widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Tuesday, March 22, 2011

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீது கல்வீச்சு


ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீது எகிப்திய தலைநகர் கெய்ரோவில் வைத்து கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளளது.
கெய்ரோவில் அரபு லீக் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் பான் கீ மூன் பங்குபற்றியிருந்தார்.
அங்கிருந்து தஹ்ரிர் சதுக்கத்தை நோக்கிச் செல்ல அவர் வெளியே வந்தபோது, லிபியாவில் ஐ.நா. ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் கூட்டுப்படைகளின் தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களால் பான் கீ மூன் மீது கற்கள் வீசப்பட்டன.
எனினும் இதனால் ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
அத்துடன் ஐ.நா.செயலாளர் பான் கீ மூனுக்கு எதிரனா கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். 
ஆனால் அவர் மீண்டும் அரபு லீக் தலைமையக கட்டிடத்திற்கு உள்ளே செல்ல நிர்பந்திக்கப்பட்டார். பின்னர் மற்றொரு வாசல் வழியாக கார் மூலம் அவர் வெளியேறினார்.
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கிற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவரை பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வைத்ததில் தஹ்ரிர் சதுக்கம் பெயர் பெற்றதென்பது குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment