widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, April 1, 2011

இணை வைக்காமல் மரணித்தவர் சுவர்க்கம் செல்வார்


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் மதீனாவுடைய ‘ஹர்ரா’ என்ற (கறுப்புக்கற்கள்) நிறைந்த பூமியில் நடந்து கொண்டிருந்தேன். வழியில் உஹது மலை எமக்கு எதிர்ப்பட்டது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அபூதர்ரே! என்று அழைத்தார்கள். நான் இதோ ஆஜராகி இருக்கிறேன்.

யாரஸ¥லல்லாஹ்! என்றேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னிடம் "இந்த உஹதின் அளவு தங்கம் இருந்து கடனை அடைப்பதற்காகவேயன்றி அதில் ஒரு தீனாரையாவது என்னிடம் வைத்துக் கொண்டு மூன்று இரவுகள் கழிவதையும் நான் விரும்பவில்லை. மாறாக அல்லாஹ்தலாவின் அடியார்களுக்கு இவ்வாறு, இவ்வாறு இவ்வாறெல்லாம் செலவழித்துவிடவே விரும்புகிறேன்". என்று கூறி தனது வலப்புறமாகவும், இடப்புறமாகவும் காட்டினார்கள்.

0 comments:

Post a Comment