widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Saturday, April 28, 2012


உண்மையான உளத்தூய்மையாளர்கள்

சிலர் தன்னைப் பிறர் புகழும்போது சுறுசறுப்போடும் உற்சாகத்தோடும் செயல்படுவார்கள். விமர்சனங்கள் ஏச்சுப் பேச்சுக்கள் வரும்போது பின்வாங்கி விடுவார்கள். மனிதர்கள் புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி தன்னுடைய செயல்களை அல்லாஹ்வின் பொருத்தத்திற்க்காக எண்ணிச் செயல்படுபவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.
சிலர் கூட்டத்தில் இருக்கும்போது அமல்களில் செயல்களில் ஆர்வம் காட்டுவார்கள். பாவங்களிலிருந்தும் விலகியிருப்பார்கள்.  ஆனால் தனிமையில் அமல்களில் சோம்பல் கொள்வார்கள்.  பாவங்களிலும் அதிகம் ஈடுபடுவார்கள்.  யார் தனிமையிலும் கூட்டத்திலும் சோம்பலை விட்டும் பாவத்தைவிட்டும் விலகியிருக்கிறார்களோ அவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.
சிலர் வெளியே பொது மேடையில் பதவியை வெறுப்பதுபோல் காட்டிக் கொள்வார்கள்; ஆனால் அப்பதவி கிடைக்காதா என ஏங்கிக் கொண்டிருப்பார்கள்.  உள்ளேயும் வெளியேயும் தலமைப்பதவியை விரும்பாதவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.
சிலர் மலை போன்ற தன் குறைபாடுகளை மறந்து விட்டு சிறு இலை போன்ற பிறர் குறைபாடுகளைத் தேடி அலைந்து கொண்டிருப்பார்கள்.  தன் அளவில் அநீதமாக நடந்துக்கொண்டு பிறரிடம் நியாயத்தை எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள். பிறர் குறைகளை மறந்து விட்டு தன் குறைகளை எண்ணி வருந்துபவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.
சிலர் தன்னைப்போல் யாரும் இல்லையென்றும் தான் பெரிய சாதனையாளன் என்றும் தான் புகழப்பட வேண்டும் என்று பிறரிடம் பேசிக்கொண்டிருப்பார்கள்.  புகழை விரும்பாதவர்களும் சாதனைகளை பட்டியலிடாதவர்களும் குறைவாகப்பேசி ஆக்கப்பூர்வமான செயல்களில் அதிகம் ஈடுபடுபவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.
சிலர் அதிகப்படியான காரணங்களைக் கூறி பொருப்புகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சிப்பார்கள். ஆனால் தியாகம் செய்வதிலும், செலவு செய்வதிலும் மற்றவர்களைவிட முந்திக்கொள்பவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.
சிலர் தமது கொள்கை கோட்பாட்டில் பிரச்சாரப் பயணத்தில் நிலைத்து நிற்காமல் அடிக்கடி இடறி விழுந்து கொண்டிருப்பார்கள்.  ஆனால் சத்தியப் பாதையில் உள்ளோர் குறைவாகவும், அசத்தியப் பாதையில் இருப்போர் அதிகமாகவும் இருப்பதை எண்ணி பின் வாங்காமல் தொடர்ந்து பயணிப்பவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.
சிலர் தமது செயல்களுக்கு உடனடியாகக் கிடைக்கும் உலக இலாபங்களை மட்டுமே பிரதிபலனாக எதிர்பார்ப்பார்கள். எவர் தமது செயல்களுக்கு மனிதர்களிடம் எதிர்பாராமல் மறுமையில் அல்லாஹ் வழங்கும் பிரதிபலன்களை மட்டுமே எதிர்பார்த்துச் செயல்படுபவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.
மதரஸா தாருல் இல்ம்-சிங்கப்பூர்

குர்ஆனை உன் கரத்தில் எடு!

என் அன்பான புதிய தலைமுறை முஸ்லிம் இளைஞர்களே!
உணர்ச்சி வசப் படாமல் சிந்தித்து - என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்!
உங்களுக்கென்று ஒரு குர்ஆன் பிரதி உண்டா?
உங்களுக்கென்று ஒரு குர்ஆன் மொழிபெயர்ப்பு உண்டா?
குர்ஆனை - பிழையின்றி ஓதத் தெரியுமா?
குர்ஆன் மொழிபெயர்ப்பை ஒரு தடவையாவது படித்தது உண்டா?
குர்ஆனின் கருத்துக்களைக் குறித்து சிந்தித்துப் பார்த்ததுண்டா?
என்ன வாழ்க்கை வாழ்கிறோம் நாம்?
ஊரோடு ஒத்து வாழ் என்று உலகத்தை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டு உண்டு கழித்து உறங்கி விழித்து வளர்ந்து தேய்ந்து போய்விடவா நாம் முஸ்லிம் ஆனோம்?
நவீன மனிதர்களாகிய நாமே உருவாக்கிக் கொண்ட பிரச்னைகளால் நாம் அனைவருமே மூழ்கிக் கொண்டிருக்கின்றோம். இது உண்மையா, இல்லையா? இன்றளவும் கூட தீர்வு காண இயலாமல் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நவீன உலகின் எல்லாப் பிரச்னைகளுக்கும் குர் ஆன் மட்டுமே நடைமுறை தீர்வாகும் என்பது உனக்குத் தெரியுமா?
என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்:
மக்களின் மூட நம்பிக்கைகளை அகற்றுவது எப்படி?
மதுவிலிருந்து மக்களை காப்பது எப்படி?
இனப்பிரச்னைக்கு தீர்வு என்ன? எய்ட்ஸ் வராமல் தடுப்பது எப்படி? சிசுக்கொலையைத் தடுக்க வழி ஏதும் உண்டா?
லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பது எப்படி?
வரதட்சனைப் பிரச்னைக்கு தீர்வு உண்டா?
வட்டியின் பிடியிலிருந்து உலகைக் காப்பது எப்படி?
குற்றங்களைக் குறைத்திட வழி ஏதும் உண்டா?
நீதியும் நியாயமும் செழித்திட வழி ஏதும் உண்டா?
குர்ஆனில் மட்டுமே இவை அனைத்துக்கும் தீர்வு உண்டு!
குர்ஆனைத் தவிர வேறு தீர்வு உண்டா?
குர்ஆன் ஒரு புறம் இருக்கட்டும். இன்றைய மனிதனின் மனக்கவலையை போக்கிட வழி உண்டா?
மன அழுத்தத்துக்கு மருந்து உண்டா?
தனி மனித வாழ்க்கைக்கு வழி காட்டுதல் உண்டா?
குடும்ப வாழ்க்கைக்கு வழி காட்டுதல் உண்டா?
சுரண்டலற்ற பொருளாதாரத்துக்கு வழி காட்டுதல் உண்டா?
தூய்மையான அரசியலுக்கு வழி காட்டுதல் உண்டா?
இன்றைய மனிதனுக்கு - தன்னைப் பற்றி, தன் உள்ளத்தைப் பற்றி இவ்வுலகத்தில் தனது இருப்பு எதற்கு என்பது பற்றி தெரியுமா?
அறிவு படைத்த மனிதனுக்கு அறிவியலை அணுகுவது எப்படி என்று தெரியுமா?
தொழில் நுட்பத்தினை முறையாக எப்படி கையாள வேண்டும் என்று தெரியுமா? தன் வரலாற்றிலிருந்து பாடம் படிப்பது எப்படி என்று தெரியுமா?
நல்லதொரு சமூக மாற்றத்தை நிகழ்த்துவது எப்படி என்பது தெரியுமா? இன்றைய மனிதனுக்கு நேர்மையாக வணிகத்தில் ஈடுபடுவது எப்படி என்று தெரியுமா? ஒரு கூட்டமைப்பை நேர்மையான முறையில் எவ்வாறு மேலாண்மை செய்திடுவது என்பது தான் தெரியுமா?
நீதியை நிலை நிறுத்தும் சட்டம் வகுக்கத் தெரியுமா?
குற்றங்களைக் குறைக்கத் தான் தெரியுமா?
மேலே சொல்லப்பட்ட எல்லாப் பிரச்னைகளுக்கும் குர் ஆனில் மட்டுமே தீர்வு இருக்கிறது என்று உனக்காவது தெரியுமா?
ஓ எனதருமை முஸ்லிம் இளைஞனே!
குர்ஆனை உன் கரத்தில் எடு!
முறைப்படி ஓது! மொழி பெயர்ப்பைப் படி! சிந்தித்துப் பார்! கேள்வி கேள்! கருத்துக்களைச் சேகரி! நடைமுறைப் படுத்து!
எடுத்துச் சொல்! புரிய வை!
மாறும் ஒரு நாள் இவ்வுலகம்!
எல்லாப் பிரச்னைகளும் தீரும்.
தீர்க்கப் படும். உலகம் அமைதியைத் தழுவும். அப்போது தான் 'இஸ்லாம்' என்றால் 'அமைதி' என்று உலகம் ஒத்துக் கொள்ளும். அதற்கு - நீயும் நானும் முஸ்லிம்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கின்ற நம் அனைவரும் செய்திட வேண்டியதெல்லாம் குர் ஆனை நம் கரத்தில் ஏந்துவது ஒன்று மட்டுமே!

Friday, April 27, 2012


ஷைத்தானின் தோழர்கள்!

நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தயங்கிக் கொண்டிருக்க வேண்டாம்) இஸ்லாமில் முற்றிலும் நுழைந்து விடுங்கள். (இதனைத் தடை செய்யும்) ஷைத்தானின் அடிச்சுவடு களைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். (2:208)
இவ்வாறு (அவர்களைப் பயமுறுத்திச்) செய்தது ஒரு ஷைத்தான்தான். ஆவன் தன் நண்பர்களைப் பற்றி (அவர்களுக்குப்) பயமுறுத்தினான். ஆகவே, நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவர்களுக்குப் பயப்பட வேண்டாம்ளூ எனக்கே பயப்படுங்கள். (3:175)
அல்லாஹ்வையன்றி அவர்கள் (தெய்வங் களாக) அழைப்பவைகள் பெண் (பெயருடை யவை)களேயன்றி வேறில்லை. துஷ்ட ஷைத் தானை அன்றி (மற்றெதையும்) அவர்கள் அழைக்கவில்லை (4:117)
(ஷைத்தான்) அவர்களுக்கு வாக்களிக் கின்றான்ளூ அவர்களுக்குப் பொய் நம்பிக்கையும் ஊட்டுகின்றான். எனினும் ஏமாற்றுவதற்கன்றி ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை. (4:120)
இத்தகையவர்கள் செல்லுமிடம் நரகம்தான். ஆவர்கள் அதிலிருந்து தப்ப யாதொரு வழியையும் காணமாட்டார்கள். (4:121)
மதுவாலும் சூதாட்டத்தாலும் உங்களுக்கிடையில் பகைமையையும் பொறாமையையும் உண்டுபண்ணி அல்லாஹ்வின் ஞாபகத்திலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடவுமே நிச்சயமாக ஷைத்தான் விரும்புகிறான். (ஆகவே, அவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்வீர்களா? (மாட்டீர்களா?) (5:91)
(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடை களில், சுமை சுமக்கக் கூடியவற்றையும், (சுமை சுமக்க முடியாத) சிறிய கால்நடைகளையும் (அவனே படைத்திருக்கின்றான். ஆகவே) அல்லாஹ் உங்களுக்கு அளித்திருக்கும் இவற்றில் (புசிக்கக்கூடியவற்றை) நீங்கள் புசியுங்கள். (இதில்) ஷைத்தானுடைய அடிச் சுவட்டைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். (6:142)
நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மை யையே கருதுகிறேன் என்று அவ்விருவரிடமும் சத்தியமும் செய்து. (7:21)
அவர்களை மயக்கி (அம்மரத்தின் கனியைப் புசிப்பதற்காக) அதன் பக்கம் அவர் களைச் செல்ல வைத்தான். அவ்விருவரும் அம்மரத்(தின் பழத்)தைச் சுவைக்கவே. அவ்விருவரின் மர்ம உறுப்புகளும் அவர்களுக் குத்தெரிந்தது. அச் சோலையின் இலையைக் கொண்டு தங்களை மூடிக் கொள்ள அவர்கள் முயற்சித்தனர். அது சமயம் இறைவன் அம் மரத்தை விட்டும் நான் உங்களைத் தடுத்திருக்க வில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களிரு வருக்கும் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களுக்குக் கூறவில்லையா? என்று அவ்விரு வரையும் அழைத்துக் கூறினான். (7:22)
ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் தாய் தந்தையை (அவர்கள் இன்பமுடன் வசித்து வந்த) சோலையிலிருந்து வெளியேற்றி (துன்பத்திற்குள்ளாக்கி)யது போல் உங்களையும் துன்பத்திற்குள்ளாக்கிவிட வேண்டாம். அவர்களுடைய மானத்தை அவர் களுக்குக் காண்பிப்பதற்காக அவன் அவர் களுடைய ஆடையைக் களைத்துவிட்டான். நிச்சயமாக அவனும் அவனுடைய இனத்தாரும் நீங்கள் அவர்களைக் காணமுடியாதவாறு (மறைவாக இருந்து கொண்டு) உங்களை (வழி கெடுக்க சமயம்) பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். நிச்சயமாக நம்பிக்கை கொள்ளாதவர்களுக்குத்தான் அந்த ஷைத்தான் களை நாம் நண்பர்களாக்கி இருக்கிறோம். (7:27)
(உங்களில்) சிலர் அவன் நேரான வழியில் செலுத்தியிருக்க மற்றோர் மீது வழிகேடே விதிக்கப்பட்டதன் காரணம். நிச்சயமாக அவர்கள் அலலாஹ்வையன்றி ஷைத்தான் களையே தங்கள் தோழர்களாக எடுத்துக் கொண்டதுடன் தாங்கள் நிச்சயமாக நேரான வழியில் இருப்பதாகவும் எண்ணிக் கொண்டது தான். (7:30)
ஷைத்தான் யாதொரு (தவறான) எண்ணத்தை உங்கள் மனதில் ஊசலாடச் செய்து (தகாததொரு காரியத்தைச் செய்யும் படி உங்களை)த் தூண்டினால் உடனே நீங்கள் (உங்களை) காப்பாற்றும்படி அல்லாஹ்விடம் கோருங்கள். நிச்சயமாக அவன் நன்கு செவியுறுபவனும் (அனைத்தையும்) நன்கறிந்த வாகவும் இருக்கின்றான். (7:200)
ஷைத்தான் அவர்களுடைய செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து எம்மனி தராலும் இன்று உங்களை ஜெயிக்க முடியாது: நிச்சயமாக நானும் உங்களுக்கு(ப் பக்க) துணையாக நிற்கிறேன். என்று கூறிக் கொண்டிருந்ததையும் (நபியே!) நீங்கள் நினைத்துப் பாருங்கள். (இவ்;வாறு கூறிக் கொண்டிருந்த) அவன். இரு படைகளும் நேருக்கு நேர் சந்திக்கவே புறங்காட்டி (ஓடி) பின்சென்று நிச்சயமாக நான் உங்களைவிட்டு விலகிக் கொண்டேன். நீங்கள் பார்க்க முடியாத ஒன்றை நான் பார்க்கின்றேன். நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்குப் பயப்படுகின்றேன். வேதனை செய்வதில் அல்லாஹ் மிகக் கடுமையானவன் என்று கூறினான். (8:48)
(யாகூப் நபி யூஸுபை நோக்கி) என் அருமைக் குழந்தையே! நீ கண்ட கனவை உன் சகோதரர்களிடம் கூறாதே. (அவ்வாறு கூறினால்) அவர்கள் உனக்கு யாதேனும் தீங்கிழைக்கச் சதி செய்வார்கள் ஏனெனில் நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான எதிரியாக இருக்கிறான். (சதி செய்யுமாறு அவர்களை அவன் தூண்டக் கூடும்) என்று கூறினார். (12:5)
(இக்குற்றவாளிகளைப் பற்றி தீர்ப்புக் கூறப் பட்டதும் பின்னர், ஷைத்தான் (இவர்களை நோக்கி) நிச்சயமாக அல்லாஹ் (இவ்வேதனைத் தருவதாக) உங்களுக்கு மெய்யாகவே வாக்களித்திருந்தான். (அவ்வாறே கொடுத்தும் விட்டான்) நானும் உங்களுக்கு(ப் பொய்யாக) வாக்களித்தேன். எனினும் நான் உங்களை வஞ்சித்து விட்டேன். நான் உங்களை அழைத்தேன். நீங்கள் என்னைப் பின்பற்றினீர்கள் என்;;பதைத் தவிர உங்களை நான் நிர்ப்பந்;திப் பதற்கு எனக்கு யாதொரு அதிகாரமும் இல்லாமலே இருந்தது. ஆதலால் நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள். உங்களை நீங்கள் நிந்தித்துக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு யாதொரு உதவியும் செய்ய முடியாது. நீங்களும் எனக்கு யாதொரு உதவியும் செய்ய முடியாது. இதற்கு முன்னர் நீங்கள் என்னை (அல்லாஹ்வுக்கு) இணை ஆக்கிக் கொண்டி ருந்ததையும் நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன். நிச்சயமாக (உங்களைப் போன்ற) அநியாயக்காரர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனை உண்டு என்று கூறுவான். (14:22)
(நபியே!) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களுக்கு முன்னிருந்த பல வகுப்பார்களுக் கும் நாம் (நம்முடைய) தூதர்களை அனுப்பி வைத்தோம். எனினும், ஷைத்தான் அவர்களுக் கும் அவர்களுடைய (தீய) காரியங்களையே அழகாகக் காண்பித்தான். இன்றைய தினம் இவர்களுக்கும் அவனே நண்பனாக இருக ;கிறான். ஆகவே இவர்களுக்கு மிக்க துன்புறுத் தும் வேதனையுண்டு. (16:63)
மலக்குகளை நோக்கி ஆதமுக்குச் சிரம் பணியுங்கள் என நாம் கூறிய சமயத்தில் இப்லீஸைத் தவிர (மலக்குகள் அனைவரும் அவருக்குச்) சிரம் பணிந்தார்கள். அவனோ நீ மண்ணால் படைத்தவனுக்கு நான் சிரம் பணிவதா? என்று கேட்டான். (17:61)
(பின்னும் இறைவனை நோக்கி!) என்னை விட நீ கௌரவப்படுத்தி இருப்பவர் இவரல்லவா என்பதை நீ கவனித்தாயா? (என்று ஏளனமாக ஆதமைச் சுட்டிக் காண்பித்து) நீ என்னை மறுமை நாள் வரையில் பிற்படுத்தி வைத்தால் வெகு சிலரைத் தவிர இவருடைய சந்ததிகள் அனைவரையும் நான் வழிகெடுத்து (வேரறுத்து) விடுவேன் என்று கூறினான். (17:62)
(அதற்கு இறைவன் இங்கிருந்து) நீ அப்புறப் பட்டு விடு. அவருடைய சந்ததிகளில் உன்னைப் பின்பற்றியவர்களுக்கும் (உனக்கும்) முற்றிலும் தகுதியான கூலி நிச்சயமாக நரகம்தான் என்றும். (17:63)
(அன்றி) நீ உனக்குச் சாத்தியமான அளவு கூச்சல் போட்டு அவர்களைத் தூண்டிவிடு. உன்னுடைய குதிரைப் படைகளையும் காலாட் படைகளையும் அவர்;கள் மீது ஏவி விடு. அவர் களுடைய பொருளிலும் சந்ததியிலும் நீ கூட்டாக இருந்து கொண்டு அவர்களுக்கு (நயத்தையும் பயத்தையும் காட்டி) வாக்களி என்றும் கூறினான். ஆகவே ஷைத்தான் (ஆகிய நீ) அவர்களுக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றமே அன்றி வேறில்லை. (17:64)
நிச்சயமாக என் நல்லடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை (என்;றும் கூறினான். ஆகவே அவர்களை) பாதுகாத்துக் கொள்ள உங்கள் இறைவ(னாகிய நா)னே போதுமானவன். (17:65)
(நபியே!) நிராகரிப்பவர்களை (பாவமான காரியங்களைச் செய்யும்படித்) தூண்டிக் கொண்டி ருப்பதற்காகவே ஷைத்தான்களை நாம் (அவர்களிடம்) அனுப்பி வைக்கின்றோம் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? (19:83)
எனினும், ஷைத்தான் அவர்களுக்கு ஊசலாட்டத்தை உண்டுபண்ணி ஆதமே! நிரந்தர வாழ்க்கைக்குரிய மரத்தையும் அழிவில்லாத அரசாங்கத்தையும் நான் உங்களுக்கு அறிவிக்கவா? என்று கூறினான். (20:120)
ஆகவே அவ்விருவரும் (தடுக்கப்பட்ட) அதனைப் புசித்துவிட்டார்கள். உடனே (நிர்வாணமாகி) அவ்விருவரின் மானமும்; வெளியாகவே அச்சோலையின் இலைகளைக் கொண்டு தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டார்கள். ஆகவே, ஆதம் (இப்லீஸின் சூழ்ச்சியில் சிக்கித் தவறிழைத்துத்) தன் இறைவனுக்குமாறு செய்து வழி தவறிவிட்டார். (20:121)
பின்னர், (அவர் மன்னிப்புக் கோரவே) அவருடைய இறைவன் அவருடைய குற்றங் களையும் மன்னித்து அவரைத் தேர்ந்தெடுத்து நேரான வழியிலும் செலுத்தினான். (20:122)
அன்றி நீங்கள் இருவரும் இதிலிருந்து வெளியேறி விடுங்கள். உங்க(ளுடைய சந்ததிக)ளில் சிலர் சிலருக்கு எதிரிகளாக ஏற்பட்டு விடுவார்கள். அச்சமயம் நிச்சயமாக என்னுடைய நேர்வழி உங்களிடம் வரும். எவன் என்;னுடைய நேர்வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார். நஷ்டமடையவும் மாட்டார். (20:123)
எவன் என்னுடைய நல்லுபதேசங்களைப் புறக்கணிக்கின்றானோ அவனுடைய வாழ்க்கை நிச்சயமாக நெருக்கடியானதாகவே இருக்குமளூ; மறுமை நாளிலோ நாம் அவனைக் குருட னாகவே எழுப்புவோம். (20:124)
(இவ்வாறு) ஷைத்தான் உண்டுபண்ணும் தப்பானதை எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கின்றதோ அல்லது எவர்களுடைய உள்ளங்கள் (கல்லைப் போல்) கடினமாக இருக்கின்றனவோ அவர்களைச் சோதிப்பதற்கு (அல்லாஹ்) ஒரு காரணமாகவும் ஆக்கிவிடுகிறான். அன்றி, நிச்சயமாக (அத்தகைய கடினமான உள்ளங்களை உடைய) அநியாயக்காரர்கள் வெகு தூரமான விரோதத்தில்தான் இருக்கின்றனர். (22:53)
நம்பிக்கையாளர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவட்டை நீங்கள் பின்பற்றாதீர்கள். (ஏனென்றால்) எவன் ஷைத்தானுடைய அடிச்சுவட்டைப் பின்பற்றிச் செல்கிறானோ அவனை அவன் மானக்கேடான விஷயங்களை யும், பாவமான காரியங்களையும் செய்யும்படி நிச்சயமாகத் தூண்டிக் கொண்டே இருப்பான். அல்லாஹ்வுடைய அருளும், கிருபையும் உங்கள் மீது இல்லாதிருப்பின் உங்களில் ஒருவருமே எக்காலத்திலும் பரிசுத்தவானாக இருக்க முடியாது. எனினும், அல்லாஹ் தான் நாடியவனைப் பரிசுத்தவானாக ஆக்குகிறான். அல்லாஹ் செவியுறுபவனும் (அனைத்தையும்) நன்கறிபவனாகவும் இருக்கின்றான். (24:21)
(நம்பிக்கையாளர்களே!) ஷைத்தான்கள் யார் மீது இறங்குகின்றனர் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கவா? (26:221)
பொய் சொல்லும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர். (26:222)
அவளும் அவளுடைய மக்களும் அல்லா ஹ்வையன்றிச் சூரியனைச் சிரம் பணிந்து வணங்குவதை நான் கண்டேன். அவர்களு டைய இக்காரியத்தை ஷைத்தான் அவர் களுக்கு அழகாகக் காண்பித்து அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விட்டான். ஆதலால், அவர்கள் நேரான வழியை அடையவில்லை. (27:24)
அன்றி இவ்வாறே ஆது ஸமூது கூட்டத்தின ரையும்(அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக) நாம் அழித்துவிட்டோம். (நீங்கள் போக வர உள்ள வழியில்) இருந்த இடங்கள் உங்களுக்கு நன்றாகவே தென்படு கின்றன. இவர்கள் அனைவருக்கும் அவர் களுடைய (பாவச்) செயலையே ஷைத்தான் அழகாகக் காண்பித்து நேரான வழியில் செல்லாது அவர்களைத் தடுத்துக் கொண்டான் அவர்கள் நல்லறிவுடையவர்களாகத்தான் இருந்தார்கள் (ஷைத்தானுடைய வலையில் சிக்கி இக்கதிக்கு ஆளானார்கள்) (29:38)
அவர்களை நோக்கி அல்லாஹ் இறக்கிய (அல்குர்ஆன்)னைப் பின்பற்றுங்கள் எனக் கூறினால், அதற்கு அவர்கள் அன்று, எங்கள் மூதாதைகள் எதன்மீது இருக்க நாங்கள் கண்டோமோ அதனையே பின்பற்றுவோம் என்று கூறுகின்றனர். (என்னே!) அவர்கள் மூதாதை களை ஷைத்தான் நரக வேதனையின் பக்கம் அழைத்து (அவர்களும் சென்று) இருந்தாலுமா? (இவர்கள் அவர்களைப் பின்பற்றிச் செல்வார்கள்!) (31:21) நிச்சயமாக (அவர்கள் தன்னைப் பின்பற்று வார்களென்று! இப்லீஸ் எண்ணிய எண்ணத்தை உண்மை என்றே அவன் கண்டுகொண்டான். ஆகவே நம்பிக்கை கொண்ட சிலரைத் தவிர (மற்ற) அவர்கள் அனைவரும் அவனையே பின்பற்றினார்கள். (34:20)
நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு எதிரியாக இருக்கின்றான்;. ஆகவே அவனை நீங்களும் எதிரியாகவே கருதுங்கள். அவன் (தனக்கு வழிப்பட்ட) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் நரகவாசிகளாகி விடுவதற்காகவே (35:6)
எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்க ளுக்குக் கடினமான வேதனை உண்டு. எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கி றார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு. பெரிய கூலியும் உண்டு. (35:7)
எவனுக்குத் தீய காரியங்கள் அழகாகக் காண்பிக்கப்பட்டு அவனும் அதனை அழகாகக் காண்கிறானோ அவனும் (எவன் தீய காரியங் களைத் தீயனவாகவே கண்டு அதிலிருந்து விலகிக் கொள்கின்றானோ அவனும் சமமாவா ர்களா? ஒருபோதும் ஆகமாட்டார்கள்) நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர் களைத் தவறான வழியில் விட்டுவிடுகிறான். தான் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். ஆகவே, (நபியே!) அவர்களுக் காக உம் உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு நீர்; கவலைப்படாதீர்;. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கிறான். (35:8)
ஆதமுடைய சந்ததிகளே! நீங்கள் ஷைத்தானை வணங்கக் கூடாது என்றும் நிச்சயமாக அவன் உங்களுக:;குப் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா? (36:60)
(நபியே!) ஷைத்தானுடைய யாதொரு ஊசலாட்டம் (தீய காரியங்களைச் செய்யும்படி) உங்களைத் தூண்டும் சமயத்தில் (உங்களை அதிலிருந்து) பாதுகாத்துக் கொள்ளும்படி அல்லாஹ்விடத்தில் நீங்கள் கோருவீராக! நிச்சயமாக அவன் (அனைத்தையும்) செவியுறு பவனும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான். (ஆதலால் அவன் உங்களை பாதுகாத்துக் கொள்வான்) (41:36)
எவன் ரஹ்மானுடைய நல்லுபதேசத்தி லிருந்து கண்ணை மூடிக் கொள்கிறானோ? அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை (நன்;பணாக) சாட்டி விடுவோம். அவன் அவனுக்கு இணைபிரியாத தோழனாகி விடுகிறான். (43:36)
உங்களை ஷைத்தான் தடுத்துக் கெடுத்து விட வேண்டாம். நிச்சயமாக அவன் உங்களுக் குப் பகிரங்கமான எதிரியாக இருக்கின்றான். (43:62)
நிச்சயமாக எவர்களுக்கு நேரான வழி இன்னதென்று தெளிவானதன் பின்னரும் அவர்கள் (அதன்மீது செல்லாது) தங்கள் பின்புறமே திரும்பிச் சென்றுவிட்டார்களோ, அவர்களை ஷைத்தான் மயக்கிவிட்டான். அன்றி, அவர்களுடைய தப்பெண்ணங்களையும் விரிவாக்கி, அவர்களுக்கு அவற்றை அழகாக்கி யும் விட்டான். (47:25)
ஷைத்தான் இவர்களை ஜெயித்து அல்லாஹ்வைப் பற்றிய எண்ணத்தையே இவர்களுக்கு மறக்கடித்துவிட்டான். இவர்கள் தாம் ஷைத்தானுடைய கூட்டத்தினர். ஷைத்தானுடைய கூட்டத்தினர் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (58:19)
நிச்சயமாக, நாம் நூஹை அவருடைய மக்களிடம் (நம்முடைய) தூதராக அனுப்பிவைத்து, (அவரை நோக்கி நீங்கள் உங்களுடைய மக்களுக்குத் துன்புறுத்தும் வேதனை வருவதற்கு முன்னதாகவே அவர்களுக்கு அதனைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள் என்று கட்டளையிட்டோம். (71:1)
(அவரும் அவ்வாறே அவர்களை நோக்கி என்னுடைய மக்களே! நுpச்சயமாக நான் உங்களுக்குப் பகிரஙக்மாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றேன் என்றும், (71:2)
அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள் அவனுக்கே நீங்கள் பயப்படுங்கள். எனக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடங்கள் என்றும், (அவ்வாறு நீங்கள் நடந்தால், அல்லாஹ்) உங்களுடைய குற்றங்களை மன்னித்து, குறிப்பிட்ட காலம் வரையில் உங்களை (அமைதி யாக வாழ) விட்டுவைப்பான். நுpச்சயமாக (வேதனைக்காகக் குறிப்பிடப்பட்ட) அல்லாஹ்வுடைய தவணை வரும் சமயத்தில், அது ஒரு சிறிதும் பிந்தாது என்றும் (இதனை) நீங்கள் உறுதியாக நம்ப வேண்டாமா? என்றும் கூறினார். (71:3-4)
Source: Readislam

Sunday, April 22, 2012

ஹிஜாப் - பெண்களின் கற்புக்குக் கவசம்

 ஹிஜாப் - பெண்களின் கற்புக்குக் கவசம்  
ஆண்களும், பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே இவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.
அழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு அதில் எந்த உரிமையும் கிடையாது.
பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதைக் காண முடிகின்றது.
இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.
ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.]

“ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது!” என்று முற்போக்குவாதிகளும்(!!!) அறிவுஜீவிகளும்(!!!) கூறுகின்றனர். எப்படியும் வாழலாம் என்று கருதும் பெண்டிரும் அந்தப் போலித்தனமான சுதந்திரத்தில் மயங்கி விடுகின்றனர்.
“ஹிஜாப்” என்பது உண்மையில் பெண்களைக் கௌரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அவர்களது உரிமையைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அன்று.
இதுபற்றி விளக்குவதற்கு முன்னால் இவர்களின் போலித்தனத்தையும் இவர்கள் தங்களின் கூற்றுக்குத் தாங்களே முரண்படுவதையும் இனம் காட்ட வேண்டியுள்ளது.
 ஹிஜாபை எதிர்ப்பவர்களின் போலித்தனம் 
ஹிஜாப் என்பது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவது எனவும், கூடுதல் சுமை எனவும் கூறுவோர் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆடை விஷயத்தில் ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதே சுதந்திரத்தை அவர்கள் பெண்களுக்கும் அளிக்க வேண்டும். அனால் சமத்துவம் பேசும் இவர்கள் கூட அவ்வாறு அளிக்கத் தயாராக இல்லை.
உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ஆடவன் சட்டை, பனியன் போன்ற மேலாடை எதுவுமின்றி வெறும் அரை நிக்கர் மட்டும் அணிந்து தனது வேலைகளைப் பார்க்கிறான். பலர் முன்னிலையில் அந்தக் கோலத்தில் இருக்கிறான். இதே உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி மேலாடை எதுமின்றி பணிபுரியவோ, பலருக்கும் காட்சி தரவோ அனுமதிக்கப்படுவதில்லை. தம் மனைவியை, தம் தாயை, தம் சகோதரியைப் பிறர் முன்னிலையில் அந்த அளவு ஆடையுடன் காட்சி அளிக்க முற்போக்குவாதிகள் உட்பட எவரும் அனுமதிப்பதில்லை.
அது போல் நடுத்தர வர்க்கத்து, அல்லது மேல்மட்டத்து ஆடவன் ஒருவன் மேலாடை எதுமின்றி வெளியில் காட்சி தராவிட்டாலும் வீட்டிற்குள் குடும்பத்தினர் முன்னிலையில் அந்தக் கோலத்தில் இருக்கிறான். எல்லா நேரங்களிலும் அவ்வாறு இல்லா விட்டாலும் கடினமான வேலையின் போதும் கடுமையான கோடையின் போதும் அந்தக் கோலத்துடன் இருப்பதுண்டு. அதே உழைக்கும் வர்க்கத்துப் பெண்கள் அவ்வாறு இருப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை.
அன்னிய ஆடவர்கள் முன்னிலையில் மட்டுமின்றிக் குடும்பத்து ஆடவர்கள் முன்னிலையில் கூட அந்த நிலையில் பெண்கள் காட்சி தருவது கிடையாது. என் குடும்பத்துப் பெண்கள் முன்னிலையில் கூட அவ்வாறு காட்சி தர அனுமதிக்கப்படுவது கிடையாது. முற்போக்குவாதிகள் உட்பட எவருமே அதை அனுமதிக்க மாட்டார்கள்.
“ஆண்களை விடப் பெண்களிடம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் கூடுதலாக உள்ளன என்பதை அப்பெண்களும் உணர்ந்துள்ளனர்; ஆண்களும் உணர்ந்து உள்ளனர்” என்பதற்கு இந்தப் போக்கு ஆதாரமாக அமைந்துள்ளது.
ஹிஜாபை விமர்சனம் செய்பவர்களிடம் நாம் கேட்கிறோம்; ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்பது இப்போது எங்கே போயிற்று? பெண்களின் சுதந்திரம் இப்போது என்னவாயிற்று? முழு அளவுக்கு இல்லையானாலும் ஒரளவுக்கு அவர்களும் ஹிஜாபை வற்புறுத்தவே செய்கின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதை தங்களது நடவடிக்கையின் மூலம் அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். மறைக்கும் அளவு எது என்பதில் தான் நமக்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு. சரி நிகர் சமானம் என்பதிலோ, பெண்களின் சுதந்திரம் என்பதிலோ அல்ல.
ஏனெனில் அவர்களும் கூட ஆண்களுக்கு யாருக்கும் அதே அளவு சுதந்திரத்தை இந்த விஷயத்தில் பெண்களுக்கு வழங்கி விடவில்லை.
 பெண்களுக்கு பாதுகாப்பு 
இனி ஹிஜாப் எவ்வாறு பெண்களுக்குப் பாதுகாப்பாகவும், அவர்களைக் கவுரவிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதைக் காண்போம்.
ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இருபாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண்களின் நிறம், அழகு, இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. அதன் காரணமாகத்தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்கின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு அதுதான்.
பெண்களின் ரசனை அத்தகையது அன்று. ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது. அதன் காரணமாகத் தான் ஆண்கள் எவ்வளவு குறைந்த அளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பார்த்து ரசிப்பதில்லை. திரும்பப்பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை.
ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிலிருந்தும் கூட இதை அறியலாம்.
ஆண்களும், பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே இவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.
அழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு அதில் எந்த உரிமையும் கிடையாது.
பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதைக் காண முடிகின்றது.
இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.
ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.
பெண்களைப் பார்த்து ஆண்கள் ரசிப்பது போலவே பெண்களும் ஆண்களை ரசிக்கவே செய்கிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர். அந்த வாதத்தை உண்மையென்று ஒப்புக் கொண்டாலும் கூட ஹிஜாபை மறுப்பதற்கு அவ்வாதம் வலுவானதன்று.
ஏனெனில் ஆண்கள் பெண்களை ரசித்து விட்டுப் பெண்களின் விருப்பமில்லாமலேயே பலவந்தமாக அவர்களை அனுபவித்து விட முடியும். பெண்கள் ஆண்களை ரசிப்பதாகவே வைத்துக் கொண்டாலும், ஆண்கள் விரும்பாத வரை பெண்களால் ஆண்களைப் பலவந்தமாக அனுபவித்து விட முடியாது.
இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. அனால் அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.
அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும் போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுகின்றன. கற்பழித்த குற்றத்துக்காக தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சும் கயவர்கள் அவளைக் கொன்றும் விடுகின்றனர்.
ஹிஜாபைக் குறை கூறுவோர் அதைச் சிந்திப்பதில்லை.
பெண்ணுரிமை இயக்கங்களும், முற்போக்குவாதிகளும் நாட்டில் தினந்தோறும் நடக்கும் கற்பழிப்புக்களையும் பெண்களுக்கெதிரான கொடுமைகளையும் கண்டிக்கின்றனர். “இச்செயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்; அரபு நாட்டுச்சட்டம் இங்கும் வேண்டும்” என்றெல்லாம் கூறுகின்றனர்.
ஆனால் ஆண்களைத் தூண்டும் வகையில் பெண்களின் உடை அமைந்திருப்பதும் இந்த நிலைக்கு முக்கியமான காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். காரணத்தை மறந்து விட்டுக் காரியத்தை மட்டும் கண்டிக்கின்றனர்.
பெண்ணுரிமை இயக்கங்களும் முற்போக்குவாதிகளும் ஆபாச சினிமா மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராகப் போராடுவதையும் ஆபாச சுவரொட்டிகளைக் கிழிப்பதையும், சாயம் பூசி மறைப்பதையும் நாம் காண்கிறோம். இது எதை உணர்த்துகிறது?
பெண்கள் ஆண்களை விட அதிகப்படியாக உடலை மறைக்க வேண்டும் என்பதை இவர்களின் உள் மனது ஒத்துக் கொள்வதை உணர்த்தவில்லையா? பெண்களை அதிகப்படியான ஆடையணிவித்து மூடி வைப்பது அவர்களின் சுதந்திரத்திலும் உரிமையிலும் குறுக்கிடுவதாகும் என்று முழங்கும் இவர்கள் ஆபாசப் போஸ்டர்களைக் கிழிப்பதும் கண்டிப்பதும் என்?
பெண்ணுரிமையைப் பயன்படுத்தியே அப்பெண் (நடிகை) அப்படிக் காட்சியளிக்கிறாள். அது அவளது சுதந்திரம்; அவளது ஒப்புதலுடன் தான் அக்காட்சி வெளியிடப்படுகிறது; அதை அவளும் பார்க்கிறாள் எனும்போது இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டிப்பதும் கிழிப்பதும் இவர்கள் கூற்றுப்படி அப்பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகாதா?
பெண்ணுரிமை வெறி முற்றிப் போனது தான் அவள் இப்படி ஆபாசமாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் என்பதை இவர்கள் மறந்தது ஏனோ?
எனவே இவர்களது கூற்று இவர்களது செயல்களுக்கு முரணாகவே அமைந்துள்ளது. பெண்களின் உடல் மறைக்கப்பட்டாக வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதையே இவர்களது உள் மனதும் ஒப்புக் கொள்கிறது என்பதை இவர்களது செயல்களே காட்டுகின்றன.
இவ்விடத்தில் எழும் மற்றொரு சந்தேகத்தை விளக்கியாக வேண்டும்.
பெண்களின் முழு உடலும் ரசிக்கத்தக்கதாக இருக்கும்போது முகத்தையும், கைகளையும் கூட மறைத்துத்தானே ஆக வேண்டும் என்ற கேள்வி நியாயமானதுதான். அதைவிட நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் அந்த இரண்டு உறுப்புகளையும் மறைக்காமலிருக்கச் சலுகை வழங்கியிருக்கின்றது.
ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக்குறைவே. பெரும்பாலோர் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தெரிந்த மனிதர்களிடம் தம் மதிப்பு, பாதிக்கப்படும் என்று அஞ்சுவதுதான். இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இதுதான் காரணம்.
முகத்தையும் ஒரு பெண் முழுமையாக மறைத்து விட்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள் எனும்போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள். எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும். முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.
ஆண்கள் கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாத வகையில் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டால் அவனது சுயரூபமும் அப்போது வெளிப்படும். இறையச்சம் இல்லாவிட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தூண்டவேண்டும்.
மேலும் முகத்தையும் மறைக்கக் கட்டளையிட்டால் முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றி முஸ்லிமல்லாத பெண்களும் கூட தவறு செய்யும் போது முகத்தை மறைத்துக் கொள்ளும் நிலைமை ஏற்படும். அப்படியும் சில பகுதிகளில் நடப்பதை நம்மால் அறிய முடிகின்றது.
பெண்கள் மட்டுமின்றி தவறான செயல்களில் ஈடுபடும் ஆண்கள் கூட பெண்களைப் போல் முகம் மறைத்து பல தவறுகளைச் செய்யக்கூடிய நிலமையும் ஏற்படலாம்.
எனவே தான் பெண்களின் முகம் ரசிக்கத்தக்கதாக இருந்தும், மிக மோசமான விளைவுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்காகத் தான் முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கட்டளையிடவில்லை.
நபித்தோழியர் எவரும் தாங்கள் யார் என்று அடையாளம் தெரியாத வகையில் முகத்தை மறைத்துக்கொண்டதில்லை என்று வரலாற்று நூற்களில் காண்கிறோம்.
கொடுக்கல், வாங்கல் இன்ன பிற அலுவல்களில் ஈடுபட கைகள் மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக்கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட இயலாத நிலை ஏற்படும். அதனால்தான் மணிக்கட்டு வரை கைகளை மறைத்துக் கொண்டு மற்ற பகுதியை மட்டும் மறைக்காமலிருக்கலாம் என்று இஸ்லாம் அனுமதிக்கின்றது.
இதைத் தவிர மற்ற பாகங்கள் கண்டிப்பாக ஆண்களின் ஒழுக்கத்திற்குச் சவால் விடக்கூடியவை. அப்பாகங்களைத் திறந்து காட்டுவதால் எந்தப் பயனுமில்லை. அன்னியப் பெண்களைத் தடையின்றிப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான ஆசை கொண்டவர்களே பெண்களை அரை நிர்வாணத்துடனும் கால் நிர்வாணத்துடனும் நடைபோட அனுமதி கேட்கின்றனர்.
முகமும், கைகளும் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவது பெண்களின் முன்னேற்றத்துக்கு தடை எனக் கூறுவதும் ஏற்கக்கூடிய வாதமன்று.
இந்த நாட்டிலும் உலகின் பல நாடுகளிலும் பிரதமர்கள், ஜனாதிபதிகள், மாநில முதல்வர்கள் எனப் பல்வேறு பதவிகளை வகிக்கும் ஆண்கள் முகம், கை தவிர மற்ற பகுதிகளை முழுமையாகவே மறைத்துள்ளனர். ஆயினும் அவர்கள் பெரும் பதவிகளை வகிக்க இது தடையாக இருக்கவில்லை.
பெரும் பதவி வகிக்கும் எந்த ஆணும் ஆடையில் தொப்புள் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவதில்லை. முட்டுக்கால் வரை கவுன் அணிந்து கால்களைக் காட்டிக்கொண்டிருப்பதில்லை.
ஆனால் ஆண்களை விடக் குறைவான அளவு பெண்கள் மறைப்பதைச் சுதந்திரம் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?
அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது.
ஆண்கள் குறைவான அளவு மறைத்தாலும் கேடுகள் ஏற்படாது. அவ்வாறு இருந்தும் ஆண்கள் நிறைவாக ஆடை அணிந்து முன்னேறுகிறார்கள். குறைவான அளவு ஆடையால் அடுத்தவரைப் பாதிக்கும் உடலமைப்புக் கொண்ட பெண்கள் நேர்மாறாக நடப்பதுதான் நமக்கு வியப்பாகவுள்ளது.
இன்னொன்றையும் இங்கே நாம் சுட்டிக்காட்ட வேண்டும். ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.
கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலை பெறவும் தான் ஹிஜாப் என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் வழங்கப்பட்ட ஆடை சுதந்திரம் ஏற்படுத்திய விளைவுகளைக் கண்ட பிறகும் எவரும் ஹிஜாபைக் குறை கூற முடியாது.

Friday, April 20, 2012


மர்வா ஸபா கவாக்ஸி: இந்நூற்றாண்டின் புரட்சிகரமான பெண்களில் ஒருவர்

ஆபிரிக்காவின் மொரோக்கோ முதல் ஆசியாவின் இந்தோனேசியா வரை பரந்து விரவிக் கிடக்கும் இஸ்லாமிய உலகில் பல கோடிப் பெண்கள் ஹிஜாபை துறந்திருக்கின்றபோது, ஹிஜாபுக்காக தனது குடியுரிமையையும் பாராளுமன்ற அங்கத்துவ உரிமையையும் உதறித் தள்ளிமைதான் மர்வா செய்த மாபெரும் புரட்சி.
1999 இல் துருக்கிய பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கான சத்தியப் பிரமாணத்தை எடுப்பதற்கு நுழைந்தபோது அங்கிருந்த கொடுங்கோன்மை மிக்க மதச்சார்பற்ற சக்திகள் கூக்குரலிட்டனர். அவரை ஒரு இஸ்லாமிய தற்கொலை குண்டுதாரி என்று வர்ணித்ததோடு பாராளுமன்றத்தை விட்டு வெளியேறிச் செல்லுமாறும் காட்டுக் கூச்சல் போட்டனர்.
கலாச்சார உரிமைகள் குறித்து பேசும் ஐரோப்பாவில் உடுப்பதற்கான உரிமை மறுக்கப்பட்ட நிலையில், தனது குடியுரிமையையும் இழந்து அமெரிக்காவில் குடியேறியவர் கவாக்ஸி. இஸ்லாமிய அறிவுத் துறையிலும் சமூகப் பணிகளிலும் தஃவாவிலும் அரசியல் செயற்பாட்டிலும் ஓர் உயிர்த் துடிப்புள்ள ஆளுமையாக விளங்குகின்றவர். இந்நூற்றாண்டு கண்ட புரட்சிகரமான பெண்களில் ஒருவர்.
பல்வேறு மொழிகளில் பாண்டித்தியம் பெற்றுள்ள கவாக்ஸி, 21ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய கலாச்சார சின்னமான ஹிஜாபின் குறியீடாகப் பார்க்கப்படுகின்றவர். மதச்சார்பற்ற அரசாங்கம், மதச்சார்பற்ற சமூக அமைப்பில் இதுபோன்ற ஓர் போராளியைக் காண்பது மிகவும் அபூர்வம்.
மர்வா கவாக்ஸி 1968 ஒக்டோபர் 30 இல் அங்காராவில் பிறந்தார். 1999 ஏப்ரல் 18 இல் ஸ்தன்பூல் தொகுதியில் Virture கட்சியின் பிரதித் தலைவராக தெரிவுசெய்யப்டப்டார். மே 02 இல் ஹிஜாப் அணிந்தமைக்காக பாராளுமன்றம் நுழைய அனுமதி மறுக்கப்பட்டார். கவாக்ஸி அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த ஒரு ஹாபிழ். ஹாவாட் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பை முடித்தவர். அதே பல்கலைக்கழகத்திலேயே கலாநிதிப் பட்டத்தையும் பெற்றவர்.
தற்போது ஜோர்ஜ் வொஷிங்டன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியையாகக் கடமையாற்றி வருகின்றார். அதேபோன்று ஹாவாட் பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். மணவாழ்வில் இணைந்த அவருக்கு பாத்திமா, மர்யம் என இரு பெண்கள் உள்ளனர். ஜோர்ஜ் வொஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இவர் விரிவுரையாற்றும் துறை ‘சர்வதேச உறவுகள்’ (International Relation) என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாவாட் பல்கலைக்கழகத்தில், அரசியல் விஞ்ஞானத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற இவர், ஹாவாட் பல்கலைக்கழத்தில் –MPA கற்கையைப் பூர்த்தி செய்தவர். அமெரிக்காவிலுள்ள மற்றொரு பிரபலமான டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் Software Engineering துறையில் BSc பட்டத்தையும் பெற்றுள்ளார்.
துருக்கியில் அங்காரா பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்திற்கு அனுமதி கிடைத்தபோது வைத்தியராகக் கற்று வெளியேற வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது. ஆனால், அவர் இளமைப் பருவத்திலிருந்தே அணிந்து வந்த ஹிஜாப் அதற்குத் தடையாக இருந்தது. கவாக்ஸி ஹிஜாபில் மிகவும் பற்றுள்ளவராக இருந்ததனால் அங்காரா பல்கலைக்கழக நிருவாகிகள் அவரை அங்கு கற்பதற்கு அனுமதிக்கவில்லை.
கவாக்ஸி பிறந்து வளர்ந்த குடும்ப சூழல் இஸ்லாத்தை பற்றுறுதியோடு பின்பற்றி வந்த குடும்பமாகும். அவரது தாயும் ஹிஜாப் அணியும் வழக்கம் கொண்டிருந்தார். கவாக்ஸியின் தாய் ஒரு பல்கலைக்கழக பேராசிரியர். ஹிஜாபினால் பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவியை இழந்தவர். 1980 களில் கொண்டு வரப்பட்ட ஹிஜாபுக்கு எதிரான தடைச் சட்டமே இத்தனைக்கும் பின்னணியாக இருந்தது. தாயைப் போன்று கவாக்ஸியும் இந்த சோதனையையே எதிர்கொண்டார். கவாக்ஸியின் தாய் அதாதுர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றிவர். அவரது குடும்பம் முன்னாள் ஆட்சியாளர் கமால் அதாதுர்க்கின் கையாட்களால் பல கெடுபிடிகளுக்கு உள்ளானது. ஹிஜாப் அணிந்தமையால் பல அவதூறுகளுக்கும் வசைகளுக்கும் அவர் உட்பட்டார்.
கவாக்ஸியின் தந்தை யூஸுப் ஸியா கவாக்ஸி அதாதுர்க் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய கற்கை பீடத்தில் பீடாதிபதியாகப் பணியாற்றியவர். பெண்களின் உரிமைகளுக்காக -குறிப்பாக, ஹிஜாப் உரிமைக்காக- தொடர்ந்தும் போராடி வந்தவர். இஸ்லாமிய மாணவர்களின் உரிமைக்காகப் போராடியதால் பதவி துறப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர்.
மருத்துவ பீடத்திற்கு அவர் தெரிவானபோதும் தனது ஹிஜாபினால் அந்த வாய்ப்பை இழந்தார். பல்கலைக்கழக நிருவாகம் அவரைத் திருப்பி அனுப்பியது. மருத்துவராவதா அல்லது ஹிஜாப் அணிவதா என்ற தெரிவுக்கு முன்னால், கவாக்ஸி இரண்டாவது தெரிவை ஏற்றுக்கொண்டார்.
1990 களில் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய கவாக்ஸி, அரசியல் செயற்பாடுகளில் இறங்கினார். தொடக்கத்தில் பேராசிரியர் நஜ்முதீன் அர்பகான் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட ரபா கட்சியின் பெண்கள் அணிக்குத் தலைவராக இருந்தார். பின்னர் அதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை அடுத்து அணியில் பிளவுகள் ஏற்பட்டது.
துருக்கியின் மற்றொரு இஸ்லாமியக் கட்சியான இஸ்லாமிய பாஸிலாத் கட்சியில் (Virture) இணைந்து பாராளுமன்ற அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டார். 1999 ஏப்ரல் 18 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார். மதச்சார்பற்ற துருக்கியில் தனது தனித்துவமான ஹிஜாபுடனேயே அவர் அரசியல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டார். அவரது தூர நோக்கிற்கும் அரசியல் வெல்திறனுக்கும் கிடைத்த வெற்றியாகவே அவரது பாராளுமன்ற அங்கத்துவம் இருந்தது. எனினும், மக்களின் அமோக ஆதரவோடு பாராளுமன்றம் நுழைந்தபோது, மதச்சார் பற்றவர்கள் அவருக்கு தடங்கல்களை ஏற்படுத்தினர். சத்தியப் பிரமாணம் செய்யும் இடத்திற்கு அவர் சென்றபோது அங்கிருந்தவர்கள் “பாராளுமன்றத்தை விட்டு வெளியேறு” என கூச்சலிட்டனர்.
1999 மே 2 இல் நடைபெற்ற இச்சம்பவம் துருக்கியில் மாத்திரமன்றி, முழு ஐரோப்பாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “அரசியலமைப்புச் சட்டத்தில் பாராளுமன்றத்தில் நுழையும் பெண் ஹிஜாப் அணிந்திருக்கக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. எனினும், அவர்கள் என்னை அவமானப்படுத்துவதற்கும் மதச்சார்பின்மையின் தூய்மையைப் பாதுகாக்கவும் காட்டுக் கூச்சல் போட்டனர். ஆண்கள் ஷேட்டும் நீள் காற்சட்டை அணிய வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால், எந்தவொரு சட்டத்திலும் அவ்வாறில்லை. அவர்கள் இஸ்லாத்தின் மீது கொண்டிருந்த வெறுப்பையே தமது வார்த்தைகளில் உமிழ்ந்தனர். மதச்சார்பற்ற அடிப்படைவாதிகளிடையே இஸ்லாத்தைப் பின்பற்றும் நான் அதற்கு மேலும் அங்கிருக்க விரும்பவில்லை. பாராளுமன்றத்தை விட்டு வெளியேறினேன் என்று கவாக்ஸி தனது அனுபவத்தை பத்திரிகையொன்றில் எழுதியுள்ளார்.
இந்த கசப்பான அனுபவத்திற்குப் பின்னர் துருக்கிய பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக மசோதா கொண்டு வரப்பட்டு அவரது குடியுரிமையைப் பறித்தனர். அவர் பிரதிநிதித்துவம் செய்த பாஸிலாத் கட்சிக்கும் 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. தனக்கிழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் கவாக்ஸி வழக்குத் தாக்கல் செய்தார். அந்த வழக்கில் வெற்றி பெற்றார்.
துருக்கியின் கிராமப்புறமொன்றில் பிறந்து, அமெரிக்காவின் அதி முன்னோடி பல்கலைக்கழகங்களில் பயின்று, ஹிஜாப் குறித்து தனது நாட்டு அரசாங்கத்திற்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்த முதல் பெண் இவராகவே இருப்பார். 2000 ஆம் ஆண்டில் மீண்டும் வொஷிங்டன் திரும்பிய அவர், அங்கேயே நிரந்தரமாகக் குடியேறினார். துருக்கிய அரசாங்கத்திற்கு எதிரான வழக்கின் முடிவு 2007 இலேயே வெளிவந்தது.
கவாக்ஸி மிகச் சாதாரணமானதோர் பெண்ணல்ல. சமூக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபாடுள்ள, அறிவுத் துறையில் மிகவும் ஆழமான ஒருவர். இதனால்தான், முன்னணி அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் அவரால் விரிவுரை ஆற்ற முடிந்தது. ஆங்கிலம், பிரென்ஞ், ஆகிய மொழிகளில் மிகவும் பாண்டித்தியம் பெற்றுள்ள அவர், பல்வேறு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் இஸ்லாம் குறித்த விரிவுரைகளை ஆற்றி வருகின்றார். சர்வதேசளவில் நடைபெற்ற பல்வேறு மாநாடுகளிலும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.
2004 இல் பெசிலோனியாவில் நடந்த உலக சமயங்களுக்கான மன்றத்தில் அவர் ஆற்றிய உரை மிகப் பெரும் கவனயீர்ப்பைப் பெற்றது. சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற ஒரு புத்திஜீவியாகவே கவாக்ஸி கருதப்படுகின்றார். ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தின், அமெரிக்க காங்கிரஸின், ஹெல்சிங்கியிலுள்ள மனித உரிமைப் பேரவையில் கவாக்ஸி ஆற்றிய உரைகளும் முக்கியமானவை.
அமெரிக்காவின் மெரியாட்டிலும் ஐரோப்பிய, கனேடிய பல்கலைக் கழகங்களிலும் வருகை நிலை விரிவுரையாளராகக் கடமையாற்றி வரும் கவாக்ஸி, ஹார்வேர்ட், யாலே, கேம்பி ரிட்ஜ், பேர்லின், ஒட்டோவா, மிலான், இன்ஸ்பேர்க் போன்ற உலகப் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களிலும் விரிவுரையாற்றியுள்ளார்.
2004 ஆம் ஆண்டில் நியூஸ்வீக் சஞ்சிகை வெளியிட்ட உலகின் செல்வாக்குள்ள 500 பேரின் பட்டியலில் கவாக்ஸியும் ஒருவர். ‡Naap மற்றும் பூகோளப் பெண்கள் ஒன்றியம் 2005 இல் அவரை ‘அதிசிறப்பு மிக்க பெண்ணாகத் தெரிவுசெய்தது. மனித உரிமை முன்னேற்றத்துக்காகவும் பெண்களை வலுவூட்டுவதற்காகவும் போராடியவர் என்ற வகையில், அவரது பணிகள் அங்கீகரிக்கப்பட்டு பல்வேறு சர்வதேச விருதுகளையும் அவர் வென்றுள்ளார்.
2000 ஆம் ஆண்டில் சர்வதேச பெண்கள் மற்றும் சிறுவர் ஒன்றியம், மனித இனத்துக்காகப் பணியாற்றியவர் என்ற விருதினை வழங்கியது. இவ்விருது ஒஸ்ரியாவின் தலைநகர் வியன்னாவில் வழங்கப்பட்டது. இதேபோன்று 1999 இல் இந்த ‘ஆண்டின் தாய்’ (Mother of the year) எனும் விருதினை துருக்கியின் அங்காரா தேசிய இளைஞர் கழகம் வழங்கியது.
கவாக்ஸி ஒரு காலத்தில் அமெரிக்கக் காங்கிரஸுக்கான முஸ்லிம் உலகு தொடர்பான ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். அதேவேளை, பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் அவர் திகழ்கின்றார். Mediterraneal Quaterly எனும் பிரபலமான சஞ்சிகையின் ஆசிரியர்களில் ஒருவராக உள்ள கவாக்ஸி, இதுவரை 6 நூல்களை எழுதியுள்ளார். அவரது இணையத்தளத்தினூடாகவும் பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் எழுதுவதினூடாகவும் இஸ்லாமிய சிந்தனைகளையும் கருத்துகளையும் முன்வைத்து வருகிறார். அவர் எழுதிய நூல்களில் Basortusus Demokrasi எனும் நூல் அறபு, ஆங்கிலம், பிரென்ஞ், பாரசீகம் ஆகிய மொழிகளுக்குப் பெயர்க்கப்பட்டுள்ளது.
ஓர் அரசியல் செயற்பாட்டாளராக, சமூகப் போராளியாக, மாபெரும் அறிவு ஜீவியாக, எழுத்தாளராக என மர்வா ஸபா கவாக்ஸியின் பன்முக ஆளுமை விரிகின்றது. கவாக்ஸி இந்நூற்றாண்டின் புரட்சிகரமான பெண் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை. அவரிடம் கற்பதற்கு எமது பெண்களுக்கு நிறையவே உள்ளன.
நன்றி-மீள்பார்வை

ஹிந்தாவின் ஈரலும், மஹிந்தாவின் கீறலும்


மதியன்பன்-
ஆயுதப் படைகளின் ஆசியுடன்
அல்லாஹ்வின் இல்லத்துள்
இன்று
அத்துமீறல் அரங்கேறியது.
பேரினவாதிகளின்
மற்றுமொரு
போரியல் பொறிமுறை..!
இதை
கண்டிக்கவும், தண்டிக்கவும்
தைரியம் யாருக்கு உண்டு..?
முள்ளுக்கு வாலாட்டும்
முதுகெலும் பில்லா இவர்களால்
என்னதான் செய்ய முடியும்..?
ஜெனீவாவில்
பிரேரணை யென்றால்
பள்ளிகளில் பகிரங்க அறிவிப்பு
அரசுக்கு ஆசிவேண்டி
ஆர்ப்பாட்டங்களும் பிரார்த்தனைகளும்
வெற்றுக் கோசங்களோடு
பெஜ்ரோக்களில் வரும்
நம் தலைவர்கள்
எங்கே போனார்கள்..?
பள்ளிகளுக்குள் சுட்டபோது
நாம்
பாத்திஹா ஓதிக் கலைந்தோம்.
கபுறடியை உடைத்த போது
நாம் கதைகள் சொல்லி பிரிந்தோம்
இப்போது
பள்ளியை உடைக்கிறார்கள்.
நாம்
பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
என்ன கவலை..?
எங்கே போனது
எம் தலைவர்களின்
ஈமானின் ஈரத்தன்மை!
இருப்புக்களும்
இனிமேல் கேள்விக் குறிதானா..?
ஹிந்தாவின்
ஈரல் கதை சொல்லும்
உலமாக்களே
மஹிந்தாவின் கீறல் கதை
சொல்லமாட்டீர்களா..?
முஸ்லிம்களை குறிவைக்கும்
இந்த
மாற்று அரசியலிடம்
தோற்றுப்போன சமூகத்தை
தூக்கிவிட யார் முன்வருவீர்கள்;..?
தலைவர்களே..?
முதலமைச்சர் கோசத்தை
கொஞ்சம் தள்ளி வைத்துவிடுங்கள்.
முஸ்லிம்களின்
பள்ளிகளையும், இருப்புக்களையும்
பாதுகாக்க வழி சொல்லுங்கள்.
கள்ளியங்காட்டில்
பறிபோனது
நமது பூர்வீகப் பள்ளி வாயல்.
இப்போது
ஐம்பது வருடத்துப் பள்ளிவாயல்
தம்புள்ளயில்  தரைமட்டமாகிறது.
அரச வைபவம் அத்தனைக்கும்
சிரசாய் நின்று
துஆ ஓதும் உலமாவே..!
நீங்களாவது மஹிந்தவிடம்
………………………?
அல்லாஹ்விடம்
நாங்கள் கேட்கிறோம்

தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயல் உடைக்கப்பட்டது


தம்புள்ள ஜும்ஆ  பள்ளிவாயல்  பேரினவாத சக்திகளால் தற்பொழுது முற்றுகை இடப்பட்டுள்ளதாகா உறுதிப்படுத்தப் பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜும்ஆவிற்கு சென்ற முஸ்லிம் சகோதரர்கள் பள்ளியினுள் இருந்து வெளிவர முடியாதவாறு பேரினவாத சக்திகளால் பள்ளிவாயல் முற்றுகை இடப்பட்டுள்ளதாகவும் பள்ளியை நோக்கி கட்கள் வீசப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தகட்டினால்லான பள்ளியின் சிறுபகுதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இராணுவத்தினறும் பொலிசாரும் கடமையில் உள்ளபோதும் நிலைமை மிகவும் அச்சமாகவே உள்ளதாக அங்கே உள்ள சகோதரர்கள் தெரிவிக்கின்றனர்.
இறைவனின் இல்லமான இப்பள்ளிவாயலைப் பாதுகாப்பதற்கான பிரார்த்தனைகளில் தங்களுடன் இணைந்து கொள்ளுமாறு தம்புள்ளையில் தொழில்நிமித்தம் வசித்துவரும் எமது சகோதரர்கள் கண்ணீருடன் எமது சமூகத்துக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
3rd Update
தற்போது கிடைக்கபெற்ற தகவல்களின்படி, தம்புள்ள ஜும்ஆ  பள்ளிவாயல் பேரினவாத சக்திகளால் உடைக்கப்பட்டுள்ளது.
முதலில் பள்ளிவாயலில் உள்ளே இருந்த முஸ்லிம்  சகோதரர்கள் பொலிசாரின் வற்புறுத்தலின் காரணமாக வெளியேற்றப்பட்டனர். அங்கே ஜும்ஆ நடைபெறவில்லை.
பின்னர் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் முன்னிலையில் காவி உடை அணிந்தவர்கள் பள்ளியின் உள்ளே சென்று அங்கே இருந்த சகல பொருட்களையும் உடைத்து அளித்தனர்.
அத்தோடு பள்ளியையும் உடைத்து அளித்துள்ளதாக அங்கே இருந்து எமது சகோதரர் காத்தான்குடி இன்போவிற்கு கண்ணீருடன் தெரிவித்தார்.
அரசில் ஒட்டியுள்ள முஸ்லிம் அமைச்சர்களுக்கு பல்வேறு தகவல்கள் இது தொடர்பாக தெரிவிக்கப் பட்டபோதும், அவர்களால் எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
மேலதிக தகவல்கள் கிடைக்குமிடத்து வாசகர்களுக்காக பதிவேற்றப்படும்
4th Update
பொலிஸார், இராணுவம் வேடிக்கைபார்க்க அல்லாவின் இல்லம் உடைக்கப்பட்டது. பள்ளிவாயல் உடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக சிங்கள இணையம் பிரசுரித்த படங்களை இங்கே பிரசுரிக்கின்றோம்.