widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Saturday, March 19, 2011

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் – அலிசாகீர் மௌலானா 9,601 வாக்குகளைப்பெற்று தெரிவு செய்யப்பட்டார்


ஏறாவூர் நகர சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகீர் மௌலானா 9,601 வாக்குகளைப்பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இங்கு இக்கட்சியில் போட்டியிட்ட எம்.ஐ.தஸ்லீம் 1,429 வாக்குகளையும், எம்.எம்.றகுபாசம் 1,420 வாக்குகளையும், எம்.எல்.ஏ.லெத்தீப் 965 வாக்குகளையும், றூபி முகைதீன் ஆசாத் 952 வாக்குகளையும், ஐ.ஏ.பாசித் அலி 863 வாக்குகளையும் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதே போன்று  இங்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட்ட அக்கீல் அர்சாத் 1534 வாக்குகளையும், தி.பைரூஸ் 1240 வாக்குகளையும், இங்கு சுயேட்சைக்குழு இலக்கம் மூன்றில் போட்டியிட்ட பி.ரட்னசசிதரன் 834 வாக்குகளையும் பெற்று ஏறாவூர் நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஏறாவூர் நகர சபைக்கு முதல் நகர பிதாவாக அலிசாகீர் மௌலானா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment