"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Sunday, March 20, 2011
உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உறங்கும் ஒழுக்கங்கள்
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவின் ஆரம்பத்தில் தூங்கச் செல்வார்கள். நடு இரவுக்குப்பின் அதாவது பின்னிரவில் தொழுகைக்காக எழுந்து கொள்வார்கள்.
o எப்போதும் வலதுபுறம் ஒருக்கணித்துப் படுப்பார்கள். இன்னும் வலது கையின் உள்ளங்கைமீது வலது கன்னத்தை வைத்துப் படுத்துக் கொள்வார்கள்.
o யாராவது முகங்குப்புற படுத்திருந்தால் மிகவும் அதிருப்தி அடைவார்கள். தங்களின் பாதங்களால் அவருடைய பாதத்தில் தட்டி எழுப்பவார்கள்.
o நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில நேரங்களில் பேரிச்சைமரப் பட்டைகளின் சீவல்கள் நிரப்பப்பட்ட மெத்தைகளில் படுத்திருக்கிறார்கள். இன்னும் சிலநேரங்களில் புற்கள் நிரப்பப்பட்ட மெத்தைகளிலும், சிலநேரங்களில் ஈச்சமட்டைகளால் பின்னப்பட்ட பாய்களிலும், சிலநேரங்களில் தோல்விரிப்புகளிலும், சிலநேரங்களில் துணியைக் கீழே விரித்தும், சிலநேரங்களில் வெறும் தரையிலும் படுதிருக்கிறார்கள்.
தொடர்ந்து பார்வையிட/படிக்க..
Saturday, March 19, 2011
நவீன அறிவியல் எழுச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு (தொடர்-3)
எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)
தேக்க நிலையும் அதற்கான காரணங்களும்
ஏலவே குறிப்பிட்டது போன்ற காரணங்களால் அறிவியலின் உச்சநிலையை அடைந்து அகில உலகெங்கும் அறிவொளி பாச்சிய முஸ்லிம்கள் படிப்படியாக இத்துறையில் செல்வாக்கை இழந்தனர். அதனைத் தொடர்ந்து ஐரோப்பியர் இத்துறையில் எழுச்சி பெற்றனர்.
தொடர்ந்து பார்வையிட/படிக்க..
தேக்க நிலையும் அதற்கான காரணங்களும்
ஏலவே குறிப்பிட்டது போன்ற காரணங்களால் அறிவியலின் உச்சநிலையை அடைந்து அகில உலகெங்கும் அறிவொளி பாச்சிய முஸ்லிம்கள் படிப்படியாக இத்துறையில் செல்வாக்கை இழந்தனர். அதனைத் தொடர்ந்து ஐரோப்பியர் இத்துறையில் எழுச்சி பெற்றனர்.
தொடர்ந்து பார்வையிட/படிக்க..
Subscribe to:
Posts (Atom)
