widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Sunday, February 27, 2011

சமூகசீர்கேடுகள்

பராமரிப்பபை வேண்டி நிக்கும் ஆற்ரோர ஓய்விடமும் சிறுவர் பூங்காவும்

VwhT+u; gpuNjrj;jpy; thOfpd;w kf;fs; jq;fsJ Xa;T Neuj;ijf; fopf;fTk; ,isg;ghwTk; vd fle;j fhyj;jpy; VwhT+u; gpuNjr rigapdhy; Mw;wq;fiuNahukhf Xu; ,lk; xJf;fg;gl;L kf;fs; mku;;e;J NgRtjw;Nfw;wthW NkirfSk; Nghlg;gl;bUe;jd. Mdhy; ,t; ,isg;ghWk; ,lk; ,d;W ftdpg;ghuw;W tplg;gl;bUg;gNjhL ML khLfspd; xJq;fplkhf khwpapUg;gjhf gyUk; ftiy njuptpf;fpd;wdu;.
gpd;Ndug; nghOij kfpo;r;rpahf fopg;gjw;F VwhT+upy; fhzg;gLfpd;w ,e;j xNu ,lKk; ,d;W Nghf KbahjthW Ju;thilAk; mRj;jq;fSk; epiwe;j ,lkhf khwpapUg;gJ tprdj;Jf;FupajhFk;.
Mj;NjhL ,jd; mUfhikapy; mike;Js;s rpWtu; G+q;fhTk; ve;jg; guhkupg;Gkpd;wp iftplg;gl;bUg;gij mtjhdpf;f KbfpwJ. rpWtu;fs; tpisahLtjw;Fk; kfpo;r;rpahf nghOij fopg;gjw;FKupa xNunahU rpWtu; G+q;fh ,t;thW fhl;rpaspg;gJ rpWtu;fSf;F khj;jpukpd;wp ngw;NwhUf;Fk; ftiy jUtjhf cs;sJ.
fle;j fhyq;fspy; rpWtu;fs; tpisahLtjw;F ekJ gpuNjrj;jpy; gy ntw;W epyq;fSk; tsTfSk; fhzg;gl;ld. mtw;wpy; rpWtu;fs;; gpd;Ndug; nghOJfspy; gy tpisahl;LfspYk; tsTfisNah ,g;NghJ fhz Kbtjpy;iy. mjdhy; rpWtu;fs; tpisahLtjw;F xU rpWtu; G+q;fh mtrpakhFk;.
,];yhk; rpWtu;fs; tpisahLtijNah> ngupNahu;fs; MFkhd topfspy; jq;fsJ Xa;T Neuj;ij kfpo;r;rpahf fopg;gijNah jilnra;atpy;iy. vdNt ,jw;Fupa Vw;ghLfis Nkw;nfhs;tJk; guhkupg;gJk; rk;ke;jg;gl;l mjpfhupfspdJk; kf;fs; gpujpepjpfspdJk; nghWg;ghFk;.
vdNt ,d;~h my;yh`; mLj;j khjk; eilngwTs;s cs;s+uhl;rpj; Nju;jypy; njupTnra;ag;gLk; VwhT+u; efu rig kf;fs; gpujpepjpfs; ,t; tplaj;ij ftdj;jpw; nfhs;sNtz;Lnkd VwhT+u;new; ,izaj;jsk; Ntz;LNfhs; tpLf;fpwJ.


கல்வி


புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு


fle;j Mz;L eilngw;w juk; 5 Gyikg; guprpy; guPl;irapy; rpj;jpaile;j khztu;fisg; ghuhl;b nfsutpf;Fk; epfo;T xd;iwNeak; mikg;G ,d;;~h my;yh`; mLj;j khjk; elhj;jp Kbf;f jpl;lkpl;Ls;sJ.
,jw;nfd VwhT+u; gpuNjrj;jpYs;s gj;J ghlrhiyfspYs;s Gyikg; guprpy; guPl;irapy;; rpj;jpaile;j 92 khztu;fs; njupTnra;ag;gl;L> mtu;fSf;fhd gjf;fq;fSk; guprpy;fSk; toq;Ftjw;fhd Vw;ghLfs; eilngw;W tUtjhf Neak; mikg;gpd; jiytu; I. ,];`hf; njuptpj;jhu;.
rpj;jpaile;j khztu;fis ghuhl;LtJ kl;Lkd;wp vjpu;tUk; tUlq;fspy; ,g; guPl;irf;Fj; Njhw;wtpUf;Fk; khztu;fis Cf;Ftpg;gJk; ,e; epfo;it elhj;Jtjw;fhd Nehf;fkhFk; vd;W Neak; mikg;G Rl;bf;fhl;LfpwJ.

Tuesday, February 22, 2011

கை தட்டி ஆரவாரித்தல் - யாருடைய நடைமுறை?

[ ''மேலும், (அல்லாஹ்வின்) இல்லத்தில் அவர்களின் தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர வேறு (எதுவுமாக) இருக்கவில்லை,; ''ஆகவே நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (இன்றையத்தினம்) வேதனையைச் சுவையுங்கள்,"" (என்று மறுமையில் கூறப்படும்)." (அல்குர்ஆன் 8:35)
எவர் ஒருவர் என்னால் ஏவப்படாத (மார்க்கக்) காரியத்தை நன்மையான காரியம் என்று கருதித் செயல்படுகிறாரோ அது அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் . இதை அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்துள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)]
கை தட்டி ஆரவாரித்தல் என்பது இன்று உலகலாவிய ரீதியில் அனைத்து மனித சமூகங்களுக்கிடையிலும் ஒரு பழக்கப்பட்ட வழக்கமான செயலாக இருப்பதை அவதானிக்காதவர்கள் இருக்க முடியாது. சுருக்கமாகச் சொல்லப் புகுமிடத்து நாமும் கூட சில சமயங்களில் நம்மையறியாமலேயே இந்தச் செயலைச் செய்கிறோம்.
இன்று மேடைகளில் உரையாற்றுபவர்கள், விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள் என்று சமூகத்தில் எந்தவொரு கோணத்தைப் பார்த்தாலும் அவர்கள் தம் வெற்றிக்காக மற்றவர்கள் கைதட்டி ஆரவாரித்து உற்சாகப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.


ஆசிரியர்கள் தமது மாணவர்கள் மத்தியில் நடக்கும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை உற்சாகப்படுத்துவதற்காக மற்ற மாணவர்களைக் கைதட்டும் படி கேட்டுக் கொள்கிறார்கள். இந்த வழிகாட்டலால், சின்னஞ்சிறுசுகள் பள்ளிக்கூடங்களிலே பெற்ற பரிசுகளுக்காக கைதட்டலை எதிர்பார்க்கிறார்கள்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் எந்தவொரு சிறிய விடயமானாலும் அந்த விடயம் சம்பந்தமாக அழகிய வழிகாட்டல் இல்லாமலில்லை.
என்னடா இது? கை தட்டுதலுக்கும் முன்மாதிரியுண்டா? என்று கேட்கும் மனித மனங்கள், இவையெல்லாம் சின்னச் சின்ன விடயங்கள் தானே! இவர்களுக்கு வேறு வேலையில்லை! எழுதித் தள்ளுகிறார்கள்! என்ற எண்ணவோட்டங்கள் வாசகர்களின் உள்ளங்களிலே ஓடுவது தெரிகிறது.
நன்மைகளை ஏவுவதும், தீமைகளைத் தடுப்பதும் ஒவ்வொரு முஸ்லிமின் கடமை என்பதால் ஒவ்வொருவரும் தனக்கு இயன்ற வழியில் அவற்றைச் செய்து தான் ஆக வேண்டும். அது தான் நம்மைப் படைத்துப் போஷித்து இரட்சிக்கும் அல்லாஹ்வைத் திருப்திப் படுத்தும். சின்னச் சின்ன விடயங்கள் என்று ஒழுங்கீனங்களை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. ஆகவே, சிலர் சொல்வதுபோல இஸ்லாத்தில் சின்னச் சின்ன விடயங்கள் என்றொன்றில்லை.
அல்லாஹ் தன் திருமறை அல்-குர்ஆனிலே இந்தச் செயலைக் குறிப்பிட்டுக் காட்டி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதைப் பாருங்கள்:
''மேலும், (அல்லாஹ்வின்) இல்லத்தில் அவர்களின் தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர வேறு (எதுவுமாக) இருக்கவில்லை,; ''ஆகவே நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (இன்றையத்தினம்) வேதனையைச் சுவையுங்கள்,"" (என்று மறுமையில் கூறப்படும்)." (அல்குர்ஆன் 8:35)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்கு அல்லாஹ்வின் கட்டளைகளை அறிவித்துக் கொண்டிருக்கும் போது அவர்களை நிராகரிப்பாளர்கள் சூழ்ந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களின் செய்தியை மக்கள் தெளிவாக அறிந்து கொள்வதைத் தடுக்கும் நோக்குடன் சீட்டியடிப்பதையும் கை தட்டுவதையும் வழக்கமாக்கிக் கொண்டார்கள். சீட்டியடித்துக் கை தட்டுவதன் மூலம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களை அவமானப் படுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
அல்லாஹ்வின் கட்டளையும் அவனுடைய மார்க்கமும் மக்களுக்குப் போய்ச் சேர்வதைத் தடுக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்வதற்கு அன்று அவர்கள் தயாராகவே இருந்தார்கள்.
அன்று கஃபாவில் கூடி இப்படிப்பட்ட இழிசெயல்களைச் செய்த நிராகரிப்பாளரைப் பார்த்துத்தான் அல்லாஹ் மேற்கூறிய வசனத்தை இறக்கியுள்ளான். இந்த வசனத்தின் எச்சரிக்கை அன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே பொருந்தும். இந்தச் செயலை முஸ்லிம்களாகிய நாமும் செய்வதன் மூலம் அந்த இஸ்லாமிய விரோதிகளை நாங்கள் பின்பற்றுகிறோம் என்பதை எவராலும் மறுக்க முடியுமா?
எந்தப் பேச்சாளராக இருந்தாலும் அவரின் பேச்சைப் பாராட்டுகிறோம் என்ற நோக்கில் கைதட்டும் பார்வையாளர்களைப் பார்க்கிறோம். அந்தக் கைதட்டலுக்கிடையே, பேச்சின் ஒரு பகுதி, மக்களைச் சென்றடையாமல் போவதையும் அவதானிக்கிறோம். இதன் காரணமாக ஒரு தலைவர் சொல்லக்கூடிய ஒரு சொல், தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, அபார வளர்ச்சி பெற்றுள்ள ஊடகத் துறையின் மூலம் உலகமெல்லாம் பரப்பப்படுகிறது. பாரதூரமான விளைவுகளுக்கு அவை வழிவகுத்து விடுவதும் உண்டு.
அன்று சீரழிந்து போயிருந்த மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்கு ஒரு அழகிய முன்மாதிரியாக அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட அந்த மாமனிதர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களைப் புண்படுத்துவதற்காக நிராகரிப்பாளர்கள் கையாண்ட இந்தக் கைதட்டலை முஸ்லிம்களாகிய நாம் தவிர்ந்து கொள்வதற்கு முழு முயற்சி எடுக்க வேண்டும்.
சின்னஞ் சிறிய செயல்கள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு அண்மைக்கால சரித்திரத்திலிருந்தே நாம் படிப்பினை பெறலாம்.
பாலஸ்தீனத்தின் சிறுவர்கள் தொடங்கிய சின்னஞ் சிறிய வேலையொன்றுதான் சிறுசிறு கற்களை இஸ்ரவேலியப் படையினர் மீது விட்டெறிந்தமை. அந்தச் சின்னஞ்சிறிய வேலை, 'இன்திஃபாதா" என்ற அறிமுகத்துடன் பாலஸ்தீன விடுதலை எழுச்சிக்குப் புத்துயிரளித்தது. ஊடகங்களின் உள்பக்கங்களுக்கு மட்டுமே சொந்தமாகிவிட்ட பாலஸ்தீனப் போராட்டம் மீண்டும் முன்பக்கச் செய்தியானது.
தொலைக்காட்சிச் செய்திகளில் ஒவ்வொரு செய்திக்கான நேரத்திலும் முதல் செய்தியானது. சிறுசிறு கற்களை வீசியெறியும் சிறுவர்களின் வீரமான பங்களிப்புகள்தான் சின்னத்திரைகளிலே காட்டப்பட்டன.
உலகளாவிய ரீதியில், பாலஸ்தீனர்களுக்கு இழைக்கப்படும் மனித இனமே வெட்கித் தலைகுனியும் அளவிற்கு செய்யப்பட்ட அநியாயங்கள் அக்கிரமங்கள் செய்திகளாகக் கொண்டு செல்லப்பட்டன. உலகமாந்தர் மத்தியில் அநியாயங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டதைப் பார்த்தோம். உலகெலாம் இந்த அநியாயங்களுக்காக முஸ்லிம்கள் மட்டுமல்ல முஸ்லிமல்லாதார் கூட குரல் எழுப்ப அது ஒரு காரணியாயிற்று.
இனி, மனித சமுதாயத்திற்கே அருட்கொடையாக அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவு படுத்துவதற்காகவே நிராகரிப்பாளர்களால் கையாளப்பட்ட இந்தக் கைதட்டலை நாம் நிறுத்தித்தான் ஆக வேண்டும். அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடும் நாம் அவன் விரும்பாத எந்தச் செயலாக இருந்தாலும், சிறியதாக நமக்குத் தோன்றினாலும், அதை விடுவதுதான் நாம் அவனைப் பரிபூரணமாக அவனுக்கே உண்டான பண்புகளோடு ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதற்கான அத்தாட்சி.
ஆகவே, சின்னச் சின்ன விடயங்கள் என்று எதையுமே எடை போடுவதற்கு இஸ்லாத்தில் இடமில்லை. சிறியதோ பெரியதோ எதுவாயிருந்தாலும் அனைத்திற்கும் அல்-குர்ஆனிலிருந்தும் அல்-ஹதீஸிலிருந்தும் மட்டுமே வழிகாட்டல்கள் இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாக ஒரு முஸ்லிம் உணர்ந்து விசுவாசித்துச் செயல் படவேண்டும். அப்படிச் செயல்படுவது, நிச்சயமாக, சாபத்திற்கு உள்ளானவர்களுக்கான நரக நெருப்பிலிருந்து விடுதலை பெற அது ஒரு காரணியாக அமையும்.
வஆகிர் தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில்ஆலமீன்.

அரபு நாடுகளை சுழன்று அடிக்கும் மக்கள் சூராவளி!

வரலாற்றின் பழம்பெரும் நாகரிகம் படைத்த எகிப்தில் உருவான மக்கள் சூராவளி தற்சமயம் அரபு நாட்டில் நிலை கொண்டுள்ளது. இச்சூராவளி தனது நோக்கத்தை அடையாமல் ஓயாது என்றே தெரிகிறது. துனிசியா, எகிப்தைத் தொடர்ந்து லிபியா, ஏமன், பஹ்ரைன், அல்ஜீரியா... என்று ஒவ்வொரு நாட்டையும் துடைத்தெறியாமல் செல்லாது என்றும் தெரிகிறது. இறுதியாக சவூதி அரேபியாவின் மன்னராட்சியைப் பதம் பார்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இன்ஷா அல்லாஹ், அரபுநாடுகளை ஒரு கலக்கு கலக்கிவிட்டு உலகின் மற்ற பகுதிகளிலுள்ள; மக்களுக்கு எதிரான ஆட்சிகளையும் கூட புரட்டிப்போடாமல் போகாது என்று கூட நம்பலாம். இதோ; இதன் எதிரொலியாக சைனாவில் ''மல்லிகைப் புரட்சி'' ஆரம்பமாகிக் கொண்டிருப்பதாகவும் அதைத்தடுக்க அரசு ராணுவத்திற்கு கட்டளையிட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.
ஃப்ரெஞ்சுப் புரட்சியைவிட மிகப்பெரும் தாக்கத்தை இது ஏற்படுத்தலாம். காரணம் இந்த சூராவளி கிளம்பியது பழமையான நாகரிகத்தின் பிறப்பிடமான எகிப்திலிருந்து என்பதால் அவ்வாறு எண்ணத்தோன்றுகிறது.
முழுக்க முழுக்க மேற்கத்திய நாகரிகத்தை தங்களின் தனிப்பட்ட வாழ்வில் பின்பற்றி மக்களை ஏமாற்றுவதற்காக முஸ்லிம் பெயர்தாங்கிகளாகத் திகழ்ந்த இந்த அரபு நாட்டு ஆட்சியாளர்கள் இறைவனிடம் பாவ மன்னிப்புக் கேட்டு மக்களாட்சிக்கு வழிவகுத்து ஒதுங்கிக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை அவர்கள், இன்னும் உணரவில்லையானால் அதே மக்களால் தங்கள் நாட்டை விட்டே ஓட ஓட விரட்டப்படுவார்கள் என்பது திண்ணம்.
பூமியில் இருந்து இறைவன் அளித்த எண்ணெய் அருட்கொடைகளை தங்களுக்கும் மேற்கத்திய நாடுகளுக்குமாக பங்கிட்டுக்கொண்டு மிச்சத்தை மட்டும் நாட்டுமக்கள் நலத்துக்கு பயன்படுத்தி வந்த இந்த ஆட்சியாளர்களின் கொட்டம் அடங்கப்போகும் நாள் ஆரம்பமாகிவிட்டது என்றே தோன்றுகிறது.
மறுமை சிந்தனை மறந்து உலக வாழ்வின் உல்லாசத்தில் மிதந்த இந்த ஆட்சியாளர்களுக்கு இப்பொழுதாவது தங்களையும் ஆட்சி செய்யக்கூடிய ஒருவன் இருக்கின்றான் அல்லாஹ் என்கின்ற பெயரில், எனும் நினைவு வந்திருக்க வேண்டும்!
இந்த சர்வாதிகாரிகள் ஒவ்வொருவரும் அட்டைப்போல் ஆட்சியில் ஒட்டியிருந்த காலத்தை பார்க்கும்போது சராசரியாக 30 அல்லது 40 ஆண்டுகள். எத்தனை லட்சக்கணக்கான கோடிகளை சுருட்டியிருப்பார்கள்?! அத்தனையும் அந்தந்த நாட்டு மக்களுக்குப் போய்ச்சேரவேண்டிய செல்வமல்லவா?
எகிப்தின் முன்னால் சர்வாதிகார அதிபர் ஹோஸ்னி முபாரக் ஸ்விஸ் பேங்கில் போட்டிருந்த பணமே 40,000 கோடி டாலர் - அதாவது சுமார் 20 லட்சம் கோடி (ஸ்பெக்ட்ரம் ஊழலோடு ஒப்பிடப்படும்போது (1,76,000 கோடி) அதைவிட இத்தொகை 12 மடங்கு அதிகம். இவ்வளவு இமாலயத்தொகையை இந்த சர்வாதிகாரி கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டி ஸ்விஸ் பேங்கில் போட்டு வைத்து என்ன செய்யப்போகிறார்....? (தற்போது இந்த தொகை முடக்கப்பட்டுள்ளது வேறு விஷயம்)
இந்த ஒரு ஆட்சியாளரே இவ்வளவு சுரண்டியிருக்கிறார் எனும்போது மற்ற மற்ற ஆட்சியாளர்கள் விழுங்கியிருக்கும் பணத்துக்கு கணக்கு அவர்களைப்படைத்த அந்த ஏக இறைவனைத்தவிற வேறு எவரால் கண்டுபிடிக்க முடியும்?
அத்தனையும் பொது மக்களுக்கு பயன்பட வேண்டிய செல்வமல்லவா? எவ்வளவு பஞ்சம் பட்டினி உலகெங்கும் தலை விரித்தாடுகிறது? குறைந்தபட்சம் இதனை, தன் சொந்த நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக இவர்கள் பயன்படுத்தியிருந்தால் அந்நாட்டு மக்களின் வாழ்க்கை எவ்வளவு சிறந்தோங்கிருக்கும்.
இங்குதான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், ''ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு)த் தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தால் தனக்கு இரண்டு நீரோடைகள் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான். அவனுடைய வாயை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறேதுவும் நிரப்பாது.....''
(அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு).
இதுபோன்ற ஆட்சியாளர்களுக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பே தனது வேதத்தில் இறைவன் பாடம் கற்பித்துள்ளான். ஆனால் உண்மையான ஏழைகளான இந்த ஆட்சியாளர்கள் தங்களை பணக்காரனாக எண்ணிக்கொண்டு அந்த உண்மையான பணக்காரனாகிய அல்லாஹ்வை மறந்து வாழ்ந்தது தவறு என்பதை உணர்ந்து திருந்த வேண்டும்.
இதோ உலக மக்களுக்கு அந்த ஏக இறைவன் விடுக்கும் செய்தி:
''(நபியே!) நீர் கூறுவீராக: ''அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்;. இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்;. நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்;. நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்;. நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன. அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்." (3:26)
''(நாயனே!) நீதான் இரவைப் பகலில் புகுத்துகின்றாய்;. நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய்;. மரித்ததிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய்;. நீயே உயிருள்ளதிலிருந்து மரித்ததையும் வெளியாக்குகின்றாய்;. மேலும், நீ நாடியோருக்குக் கணக்கின்றிக் கொடுக்கின்றாய்.'' (3:27)
''முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்;. அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை. இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது.'' (3:28)
ஃபலஸ்தீனில் மக்கள் படும் தொல்லைகளைக்கண்டு உலகமே கண்ணீர் சிந்தும்போது அண்டைநாட்டு ஆட்சியாளர்கள் தங்கள் சுகத்துக்காக கோடி கோடியாய் மக்கள் பணத்தை விழுங்கும் கொடுமை வேறெங்கிலும் உண்டா? என கேட்கத் தோன்றுகிறது. இப்பொழுதுதான் தெரிகிறது; ஏன் ஒரு குட்டி நாடான இஸ்ராயிலிடம் அத்தனை அரபு நாடுகளும் தோற்றுக்கொண்டே இருக்கின்றனர் என்று!

Monday, February 21, 2011


ஆங்கிலத்தில் கடிதங்கள்: இனி எளிதாக எழுதலாம்!


ஆங்கிலத்தில் சரளமாக பேசத்தெரிந்த பலருக்கு சரியாக எழுதத்தெரியாது.
இனி அந்த கவலையே வேண்டாம்.
பள்ளி முதல் கல்லூரிவரைஅலுவலகங்கள் முதல் சொந்தபந்தங்கள் வரை அனைவருக்கும் ஆங்கிலத்தில் சம்பிரதாயமான கடிதம் இனி எளிதாக எழுதலாம் எப்படி என்பதைப்பற்றி தான் இந்த பதிவு.
தமிழ் கடிதம் எழுத சொன்னால் உடனடியாக எழுதும் நம் தமிழ் நண்பர்களுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுத கூறினால் சற்று யோசித்து எழுதுகின்றனர்.
அலுவலகத்துக்கோகல்லூரிக்கோ அல்லது அரசுக்கோ கடிதம் எழுத கூறினால் அவர்கள் கூறும் முதல் வார்த்தை எங்களுக்கு அனுபவம் இல்லை என்றுஅனுபவம் இருந்தாலும் ஆங்கிலத்தில் எழுதினால் இலக்கண பிழை ஏற்படுமோ என்ற பயம் உள்ளது.

ஆங்கிலத்தில் இனி எந்த கடிதம் வேண்டுமானாலும் எழுதலாம் நமக்கு உதவுவதற்க்காகவே ஒரு இணையதளம் உள்ளது.


இந்த தளத்திற்க்கு சென்று நம் பெயரைக் கொடுத்து எளிதாக எந்த கடிதம் வேண்டுமானாலும் உருவாக்கலாம்சம்பிரதாய கடிதங்கள் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருக்க நமக்கு ஒவ்வொரு படியையும் கையைப்பிடித்து அழைத்துச்செல்கிறது.

எந்த இடத்தில் எதற்க்காக என்ன பெயர் கொடுக்க வேண்டும் என்றும் அலுவலகத்தில் சம்பள உயர்வுவேண்டும் என்றால் எப்படி கடிதம் எழுத வேண்டும் யாருக்கு எந்த பதிவியில் இருப்பவர்களுக்கு எழுதவேண்டும்எதை மையப்படுத்தி நாம் கேட்க வேண்டுவதை ஆங்கிலத்தில் எப்படி எல்லாம் எளியமுறையில் இலக்கண பிழை இல்லாமல் எழுதலாம் போன்ற அத்தனை தகவல்களையும் கொண்டு நம்மை ஆங்கிலத்தில் சம்பிரதாய கடிதங்கள் எழுத உதவுகிறதுபார்ப்பதற்க்கு எளிதாக எந்த விளம்பரமும் இல்லாமல் தெரிகிறதுகண்டிப்பாக இந்த இணையதளம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்


Friday, February 18, 2011

மவ்லிதை எதிர்ப்போம், மூடநம்பிக்கையை ஒழிப்போம்.

மவ்லிதை எதிர்ப்போம், மூடநம்பிக்கையை ஒழிப்போம்.



மவ்லிதை எதிர்ப்போம், மூடநம்பிக்கையை ஒழிப்போம்.

இலங்கை முஸ்லிம்களில் பெரும்பாலானோர் மீலாத் விழா கொண்டாடியும்,மவ்லித் எனும் பாடல்களைப் புனிதமான வணக்கமாக எண்ணி ஓதி வருகின்றனர்.இஸ்லாத்தில் மிக முக்கியமான கடமைகளான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய கடமைகளை நிறைவேற்றாதவர்கள் கூட இந்த மீலாது விழா கொண்டாடுவதையும், மவ்லிதுகளைப் பாடுவதையும் விடாப்பிடியாக நிறைவேற்றி வருவதிலிலுந்து மீலாதுகளுக்கும் மவ்லிதுகளுக்கும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதை நாம் அறியாலாம.
சுப்ஹான மவ்லிது, பர்ஸஞ்சு மவ்லிது, புர்தா, யாகுத்பா, முஹ்யித்தீன் மவ்லித்து என்று வகை வகையான மவ்லிதுகள் உலாவருகின்றன. எல்லா மவ்லித்களுமே பொய்யும் புரட்டும் நிரைந்ததாகவும் இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்க கூடியதாகவும் உள்ளன. அவற்றுள் முதலிடத்தைப் பெற்றுள்ள நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஓதப்படும் சுப்ஹான மவ்லிது. இது எவ்வாறு அபத்தக்களஞ்சியமாக அமைந்துள்ளது என்பதையும், திருக்குர்ஆனுக்கும்  நபி மொழிக்கும் எந்த அளவு முரணாக அமைந்துள்ளது என்பதையும் பின்னர் விவரிக்கபபடும்.
மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டுள்ளது
எந்த ஒரு காரியமும் வணக்கமாக கருதப்பட வேண்டுமானல் இன்னும் அதைச் செய்வதானால் மறுமையில் ஏதேனும் நன்மை கிடைக்கும் என்று நம்ப வேண்டுமானால் அந்த காரியம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் கற்றுத்தரப்பட்டிருக்க வேண்டும். அல்லது அவர்கள் முன்னிலையில் அக்காரியம் நிகழ்ந்து அதை அவர்கள் அங்கீகறிக்க வேண்டும்.அவ்வாறு இல்லாத எந்தக் காரியமும் ஒரு வணக்கமாக மறுமையில் நன்மையளிப்பதாக ஆக முடியாது. இது இஸ்லாத்தின் அடிப்படை விதியாகும்.
இந்த விதியைப் புரிந்து கொள்வதற்கு மிகப் பெரிய ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை. நபிகள் நாயகம் (ஸல்)அவர்களைத் தனது இறுதித்தூதராக அல்லாஹ் அனுப்பி வைத்தான். அவர்கள் வழியாக முஸ்லிம்கள் செய்ய வேண்டிய அனைத்து வணக்கங்களையும் கற்றுத்தந்தான். அவர்களுக்குப் பின் எவருக்கும் வஹி (இறைச்செய்தி) வரமுடியாது என்ற அடிப்படைக் கொள்கையை விளங்கியிருந்தால்  போதும் இந்த விதியைப் புரிந்து கொள்ள முடியும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் ஒரு வணக்கத்தை மற்றவர்களும் உருவாக்கலாம் என்று யாரேனும் கருதினால் நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் வணக்கங்களை முழுமையாக கற்றுத் தரவில்லை  என்று அவர் கருதுகிறார். மேலும் நபி (ஸல்) அவர்கள்ளுக்குப் பின் மற்றவர்களுக்கும் வஹீ (இறைச்செய்தி) வரக்கூடும் என்றும் அவர் கருதியவராகிறார்.
இன்றய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கு வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.
(அல்குர்ஆன் 5:3)
நபி (ஸல்)அவர்கள் இவ்வுலகில் வாழும் போதே இம்மார்க்கத்தை அல்லாஹ் முழுமைப் படுத்தி விட்டதாக அல்லாஹ்  மேற்கண்ட வசனத்தில் கூறுகிறான். எனவே மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது. புதிதாக எதையும் உருவாக்கிட அனுமதியில்லை. என்பதுதான் மேற்கண்ட வசனத்தின் பொருளாகும்.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இந்த மீலாது விழா மற்றும் மவ்லிதுகள் இருக்கவில்லை. அல்லாஹ்வால் பூர்த்தியாக்கப்பட்ட அல்குர்ஆனிலும் சொல்லப்படவில்லை. இதனாலேயே மீலாத் விழாவையும், மவ்லிதையும் நாம் நிராகரிக்க வேண்டும்.
நமது உத்தரவின்றி யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி))
நூல் : முஸ்லிம் 3243
நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்.எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி 2697, முஸ்லிம் 3242.
மேற்கண்ட இரண்டு நபிமொழிகளும் கூறுவது என்ன? நாம் எந்த ஒரு அமலை செய்வதாக இருந்தாலும் அது பற்றி நபி (ஸல்) அவர்கள் ஏதும் கட்டளை பிறப்பித்திருக்கிறார்களா? என்று பார்க்க வேண்டும். அவர்களது கட்டளை இல்லாமல் எந்த ஒரு அமலை யார் செய்தாலும் அது அல்லாஹ்வால் நிராகரிக்கப்டும் என்பதைத் தான் மேற்கண்ட நபி மொழிகள் கூறுகின்றன.
மீலாது விழா கொண்டாடுமாறும் மவ்லீது ஓதுமாறும் நபி (ஸல்) அவர்கள் எந்த கட்டளையும் பிறப்பிக்காதது அதை நிராகரிக்க மற்றொரு காரணமாக அமைகின்றது.
செய்திகளில் மிகவும் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும்.வழிகளில் சிறந்தது முஹம்மதுடைய வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உறுவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும்.ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ்
நூல் : முஸ்லிம் 1435
செய்திகளில் உன்மையானது அல்லாஹ்வின் வேதமாகும்.வழிகளில் அழகியது முஹம்மதின் வழியாகும்.மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும்.புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் பித்அத் (அனாச்சாரம்) ஆகும் ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும்.என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ்
நூல் : நஸாயி 1560
இவ்விரண்டு நபிமொழிகளும் கூறுவது என்ன? என்பதை முஸ்லிம்கள் கவனமாக சிந்திக்க வேண்டும். நபி (ஸல்) அவர்களுக்கு பின்னால் புதிதாக உருவாக்கப்பட்டவை
 மிகமிக கெட்ட காரியம்
 வழிகேடு
 நரகத்தில் சேர்க்கும்.
என்றெல்லாம் கடும் எச்சரிக்கை உள்ளது. நபி(ஸல்) அவர்கள் காலத்திற்கு பல நூராயிரம் வருடங்களுக்குப் பிறகு உறுவாக்கப்பட்ட இந்த மீலாத் விழாக்களாலும், மவ்லீத்களாலும் எந்த நண்மையுமில்லை என்பது ஒருபுறம் இருக்க இதனால் நரகத்திற்குச் செல்லும் நிலை தான் ஏற்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அல்லாஹ்வும், நபி(ஸல்) அவர்களும் மீலாத் கொண்டாடுமாறும் மவ்லீத்கள் ஓதுமாறும் கூறவில்லையென்றால் அது எப்படி ஒரு வணக்கமாக முஸ்லிம் சமுதாயத்தில் நிலைபெற்றது?
நபியைப் புகழுதல்
சுப்ஹான மவ்லீத் என்பது நபி (ஸல்) அவர்களை புகழ்ந்து பாராட்டுவதற்காகத்தான் இயற்றப்பட்டது. அந்த நோக்கத்தில் தான் நாங்களும் பாடுகிறோம். சில நபித்தோழர்கள் நபிகள் நாயகத்தை புகழ்ந்து கவி பாடியதை நபி(ஸல்) அவர்களே அங்கீகரித்துள்ளார்கள். உண்மையான எந்த முஸ்லிமும் நபி (ஸல்) அவர்களைப் புகழ்வதற்கு தடை விதிக்கமாட்டார்கள் என மவ்லீது அபிமானிகள் மவ்லீதை நியாயப்படுத்திக் கூறும் ஆதாரங்கள் இவை.
நபி (ஸல்) அவர்களை புகழ்வது அல்ல பிரச்சினை. நமது முழு வாழ்நாளையும் அவர்களை புகழ்வதற்காக பயன்படுத்தலாம். நல்லொழுக்கம், வீரம், நேர்மை போன்ற எத்தனையோ நற்குணங்களை நபி(ஸல்) அவர்கள் பெற்றிருந்தார்கள். அவற்றையெல்லாம் உலகரிய உரைப்பதில் எந்த தவறுமில்லை. ஆனால் மவ்லீது இந்தப் பணியைத் தான் செய்கின்றதா?
1. நபி (ஸல்) அவர்களை புகழ்கிறோம் என்று கூறும் இவர்களிடம் போய் “என்ன சொல்லிப் புகழ்ந்தீர்கள்? நபி(ஸல்) அவாகளின் எந்தப்பண்பை புகழ்ந்தீர்கள்” என்று கேட்டுப்பாருங்கள். கூலிக்குப்பாடியவர்களில் பலருக்கு தெரியாது.அவர்களை அழைத்துப் பாடச்சொன்ன்வர்களுக்கும் தெரியாது.
2. மவ்லீதை செவிமடுத்த மக்கள் நபி (ஸல்)அவர்களின் எந்தச் சிறப்பை அறிந்துக்கொண்டார்கள்? எதுவுமே இல்லை.
3. புகழுதல் என்ற போர்வையில் ஒரு வணக்கம் தான் நடக்கிறது. அல்லாஹ்வின் வேதத்தை பொருள்; தெரியாமல் ஓதினாலும் ஒரு எழுத்திற்கு பத்து நண்மைகள் கிடைக்கும் என்று மார்க்கம் கூறுகின்றது. மவ்லீதையும் இது போன்ற நம்பிக்கையில் தான் பாடியும், கேட்டும் வருகின்றனர். யாரோ ஒரு மனிதனின் கற்பனையில் உதித்த சொற்களை பொருள் தெரியாமல் வாசித்தால் நண்மை உண்டு என நினைப்பது தான் நபி (ஸல்) அவர்களைப் புகழ்தலா?
4. சாதாரண மனிதனின் சொற்களை வாசிப்பதால், கேற்பதால் அங்கே அல்லாஹ்விடமிருந்து பரகத் கிடைக்கும் என்று நம்புவதற்கு பெயர் தான் நபி (ஸல்) அவர்களைப் புகழுதலா?
5. இந்தப்பாடலைப் பாடிய உடன் அங்கே வைக்கப்பட்டிருந்த உணவுப் பதார்த்தங்களுக்குத் தனி மகத்துவம் வந்து விட்டதாக நம்பப்படுகிறதே. இதற்குப் பெயர் தான் நபி(ஸல்) அவர்களைப் புகழுதலா? புகழுதல் என்பது போர்வைதான் உள்ளே நடப்பவை யாவும் புதிதாக உருவாக்கப்பட்ட வணக்கங்கள் தான்.
6. நபி(ஸல்) அவர்கள் வாழும் போது அவர்களைப் பல நபித்தோழர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர். இதற்கு ஹதீஸ் நூற்களில் ஆதாரம் உள்ளது. ஆனால் இந்தப்பாடல்களை நபித்தோழர்கள் ஒவ்வொறுவரும் ஆளுக்கொரு பிரதி வாங்கி வைத்துக் கொண்டு வீட்டில் ஓதிக்கொண்டிருந்தார்களா?
ஆனால் ஒருவர் விரும்பினால் நபி (ஸல்) அவர்களைப் புகழந்து
 மேடையில் பேசலாம்
 கட்டுரை எழுதலாம்
 கவிதையும் இயற்றலாம்
மார்க்கம் வகுத்துள்ள வரம்புக்குள் நின்று இவற்றைச் செய்யலாம். அது போல் மவ்லிது பாடக்கூடியவர்கள் தாங்களாக தினம் ஒரு கவிதையை இயற்றி அதன் பொருளை உணர்ந்து நபி(ஸல்) அவர்களைப் புகழட்டும்! இதை யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். எவரோ தவறாக புகழ்ந்து பேசியதை, பாடியதை அச்சிட்டு வைத்துக்கொண்டு அதை உருப்போடும் போது தான் அது போலி வணக்கமாகவும், மோசடியாகவும் ஆகிவிடுகின்றது. மேலும் நபி (ஸல்) அவர்களைப் புகழவே இந்த மவ்லிதுகள் என்று இனியும் வாதிட்டார்களென்றால் அவர்கள் கூறுவது பொய் என்பதை அவர்களது நடவடிக்கைகள் நிரூபிக்கின்றன.
 நபி (ஸல்) அவர்களைப் புகழ்வது நோக்கம் என்றால் வீடு வீடாகச் சென்று கூலி பெறுவது ஏன்?
 நபி (ஸல்) அவர்களைப் புகழ்வதற்கான கூலியை மறுமையில் தானே எதிர்பார்க்க வேண்டும்?
 விடி மவ்லிது, நடை மவ்லிது என்று கொடுக்கப்படும் தட்சனைக (கூலிக)ளுக்கு ஏற்ப மவ்லிது விரிவதும், சுருங்குவதும்
ஏன்?
 பணம் படைத்தவர்களுக்கும், ஏழைகளுக்கும் பாரபட்சம் காட்டுவதுதான் நபி(ஸல்) அவர்களைப் புகழும் இலட்சணமா?
மார்க்க அறிஞர்களுக்கு எந்த வருமானமும் இல்லாத காலத்தில் அன்றைக்கு வாழ்ந்த அறிஞர்கள் இதை வருமானத்திற்காக உருவாக்கினார்கள். அதை இன்றைக்கும் நியாயப்படுத்துவது சரிதானா? என்பதை மார்க்க அறிஞர்கள் சிந்திக்க வேண்டும். இல்லாத வணக்கத்தை உருவாக்கிய குற்றத்தை மறுமையில் சுமக்க வேண்டுமா? என்று சிந்திக்க வேண்டும். புரோகிதர்கள் என்ற இழிவு மார்க்க அறிஞர்களுக்கு ஏற்பட இதுதான் காரணம் என்பதை மார்க்க அறிஞர்கள் உணர்ந்தால் அவர்களின் மரியாதையும் உயரும்.
மேலும் நபி (ஸல்) அவர்களை புகழலாம் என்றாலும் அதற்கு வரம்பு உள்ளது.
“கிரிஸ்த்தவர்கள் மர்யமின் மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல் என்னை வரம்பு மீரிப் புகழாதீர்கள்! அல்லாஹ்வின் தூதர் என்றும் அடியார் என்றும் கூறுங்கள்” என்பது நபி மொழி.
(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி- 3445,6830)
“நபி (ஸல்) அவர்களைப் புகழவே இந்த மவ்லிதுகள்” என்பதை ஒரு வாதத்திற்கு ஏற்றுக் கொண்டாலும் நபி (ஸல்) அவர்கள் காட்டிய வரம்பை மீறியே புகழ்கிறார்கள். ஸ{ப்ஹான மவ்லிதில் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் நிலையில் நிறுத்தக் கூடிய பாடல்கள் பல உள்ளன.
மவ்லிதின் அபத்தங்கள்
திருக்குர்ஆன் வசனங்களையும், நபி வழியையும் அலட்சியம் செய்யும் வகையிலும், புறக்கனிக்கும் வகையிலும், இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளைத் தகர்கக்கூடியதாகவும், இன்னும் இஸ்லாத்தைவிட்டு வெளியேற்றக் கூடியதாகவும், பல்வேறு நச்சுக்கருத்துக்களை கொண்டதாகவும் இந்த ஸ{ப்ஹான மவ்லிது கிதாபில் காணப்படுகிறது. உதாரணமாக,
பாவங்களை மன்னிப்பது நபிகள் நாயகமா?
நபி (ஸல்) அவர்களிடம் பாவமன்னிப்பு கோரும் விதமாக மவ்லிதில் பல வரிகளை நாம் காணமுடியும்.
அவற்றில் சில வரிகள் …..

السلام عليك يا ماحي الذنوب  السلام عليك يا جالي الكروب

பாவங்களை அழிப்பவரே! நும் மீது ஸலாம்!
கவலைகளை அகற்றுபவரே! நும் மீது ஸலாம்!

أنت غفار الخطايا           والذنوب الموبقات

இழிவூட்டும் சிறுபழைகள் யாவும் பொறுப்பது தாங்களன்றோ!
அழிவேற்படுத்தும் வன்பிழைகள் அனைத்தும் பொறுப்பது தாங்களன்றோ!

غفروا عني ذنوبي واعف لي عن سيئات

என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே!
சின்னஞ் சிறிய தீமைகளை சீராய் பொருத்தருள் புரிபவரே!
என்று சுப்ஹான மவ்லிது கிதாபில் எழுதி வைத்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் நிலைக்கு உயர்த்தும் அந்த வரிகளை உண்மை முஸ்லிம்கள் ஏற்க முடியுமா? குர்ஆனையும், நபி வழியையும் மதிக்கக்கூடியவர்கள் இந்த நச்சுக் கருத்தை ஆதரிக்க முடியுமா? பாவங்கள் செய்தோர் அதற்கான மன்னிப்பை அல்லாஹ்விடம் தான் பெற வேண்டும் இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும்.
“அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்கு தாமே தீங்கிழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவர் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்.”
ஆல் குர்ஆன் (3:135)
“தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ்) கூறுவதை தெரிவிப்பீராக!”
அல்குர்ஆன் (39:53)
தன்னைத் தவிர வேறு எவரும் பாவங்களை மன்னிக்க முடியாது எனவும், அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கும் அதிகாரம் தன்னிடம் மட்டுமே உள்ளது எனவும் அவற்றில் வேறு யாருக்கும் பங்கில்லை எனவும் இந்த வசனங்கள் மூலம் இறைவன் அறிவிக்கின்றான்.
அல்லாஹ்வையும், அவனது தூதரையும், வானவர்களையும் சம்பந்தப்படுத்தி இட்டுக்கட்டப்பட்ட இந்த கப்ஸாக்களை
படிப்பது பாவமா? புன்னியமா? ஏன்பதை மவ்லிது பக்தர்கள் சிந்திக்கட்டும்.! நன்மை என்று என்னிக் கொண்டு இஸ்லாத்தை விட்டு வெளியேற்றி நரகத்திற்கு இழுத்துச் செல்லும் இந்த மவ்லிது பாடலை உண்மை முஸ்லிம்கள் ஆதரிக்கலாமா?
திருக்குர்ஆனுக்கும், நபி வழிக்கும் முரண்பட்டுள்ள மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ள, மேலும் இஸ்லாத்தில் பலதெய்வ வழிபாட்டு முறையை திணிக்க முயன்றுள்ள இந்த மவ்லிதிலிருந்து விடுபட்டு உண்மை இஸ்லாத்தை நிலைநாட்டுவோம்.