widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, May 18, 2012


மார்க்கத் தீர்ப்புகள் – கப்றுகளை தரிசித்தல்


வெளியீடு: மேல் மட்ட அறிஞர் குழு சவுதி அரேபியா
தமிழாக்கம்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும், சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது தோழர்கள், குடும்பத்தினர்கள், அனைவர் மீதும் உண்டாவதாக!
கேள்வி : மரித்தோரிடம், மறைவானவற்றிடம் உதவி தேடுவது பெரும் ஷிர்க்காகுமா?
பதில் : மரணித்தவர்களிடம், மறைவானவற்றிடம் உதவி தேடுவது பெரும் ஷிர்கில் சேரும், எவர் இப்படியான பெரும் பாவங்களில் ஈடுபடுவாரோ அவர் இஸ்லாமீய வட்டத்தை விட்டு வெளியேறிவராவார்.
அல்லாஹ் கூறுகிறான்:
‘எவர் அல்லாஹ்வுடன் வேறு எவரையும் இணைத்து அழைப்பாரோ அவருக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. நிச்சயமாக அவரது தீர்ப்பு அல்லாஹ்வின் முன்னிலையிலாகும். நிச்யமாக நிராகரிப்பாளர்கள் வெற்றிபெற மாட்டார்கள்’
மற்றுமோர் இடத்தில்:
இன்னும் அவனையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கின்றீர்களே அத்தகையவர்கள், ஒரு வித்தின் (மேலிருக்கும்) தொலி அளவும் அதிகாரம் பெறமாட்டார்கள்’ (பாதிர்: 14).
கேள்வி : நபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிக்கும் நோக்கில் பிரயாணம் மேற்கொள்ள முடியுமா? இப்படியாக தரிசிப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா?
பதில் : கப்றுகளைத் தரிசிக்கும் நோக்கில் பயணம் மேற்கொள்ள முடியாது. அது நபிமார்களுடையதாக இருக்கலாம், அவ்லியாக்களுடையதாக இருக்கலாம். அவை வழிகெட்ட பித்அத்தாகும்.
‘மார்க்கத்தின் பெயரால் நன்மையை நாடி மூன்று இடங்களைத் தவிர பயணிக்க முடியாது, புனித மிக்க மஸ்ஜிதுல் ஹராம், எனது மஸ்ஜித் (மஸ்ஜிதுன் நபவி), மஸ்ஜிதுல் அக்ஸா’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
‘எவர் நாம் கட்டளையிடாத ஒன்றை புதிதாக ஏற்படுத்துவார்களோ அது நிராகறிக்கப்படும்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மண்ணறைகளை தரிசிப்பது நபிவழியாகும். அதை தரிசிக்கும் நோக்கில் பயணம் மேற்கொள்வது தான் தடுக்கப்பட்டுள்ளது.
‘மண்ணறைகளை தரிசியுங்கள் நிச்சயமாக அது உங்களுக்கு மறுமை சிந்தனையை ஏற்படுத்தும்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
கேள்வி : அவ்லியாக்களின் கப்றுகளுக்குச் சென்று அவைகளை வலம் வருவது, அவர்களிடம் உதவி தேடுவது, பரக்கத்துக்காக அதைத் தொடுவது, அவைகளிடம் நேர்ச்சை செய்வது, அவைகளைக் கட்டுவது, அல்லாஹ்விடத்தில் வாங்கித் தரும் இடைத்தரகர்களாக அவர்களை நினைப்பது ஆகியவைப் பற்றிய இஸ்லாமீய தீர்ப்பு என்ன?
பதில் : அவ்லியாக்களின் கப்றுகளுக்குச் சென்று அவர்களிடம் உதவி தேடுவது, அவர்களிடம் நேர்ச்சை செய்வது, அல்லாஹ்வின் முன்னிலையில் அவர்களை இடைத்தரகர்களாக எண்ணுவது இந்த அனைத்து செயல்களும் இஸ்லாமிய வட்டத்திலிருந்து ஒருவரைவெளியேற்றுவதும் மற்றும் மரணத்திற்குப் பின் நிரந்தர நரகத்தைப் பெற்றுத்தரும் பெரும் ஷிர்க்காகும்.
கப்றுகளை வலம் வருவதும், அவைகளைக் கட்டுவதும் வழிகெட்ட பித்அத்தாகும். அவர்களது (மரணித்தவரது) திருப்தியை நாடி இவ்வாறு செய்வது முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது. இதுவும் ஷிர்கில் சேரும் செயல்களாகும். அக்கப்றுகளை சுற்றி வலம் வருவதன் மூலம் அவர்களது (மரணித்தவரது) திருப்தி, அவர்கள் அருள் புரிவார்கள், நமக்கு துன்பங்கள் வருவதை விட்டுத் தடுப்பார்கள் என எதிர்ப் பார்க்கப்படுகிறது.  எனவே இது தடை செய்யப்பட்ட ஷிர்க்காகும்.
கேள்வி : அவ்லியாக்களுக்காக நேர்ச்சைசெய்து, அவர்களுக்காக பிராணிகளை அறுத்து, அச்செயல்களின் மூலம் அவர்களிடம் நன்மையை எதிர்ப்பார்த்து துன்பங்களிலிருந்து நீங்கியிருப்பதற்கு பிரார்த்தப்பது பற்றிய இஸ்லாமீய தீர்ப்பென்ன?
பதில் : அங்கு அடக்கப்பட்டிருக்கும் நல்லடியார்களின் பெயரில் அறுத்துப் பலியிடுவது மிகப் பெரும் ஷிர்க்காகும். எவர் அப்படிச் செய்வாரோ அவர் அல்லாஹ்வுடைய சாபத்திற்கு உட்படுவார்.
‘எவர் அல்லாஹ் அல்லாத ஒன்றின் பெயரில் அறுத்துப் பலியிடுவாரோ அவருக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கேள்வி : நல்லடியார்களின் கப்றுகளின் மீது மஸ்ஜித்கள் கட்டுவது,; அம் மஸ்ஜித்களில் தொழுவது. இதைபற்றிய இஸ்லாமீய சட்டமென்ன?
பதில் : அவ்லியாக்களின் கப்றுகளின் மீதோ அதன் அருகிலோ மஸ்ஜித்கள் அமைப்பது முழுமையாக தடுக்கப்பட்டதாகும். அவ்வாறான மஸ்ஜித்களில் தொழுவதும் கூடாது.
‘நபிமார்களின் கப்றுகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிய யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
‘அறிந்து கொள்ளுங்கள் இதற்கு முன் வாழ்ந்த சமுதாயங்கள் நபிமார்களின், நல்லடியார்களின் கப்றுகளை மஸ்ஜித்களாக ஆக்கிக்கொண்டனர், கப்றுகளை மஸ்ஜித்களாக ஆக்கிவிடாதீர்கள் அதை நான் உங்களுக்கு முழுமையாக தடை செய்கிறேன்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
ஜாபிர் (ரலி) அறிவிக்கும் ஓர் அறிவிப்பில்,
“நபி (ஸல்) அவர்கள் கப்றுகள் பூசப்படுவதை, அவைகள் மீது அமருவதை, அவைகள் கட்டப்படுவதை தடை செய்தார்கள்” என கூறினார்கள்.
கேள்வி: நபி (ஸல்) அவர்களின் பெயரில் நடைபெறும் மவ்லூத் நிகழ்ச்சிகளில், அது அல்லாத மவ்லூத் நிகழ்ச்சிகளில் அறுக்கப்பட்ட இறைச்சிகளை சாப்பிடலாமா?
பதில் : நபி (ஸல்) அவர்களின் பெயரில் நடைபெறும் மவ்லூத் நிகழ்ச்சியாக இருக்கலாம், வேறு எந்த அவ்லியாவுடைய பெயரில் நடைபெறும் மவ்லூத் நிகழ்ச்சியாக இருக்கலாம், அது அல்லாஹ் அல்லாத ஒருவரின் பெயரில் அறுக்கப்படக் கூடியதாகும்.
இது தெளிவான ஷிர்க். அதை சாப்பிடுவது அனுமதிக்கப்பட மாட்டாது.
‘எவர் அல்லாஹ் அல்லாத ஒருவனின் பெயரில் அறுத்துப் பலியிடுகிறானோ அவருக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கேள்வி: மரணித்தவரை நல்லடக்கம் செய்து விட்டு அங்கு அல்குர்ஆன் ஓதுவது, மரித்தோரின் வீட்டில் கூலிக்கு அல்குர்ஆனை ஓதுவதின் சட்டமென்ன? நாம் அவர்களை மரித்தோருக்கு கருணைக் காட்டுபவர்கள் என்று தான் அழைப்போம்!
பதில் : மார்க்க அறிஞர்களின் தீர்ப்பு ஒருவரின் ஜனாஸாவை அடக்கியதன் பின் அங்கு அல்குர்ஆனை ஓதுவது தெளிவான வழிகேடான பித்அத்தாகும். இவ்வாறான நடைமுறைகள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருக்கவில்லை. அன்னார் அவ்வாறு செய்வதற்கு ஏவவோ, அல்லது அவர்களோ செய்யவில்லை.
நபி (ஸல்) அவர்கள் ஒருவரின் ஜனாஸாவை அடக்கிவிட்டு அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்து ‘உங்கள் சகோதரருக்காக பாவமன்னிப்புத் தேடுங்கள், அவரது உள்ளம் உறுதியுடன் இருப்பதற்கும் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள், ஏனெனில் அவர் இப்பொழுது விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்.”
மண்னறையில் அல்குர்ஆன் ஓதப்படுவது நன்மையாக இருக்குமானால் நபி (ஸல்) அவர்கள் அதற்கு வழிகாட்டியிருப்பார்கள். மரணித்தவரின் வீட்டில் கூடி அல்குர்ஆனை ஓதுவதற்கு, நபி (ஸல்) அவர்களிடமோ, ஸஹாபாக்களிடமோ, தாபிஈன்களிடமோ, அதைத் தொடர்ந்து வந்தவர்களிடமோ எந்த முன்மாதிரியுமில்லை.
ஒரு முஸ்லிம் அவனுக்கு கவலைதரும் ஏதாவது நிகழ்ச்சிகள் நடந்தால் அவன் பொருமையை மேற்கொள்ள வேண்டும், இன்னும் அவன் அல்லாஹ்வின் திருப்தியை எதிர்ப் பார்த்து செயல்பட வேண்டும். பொருமையாளனின் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள்: ‘இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்; அல்லாஹும்ம ஃஜுர்னி பீ முஸீபதி வஹ்லுப் லீ ஹய்ரன் மின்ஹா’.
மரணம் நடைபெற்ற அவ்வீட்டில் கூடி அல்குர்ஆன் ஓதுவது, உணவு வகைகள் செய்து பரிமாறுவது அனைத்தும் வழிகெட்ட பித்அத்தாகும்.
கேள்வி: பெண்கள் கப்றுகளை தரிசிப்பது பற்றிய இஸ்லாத்தின் தீர்ப்பு என்ன?
பதில் : பெண்களுக்கு கப்றுகளை தரிசிப்பது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறும் போது,
“கப்றுகளை தரிசிக்கும் பெண்களுக்கு சாபம் உண்டாவதாக!”அவர்களுக்கு அது குழப்பமாகும், அவர்களுள் பொறுமையுடன் இருப்பவர்கள் ஒரு சிலரே. அவர்களுக்கு கப்றுகளைத் தரிசிப்பதை தடை செய்தது அல்லாஹ்வின் கருணையை பிரஸ்தாபிக்கும் ஒரு செயலாகும். அவர்கள் குழப்பம் செய்வதிலிருந்தும், குழப்பத்தில் ஆழ்த்தப்படுவதை விட்டும் இது தடுக்கும். அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரிவானாக.
கேள்வி : ஒருவரின் ஜனாஸாவை அடக்கிவிட்டு அவரது கப்ரின் (சமாதியின்) மீது அல்குர்ஆனீய வசனங்களை எழுதி அல்லது அங்கு அடக்கப்பட்டவரின் பெயர், ஊர், திகதி ஆகியவை எழுதுவதற்கு அனுமதி இருக்கிறதா?
பதில் : சமாதியின் மேல் அல்குர்ஆனீய வசனங்களை எழுதுவதற்கோ அல்லது வேறு எதையும் பலகையின் மீதோ, தகட்டின் மீதோ எழுதுவதற்கு அனுமதி இல்லை. ஜாபிர் (ரலி) அறிவிக்கும் ஓர் அறிவிப்பில்,
“நபிகளார் (ஸல்) அவர்கள் கப்ருகளின் மீது பூசப்படுவதையும், அதன் மீது உட்காருவதையும், அதை கட்டுவதையும் தடை செய்தார்கள்’ (முஸ்லிம், திர்மிதி)
நஸாயியின் ஓர் அறிவிப்பில் ‘அதன் மீது எழுதுவதையும்’ என்று இடம்பெற்றுள்ளது.
கேள்வி : சாஸ்த்திரக்காரர்கள், ஜோசியம் பார்ப்பவர்களிடம் செல்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?
பதில் : சூனியக்காரர்கள், சாஸ்த்திரக்காரர்கள், ஜோசியம் பார்ப்பவர்களிடம் செல்வதும், அவர்கள் மீது நம்பிக்கை வைப்பதும் குற்றமாகும்.
‘எவர் எதிர் காலத்தை கணித்துச் சொல்லக்கூடிய ஜோசியக்காரனிடம் போய் ஏதாவது கேட்பானானால் அவனது நாற்பது நாட்களுடைய தொழுகை ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
‘எவன் எதிர் காலத்தைக் கணித்துச் சொல்லக்கூடிய ஜோசியக்காரனிடம் போய் அவன் சொல்வதை உண்மைப்படுத்துவானானால் அவன் முஹம்மத் நபியின் மீது அருளப்பட்டதை நிராகறித்தவனாவான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அஹ்லுஸ்ஸுனன்).
கேள்வி : அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்வதற்கு அனுமதி இருக்கிறதா?
பதில் : அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்வது அனுமதிக்கப்பட மாட்டாது.
‘அறிந்துகொள்ளுங்கள்! அல்லாஹ் உங்கள் பெற்றோர்கள் மீது சத்தியம் செய்வதை தடை செய்கிறான். உங்களில் ஒருவர் சத்தியம்செய்வாராக இருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஓர் அறிவிப்பில்,
‘உங்கள் பெற்றோர்கள் மீது சத்தியமிடவேண்டாம். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வின் மீதேயன்றி சத்தியமிடவேண்டாம்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத், நஸாஈ).
‘எவன் அல்லாஹ் அல்லாத ஒன்றின் மீது சத்தியம் செய்வாரோ அவன் நிராகறித்துவிட்டான், அல்லது ஷிர்க் எனும் பெரும் பாவத்தை செய்து விட்டான்’ (அபூதாவுத், திர்மிதி).

நன்றி: சுவனத்தென்றல்

0 comments:

Post a Comment