந்தனர். பின்னர் அவன் மறு முறையும் அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினான். ஏனினும் அவர்கள் ஏதும் கூறவில்லை. மீண்டும் அவன் அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்திய பொழுது அவனுக்கு பதில் கூறினர். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து விட்டனர். அப்பொழுது அபூபக்கர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தாங்கள் என்மீது சினமுற்று விட்டீர்களா? என்று வினவினர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்ல; எனினும் விண்ணிலிருந்து ஓர் வானவர் இறங்கி வந்து தங்களைப்பற்றி கூறிய வசைகளையெல்லாம் பொய்யாக்கி கொண்டிருந்தார். ஆனால் தாங்கள் பதில் கூறியதும் அந்த வானவர் சென்று விட்டார். எனினும் ஷைத்தான் (அவருடைய) இடத்தில் அமர்ந்து கொண்டான்; ஆதலின் ஷைத்தான் அங்கு அமர்ந்தபின் நான் அமர்ந்திருத்தல் தகாது' என்று கூறினர். (அறிவிப்பவர்: இப்னுல் முஸையப் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அபூதாவூத்
Source: nidur.info

ஈமான் (நம்பிக்கை) கொள்வது


 
ஈமான் (நம்பிக்கை) கொள்வது 
1. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை
2. வானவர்கள் (மலக்குகள்) மீது நம்பிக்கை
3. இறைவேதங்கள் மீது நம்பிக்கை
4. இறைதூதர்கள் மீது நம்பிக்கை
5. மறுமையின் மீது நம்பிக்கை
6. விதியின் மீது நம்பிக்கை
 1. அல்லாஹ்வை நம்புவது
அல்லாஹ் ஆதியிலிருந்து தொடர்ந்து இருந்து வருகின்றான்.விண்ணையும், மண்ணையும், அகிலங்கள் அனைத்தையுமே படைத்து, தன்னந்தனியாக நிர்வகிப்பவனாக இருக்கின்றான். இவற்றைப் படைபபதிலோ, நிர்வகிப்பதிலோ அவனுக்குத் துணையாக, இணையாக யாரும் இல்லை என உறுதி கூறுதல்; அத்துடன் அவன் எவ்விதமான மாசு மருவுமற்றவன்; அவன் தூய்மையானவன்; இன்னும் அவனே எல்லாவித நற்பண்புகளுக்கும், நிறைகுணங்களுக்கும் உரிமையாளனாகவும், ஊற்றுக்கண்ணாகவும் திகழ்கின்றான் என்று ஏற்றுக் கொள்வதும் ஆகும்.
 2. மலக்குகளை நம்புவது
மலக்குகள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள். இறைவனுக்கு மாறு செய்வதில்லை. எந்நேரமும் அல்லாஹ்விற்கு வணக்கம் புரிவதிலும் கீழ்ப்படிவதிலும் ஈடுபட்டிருக்கின்றார்கள். வாய்மையான பணியாளனைப் போன்று, அதிபதியின் ஒவ்வொரு கட்டளையும் நிறைவேற்ற அவன் திருமுன் கை கட்டி காத்து நிற்கிறார்கள். உலகில் நற்செய்தி புரிபவர்களுக்காக பிரார்த்தனை செய்கின்றார்கள் என்று உறுதியாக நம்புவதாகும்.
 3. இறைவேதத்தை நம்புவது
தூயவனான அல்லாஹ் தன் திருத்தூதர்கள வாயிலாக அவ்வப்போது இறக்கியருளிய வழிகாட்டும் வேதங்கள் அனைத்தையும் உண்மையானவை என ஏற்றுக் கொள்வதாகும். அவற்றில் இறுதியானது திருக்குர்ஆன் ஆகும். அல்லாஹ் இந்த வேதத்தை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாயிலாக அனுப்பினான். அது தெளிவான தூய வேதமாகத் திகழ்கிறது. அதில் எந்தவித குறைப்பாடும் இல்லை. மேலும் அது எல்லாவிதக் சீர்கேட்டை விட்டும் பாதுகாப்பாய் உள்ளது. எனவே இறைவனின் பால் கொண்டு சென்று சேர்க்கக் கூடிய வேதநூல். இதனைத் தவிர வேறு எதுவும் இப்போது உலகில் இல்லை.
 4. இறைத்தூதர்களை நம்புவது
இறைவன் தரப்பிலிருந்து வந்த இறைத்தூதர்கள் அனைவருமே உண்மையாளர்கள் ஆவர். அந்த இறைத்தூதர்கள் அனைவருமே இறைவனின் செய்திகளை கூடுதல் குறைவு ஏதுமின்றி மக்களிடம் சேர்த்தார்கள். இறுதியாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். இனி மனிதர்களின் ஈடேற்றம் அண்ணலாரின் வழிமுறையைப் பின்பற்றுவதிலேயே அடங்கியிருக்கிறது.
 5. மறுமையின் மீது நம்பிக்கை
அல்லாஹ் அனைத்திற்குமே ஒரு முடிவு காலத்தை நிர்ணயித்துள்ளான். இந்த உலகத்திற்கும் ஒரு முடிவு உண்டு. இறந்துவிட்ட அனைவரையும் அதற்குப்பின் அவர்களுடைய அடக்கத்தலங்களை விட்டு எழுப்புவான். அப்போது ஒவ்வொருவரிடமும் அவர்கள் இந்த உலகில் செய்த செயல்களைப் பற்றி விசாரணை செய்வான். அந்த நாளில் நன்மைக்கும், தீமைக்கும் தகுந்த கூலி கொடுப்பான். ஒவ்வொருவருக்கும் நீதி வழங்குவான். இவ்வாறு இறுதி நாளை நம்பிக்கை கொள்ள வேண்டும்.
 6. விதியின் மீது நம்பிக்கை
உலகில் நடந்து கொண்டிருப்பவை அனைத்தும் இறைவனின் கட்டளையினால்தான் நடந்து கொண்டிருக்கின்றன. இங்கு அவனுடைய கட்டளை மட்டுமே செயல்படுகிறது. அவன் விரும்புவது ஒன்று, உலகம் செயல்படும் விதம் வேறொன்று எனும் நிலை கிடையாது. ஒவ்வொரு நன்மைக்கும், தீமைக்கும், நேர்வழிக்கும், வழிகேட்டிற்கும் நியதி ஒன்று உண்டு, அதனை அவன் ஆதியிலேயே நிர்ணயித்து விட்டான். இறைவனுக்கு நன்றி செலுத்தும் நல்லடியார்கள் மீது வருகின்ற துன்பங்கள்,அவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள், அவர்களுக்கு நேரிடும் சோதனைகள்- இவையனைத்தும் அவர்களுடைய இறைவனின் கட்டளைப்படி முன்பே அவன் நிர்ணயித்து நியதிகள், விதிகளின்படிதான் நேருகின்றன.
உங்கள் சகோதரி
ஆயிஷா பானு

Friday, March 23, 2012

இஸ்லாமிய ஷரீஆவின் இயல்பு நிலை


இப்னு மஸாஹிரா
Sareea 
இஸ்லாம் வாழ்வதற்கான வழிகாட்டியாக இருக்கிறது. அதன்படி வாழ்கின்ற போதுதான் எமக்கு ஈருலக வெற்றி இருக்கின்றது. இஸ்லாத்தின் இயல்பான போக்கை அதன் ஷரீஆவைப் பார்க்கின்றபோது விளங்கிக் கொள்ள முடியும்.
இஸ்லாமிய ஷரீஆமனித சமூகம் நிலைத்திருப்பதற்கான வழிமுறையாக குடும்ப வாழ்வைக் கருதுகின்றது. குடும்பத்திற்கான தலைமைப்பொறுப்பை இஸ்லாம் கணவனுக்கே வழங்கியுள்ளது.
"(ஆண்பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண்களுக்கு) செலவு செய்து வருவதனாலும்ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்." (4: 34)
கணவன் தனது மனைவிக்கு செலவழிப்பது இங்கு கடமை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மனைவி எதிர்கால பரம்பரையை சீர்படுத்திஎதிர்காலத்திற்கு சிறந்ததொரு தலைமுறையை வழங்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. இவ்வாறிருக்கும் நிலையே இயல்பான நிலையாகும்.
திருமணம் முடித்தபின் கணவனின் பேச்சை மனைவி கேட்காவிட்டால் அவளை திருத்துவதற்கான படிமுறைகளை இஸ்லாம் எமக்கு கற்றுத்தந்துள்ளது.
"எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோஅவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கி விடுங்கள். (அதிலும் திருந்தா விட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால்அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும்வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்." (4: 34)
முதற்கட்டமாக தனது மனைவிக்கு நல்லுபதேசம் செய்யுமாறே சொல்கிறது. இறுதித் தீர்வே இலேசாக அடித்தல் அமைகிறது. எம்மில் பலர் விடுகின்ற ஒரு பிழைதான் மனைவியை திருத்தும் ஏக வழியாக அவளுக்கு அடிப்பதைப் பாவிக்கின்றனர். இது மிகவும் ஒரு பிழையான வழிமுறையாகும். நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் மனைவிமாருக்கு உபதேசித்துள்ளார்கள். ஆனால்யாருக்கும் அடித்தது கிடையாது. கணவன் தனது மனைவிக்கு நல்லுபதேசம் செய்து அவளை திருத்த முயற்சிக்க வேண்டும். இதுவே இஸ்லாமிய ஷரீஆவின் இயல்பான நிலையாகும்.
கணவன்மனைவியரிடையே பிரச்சினையொன்று ஏற்பட்டால் அவர்கள் இருவரும் முதலில் பேசித்தீர்த்துக் கொள்ளுமாறே இஸ்லாம் எம்மிடம் வேண்டுகிறது.
ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால்அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை. அத்தகைய சமாதானமே மேலானது." (4: 128)      
கணவன்மனைவியரிடையே பிரச்சினை முற்றிவிடும் எனக் கண்டால் மத்தியஸ்தர்களை நியமிக்குமாறு இஸ்லாமிய ஷரீஆ கூறுகின்றது. அவர்களில் ஒருவர் கணவனின் உறவினர்களிலிருந்தும் மற்றவர் மனைவியின் உறவினர்களிலிருந்தும் காணப்பட வேண்டும் என நிபந்தனையிடுகிறது. கணவன்மனைவியின் பிரச்சினை முற்றி கொலையில் போய் முடிவதற்கு முன்னர் இந்த வழிமுறையைக் கடைப்பிடிக்குமாறு இஸ்லாம் எம்மிடம் வேண்டுகோள் விடுக்கிறது.
"(கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண் டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால்கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள் அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால்அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும்படி செய்துவிடுவான். நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும்நன்குணர்கின்றவனாகவும் இருக்கின்றான்." (4: 35) 
நபி (ஸல்) அவர்களின் ஹதீஸைப் பாருங்கள்:
"எனது மகள் பாத்திமா திருடியிருந்தாலும் நான் அவளின் கையைத் துண்டித்திருப்பேன்."
இஸ்லாம் களவு விடயத்தில் மிகக்கடுமையாக நிற்பதன் காரணம்மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஒருவன் இலகுவாக தட்டிக்கொண்டு செல்வது எவ்விதத்திலும் பொருத்தமானதல்ல. இஸ்லாம் உழைக்குமாறே ஊக்குவிப்பு வழங்குகிறது. அந்தக் கரங்களையே பாராட்டுகிறது. உமர் (றழி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் பஞ்சம் ஏற்பட்டது. இவ்வேளையில் ஒருவன் திருடி விட்டான். அவனது வழக்கு வந்த போது பஞ்ச காலத்தில் திருடியதனால் அவனது கை வெட்டப்பட முடியாது என தீர்ப்பு வந்தது. இதுதான் இஸ்லாமிய ஷரீஆவாகும்.
இன்று கொலைக் கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொலையைத் தடுப்பதற்கான பல நடவடிக்கைகளை மனித சட்டம் எடுத்துக்கொண்டே இருக்கிறது. ஆனால்கொலை குறைவதாக இல்லை. ஒரு உயிரைக் கொலை செய்தால்தான் கொல்லப்படுவேன் என்ற அச்சம் வேண்டும். அப்போதுதான் இவ்வகை கொலைகளுக்கெல்லாம் தீர்வு கிடைக்கும். எனவேதான்,இஸ்லாம் உயிருக்கு உயிர் என்ற சட்டத்தை விதித்துள்ளது. அதிலும் கொலை செய்யப்பட்டவரின் உறவினருக்கு ஒரு அதிகாரத்தையும் வழங்கியுள்ளது. அந்த உறவினர்கள் விரும்பினால் அந்த கொலைக்கான தண்டப்பணத்தை பெற்றுவிட்டுஅவனை மன்னித்து விடலாம். இது அவர்களின் சுய விருப்பின் பேரில் இடம் பெறவேண்டும்.
"உயிருக்கு உயிர்கண்ணுக்கு கண்மூக்குக்கு மூக்குகாதுக்கு காதுபல்லுக்குப் பல் ஆகவும் காயங்களுக்கு (ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம். எனினும்ஒருவர் (பழி வாங்கு வதை) தர்மமாக விட்டுவிட்டால்அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்க வில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே!" (05: 45)
இவை உண்மையில் இஸ்லாமிய ஷரீஆவின் சில பகுதிகளே. அதன் பல பகுதிகளை நாம் விளங்க வேண்டும். அதனை எமது வாழ்க்கை நெறியாக எடுத்துக் கொள்ளவேண்டும். இஸ்லாம் வாழ்வதற்கான மார்க்கம். அதனைப் பின்பற்றினால் உலகு எமக்கு பின்னால் வரும். உலகையே ஆளும் சக்தியாக நாம் மாறலாம். நாம் எமக்குள் இருக்கும் பழமைவாத எண்ணங்களை முதலில் களையவேண்டும். மற்றவர்களையும் மதிக்கத்தெரிய வேண்டும். சிலர் மற்றவர்களை மதிப்பது கிடையாது. தமது பழமைவாத சிந்தனையில் வளர்க்கப்பட்டவர்களையே அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களையே தமது சபைகளுக்கு அழைக்கிறார்கள். இவ்வாறான பழமைவாத சிந்தனைகளும் நாம் பின்னடைவதற்கு காரணமாகும். எனவேநாம் எமது சரியான ஷரீஆவை தேடுவோம்கற்போம்நடைமுறைப் படுத்துவோம்.
இன்ஷா அல்லாஹ்.